Showing posts with label
இறைவனுக்கு நன்றி. அன்புடன் புகாரி.
Show all posts
Showing posts with label
இறைவனுக்கு நன்றி. அன்புடன் புகாரி.
Show all posts

இன்று ஒரு வாகன விபத்தில் சிக்கினேன். நாளை அலுவலகம் செல்ல வாகனம் இல்லாமல் நிற்கிறேன். பலத்த சேதம் என் ஹோண்டா ஒடிசிக்கு. தங்கமாய் வைத்திருந்த வேன் தகரமாகிவிட்டது. நல்லவேளையாய் உயிர் பிழைத்தேன். அது மட்டுமல்ல எவரையும் கொன்றுவிடவும் இல்லை காயம் ஏற்படுத்தவும் இல்லை. ஆனால் அந்த அடுத்தவரின் கார் பிறண்டு நின்று அதனுள் கணவனும் மனைவியும் அகப்பட்டுக்கொண்டு வெளிவர முடியாமல் இருந்த போது. நான் 911 அழைத்துக் கதறினேன். வித்தியாசமான அனுபவம். வாழ்வில் முதல் சாலை விபத்து. எப்படியோ உயிர்கள் தப்பித்தன. வாகனங்கள் முடிந்துபோயின. ஆச்சரியமான விபத்து. கழுத்து அப்படியே வலிக்கத் தொடங்கியதால் வலிநிவாரண மாத்திரைகள் இட்டுக்கொண்டு உறங்கப் போகிறேன். இறைவனுக்கு நன்றி சொன்னேன்.
விபத்தில் நான் மாண்டிருந்தால் கவலையே இல்லை. ஆனால் எவருக்காவது சேதம் ஏற்பட்டிருந்தால் நான் உயிர் வாழும் ஒவ்வொரு நொடியும் செத்துப்போயிருப்பேன்.
நான் கனடாவில் வாழ்கிறேன். நாங்கள் இப்போதும் மார்ச் 31 தான் இருக்கிறோம். நான் ஏப்ரல் விளையாட்டில் ஈடுபடுவதில்லை.
குளிர் நாடு என்பதால் இங்கே மோட்டார் பைக் பயன்படுத்துவது கிடையாது. பேருந்தில் நாளை செல்லலாம் என்றுதான் திட்டமிட்டுள்ளேன்.
உண்மை. அப்படியே தொழுகையில் அமர்ந்து இறைவனுக்கு நன்றி கூறினேன் - நான் உயிரோடு இருக்கிறேன் என்பதற்காக என்பதைவிட நான் யாரையும் விபத்தில் சாகடித்துவிடவில்லை என்பதற்காக. கொஞ்சம் மோசமான விபத்துதான். இதுதான் எனக்கு முதல் முறை. உங்கள் ஆறுதல் சொற்களுக்கு என் பல்லாயிரம் நன்றிகள்
அன்புடன் புகாரி