Showing posts with label இறை. Show all posts
Showing posts with label இறை. Show all posts

Sunday, October 26, 2014

ஆசை....! சுமைகள்....!

ஆசை....!

கடலலையில் கலந்து
கரையைத் தொட்டுவிட ஆசை....

காற்றில் மிதந்து
மேகத்தை தொட்டுவிட ஆசை....

நதியில் நீந்தி
கடலில் கலந்துவிட ஆசை....

மழையில் நடந்து
முழுவதும் நனைந்து விட ஆசை....

அன்பைப் பகிர்ந்து
நட்புகளில் நிலைத்துவிட ஆசை....

ஏகஇறையை வணங்கி
அவனருளில் அடங்கிவிட ஆசை...
 

Thursday, October 3, 2013

மயக்கம்.....!

தாங்கிய தாய் வயிற்றில் ஒரு மயக்கம்!
தரணி மண் மீது விழுந்தபின் ஒரு மயக்கம்!

விழுந்த வேதனையில் விடியும்வரை ஒரு மயக்கம்!
விடிந்தபின் பசி கொடுக்கும் ஒரு மயக்கம்!

பசி நீங்க பருகும் தாய்ப்பால் ஒரு மயக்கம்!
தாய்ப்பால் நின்றவுடன் தானாக வரும் ஒரு மயக்கம்!

தகுதிகாண் பருவம்வரை தாங்காத ஒரு மயக்கம்!
தக்கதொரு காலத்தில் கல்வியே ஒரு மயக்கம்!

வளர்ந்த பின் பருவ காலத்தில் ஒரு மயக்கம்!
வடிவழகு மனைவி மீது ஆசை ஒரு மயக்கம்!

Wednesday, January 2, 2013

உப்பில் கட்டிய பாவை மழைவர கரையும்

உப்பில் கட்டிய பாவை மழைவர கரையும்
இதயம் கட்டிய உறவு உயிருடன் உறையும்
அன்பால் கட்டிய பாசம் நிலைத்து நிற்கும்
பாவையின் பார்வை பாசத்தில் திரும்ப நிலைத்து நிற்பேன்
 

நான் பேசியதை நானே அறியேன்
நீ பேசியதை நான் அறிவேன்
நான் பேசியதில் நீ குற்றம் கண்டாய்
நீ பேசியதில் நான் சுற்றம் கண்டேன்

நமக்குள் உறவு நீடிக்க விரும்பினேன்
இருக்கும் உறவை உடைக்க விரும்பினாய்
இயந்திரமாய் இயங்கி இருக்கும் இடம் திரும்புகிறேன்
உடைந்த இயந்திரத்தை இயக்க முயல்வதாய் இயம்புகிறாய்

இருமனம் ஒன்றுசேர இயன்றவரை முயல்கிறேன்
ஒருதலைக் காதலாய் முடக்கிட முயல்கிறாய்
நாளாகும் நட்பை வளர்க்க நிமிடம் போதும் நறுக்க
தொடரும் நட்பில் தொய்வு வேண்டாம்

தனிமையின் நிலை சுமையாய் இருக்க
சுமையை தவிர்க்க சுமைதாங்கியாய் இருந்திடு
பனியைத் தூவும் மேகமாய் வந்திடு
பசுமையாய் துளிரும் செடியாய் இருந்திடு

பார்வையின் பிம்பம் கனவிலும் காட்சியாய்
தனிமையின் நினைவு சுமையாய் மாறியதேன்!
தனிமையின் நினைவு மறைந்துப் போக
இறையின் நினைவில் உறைந்துப் போவேன்!