எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் மதுரையை சேர்ந்தவர். தமிழ்ச்சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறசூழல், உலகமயம், மனித உரிமைகள் எனப் பல தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், இயங்கியும் வருகிறார். குஜராத் இனப்படுகொலை குறித்த தெகல்கா ஆவணங்களை முதலாவதாக தமிழில் தந்தவர்.
மதுரை மாவட்ட மங்கல்ரேவு கிராமத்தில் 1973ல் பிறந்த இவர் தனது இளம் பருவம் வரை கோவா, ஹைதரபாத், மும்பை நகரங்களில் வசித்தார். 1986ல் மதுரைக்கு பயணமானது இவரது குடும்பம். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பில் டிப்ளமோ முடித்தார். அக்காலகட்டத்தில் மதுரையில் அவர் படித்த துறையில் வேளை வாய்ப்புகள் பிரகாசாமாக இல்லாததால் வேறு துறைகள் சார்ந்த வேலைகளை பார்க்கத் தொடங்கினார். அதன் பின் சொந்தமாக பல தொழில்கள் செய்தார்.