Showing posts with label ஆட்கொள்ளி நோய். Show all posts
Showing posts with label ஆட்கொள்ளி நோய். Show all posts

Sunday, December 1, 2013

ஆட்கொள்ளி நோய்க்கு ஆட்கொள்ளாதே!


புண்ணைத் தேடிப் புறப்படும் ஈயாய்த் (தீயப்)
பெண்ணைத் தேடிப் பெருவினை நோயாய்க்
கண்ணைக் கொன்றக் கருமையாய் வாழ்க்கை
மண்ணி லுள்ளோர் மதித்திடாப் போக்காய்


அற்ப இன்பம் அடைந்திடும் மோகம்
சொற்ப வாழ்வில் சுருங்கிடும் தேகம்
விற்கும் மேனி விளைத்திடும் மோசம்
கற்பைப் பேணாக் கழிசடை வாசம்