அறிவே சக்தி. அறிவைப் பகிர்ந்து கொள்வது மகத்தான சக்தி.
டேவிட் நெல்சன்
'பொருளைத் திருடலாம் அறிவைத் திருட முடியுமோ! அதனால் அறிவை வளர்த்துக் கொள்' என்று சொல்வதனைக் கேள்விப் பட்டிருக்கின்றேன். அறிவும் எழுத்து வடிவில் வந்து விட்டால் திருட்டுப் போய்விடுகின்றது என்பதால் 'காப்பிரெய்ட்' செய்யும் காலம் வந்து விட்டது. வியாபாரம் 'உலகமயம்' என்ற மாயம் வந்த காலத்தில் வாழும் நிலை.
அறிவு இறைவன் கொடுத்த அருள்களில் ஒன்று. அதனை ஒருவர் சொன்ன கருத்தையோ அல்லது எழுதியவைகளையோ தான் சொன்னதாக அல்லது தான் எழுதியதாக சொல்வது தவறு.அதனையே நாம் அவர்கள் சொன்னவைகளை அல்லது எழுதியவைகளை அவர்கள் பெயரிலேயே பயன் படுத்துவது தவறாக அல்லது திருட்டாக எண்ணக் கூடாது, அவர் அதனை செய்யக் கூடாது என்று தடை விதித்து சொன்னால் தவிர. இருப்பினும் அறிவு அவரை விட்டு உலகத்திற்கு வந்த பிறகு அவ்விதம் தடை போடுவது சிறப்பாக இருக்காது .அறிவு அனைவரிடமும் சென்றடைய வேண்டும். திருவள்ளுவர் கம்பர் , சித்தர் பாடல்கள் இன்னும் பல தமிழ் காவியங்கள் எழுதியவராலும் அல்லது அதனை உலகத்திற்கு கண்டு பிடித்து தந்தவர்களும் அவர்கள் அவைகளை இவ்விதம் தடைவிதித்து இருந்தால் எப்படி நிலைமை இருக்கும் என்பதனை சிந்தித்துப் பாருங்கள். இன்று எல்லாமே தொழில் மயமாக மாறிவிட்டதால் சிந்தனையின் வெளிப்பாட்டின் வழியே வந்த எழுத்துகளும் வியாபாரமாக மாறிவிட்டது . முடிந்தவரை இவைகள் 'காப்பிரெய்ட்' இல்லாமல் இருப்பது சிறப்பாகும்.
"உங்களின் உயர்ந்தவர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு ஏற்றி வைத்தவர்"
விஞ்ஞான வளர்ச்சியின் முடிவு, மனித குலத்தின் அழிவு !
தமிழ்கிறுக்கன்.
நான் இங்கே எழுதிய கட்டுரை எனது ஆசிரியர்கள் கற்றுத் தந்த அறிவினால் வந்த
திருட்டோ! இரண்டு மேற்கோள்களும் இதில் வந்துள்ள படங்களும் அதனைச்
சார்ந்தவையோ! இறைவா அப்படியானால் மன்னிப்பாயாக!.

