Wednesday, December 25, 2013

என் மிதக்கும் மனதில் பெரிதும் அமர்ந்து கொண்டு உங்கள் உருவம் அசைந்தாடுகிறது

நீங்கள் என்னை நேசிக்க
நான் உங்களை நேசிக்காமல் போனதால்
நீங்கள் என்னை விடுத்து போனீர்கள்
நான் வெளிப்படுத்திய செயல்கள்
நான் உருவாக்கிய இழப்பு என்று இப்போது அறிகின்றேன்

நீங்கள் வெளித்தோற்றத்தில் மனத்தைக் கவரவில்லை
நீங்கள் உங்கள் உள்மனதில் கொண்டிருக்கும் நேசத்தினை
உங்கள் மடல், உங்கள் உள்மனதில் கொண்டிருக்கும் நேசத்தினை

என்னை உங்கள் மீது உருவக வழியில் உங்களை நேசிக்க வைக்கிறது
என்னைப் பற்றி நீங்கள் எழுதிய தாள்களை கிழித்ததை ஒன்று சேர்க்கிறேன்
என்னைப் பற்றி நீங்கள் எழுதிய பாடல் , கவிதை மற்றும் உரைநடைகள்
என் மனதை உருக வைத்துள்ளது
என் விழிகள் அருவிபோல் நீரைக் கொட்டுக்கின்றன
திடீரென்று ஒரு பஞ்சம் நாட்டிற்க்கு வந்ததுபோல்
திடீரென்று ஒரு தனிமை உணர்வு எனக்குள் வந்து விட்டது

என் மிதக்கும் மனதில் பெரிதும் அமர்ந்து கொண்டு
உங்கள் உருவம் அசைந்தாடுகிறது
நீங்கள் இல்லாத நிலையில்
என் உலகம் இருண்டதாக இருக்கின்றது
என் உலகம் ஒளி பெற உங்கள் வரவை வேண்டுகின்றேன்

உங்கள் வாழ்க்கை மந்தமானதாக இருக்கும்
என்னை விடுத்து போனதால்
நீங்கள் என்னை விட முடியாது
இழந்தது இழந்ததாக இருக்கட்டும்
இனி நமக்குள் வேறுபாடு இலலை

கோடையில் கொட்டிய இலைகள்
வசந்தத்தில் துளிர் விடும்
வசந்தம் வந்துவிட்டது
மனதில் நேசமாக துளிர் விட்டு விட்டது
துளிர் விட்ட நேசம் குறையாது கூடும்
துளிர் விட்ட நேசம் முடிவது
என் வாழ்வோடு முடிந்து விடும்
அன்பு நமக்குள் எப்போதும் நீடித்து நிற்கும்
எந்த காலமும் நமக்குள் சண்டை வராது
நான் உங்களோடு ஒன்றியதால்
http://anbudanseasons.blogspot

No comments: