மொழி நம் வாழ்வின் ஒரு பகுதி மற்றும் உடலின் ஒரு உறுப்பு போன்றது.குழந்தை வளர மொழியும் தானே தாயோடு வளரும் அதனை தாய் பேசும்போது .நாம் பல மொழியை அறிவை நாடி கற்றுக் கொள்கின்றோம் . பிழைப்புக்காக நாடு விட்டு நாடு போகும் பொழுது அந்த நாட்டு மொழியை அறிந்துக் கொள்வதும் ,பேசுவதும் அவசியமாகின்றது . ஆனால் மொழி ஒரு கலாசாரத்தின் அடிப்படை அதனை நாம் ஒரு போதும் இழந்துவிடக் கூடாது . வெளிநாடு சென்று அந்த மொழியை மட்டும் நம் வீடுகளிலும் பேசி தாய் மொழியை பேசாமல் இருந்தால் தாய் மொழி மெல்ல சாகும் . அவ்வாறு பேச்சு வழக்கில் இல்லாததால் பல மொழிகள் (ஹீப்ரு,சமஸ்கிரதம்)அழிந்து போனது . ஹீப்ரு,சமஸ்கிரதம் மொழிகளை இப்பொழுது மீண்டும் உயிர்ப்பிக்க முயல்கின்றனர் .அந்த நிலை தமிழ் மொழிக்கும் வராமல் பார்த்துக் கொள்வது நம் கடமை .
படத்தை பாருங்கள் .
"Tamil Ini" - Short Film - "தமிழ் இனி" குறும்படம் .இந்த படம் வெளி நாட்டு வாழ் தமிழ் குடும்பங்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
2 comments:
அருமை...
நன்றி ஐயா...
நன்றி
திரு திண்டுக்கல் தனபாலன்
Post a Comment