Tuesday, June 12, 2012

Muslim Student Academy

Muslim Student Academy:

Just came across this. It gives grants of £3000 to students going to uni in their first year. Of course there's a criteria attached - and some of it is vague - like "Strong academic results in GCSE and A Levels or equivalent;" but anyway still pretty awesome.
http://muslimstudentacademy.org.uk/scholarship/

இசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா - 2

தாஜுதீன்: இசைக்கான வரைவிலக்கணத்தை தெளிவான விரிவான தாருங்கள்…. எதுவெல்லாம் இசை, எதுவெல்லாம் இசை இல்லை. நான் இங்கு கூடாது என்று குறிப்பிட்டிருப்பது, இசைக்கருவிகளுடன் கூடிய இசையை.

இசை மற்ற கலைகளைப்போலவே வரவிலக்கண எல்லைகளைக் கடந்தது. காலங்கள் தோறும் வளர்ந்து வருவது. ஏன் நம் கருத்தாடலை இப்படி திசை திருப்பம் வண்ணமாய் ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

இசைக்கருவி என்பதற்கு உங்கள் வரைவிலக்கணம் என்ன? ஏன் தடுக்கிறீர்கள்? அதனால் மதத்திற்கு என்ன கேடு என்பதைத் தெளிவாகக் கூறுங்கள்.

எந்த வாத்தியக் கருவிகளும் இல்லாமல், வெறும் மனித வாயை வைத்துக்கொண்டு பல ஓசைகளை எழுப்பி இசையாய்த் தருகிறார்களே அதை எப்படி நீங்கள் கொள்வீர்கள்? எந்த வாத்தியக் கருவியும் இல்லாமல் வெறும் வாயால் இனிய குரலால் ராகத்தோடு “கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” என்று பாடினால், அதை ஏற்றுக்கொள்ளுமா இஸ்லாம்?

அதிகாலையில் எழும் ஓசைகளை பல இசைக்கருவிகளைக் கொண்டு பேக்ரவுண்ட் இசையாக அப்படியே அருவிபோலக் கொட்டச்செய்து உள்ளத்துக்குப் புத்துணர்ச்சி ஊட்டுகிறார்களே அது இசையா? அதை மறுக்குமா இஸ்லாம்? இசையைக்கொண்டு இசைத்தராப்பி மூலம் நோய்களைக் குணப்படுத்தும் எல்லை வரை சென்றிருக்கிறார்கள்? அதைத் தடுக்கின்றீர்களா? ஏன்? எதை இசை என்கிறீர்கள். எதைத் தடுக்கிறீர்கள். ஏன் தடுக்கிறீர்கள் என்று மறுப்பவர்தானே கூறவேண்டும்?

Monday, June 11, 2012

கணவன் - மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க முடியாது...

கணவன் - மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க முடியாது...
Husband-wife jokes – you cannot hold your laughter
Wife : Why you lied to your friend that the girl was pretty?
Husband: What ! Did he tell the truth when he saw you for me?

 
மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க?
கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்!!
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- -----

Visit the Internet Islamic Art Database, a QuranClub project

Visit the Internet Islamic Art Database, a QuranClub project:

The Internet Islamic Art Database (IIADB.com) is a website where you can find Islamic posters, photos, illustrations, and other graphics. You can also upload your own and other people's graphics at the Submit Artwork page.
The goal of this project is to make it easier for people to find high quality Islamic art on the internet by providing a central location where Islamic art is presented and categorized, and to provide exposure for the works of Muslim artists, photographers, and illustrators.
Source :http://www.quranclub.net/

இசையைப் பற்றியும் பாடல் பற்றியும் இஸ்லாம் சொல்வதனை ...

 இசையைப் பற்றியும் பாடல் பற்றியும் இஸ்லாம் சொல்வதனைப் பற்றி நான் படித்ததனை பகிர்ந்துக் கொள்கின்றேன் 

5162. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நான் ஒரு பெண்ணை அன்சாரிகளில் ஒருவ(ருக்கு மணமுடித்து வைத்து அவளை அவ)ரிடம் அனுப்பிவைத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'ஆயிஷாவே! உங்களுடன் பாடல் (பகுதி சிறுமியர்) இல்லையா? ஏனெனில், அன்சாரிகளுக்குப் பாடலென்றால் மிகவும் பிடிக்குமே'' என்றார்கள்.102

952. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
புஆஸ்(எனும் பழமையான போர்) பற்றி அன்ஸார்கள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என்முன்னே பாடிக் கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும் பாடகிகள் அல்லர். 'அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று அபூ பக்ர்(ரலி) கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாளின் போதாகும். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நம்முடைய பெருநாளாகும்" என்று கூறினார்கள்.

2906. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
என் முன்னால் (அன்சாரிச்) சிறுமிகள் இருவர் புஆஸ் போரைப் பற்றிய பாடலைப் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தம் முகத்தை (வேறு திசையில்) திருப்பினார்கள். (பாட வேண்டாம் என்று அவர்களைத் தடுக்கவில்லை.) அப்போது, (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) வந்து என்னை அதட்டி, 'அல்லாஹ்வின் தூதருக்கு முன்பாக ஷைத்தானின் இசைச் கருவியா?' என்று கடிந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கி, 'அவர்களை (பாட) விடுங்கள்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் கவனம் திசை திரும்பிவிட்டபோது, நான் அவ்விரு சிறுமிகளுக்கும் கண்ணால் சாடை செய்தேன். உடனே, அவர்கள் வெளியேறிவிட்டார்கள்.

2802. ஜுன்தப் இப்னு சுஃப்யான்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் போர் ஒன்றில் பங்கு கொண்டபோது அவர்களின் விரலில் (காயம் ஏற்பட்டு) ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அப்போது அவர்கள், 'நீ இரத்தம் சொட்டுகிற ஒரு விரல் தானே? நீ அடைந்த (பழு)தெல்லாம் இறைவழியில் தானே!" என்று (ஈரடிச் சீர் பாடல் போன்ற வடிவில்) கூறினார்கள்.

4106. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவித்தார்.
அகழ்ப் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அகழ் தோண்டினார்கள். அப்போது அவர்கள் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்று கொண்டிருந்ததை பார்த்தேன். அவர்களின் வயிற்றின் தோலை என்னைவிட்டும் மண் மறைத்து விட்டிருந்தது. நபி(ஸல்) அவர்கள் நிறைய உரோமம் உடையவர்களாக இருந்தார்கள். அப்போது அவர்கள் மண் சுமந்து கொண்டே இப்னு ரவாஹா அவர்களின் யாப்பு வகை(ப்பாடல்) வரிகளைப் பாடிக் கொண்டிருந்ததை கேட்டேன் (அந்தப் பாடல் இதுதான்:)
இறைவா! நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழியடைந்திருக்க மாட்டோம்; தர்மம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இவர்கள் (குறைஷிகள்) எங்களின் மீது அக்கிரமம் புரிந்துவிட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தரமாட்டோம்.
"நபி(ஸல்) அவர்கள், ('நாங்கள் இடம் தரமாட்டோம்' என்ற) கடைசி வார்த்தையை நீட்டிய படி முழக்கமிட்டார்கள்" என்று அறிவிப்பாளர் கூறுகிறார்.
1008. அப்துல்லாஹ் இப்னு தீனார் அறிவித்தார்.
'இவர் வெண்மை நிறத்தவர்; இவரால் மழை வேண்டப்படும். இவர் அனாதைகளுக்குப் புகலிடமாகவும் விதவைகளுக்குக் காவலராகவும் திகழ்கிறார்' என்று அபூ தாலிப் பாடிய கவிதையை இப்னு உமர்(ரலி) எடுத்தாள்பவராக இருந்தனர்.

Source : http://www.tamililquran.com/

"Say (O Muhammad), "I am not different from other messengers, I have NO IDEA what will happen to ME OR TO YOU. I ONLY follow what is revealed to me. I am NO MORE than a profound warner." 46:9

Those who really appreciate music and the beautiful voices that God created, are more appreciative of God's creations and closer to God than those who prohibit what God did not and see evil in every beautiful creation of God.

"Say, "Who proh...ibited the nice things God has created for His creatures, and the good provisions?" Say," such provisions are to be enjoyed in THIS life by those who BELIEVE. Moreover, the good provisions will be exclusively theirs on the Day of resurrection." We thus explain the revelations for people who know." 7:32 (QURAN)

MUSIC AND SINGING WERE NEVER PROHIBITED BY GOD. They are part of the most beautiful creations of God. As long as they do not call on the people or encourage them to commit sins, they are for the TRUE BELIEVERS TO ENJOY while remembering God with every beautiful note or rhythm. Those who prohibit what God never did in the Quran will be surprised on the Last Day when the messenger of God will complain to God from them, See 25:30.
The Prophet said, "Facilitate things to people (concerning religious matters), and do not make it hard for them and give them good tidings and do not make them run away (from Islam)."

It’s no secret that the permissibility of music and singing has been a debated topic among Muslim scholars for centuries, and that there is a difference of opinion that classifies certain kinds of music from Haraam (impermissible) to Mubah (allowed). However, even the most liberal scholars agree that:
• Permissible songs are those that comply with Islamic teachings and ethics.
• Songs that are performed in a manner that arouses sexual excitement and desires – even if the content is ‘permissible’ – renders them prohibited, doubtful or detestable.
• Singing that calls to, or is accompanied by alcohol and drugs, nudity, mixing of men with women is obviously prohibited.

இசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா - 1


தொழுகையில் ”அல்லாகு அக்பர்” என்று எப்படிக் கூறுவீர்கள்? அதைவிட இனிய இசை உண்டோ என்பதுபோல் இருக்காதா?

காடுகள் காற்றில் இசைக்கின்றன.
கடலின் அலைகள் இசைக்கின்றன
முகிலினங்கள் மோதி மோதி இசைக்கின்றன.
மழை ஒரு கச்சேரியே வைக்கிறது
பறவைகளின் படபடக்கும் சிறகுகள் இசைக்கின்றன

தாய் தன் மழலையைக் கொஞ்சும்போதுகூட தாளலயம் கூட்டித்தான் கொஞ்சுவாள். ம்ம்... ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்....... என்று இசைத்துத்தான் தாலாட்டித் தூங்க வைப்பாள். இப்படியாய் மனிதனின் எல்லா நிலைகளிலும் இசை நிறைந்து இருக்கிறது. அதை வேண்டாம் என்று இஸ்லாம் எப்படிச் சொல்லும். தகாத தப்பான கூடாத இசையைத்தான் குற்றமென்று சொல்லும்.

இஸ்லாம் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டால் அது இரு நிலையில் தெளிவாக இருக்கும்.

இது ஹலால்
இது ஹராம்
நல்ல கவிதை ஹலால்
தவறான கவிதை ஹராம்
நல்ல இசை ஹலால்
தவறான இசை ஹராம்

தொழுகையின் அழைப்பான ஆதான் நபிகளின் காலத்திலேயே சகோ பிலால் அவர்களால் இசைகூட்டி இனிமையாகப் பாடப்பட்டது. புல்புல் என்று நபிகளால் அவர் அழைக்கப்பட்டார்.

எங்கள் மீதொரு பௌர்ணமி பிரகாசிக்கிறது - அது
மக்காவிலிருந்து விடைபெற்று வருகிறது

என்று மதீனாவின் மக்கள் ஒன்றாய்க் கூடி மகிழ்ச்சியில் நபிகளை வரவேற்றுப் பாடினார்கள்.

எல்லாக் காரியங்களிலும் குலையிடுதல் இஸ்லாமிய வீடுகளில் வழக்கமான ஒன்றுதானே. அதை அதிரையில் மட்டுமல்ல, சவுதியிலும் நிறைய கேட்டிருக்கிறேன். இப்படி ஏராளமாக அடுக்கிக்கொண்டே போகலாம்.

இசை மனிதனை அடிமைப்படுத்துகிறது என்கிறார்கள். மனிதன்தான் மனிதனை அடிமைப்படுத்துகிறான். அதற்கான சான்று குரானிலேயே உண்டு. கலையும் இலக்கியமும் எவரையும் அடிமைப்படுத்துவதில்லை. மனிதர்களுக்குப் புத்துணர்ச்சியையே தருகின்றன.

உங்கள் குழந்தை உங்களோடு மொழிவது இசை. அதனோடு நீங்கள் குழைவது இசை. குரான் ஓதுதல் இசை. பாங்கு சொல்லுதல் இசை.

இசை கூடும். ஆனால் இசைக்கருவிகள் கூடாது என்கிறார்கள் சிலர். முதலில் இவர்கள் இசை கூடும் என்று ஏற்றதற்குப் பாராட்டலாம்.

கருவிகள் என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள்? உங்கள் வாய் இசைக்கான கருவிதான். காற்றும் மரங்களும் சேர்ந்தால் அது இசைக்கான கருவிதான். இப்படியே உலகில் உள்ள எல்லாப் பொருளும் இசைதரவல்லவை உலகில் உள்ள அனைத்துமே இசைக்கருவிகள்தாம்.

தாய் தன் பிள்ளையின் வயிற்றில் வாயை வைத்து முகத்தை ஆட்டி ஊதுவாள். அப்போது எழும் இசைகேட்டு குழந்தை இசை நயத்தோடு சிரிக்கும். இங்கே இசைகள் எத்தனை கருவிகள் எத்தனை என்று கணக்கிட்டுப் பார்க்கலாம். சுவாரசியமாய் இருக்கும்!
 இசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா - 1
Source : http://anbudanbuhari.blogspot.in/

Sunday, June 10, 2012

சுய விமர்சனம் தேவை.

சுய விமர்சனம் நமக்குள் செய்துக் கொள்ளவேண்டும். அது நம்மை நாமே பாராட்டி அடுத்தவரிடம்  விமர்சனம் செய்துக் கொள்வதல்ல.

சுய விமர்சனம்.
 ஒவ்வொரு நாளும் நாம் படுக்கைக்கு செல்லுமுன்பு  இன்று  நாம் ஈடுபட்ட செயல் என்ன! அது நமக்கோ அல்லது மற்றவருக்கோ நன்மையானதாக அமைந்ததா! அல்லது அது தீமையாக இருந்து நம்மையோ அல்லது நமது குடும்பத்தினரையோ அல்லது மற்றவரையோ பாதிக்கும்படி ஆக்கிவிட்டதா என்று சிறிது சிந்திக்க வேண்டும் . நாம் நல்ல காரியங்கள் செய்திருந்தால்  அதனை தொடர்ந்து செயல்பட முனைவதுடன்    மற்றவர்களயும் தூண்ட  வேண்டும் . நாம் பாதகமான செயலில்  ஈடுபட்டிருந்தால்  முதலில் இறைவனிடம் மன்னிப்பு நாடுவதொடு  யாருக்கு நாம் பாதகம் செய்தோமோ அவர்களிடமும் மன்னிப்பு கேட்பதோடு அதற்கு மாற்று வேலையாக பாதிக்கப் பட்டவர்களுக்கு நல்ல  காரியங்கள் செய்து கொடுக்க  வேண்டும்,
 நாளை செய்ய வேண்டிய வேலைகளை ஒரு திட்டம் போட வேண்டும் . முடிந்தால் அதனை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்
நாம் யாரையும் குறைவாக மதிப்பிடாமல் இருந்து மற்றவர்களை மதிப்பதுடன் அவர்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும்.
(விஜய்  டீவீயில் நடிகர் அமீர்கான்  நடத்தும் மாற்றுத்திறன்   உள்ளவர்களுக்காக  நடத்தும் நிகழ்ச்சி நமக்குள் ஒரு  நல்ல மாற்றத்தினை உண்டாக்கும்.. அத்துடன் நடிகர்  சூர்யா நடத்தும் ஒரு கோடி நிகழ்ச்சி நமக்கு அறிவை வளர்ப்பதற்கும்  வழி வைக்கும்)

தன்னை ஒரு போதும் குறைவாக மதிப்பிடக் கூடாது