Tuesday, April 13, 2010

முரண்பாடுகள்

                                                                          முரண்பாடுகள்



இருப்பவனிடம் நிராகரிப்பும்
இல்லாதவனிடம் எதிர்பார்ப்பும்
கண்முன் இறைந்து கிடக்கிறது
சமூக புள்ளியில் இரண்டும்
ஒன்றினைதாலும்
அவரவர் கவலை அவருக்கு

அடுத்தவர் கஷ்டம் எனக்கெதுக்கு!

நன்றி  http://valpaiyan.blogspot.com

Sunday, April 11, 2010

இஸ்லாமிய வங்கியில் அரசு முதலீடு செய்ய தடை

கேரள உயர்நீதிமன்றம் இஸ்லாமிய வங்கியை தொடங்குவதற்கு அனுமதியளித்துள்ளது, ஆனால் அரசு அல்லது அரசு நிறுவனங்கள் அதில் முதலீடுச் செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் அல்பராக்கா நிதியியல் நிறுவனம் இஸ்லாமிய வங்கியல் நிறுவனம் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் இஸ்லாமிய வங்கியியல் நடவடிக்கைகளுக்கான தடையை நீக்கவேண்டுமென்று கோரி இந்நிறுவனத்தின் ஆதரி (Promoter) டைரக்டர் சி.கே.மேனனும் அளித்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெஸ்தி செலமேஷ்வர், நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயர் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது. இஸ்லாமிய வங்கிக்கெதிரான இறுதித் தீர்ப்புவரும் வரை இந்நிலைத் தொடரும். கேரளமாநிலத்தில் வரும் சட்டப்படி நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழகத்தின் பங்குகளுடன் மாநிலத்தில் இஸ்லாமிய வங்கி ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக ஜனதா கட்சியின் தலைவருமான சுப்பிரமணிய சுவாமி அளித்த பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம் இஸ்லாமிய வங்கியியல் நடவடிக்கைக்கு தடைவிதித்தது.
மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்காததால் இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்கவில்லை கேரள நீதிமன்றம்.
அல்பராக்கா நிதியியல் நிறுவனத்திற்கு இதுவரை முதலீடுச் செய்யவில்லை என K.S.I.D.C உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்தது. இஸ்லாமிய வங்கியல் நடவடிக்கைகள் மதசார்பற்றது என்றும், இதில் எவர் வேண்டுமானாலும் முதலீடுச்செய்யலாம் எனவும் K.S.D.I.C யும் கேரள அரசும் நீதிமன்றத்திடம் விளக்கின.
இவ்வழக்கின் இறுதி விசாரணை வருகிற ஜுன் மாதம் 3 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
   சசி
கேரள உயர்நீதிமன்றம் இஸ்லாமிய வங்கியை தொடங்குவதற்கு அனுமதியளித்துள்ளது, ஆனால் அரசு அல்லது அரசு நிறுவனங்கள் அதில் முதலீடுச் செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் அல்பராக்கா நிதியியல் நிறுவனம் இஸ்லாமிய வங்கியல் நிறுவனம் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறது. இந்நிலையில் தொழில் வளர்ச்சிக் கழகத்தின் பங்குகளுடன் அந்த மாநிலத்தில் இஸ்லாமிய வங்கி ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக ஜனதா கட்சியின் தலைவருமான சுப்பிரமணிய சுவாமி அளித்த பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம் இஸ்லாமிய வங்கியியல் நடவடிக்கைக்கு தடைவிதித்தது.

இந்நிறுவனம் இஸ்லாமிய வங்கியியல் நடவடிக்கைகளுக்கான தடையை நீக்கவேண்டுமென்று கோரி இந்நிறுவனத்தின் ஆதரி (Promoter) டைரக்டர் சி.கே.மேனனும் அளித்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெஸ்தி செலமேஷ்வர், நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயர் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது. இஸ்லாமிய வங்கிக்கெதிரான இறுதித் தீர்ப்புவரும் வரை இந்நிலைத் தொடரும். கேரளமாநிலத்தில் வரும் சட்டப்படி நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழகத்தின் பங்குகளுடன் மாநிலத்தில் இஸ்லாமிய வங்கி ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக ஜனதா கட்சியின் தலைவருமான சுப்பிரமணிய சுவாமி அளித்த பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம் இஸ்லாமிய வங்கியியல் நடவடிக்கைக்கு தடைவிதித்தது.

அல்பராக்கா நிதியியல் நிறுவனத்திற்கு இதுவரை முதலீடுச் செய்யவில்லை என K.S.I.D.C உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்தது. இஸ்லாமிய வங்கியல் நடவடிக்கைகள் மதசார்பற்றது என்றும், இதில் எவர் வேண்டுமானாலும் முதலீடுச்செய்யலாம் எனவும் K.S.D.I.C யும் கேரள அரசும் நீதிமன்றத்திடம் விளக்கின.

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்காததால் இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்கவில்லை கேரள நீதிமன்றம். இவ்வழக்கின் இறுதி விசாரணை வருகிற ஜுன் மாதம் 3 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இஸ்லாமிய வங்கியில் அரசு முதலீடு செய்ய தடை


Source : http://www.inneram.com 

தள்ளிப்போடாமல் இருப்பது எப்படி? தள்ளிப் போடாதீர்கள். துள்ளியெழுங்கள்.

இந்தக் கேள்வியை யாரிடமாவது கேட்டு பதில் பெறலாம் என்று பரபரப்பாக இருக்கிறதா?

பொறுங்கள் - கொஞ்சம் தள்ளிப் போடுங்கள்!!

என்ன - முதலுக்கே மோசமாக இருக்கிறதா?

யாரையாவது கேட்பதற்கு முன்னால் உங்களையே சில கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள்.
1. வேறு முக்கியமான வேலை வந்தததால் எடுத்த வேலையைத் தள்ளிப் போடுகிறீர்களா? இல்லை, சோம்பல் காரணமாகத் தள்ளிப் போடுகிறீர்களா?

2. நேரத்தை வீணடிப்பதென்பது நம்மையும் அறியாமல் நிகழக்கூடிய விஷயம்தான். ஒரு நாளில் எந்த நேரத்தை எப்படி வீணடித்தீர்கள் என்பதை தினமும் டயரியில் குறித்து வையுங்கள்.

3. தள்ளிப் போடுவதை ஒரு வழக்கமாகத் தொடங்கி, வாழ்க்கை முறையாகவே ஆக்கிக் கொண்டவர்கள் எத்தனை பேர்களை உங்களுக்குத் தெரியும்? அவர்கள் என்ன ஆனார்கள்?

இதையெல்லாம் செய்தாலே தள்ளிப் போடுவதில் இருக்கும் எதிர்மறையான விளைவுகள் பற்றி நமக்குப் புரிந்துவிடும்.

ஒரு மளிகைக் கடைக்குப் போகும்போதே நம்மிடம் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியல் இருக்கிறதே, ஒவ்வொரு விடியலின் போதும் அந்த நாளில் செய்து முடிக்க வேண்டிய விஷயங்களின் பட்டியல் வேண்டாமா என்ன?

தள்ளிப் போடும் பழக்கம் நம்மை விட்டுத் தள்ளிப் போக அடிப்படையில் இன்னொரு வேலையையும் செய்தாக வேண்டும்.

அதுதான் விடியல் பொழுதைப் பயன்படுத்துவது. விடிந்து சிறிது நேரம் சென்றபிறகு விழிப்பவர்களுக்கு நாள் நகர்கிற வேகத்திற்கு ஈடு கொடுத்து, அதைத் துரத்திப் பிடிப்பதே பெரியபாடாகி விடுகிறது.

விடியல் நம்மை நன்றாக வேலை வாங்கக் கூடிய நேரம். தள்ளிப் போடுவதைத் தவிர்க்க வேண்டுமென்றால், அந்த வேலைக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை சேகரித்துக் கொண்டு, அதன் பின்னர் வேலையைத் தொடங்குவதே உத்தமம்.

இந்தக் கட்டுரையை எழுதுவதற்குக்கூட பேனா, பேப்பர், கிளிப், எழுதுவதற்கான அட்டை என்று ஒவ்வொன்றையும் தவணை முறையில் எடுத்துக் கொண்டு வந்தால், இதை எழுதி முடிக்கிற வேலை கண்டிப்பாகத் தள்ளித்தான் போகும்.
இதையெல்லாம்விட முக்கியம், ஏன் தள்ளிப் போடுகிறோம் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வது.

ஒரு நாள் முழுவதும் இயந்திரம்போல் யாரும் வேலை பார்த்துக் கொண்டே இருப்பதும் சாத்தியமில்லை.

உல்லாசத்திற்குக் கொஞ்ச நேரம், பொழுதுபோக்குக் கொஞ்ச நேரம், நண்பர்களுடன் பேச சிறிது நேரம் என்று எத்தனையோ விஷயங்களுக்கு சில நிமிஷங்களை அவ்வப்போது ஒதுக்க வேண்டிவருகிறது.

ஏகத்துக்கு வேலை இருப்பதாக நினைப்பவர்கள் இந்த சின்னச் சின்ன சந்தோஷங்களை முற்றாக நீக்கிவிட்டு, வேலையிலேயே முழு கவனம் செலுத்துவதாய்த் தொடங்குவார்கள்.

இடையில் அலுப்புத்தட்டத் தொடங்கிவிட்டால் போச்சு. இந்த வேலை - சொந்த வேலை - எந்த வேலையையும் செய்யாமல், வேலைக்கான ஆயத்தப் பணியை வேண்டுமென்றே நீட்டிக்க மனது தூண்டத் தொடங்கும். உற்சாகமும் தூங்கத் தொடங்கும்.

நம்முடைய நேரங்களை சமவிகிதத்தில் சரியாகப் பங்கிட்டு வேலைகளில் ஈடுபடப் பழகிவிட்டால் நேரம் வீணாவதை நிச்சயமாகத் தடுக்கலாம்.
என்ன செய்ய விரும்புகிறோம் - என்ன செய்து கொண்டிருக்கிறோம். இந்த இரண்டுக்கும் நடுவிலான இடைவெளியை அதிகமாக்குவதே தள்ளிப் போடுகிற மனோபாவம்தான்.

இன்னொன்றும் முக்கியம். ஒரு நாளில் எத்தனையோ வேலைகள் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் மிக முக்கியமான வேலை என்று மூன்றை மட்டும் பட்டியலிடுங்கள். அவற்றை முதலில் முடித்துவிடுங்கள். அதன்பின், மற்றவற்றைச் செய்ய உங்களுக்கு உற்சாகம் தானே பிறக்கும்.

நாள் முழுவதும் காரியங்களைத் தள்ளிப் போடாமல் சாதகமாகச் செய்ய வேண்டுமென்றால், அதற்கு விடியற்காலை விசேஷமானது என்று பார்த்தோம்.

விடியற்காலையைப் பயன்படுத்திக் கொள்ள மிகவும் உகந்த வழி, இரவு விரைவிலேயே உறங்கப் போவதுதான்.

தூங்குவதற்கு இரண்டு மணி நேரங்கள் முன்பே தொலைக்காட்சி - கணினி ஆகியவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

தள்ளிப் போடத் தூண்டும் சோம்பல், உங்களை விட்டுத் தள்ளிப் போகும். தள்ளிப் போடாதீர்கள். துள்ளியெழுங்கள்.

குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா !---

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது

SOURCE: NAMADHUNAMBIKKAI.


நன்றி  :

Saturday, April 10, 2010

தவறவிட்ட சவுதி ' ரியால்' 50,000' மீட்டுத்தந்த தமிழர்

தமிழ்நாட்டை சேர்ந்த மனிகண்டன் சவூதி அரேபியாவின் தலைநகர் 'ரியாத்'தில் தனியார் கார்கோ நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்
அவர் தன் வேலையை முடித்து கொண்டு தனது இருப்பிடத்திற்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒரு பார்சல் கண்டெடுத்து அதை பிரித்து பார்த்த போது திகைத்து விட்டார். உள்ளே இருந்தது அததனையும் சவுதி 'தினார்' நோட்டுக்கட்டுகள் ஆகும். அதன் மதிப்பு 50000 அதாவது இந்திய மதிப்பு சுமார் ஆறரை லட்சம் ரூபாய். இரவு பதினோரு மணி என்பதால் அருகில் இருந்த 'டீ'க்கடைக்கு சென்று அந்த கடையின் உரிமையாளர் கேரளாவை சேர்ந்த ஹம்சா என்பரிடம் இங்கு தவறவிட்ட பணத்தை யாரேனும் தேடிவந்தால் அவரிடம் ஒப்படைக்கும் படி கூறினார்.
அடுத்த 15 நிமிடத்திலேயே அங்கு சவூதி நாட்டைச் சேர்ந்த ஒருவர் மிகுந்த படபடப்புடன் வந்து தான் பணத்தை தவற விட்டதாக கூறி கவலையுடன் தேடினார். உடனே அவரிடமிருந்த அடையாள அட்டை, ஏ.டி.எம். கார்டு போன்ற ஆதாரங்களின் அடிப்படையில் பணம் அவருடையது தான் என்பதை உறுதி செய்தபின் பணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மணிகண்டன் பணத்தை எடுத்ததை யாருமே பார்க்காத நிலையிலும், மிகுந்த கண்ணியத்துடன் நடந்து கொண்ட அவரை அங்கு இருந்த அனைவரும் வெகுவாக பாராட்டினர். மேலும் அங்கு நடந்த பரபரப்பால் உடனே வந்து சேர்ந்த சவுதி காவல்துறையினரும் மணிகண்டனை பாராட்டினர். மேலும் மணிகண்டன் கூறும் போது 'தன் மனசாட்சியில் அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் படி கூறியதாகவும், அதன் படி தான் நடந்து கொண்டதாகவும் கூறினார். இந்த செய்தியை 'மத்யமம்' என்ற மலையாள நாளிதழ் வெளியிட்டதன் மூலம்  முழு வளைகுடா நாட்டிலும் செய்தி பரவி மணிகண்டனுக்கு பாராட்டுகலும், வாழ்த்துக்களும் குவிகின்றன.
மிழ்நாட்டை சேர்ந்த மனிகண்டன் சவூதி அரேபியாவின் தலைநகர் 'ரியாத்'தில் தனியார் கார்கோ நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.
அவர் தன் வேலையை முடித்து கொண்டு தனது இருப்பிடத்திற்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒரு பார்சல் கண்டெடுத்து அதை பிரித்து பார்த்த போது திகைத்து விட்டார். உள்ளே இருந்தது அததனையும் சவுதி 'ரியால்' கட்டுகள் ஆகும். அதன் மதிப்பு 50,000 அதாவது இந்திய மதிப்பு சுமார் ஆறரை லட்சம் ரூபாய். இரவு பதினோரு மணி என்பதால் அருகில் இருந்த 'டீ'க்கடைக்கு சென்று அந்த கடையின் உரிமையாளர் கேரளாவை சேர்ந்த ஹம்சா என்பரிடம் இங்கு தவறவிட்ட பணத்தை யாரேனும் தேடிவந்தால் அவரிடம் ஒப்படைக்கும் படி கூறினார்.

அடுத்த 15 நிமிடத்திலேயே அங்கு சவூதி நாட்டைச் சேர்ந்த ஒருவர் மிகுந்த படபடப்புடன் வந்து தான் பணத்தை தவற விட்டதாக கூறி கவலையுடன் தேடினார். உடனே அவரிடமிருந்த அடையாள அட்டை, ஏ.டி.எம். கார்டு போன்ற ஆதாரங்களின் அடிப்படையில் பணம் அவருடையது தான் என்பதை உறுதி செய்தபின் பணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மணிகண்டன் பணத்தை எடுத்ததை யாருமே பார்க்காத நிலையிலும், மிகுந்த நேர்மையுடன் நடந்து கொண்ட அவரை அங்கு இருந்த அனைவரும் வெகுவாக பாராட்டினர். மேலும் அங்கு நடந்த பரபரப்பால் உடனே வந்து சேர்ந்த சவுதி காவல்துறையினரும் மணிகண்டனை பாராட்டினர். மேலும் மணிகண்டன் கூறும் போது தன் மனசாட்சியில் அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் படி கூறியதாகவும், அதன் படி தான் நடந்து கொண்டதாகவும் கூறினார். இந்தச் செய்தியை 'மத்யமம்' என்ற மலையாள நாளிதழ் வெளியிட்டதன் மூலம் முழு வளைகுடா நாட்டிலும் செய்தி பரவி மணிகண்டனுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிகின்றன.
Source : http://www.inneram.com/201004107756/tamil-recovered-50000-riyal-in-saudi-arabia

Thursday, April 8, 2010

கவனம்

வால்பையன் : கவனம்



படிக்கும் போதும் வேலை செய்யும் போதும் கவனம் சிதறுவது மிக மோசமான ஒன்று,
சிதறடிக்கும் கவனத்தை ஒரு முக படுத்த பல வகையான முறை இருக்கிறது,
என்னுடய வழி கொஞ்சம் சுலபம்,
ஆங்கிலத்தில் ஒண்ணு, ரெண்டு, இருபது வரை தெரிந்தால் போதும்,
ஒன்று என்று தமிழிலும் two என்று ஆங்கிலத்திலும் மாறி மாறி இருபது வரை சொல்லுங்கள், நான் இந்த மாதிரியான நேரங்களில் ஐம்பது வரை சொல்வேன்,
A,B,C,D ஐ தலைகிழாக சொல்வதும் நல்ல ஒரு முயற்சி,
யாரிடமாவது பேசி கொண்டு இருக்கும் போது இதை முயற்சி செய்யாதிர்கள்,
இன்னும் நிறைய இருக்கிறது, விரிவாக பிறகு பேசலாம் 
 
Download As PDF
நன்றி  :http://valpaiyan.blogspot.com 
கவனம்

கவிதை : பூவல்ல, பூவல்ல, பெண் அவள் !

 
தளிர்களில் தழுவலுக்குள்
அரும்பாய்
ஆரம்பித்தலின் போது
ஒரு நிறம்.
மெல்ல மெல்ல
அரும்பின்
கரையுடைத்து
மொட்டாய் மாறினால்
புது நிறம்.

மொட்டின்
கதவுடைத்து
மெல்ல
இதழ் விரித்தலில்
வேறோர் நிறம்.

முழுதாய் மலந்த
காலையிலும்
சோர்வுற்றுச் சற்றே
தலை கவிழ்ந்த மாலையிலும்
கூட
நிறங்கள் மாறி மாறி.

நீ தானே
சொன்னாய்
நான் பூவென்று.

பின் ஏன்
என்
நிறமாற்றங்களை மட்டும்
மரபுக்கு மாறானது
என்கிறாய் ?
 

Wednesday, April 7, 2010

பி.எட் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு!

"தமிழக அரசின் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தால் ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு பி.எட்.​ பட்டதாரிகள் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று கல்வி அமைச்சர் க.​ பொன்முடி ஆலோசனை கூறியுள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்றது.​
விழாவில் கல்வி அமைச்சர் க. பொன்மொடி கலந்து கொண்டுப் பட்டங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். அப்போது, "4 வருட ஒருங்கிணைந்த பி.ஏ.,பி.எட்.,​​ போன்ற படிப்புகள் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கின்றன.​ அதனால்,​​ பட்டப் படிப்பு முடித்து பி.எட்.,​​ படிப்பவர்கள் தங்களின் வேலைவாய்ப்பு பற்றி கவலைப்படத் தேவையில்லை.​ எதிர்காலத்தில் அவர்களின் வேலைவாய்ப்பு மறுக்கப்படாது.
இப்போதைய இலவச கட்டாயக் கல்வி சட்டத்தால் ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.​ அந்த வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு பி.எட்.​ பட்டதாரிகள் திறமைகளையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.​ கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் எடுப்பதைவிட தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுப்பதுதான் உண்மையான வேலை. எழுத்தறிவித்தன் இறைவன் ஆவான் என்று வார்த்தைக்காக சொல்லப்படுவதில்லை.​ 2,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே உணர்ந்து சொல்லப்பட்டது.
ஆசிரியர்கள் தமிழில் பாடம் சொல்லித் தருவதை கௌரவக் குறைவாக நினைக்கின்றனர்.​ இது கூடாது.​ மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.​ பயிற்று மொழியாக தமிழைப் பயன்படுத்துங்கள்.​ கல்வித் துறையில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு வருவது கட்டாயம்.​ அதைச் செயல்படுத்தும் பொறுப்பும் ஆசிரியர்களிடத்தில்தான் உள்ளது" என்று பேசினார்.