Sunday, June 6, 2010

குழந்தையின் கல்வி எங்கிருந்து ஆரம்பமாகின்றது? (part 3)

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்.

இதுவரை வந்த இரண்டு பாகங்களில் குழந்தை பிறப்பதற்கு முன்னர் என்ன என்ன விதங்களில் நம்மை மெருகூட்டிக் கொள்ளலாம் என்பதனைப் பார்த்தோம். எனவே, நல்ல குழந்தைகளை பெற்றெடுப்பதும் வளர்ப்பதும், குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரே நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று என்பதனை மீண்டும் வலியுறுத்துகிறது, இஸ்லாம்.

ஒருமுறை அபுல் அஸ்வத் அத் து'ஆலீ என்பவர் தன் குழந்தைகளை நோக்கிக் கூறினார், "நான் உங்களுக்கு நல்ல தந்தையாக இருந்தேன், நீங்கள் குழந்தையாய் இருந்தபோது பின் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின், இன்னும் நீங்கள் பிறப்பதற்கு முன்ன‌ரும்" அப்பொழுது அவரின் குழந்தைகள் கேட்டனர்,"அதெப்படி நாங்கள் பிறக்கும் முன்னரே நீங்கள் எங்களுக்கு நல்லது செய்ய முடியும்?" அதற்கு அபுல் அஸ்வத் கூறினார்,"உங்களுக்காக ஒரு நல்ல குணமுள்ள பெண்ணை, நீங்கள் பிறந்த பின் உங்களை நல்ல விதத்தில் கவனித்துக்கொள்ளும் பெண்ணை நான் மனைவி ஆக்கிக் கொண்டதன் மூலம்"

இன்னும் ஓர் அறிஞர், அர் ரியாஷீ தன் குழந்தைகளிடத்தில் கூறியதாவது,"நான் உங்களுக்கு செய்த எல்லா நல்ல காரியங்களிலும் முதன்மையானது, உங்களுக்காக ஒரு நல்ல வம்சத்தில் வந்த, நற்குணம் கொண்ட மேன்மையான பெண்ணை திருமணம் செய்ததாகும்"

எனவே இவ்வாறான முன்மாதிரிகள் மூலம் மீண்டும் மீண்டும் புலப்படுவது என்ன, திருமண விஷயத்தில் காட்ட வேண்டிய அக்கறை, தேர்ந்தெடுக்க வேண்டிய வழிமுறை இவையெல்லாம்.

இனி, குழந்தை பிறப்பதற்கு முன்னரே அல்லாஹ்வினிடத்தில் அதற்காக எவ்வாறு து'ஆ செய்யலாம் என்பதையும், எவ்வளவு சிரத்தையாய் இந்த நேரங்களில் இருக்க வேண்டுமென்பதையும் காணலாம், இன்ஷா அல்லாஹ்.

திருமணம் முடிந்த பின் குழந்தை பிறப்பை இப்பொழுதெல்லாம் தள்ளிப் போடுவது ஃபேஷனாகி விட்டது. எனக்கு தெரிந்த ஓர் குடும்பத்தில் கல்யாணம் செய்தவுடன் அமெரிக்கா வந்துவிட்டதால் இரண்டு மூன்று வருடங்கள் நன்கு சுற்றிப் பார்ப்பதிலும் பொறுப்புகளில்லாமல் சுதந்திர‌மாய் இருப்பதுவுமென நினைத்து மூன்று வருடங்கள் தள்ளிப் போட்டன‌ர். இப்பொழுது அல்லாஹ் இன்னும் அவர்களுக்கு நாடவில்லை. மறைமுக ஏச்சு பேச்சுக்களை தாங்கிக் கொண்டுள்ளனர். நம் தாய் தந்தையர் வளர்ந்த விதம் வேறு, நாம் வள்ர்ந்த விதம் வேறு. வேறு நாடுகளில் வந்து தங்கும்பொழுது, அவர்களுடைய உணவுப் பொருட்களை நம் கலாசரத்தில் கொண்டு வ‌ரும்பொழுது, வேகத்திற்கு ஈடு கொடுக்கும் பேரில் சத்தான உணவுகளை விட்டு விட்டு உறைந்து செத்துப் போன காய்கறிகள், மாமிசம ஆகியவற்றை புழங்குவது போன்ற சில பல விஷயங்களால் நம் உடல் அதன் ஹார்மோன்க‌ளில் பற்பல வித்தியாசங்களை கொண்டு வருகிறது. இதனால் மேற்கண்ட நிலையை அடைய வேண்டியிருக்கிறது. இவர்களிப் போலவே இன்னும் பல குடும்பங்களையும் பார்த்திருக்கிறேன். அவர்களின் நிலையை கண்டு கண்ணீர் விட்டலும், அவர்களுக்கு புரியாததை எண்ணி வியந்தே போகிறேன். தேவை என்னவென்றாலும் அல்லாஹ்வினிடத்தில் நம்பிக்கை வைத்து மீண்டும் மீண்டும் முயற்சிப்பதும், நம் வாழ்க்கையை ஹலாலாக வைத்து, இஸ்லாம் கூறும் வகையில் வாழ்வதுமே வெற்றியை தரும். வருடங்கள் பல ஆனாலும் நம்பிக்கை வேண்டும். அய்யூப் நபிக்கு இறைவன் 90 வயதில் குழந்தைப்பேறை தரவில்லையா? இப்றாஹீம் நபிக்கு, அவர் மனைவி தன்னை மலடி என்று கூறிய பின்னும் அல்லாஹ் பல நல்மக்களை தரவில்லையா? இன்னும் இதைப் பற்றி பேசிக் கொண்டே போனால் நம் கட்டுரையின் கருவிலிருந்து விலகிவிடும் அபாயம் அதிகமாக தெரிகின்றது, எனவே இன்ஷா அல்லாஹ் நாம் இதைப் பற்றி காலம் வரும் போது கவனிப்போம், இன்ஷா அல்லாஹ்.


து'ஆ ஒரு இறை நம்பிக்கையாளனின் ஆயுதம் என்று இமாம் இப்னுல் கய்யிம் (ரஹி) அவர்கள் கூறியுள்ளார்கள். 

மேலும் படிக்க...குழந்தையின் கல்வி எங்கிருந்து ஆரம்பமாகின்றது? (part 3)
http://homeschoolingintamil.blogspot.com/2010/06/part-3.html

என்னடி உலகமிது!

வஞ்சிக்கப்பட்ட
தன் கற்புக்காக
வழக்கு தொடர்ந்தாள்
பேதை பெண்ணொருத்தி
வழக்கும் தொடர்ந்தது
வாழ்வும் தொலைந்தது

குறுக்கு விசாரனையில்
குன்றிபோனது மனம்
மீண்டும்
களங்கப்படுத்தபட்டது மானம்
குமுறியழுதது மனம்

தீர்ப்பு
ஒத்திவைக்கப்பட்டதென
தெரிவிக்கப்பட்டதும்
வெளியில் வந்த வேளையில்
பளிச் பளிச்—என
பத்திரிக்கைக்காரர்களின்
கேமராக்களும் கேள்விகளும்
காதையும் கண்ணையும் கூச

மேலும்
காற்றில்விடப்பட்டது மானம்
கலங்கியது மனம்

குமுறிய மனதோடும்
கொட்டுகின்ற கண்ணீரோடும்
இருதலைக் ”கொள்ளியாய்”
இரவு விடிய
இருட்டு முடியும்முன்னே
வெட்டவெளிச்சமானது
இருட்டில்
இவளுக்கு நடந்தகொடுமை
முதன்மைச் செய்தியாய்!

மீண்டும்
களங்கப்படுத்தப்பட்டது மானம்
கதறியழுதது மனம்





தவறாதபோதும்
தனக்கிந்த நிலையா?
பொன்மானும் துடித்தாள்
கண்ணீரும் வடித்தாள்
தன்மானம் காக்க
தன்னிலையை மறந்தாள்

தீர்ப்பெழுதும் முன்பே
தன்தேகம் முழுதும்
தீ யிற்கு இரையாக்கி
தனக்குத் தானே
தீர்ப்பெழுதிக்கொண்டாள்

மதியிருந்தும் கெட்ட
மாந்தரை நினைக்கையில்
மதியில்லா மிருகம் தேவலை
இவள் செய்துகொண்ட தற்கொலை
அதுவும்
இவளுக்கு இழிநிலை

இதுவா மனிதயினம்
இதுவா மனித குணமென்று
எங்கிருந்தோ ஒரு
ஓநாயின் ஊளை கேட்டது
அது
மனச்சாட்சியுள்ள மனித
மனச்செவியை மட்டும்
சுட்டது...

// தமிழ்குறிஞ்சியில் வெளியான என்கவிதை//

[இன்றையகாலத்தில் பத்திரிக்கைகளிலும், செய்திகளிலும், அதிகமதிகம் பேசப்பபடுபவை இவைகளே! யாரைச்சொல்லி நோவது!
மனிதன் மனசாட்சியை மறந்ததாலா?
இல்லை தான் மனிதன் என்பதையே மறந்ததாலா?]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
நன்றி  http://niroodai.blogspot.com/2010/04/blog-post.htmlஎன்னடி உலகமிது!

Friday, June 4, 2010

தமிழ் இணைய அறிமுகப் பட்டறை: தன்னார்வலர்கள் தேவை!


சூன் 23-27, 2010 நடக்கும் உலகத் தமிழ் இணைய மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ்க் கணினி, இணைய நுட்பம் குறித்த கண்காட்சி நடைபெறுகிறது. இதில் தமிழ் இணையம் குறித்த அறிமுகம், பயிற்சி அளிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

தமிழ்த் தட்டச்சுப் பயிற்சி, தமிழ் இணைய அறிமுகம், தமிழில் இணைய அறிமுகம், வலைப்பதிவுகள், விக்கிப்பீடியா, கட்டற்ற மென்பொருள் இயக்கம் போன்ற அடிப்படைக் கருக்களில் பயிற்சி அளிக்கலாம். தமிழ் இணையத்தில் பால் ஆர்வமுள்ள நண்பர்களாக இந்த நிகழ்ச்சியைக் கூடிச் செய்து கலைவோம். எந்த அமைப்பின் பேரிலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படவில்லை. 2007 சென்னை வலைப்பதிவர் பட்டறை போன்ற முயற்சியின் தொடர்ச்சியாக இதனைக் கருதலாம்.

இந்நிகழ்வைத் திட்டமிட்டு நடத்த, உறுதி செய்ய தன்னார்வலர்கள் தேவை.

ஒரு நாளுக்கு குறைந்தது 6 பேராவது முழு நேரம் பயிற்சி அரங்கில் இருப்பது நல்லது. எனவே, 5 நாட்களுக்கும் 30 தலைகள் தேவை. ஒருவர் அனைத்து நாட்களும் இருக்கலாம். அல்லது, ஓரிரு நாட்கள் மட்டும் கலந்து கொள்ள இயன்றாலும் சரி. ஒருவர் குறைந்தது ஒரு நாள் முழுக்கவாவது இருக்க இயலும் என்றால் ஒருங்கிணைக்க இலகு.

நேரடியாக நிகழ்வில் பங்கு பெறுவது போக, நிகழ்வுக்குத் தேவையான கணினிகள், projectorகள் ஏற்பாடு, உதவிக் கையேடுகள், இறுவட்டுகள் தயாரிப்பு போன்றவற்றில் உதவி தேவை. எனவே, நேரில் வர இயலாதவர்களும் இம்முயற்சியில் உதவலாம்.

உங்களால் உதவ இயலும் என்றால் உங்கள் பெயர், கலந்து கொள்ளும் நாள், செய்யக்கூடிய வேறு உதவிகள் குறித்த விவரங்களை மறுமொழியில் குறிப்பிடுங்கள்.

நன்றி.

http://www.luckylookonline.com/2010/06/blog-post.htmlதமிழ் இணைய அறிமுகப் பட்டறை: தன்னார்வலர்கள் தேவை!

Thursday, June 3, 2010

எதிரி.




உன் நண்பனை அளவோடு நேசி!

ஒரு நாள் அவன் உன் எதிரியாகலாம்!

உன் எதிரியை நேசிக்கக் கற்றுக்கொள்!

ஒரு நாள் அவன் உன் நண்பனாகலாம்!




ஓட்டம்.
ஏழை மனிதன் உணவுக்காக ஓடுகிறான்!

பணக்காரன் உண்ட உணவு செரிப்பதற்காக ஓடுகிறான்!



ஒரு மனிதனுக்கு வெற்றியைக் கற்பிக்கும் குரு யார் தெரியுமா?
பெற்றோர் - 10 %
உறவினர்கள் - 1%
நண்பா்கள் - 6%
காதலர்-3%
ஆசிரியர்-5%
தோல்வி-75%


தவறுகள்


தவறுகள் அனுபவத்தை அதிகரிக்கும்!
அனுபவங்கள் தவறுகளைக் குறைக்கும்!

நன்றி : http://gunathamizh.blogspot.com/2010/05/blog-post_30.htmlஎதிரி.

ஒரு தாய்மைப் போராட்டம் - 1

தாய்மையின் அன்பு சார்ந்த உணர்வுகள் குறித்து எல்லோரும் அறிந்திருப்பீர்கள். நான் பெரிதாக விவரிக்க எதுவும் இல்லை. எனினும்...

நமக்குள்ளே யாரேனுமொருவருக்கு ஏதேனுமொரு துன்பமென்றால் கண்டுகொள்ளாது போய்விடுகிறோம். இங்கு ஐந்தறிவு ஜீவன்களென்று நாம் பொதுவாக ஒதுக்கிவைத்திருக்கும் இவற்றைப் பாருங்கள்.


http://www.picturestothink.tk/ஒரு தாய்மைப் போராட்டம் - 1

Tuesday, June 1, 2010

துயர் மீட்பு குழு மீது இஸ்ரேல் கொடும் தாக்குதல் - 15 பேர் பலி!

உணவு, நீர், மருந்து பொருட்கள், மின்சாரம் என அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள ஃபலஸ்தீனர்களின் துயர் துடைக்க, அத்தியாவசிய உதவி பொருட்களுடன் பலஸ்தீனம் நோக்கிச் சென்று கொண்டிருந்த துருக்கி நாட்டு மீட்புக் குழு கப்பல் மீது இஸ்ரேல் கடற்படை கப்பல் நடத்திய தாக்குதலில் கப்பலில் பயணித்த மீட்பு குழுவினரில் 15 பேர் பலியாகினர்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது, இஸ்ரேல் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை வழங்காமல், சர்வதேச சட்டங்களை மீறி அப்பகுதி மக்கள் மீது அடிக்கடி தாக்குதல்களையும் இஸ்ரேல் தொடுத்து வருகிறது.

இந்நிலையில், அமைச்சர்கள், மனித உரிமை குழுவினர், மருத்துவர்கள் போன்றோர் அடங்கிய மீட்பு குழுவினருடன் உணவு, மருந்து பொருட்கள், துணிகள் ஆகிய உதவி பொருட்களுடன் துருக்கியிருந்து பலஸ்தீன மக்களுக்கு மீட்பு கப்பல் ஒன்று காஸா நோக்கி விரைந்தது.

கப்பல் காஸாவை நெருங்கிய நிலையில் இஸ்ரேல் கப்பல் படையினரால் மீட்பு கப்பல் சுற்றி வளைக்கப்பட்டது. இஸ்ரேலிய போர் கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் அதில் இருந்து இறங்கி, பாலஸ்தீன உதவி கப்பலில் ஏறினர். பின்னர், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மீட்பு குழுவினர் மீது கண்மூடித்தனமாக அவர்கள் சுட்டடதில் கப்பலிலேயே மீட்பு குழுவினரில் 15 பேர் பரிதாபமாக பலியானார்கள். பலர் பலத்த காயம் அடைந்தனர்.

இஸ்ரேலிய இராணுவத்தினரின் மனிதத்தன்மையற்ற இக்கொடிய செயலுக்கு இஸ்ரேல் வர்த்தக மந்திரி பினியாமின் பென் எலீசர் வருத்தம் தெரிவித்துள்ளார். துருக்கி நாடு, இஸ்ரேலின் சர்வதேச சட்டத்தை மீறிய இக்கொடிய செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இஸ்ரேலின் இம்மனித உரிமை மீறலுக்கு எதிராக உலகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
http://www.inneram.com/201006018647/israel-attacks-gaza-aid-fleetதுயர் மீட்பு குழு மீது இஸ்ரேல் கொடும் தாக்குதல் - 15 பேர் பலி!

கவிதை : இணையக் காதல்…

கவிதை : இணையக் காதல்
இது

இருபதாம் நூற்றாண்டின் காதல்.

விரலாலும் குரலாலும்

விருப்பங்கள் பரிமாறிக் கொள்ளும்

விஞ்ஞானக் காதல்.

விழிபார்த்து வார்த்தைகளை

விழுங்கி விட்டேனென்று

கவிஞர்கள்

இனி பொய் சொல்லவேண்டாம்.

யாரும் பார்க்கக் கூடாதென்று

நெரிசல் நகரங்களில்

நிழல்ப்பூங்கா தேடவேண்டாம்.

மணிக்கணக்கில் அலங்காரம் செய்து

பிம்பங்களோடு பிடிவாதம் பிடித்து

கசங்காமல் நசுங்காமல்

நிழல் கூடக் கலையாமல்

நடக்கும்

அவஸ்த்தை இனி வேண்டாம்.

இந்த நேரம் பார்த்தா

இவன் இங்கே வரவேண்டுமென்று

பயத்தின் படபடப்பில்

இதயத்துடிப்பை இறக்குமதி செய்யவேண்டாம்.

தொடுதல்களால் பற்றிக்கொள்ளும்

தொட்டாச் சிணுங்கி இலைகளாய்

எத்தனை நாள் தான் காதலிப்பது ?

காக்கவைத்ததற்குக் காரணத்தை

எத்தனை நாள் தான்

பிரதி எடுப்பது.

புதிதாய் கொஞ்சம் பேசுவோமே…

உலக வலையில்

ஏதோ ஓட்டையாம்.

கணிப்பொறி என்னோடு

முரண்டு பிடிக்கிறது.

தொலைபேசி

நேற்றைக்கு மூர்ச்சையாகி விட்டது.

காதலில் பொய் சொல்வது விதியாகி விட்டது

அதை

புதிதாய் சொல்வதற்கு பழகிக் கொள்ளலாம்.

விழிகள் இரண்டும் மோதும் முன்

விரல்கள் விரலிடை தூங்கும் முன்..

தீண்டலின் தூண்டல் துவங்கும் முன்

இதயங்களிடையே

நம்பிக்கை பரிமாறுகிறதே விஞ்ஞானக் காதல் !!!

காதலுக்கு

சிணுங்கலின் வெப்பத்தை விட

நம்பிக்கையின் சப்தம் தானே

தேசிய கீதம் !!!

http://xavi.wordpress.com/2010/02/15/love-56/
கவிதை : இணையக் காதல்…: "