Showing posts with label வரதட்சிணை. Show all posts
Showing posts with label வரதட்சிணை. Show all posts

Friday, December 17, 2010

சரியான போட்டி! ஆண்களே இனியும் ஏமாந்து விடாதீர்கள் !

போட்டி போட்டு ஆண்கள் ஏமாந்துவிட்டார்கள் !
மாணவர்களுக்கான கட்டுரை, கவிதை, பேச்சு போட்டி பெண்கள் முன்னிலை .
பாவம் காதலில் ஆண் ரொம்ப ஏமாந்துவிட்டார்
தீர்மானிக்கும் முடிவு கை நழுவி பெண்கள் கை ஓங்கி நிற்கின்றது ,
குடியால் ஆண்கள் எண்ணிக்கை அதிகம் .இனி இனாம் சாராயமும் கிடைக்க அரசாங்கம் வழி செய்ய தேர்தல் வாக்குறுதி வரலாம் . அதற்கும் பெண்கள் போட்டி போடலாம் . வளர்ந்த பட்டினத்தில் ஒரு சில பெண்கள் பீர் குடிப்பதனை இப்பொழுது காண முடிகின்றது .
ஒன்றும் பிரச்சனை இல்லைதான் ஆனால், நாம் தான் கொஞ்சம்மாந்து விட்டோம்  ..... ஆண்களின் முடிவே இறுதி முடிவாக இல்லாமல் போய்விட்டதனால் .
முக்கியமாக வரதட்சிணைக் கொடுமை வழியே பல ஆண்கள் தனது குரலுக்கு பெண் செவி சாய்க்கும் என்று நம்பி மாந்துவிட்டார்கள். 
வரதட்சிணைக் கேட்க தூண்டுவது யார் ? "எனக்கு  வரதட்சிணை வாங்கித்தானே நீங்கள் திருமணம் செய்தீர்கள் அதனை என் மகனுக்கு கேட்கின்றேன் மகளுக்கும் வரதட்சிணை கொடுத்ததனை எப்படி  சரி செய்வது நான் ஒன்றும்  ஏமாளி அல்ல" என்று துண்டும்பொழுது சரி போட்டது யார் ?
 
நிறைய மதிப்பெண்கள் பெற்று ...கல்வியில் வேலை வாய்ப்பில் பெண்களுக்கு முதல் இடம் .  பெண் வேலைக்குப் போகக்கூடாது என்று விரும்பிய காலம் இப்போது வெகுவாகக் குறைந்து வருகிறது.
படித்த பெண்ணையே திருமணம் செய்ய ஒரு படித்த மணமகன் விரும்புவான் என்ற காலம் போய் படித்த ஆணையே ஒரு பெண் விரும்பும்  காலம் வந்து மணப்பெண் கிடைக்காமல் அலையும் நிலையாக மாறிவிட்டது . எந்த நாடு சென்றாலும் என்னை உடன் அழைத்து செல்லும் மணமகன்தான் வேண்டும் என்ற காலம் வந்துவிட்டது.
மார்க்கம் போதிக்கும் வித்தகர் "அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு" "மார்க்க கல்வி போதும்" "சமைக்க தெரிந்தால் சரி"    மேல் படிப்பு கல்லூரி சென்று  படிக்க வேண்டாம் என்று சொன்ன காலம் போய் அவர்கள் வீட்டில் அனைவரும் இன்ஜினியரிங்  கல்லூரி மாணவியாக மாறி  நல்ல மதிப்பெண்கள்  வாங்கி வேலைக்கு செல்கின்றனர் .
ஆண்களுக்கு வேலை கிடைக்காமல் ஏமாற்றம்.
பாவம் ! ஆண்களே இனியும் ஏமாந்து விடாதீர்கள் !