Showing posts with label ஊக்குவிப்பு. Show all posts
Showing posts with label ஊக்குவிப்பு. Show all posts

Tuesday, December 3, 2013

எல்லா ஸ்டார்களுமே யாரோ ஒருவருடைய ஊக்குவிப்பின் மூலமாகதான் நமக்கு கிடைத்திருக்கிறார்கள்.


எம்.ஜி.ஆர் நாயகவேடத்துக்கு பொருத்தமான முகவெட்டு கொண்டவர் அல்ல என்று எல்லீஸ் ஆர்.டங்கன் ஆரம்பத்தில் மறுத்த தகவலை தோழர் Narain Rajagopal ஒரு ஆவணப்படத்தை முன்வைத்து எழுதியிருக்கிறார் (எம்.ஜி.ஆரை சதிலீலாவதியில் அறிமுகப்படுத்தியவரே டங்கன்தான் என்பது வேறு விஷயம்)

எம்.ஜி.ஆர் மட்டுமல்ல. பல நாயகர்களுக்கும் ஆரம்பத்தில் இதே நிலைமைதான்.

சிவாஜி பராசக்தியில் நடித்துக் கொண்டிருந்தபோது, தயாரிப்பாளர்களில் ஒருவரான மெய்யப்ப செட்டியாருக்கு ‘ரஷ்’ பார்த்து, அவரை பிடிக்கவில்லை. “மீன் உணவுக்காக வாயை திறந்து மூடுவது மாதிரியிருக்கிறது” என்று சிவாஜியின் டயலாக் டெலிவரி நக்கல் அடிக்கப்பட்டது. கலைஞர் மற்றும் இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு விடாப்பிடியாக சிவாஜியை சிபாரிசு செய்தார்கள். அறிஞர் அண்ணா பர்சனலாக தன்னுடைய நட்பு செல்வாக்கினை பயன்படுத்தி செட்டியாரை ஒப்புக்கொள்ளச் செய்தார். இல்லாவிட்டால் ‘செவாலியே’ நமக்கு மிஸ் ஆகியிருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.