Tuesday, October 23, 2018
’ரூமிக் கவிதை’ தந்து உங்களை வரவேற்கிறேன்.
மீண்டும், கழுநீர் சாய்கிறது ஆம்பலிடம்
மீண்டும், ரோஜா தன் ஆடை களைகிறது
வேறொரு உலகத்தில் இருந்து வந்துள்ளனர்
பச்சைக்காரர்கள்!
இலக்கற்ற தென்றலினும் போதையாய்
மீண்டும், மலைச்சாரல் எங்கும்
குறிஞ்சியின் அழகு விரிகின்றது
முல்லை மலர் சொல்கிறது மல்லிகைக்கு:
அஸ்ஸலாமு அலைக்கும்
உன் மீது சாந்தி உண்டாகட்டும்
உன் மீதும் பையா,
என்னுடன் இந்தப் புல்வெளியில் நட
மீண்டும், எங்கும் சூஃபிகள்
வெட்கப்படுகிறது மொட்டு
காற்று திறக்கிறது சட்டென்று
என் நண்பனே!
நண்பன் இருக்கிறான் இங்கே
ஓடையில் நீர் போல
நீரில் பூப்போல
நர்கிஸின் சமிக்ஞை: நீ சொல்லும் போது
தேக்கிடம் சொல்கிறது கிராம்புக் கொடி
நீயே எனது நம்பிக்கை
தேக்கின் பதில்:
நான் உனது சொந்த வீடு
நல்வரவு
ஆரஞ்சிடம் கேட்கிறது ஆப்பிள்
ஏனிந்த முகச்சுளிப்பு?
”தீயோர் என் அழகினைக் காணாதிருக்க!”
பறந்து வருகிறது மணிப்புறா எங்கே? நண்பன் எங்கே?
குயிலின் ஸ்வரம் சுட்டுகின்றது ரோஜாவை
மீண்டும், வசந்த காலம் வந்துள்ளது
ஒவ்வொன்றின் உள்ளும் வசந்த மூலம் எழுகின்றது
நிழல்களின் ஊடாக நகரும் நிலா
பலவும் சொல்லாமல் விடப்பட வேண்டும்
மிகவும் தாமதமாகி விட்டபடியால்
இன்றிரவு பேசாத சங்கதிகள் எல்லாம்
நாளைக்கு வச்சுக்குவோம்
இடுகையிட்டது rameez4l
http://trameez.blogspot.com/
No comments:
Post a Comment