Friday, June 23, 2017
நம்பிக்கை மகா வலிமையானது
நம்பிக்கை
மகா வலிமையானது
காடுகடக்கும்
ஒரு சிட்டுக்குருவிக்கு
அடர்த்தியான
இறகுகளைக் கொண்ட
சிறகுகளைப்போல
நம்பிக்கை
இல்லா நிலையில்
மரணம்
மிக நெருக்கமானது
வழுக்கும்
கண்ணாடிச் சிலையை
நடுங்கும் கரங்களில்
ஏந்தி நிற்பதைப்போல
நம்பிக்கையால்
பிரபஞ்சத்தின்
அச்சாணியையும்
அசைத்துப் பார்த்துவிடலாம்
நம்பிக்கை
நேர்மறை எண்ணங்களைக்
குவிக்கிறது
எண்ணங்களே
வாழ்வை அமைக்கிறது
நம்பிக்கை
மகா வலிமையானது
காடுகடக்கும்
ஒரு சிட்டுக்குருவிக்கு
அடர்த்தியான
இறகுகளைக் கொண்ட
சிறகுகளைப்போல
நம்பிக்கை
இல்லா நிலையில்
மரணம்
மிக நெருக்கமானது
வழுக்கும்
கண்ணாடிச் சிலையை
நடுங்கும் கரங்களில்
ஏந்தி நிற்பதைப்போல
நம்பிக்கையால்
பிரபஞ்சத்தின்
அச்சாணியையும்
அசைத்துப் பார்த்துவிடலாம்
நம்பிக்கை
நேர்மறை எண்ணங்களைக்
குவிக்கிறது
எண்ணங்களே
வாழ்வை அமைக்கிறது
அன்புடன் புகாரி
கவிஞர்,கணினி ஆலோசகர்
https://anbudanbuhari.blogspot.in/
No comments:
Post a Comment