யாருமில்லையென்ற
கவலை வேண்டாம்.
உனக்காய் அழுவதற்கு
உன் கண்கள் இருக்கின்றன
துடைப்பதற்கு
உன் கைகள் இருக்கின்றன
இனி யாருமில்லையென்ற
கவலை வேண்டாம்.
உன் தலையினை நீயே வருடிக்கொடு
உன் தோள்களை நீயே தட்டு
உன் திறமைகளை நீயே பாராட்டு..
உன் தவறுகளை நீயே குழிதோண்டிப் புதை
தோல்விகளை கண்டு அஞ்சாதே
வெற்றிகளில் மயங்கிக்கிடக்காதே
முதலில் உன்னை வென்று
பின் உலகை வெல்ல வா....
உடலில் உயிரும்
உணர்வில் துணிவும்
இருக்குவரை போராடு...
உன் எதிரிகளின் மூக்குகளை
உன் நம்பிக்கைகளால் உடை
நட அடுத்தவன்
கைகளைப்பிடித்து அல்ல
உன் கால்களைக்கொண்டு....!
கவிஞர் அஸ்மின்.
பாடலாசிரியர் அஸ்மின்
No comments:
Post a Comment