Wednesday, May 22, 2013

கடல் கடந்த கட்டளைகள் !

வெளிநாடு சென்று வருவதற்கு முன் அனுப்பப் பட்ட செய்தி (இப்படியும் நடக்கலாம் )

மின்சாரமில்லை இன்வர்ட்டர் வைக்க வேண்டும்
பிள்ளைகளுக்கு பள்ளிக்கூட பீஸ் கட்ட வேண்டும்
எனக்கும் எங்கள் வீட்டுக்கும் கொடுக்க வேண்டியதை தனியே எங்கள் வீட்டுக்கு அனுப்பி விடவும்
உங்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டியதில் எனக்கும் பொருள் சேர்த்துக் கொள்ளவும்
ஊருக்கு வந்து அனுப்பிய பெட்டி பிரிக்கும்போது நானும் இருக்க வேண்டும்
செலவுக்கு தேவையான பணம் கொண்டு வரவும்
வந்த பின் 'அது வாங்க பணமில்லை' என்று சொல்லக் கூடாது
அங்குள்ள நகைகள் நல்ல தங்கத்தில் இருக்கும் அதில் வளையல் ,செயின் வாங்கி தனியே கொண்டு வாருங்கள்
இதற்க்கெல்லாம் பணமில்லையென்றால் கடன் வாங்கி பிள்ளைகள் படிப்புக்கும் , குடும்ப செலவிற்கும் பணம் அனுப்பி வைத்து விட்டு நான் விரும்பியது அனைத்தும் கிடைக்க வழி கிடைக்கும் வரை அங்கேயே இருந்து பணம் சேர்த்த பின் வாருங்கள் .

இரண்டு வருடம் கழித்து அனுப்பிய செய்தி
ஏன் இன்னும் ஊர் வராமல் இருக்கிறீர்கள்
'பிள்ளைகள் அப்பா எப்ப வருவார் வருவார்' என கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்
ஊருக்கு வந்து சேருங்கள் . ஒரு பொருளும் வேண்டாம் நீங்கள் வந்தால் போதும் .

கணவனின் பதில்
உன் ஆசைப்படி பிள்ளைகளுக்காக ஊர் வர முடிவு செய்து விட்டேன்.அடுத்த வாரம் வந்து விடுவேன்

3 comments:

  1. அருகில் இருந்தாலே போதும்...

    ReplyDelete
  2. உங்கள் தளம் Google Chrome-இல் திறந்தால் "Danger Malware Ahead!" என்று வருகிறது... காரணம் : www inneram.com

    www inneram.com - தளத்தில் இணைத்திருந்தால் எடுத்து விடவும்... நன்றி...

    ReplyDelete
  3. அன்புள்ள திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி . என்னுடையது mozilla Fireboz நீங்கள் குறிப்பிட்ட www inneram.com இல்லை

    ReplyDelete