Thursday, March 31, 2011

ஜப்பானிடமிருந்து நாம் அறிந்து கொள்ளவேண்டியது.

 ஜப்பானிடமிருந்து நாம் அறிந்து கொள்ளவேண்டியது.
அமைதிக் காத்தல்,பொறுப்பு,நிதானம்,மற்றவருக்கு உதவுதல், அலட்டிக்கொள்ளாமை, மன உறுதி, உண்மையான உழைப்பு. மற்றவருக்கு பாதிப்பு ஏற்படாமல் அதே நேரத்தில் அவர்களுக்கு உதவுவது இன்னும் எத்தனையோ இருந்தாலும் அதனை ஜப்பானில் தற்பொழுது எற்பட்ட பாதிப்பில் நாம் அனைவரும் பார்த்து அதிசியத்தோம்
ஜப்பான் பூமி அதிர்ச்சி  / சுனாமி /நூக்லியர்  ரியக்டோர்ஸ்  பாதிப்பு    ஏற்பட்டபோது அவர்களிடமிருந்த அமைதி அதிசியமானது .
 அவர்கள் யாரும் தனது மார்பில் அடித்துக்கொண்டு கதறவில்லை.
தண்ணீர் கிடைக்காதபோதும் தண்ணீர் வேண்டி அவர்கள் முறையாக வரிசையில் நின்று அமைதி காத்தனர்.
அவர்கள் கட்டிய கட்டடங்கள் மிகவும் பாதிப்பு ஏற்படாமல் உறுதியாக நின்றன
தேவைக்கு மட்டும் அவர்கள் வேண்டி நின்றனர், அதிகப்படியாக அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

பாதிப்பு உண்டானவுடன் தனது தேவைக்கு கடைகளில் புகுந்து கொள்ளை அடிக்கவில்லை
கடைகளில் மிகவும் விலை
யினை குறைத்து விற்றனர்.
மீடியாக்கள் அற்பத்தனமான செய்திகளை வெளியிடவில்லை. மக்களை பாதுகாப்பதற்கான செய்திகளுடன் அவர்களுக்கு மன அமைதிக்கான வழிகளை செய்துக் கொண்டிருந்தன .

No comments:

Post a Comment