இந்த மனசுதான் சார் கடவுள்…அனாதை சடலங்களை அடக்கம் செய்யும் கபூர்!

 

இந்த மனசுதான் சார் கடவுள்அனாதை சடலங்களை அடக்கம் செய்யும் கபூர்


!

நன்றி  கலைமகள்

இந்த உலகிலேயே பெரிய வலி என்ன தெரியுமா? நம் மரணத்தின் போது நமக்கென்று யாரும் இல்லாமல் தனிமையில் செத்துப் போவது! இறப்புக்குப் பின்பு எந்த மதமாக இருந்தாலும், அந்த மத வழக்கத்தின்படி நடக்க வேண்டிய சடங்குகளைச் செய்யக் கூட ஆள்கள் இல்லாமல் தனிமையில் மரணிப்பதைவிட வலி மிகுந்த வாழ்வே இல்லை எனச் சொல்லலாம். ஆனால் அப்படி இருப்பவர்களை தன் சொந்த செலவில் அடக்கம் செய்து கொண்டிருக்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த முகமது கபூர்!