மனித நேயம், மத நல்லிணக்கம் கொண்ட மனிதர்கள் இருக்கும்வரை, இந்தியாவில் மதப் பிரிவினையை உருவாக்க முடியாது.


ஆள் நடமாட்டம் இல்லாத அந்த சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் அந்தப் பெண் .

அருகிலேயே அவளது கணவர்.
தூக்க முடியாமல் ஒரு பெரிய மூட்டையை தூக்கி தோளில் சுமந்தபடி , அந்தப் பெண்ணுக்கு துணையாக வந்து கொண்டிருந்தார்.

இவர்கள் இருவரைத் தவிர அந்த சாலையில் ஒரு ஈ காக்கா கூட இல்லை .

காரணம்
ஊரடங்கு உத்தரவு.

கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டன; போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது.
வீட்டிலிருந்து யாராவது தெருவுக்கு வந்தால் விரட்டி அடித்தார்கள் போலீஸ்காரர்கள்.

காஷ்மீர் தலைநகரமான ஸ்ரீநகரில் கடந்த சில காலம் முன் நடந்தது இது.
( 2016 ஜூன் )

Sunday, January 26, 2020

Cosmic Eye (Original HD Landscape Version)

This is the original landscape-format version of the short movie Cosmic Eye, viewed over 200 Million times on Facebook since 2016, when the movie first went viral. The movie zooms through all well-known scales of the universe from minuscule elementary particles out to the gigantic cosmic web. In doing so, it shows the ultimate size comparison in our universe. The video drew inspiration from a progression of increasingly accurate graphical representations of the scales of the universe, including the classical essay "Cosmic View" by Kees Boeke (1957), the short movie "Cosmic Zoom" by Eva Szasz (1968), and the legendary movie "Powers of Ten" by Charles and Ray Eames (1977). Cosmic Eye takes these earlier representations to the state-of-the-art by displaying real photographs obtained with modern detectors, telescopes, and microscopes. Other views are renderings of modern computer models. Smart vector-based blending techniques are used to create a seamless zoom. This 2018-version of Cosmic Eye contains improved graphics and minor technical corrections compared to the 2011-version.

அல்லாஹ்வின் திருப் பெயர்கள்

அல்லாஹ்வின் திருப் பெயர்கள்: அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 1) அல்லாஹ் - அல்லாஹ் 2) அர்ரஹ்மான் - அளவற்ற அருளாளன் 3) அர்ரஹீம் - நிகரற்ற அன்புடையவன் 4) அல் மலிக் -...

அல்லாஹ்வின் திருப் பெயர்கள்

அல்லாஹ்வின் திருப் பெயர்கள்: அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 1) அல்லாஹ் - அல்லாஹ் 2) அர்ரஹ்மான் - அளவற்ற அருளாளன் 3) அர்ரஹீம் - நிகரற்ற அன்புடையவன் 4) அல் மலிக் -...

டாக்டர் ரெய்ஹான்


புனித மக்கா மாநகரில், பிரபல
ஏசியன் பாலிகிளினிக்கில் நான்
குழந்தைகள் நல மருத்துவராக
பணி புரிந்த நேரம்....பணியில்
சேர்ந்த நேரம், ஹஜ் நேரம்
என்பதால் ஹஜ் செய்ய
விரும்பினேன்.

எனது இந்திய நண்பர்கள்
டாக்டர் ரெய்ஹான் மற்றும்
டாக்டர் ஷேக் உமர் இருவரும்
எனக்கு உதவ முன் வந்தனர்.
ஹஜ் எப்படி செய்வது என்பது
பற்றி எனக்கு மிகவும் புரியும்
விதத்தில் மிகவும் எளிதாக
விளக்கம் தந்தனர்.மார்க்க
விசயங்களில், என்னை விட
இருவரும் மிகவும் ஞானமிக்கவர்
களாக இருந்தது எனக்கு மிகவும்
ஆச்சரியமாக இருந்தது.

இளமை.

********""
காலையில் எழுந்தபோதே மிகச்சோர்வாக இருந்தது.இன்னும் சிறிது நேரம் தூங்கவேண்டும்போல் தோன்றியது. கை கால்களில் வலி வேறு.இருப்பினும் வேண்டா வெறுப்பாக படுக்கையிலிருந்து எழுந்தேன்

இப்போதே மணிஏழைத்தாண்டிவிட்டது.
இப்போது எழுந்து தயாரானால்தான் ஒன்பதைரைக்குள் நாகர் கோவில் பஸ்ஸைபிடிக்கமுடியும். அப்போதுதான் பணிரண்டுமணிக்குள் நாகர்கோவில் ஒய்.ஆர் கல்யாணமண்டபத்தை அடையமுடியும்.

சிறியவயது நண்பன் நிஜாம் வீட்டு திருமணம். வீடுதேடிவந்து மிக விரும்பி அழைத்திருந்தான்.தவிர்க்கமுடியாது.சென்றே ஆகவேண்டும்.

சோர்வைப்பொருட்படுத்தாது படுக்கையிலிருந்து எழுந்து வேலைகளைப்பார்க்க தொடங்கினேன். காலை வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு அன்றைய செய்தி தாளையும் படித்துவிட்டு எழுந்தேன்.

பஸ்நிலையத்தை அடைந்தபோது நாகர்கோவில் பஸ் பாதி நிரம்பிய நிலையில் நின்றிருந்தது. பஸ்ஸில் மத்திய பகுதியில் ஏதுவான ஒருஸீட்டில் உட்கார்ந்தேன்.எனது அருகே இருந்த இருக்கை காலியாக இருந்தது.சிறிது நேரத்தில் பஸ் நிரம்பத்தொடங்கியது. பஸ்டிறைவர் மிகுந்த சத்தத்தோடு சீட்டின் கதவை சாத்திய பின் இருக்கையில் அமர்ந்தார்.

பஸ் புறப்பட்டது.

Tuesday, January 21, 2020

நவீன உலகமும் பின்பற்றும் சத்திர சிகிச்சையின் தந்தை AL-ZAHRAWI

 by ziyadaia

REVIEW ARTICLE OF ZAHRAVIஅல் ஜஹ்ராவி (A.D.936-1013)
THE FATHER OF MODERN SURGERY

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://abedheen.blogspot.com/2013/07/albucasis.html )

Edited by :- Dr Ziyad A.I.A

அபுல் காஸிம் கலஃப் பின் அப்பாஸ் அல் ஜஹ்ராவி என்ற முழு பெயரையுடைய இவரை  Abulcasis  என்று லத்தின் மொழியில் மேற்கத்திய உலகத்தில் அறியப்படுகிறது. அந்துலுசியா என்றழைக்கப்படும் இன்றைய ஸ்பெயினில் அன்றைய இஸ்லாமிய தலைநகராக இருந்த கொர்தோபாவிலிருந்து வடமேற்கே 6 மைல் தூரத்து புறநகர் பகுதியான அல் ஜஹ்ரா என்ற இடத்தில் கிபி 936 க்கும் 940 க்கும் இடையே பிறந்தார்.  பிறந்தது, வளர்ந்தது, கல்வி, தொழில்,  என எல்லாமே கொர்தோபாவில்தான். தொழில் நிமித்தமாகவோ அல்லது கல்விக்காகவோ அல்லது வேறு காரணத்துக்காகவோ வேறு எங்கும் செல்லவில்லை.



தன் வாநாள் முழுவதும் மருத்துவத்திற்காக  செலவிட்ட உத்தமர் மறைந்ததும் கொர்தோபாவில்தான்.

Sunday, January 19, 2020

Date palm fruit Cultivation பேரிட்சை பழம் சாகுபடி


Date palm fruit Cultivation பேரிட்சை பழம் சாகுபடி con tat number

Saturday, January 18, 2020

இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீஃபா ( ரஹ்) அவர்கள் அளித்த நேர்காணல்

இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீஃபா ( ரஹ்) அவர்கள் இலங்கை வானொலி நிலையத்திற்குப் பல்லாண்டுகளுக்கு முன்னர் அளித்த நேர்காணல் இது. Yembal Thajammul Mohammad

ஆத்மாவின் புகலிடம்

உடல் தெரியும், மனம் தெரியும்
ஆனால் ஆத்மாவை தெரியுமா!
மனம் வருந்தினால் உடல்
வருந்தும்..உடல் வருந்தினால்
மனமும் வருந்தும்.மனதையும்
உடலையும் தெரிந்த மனிதனால்
ஆத்மாவை மட்டும் அறிய முடியாது
போனது ஏன்!

மனமே மனமே பாவம் செய்வதேன்!

மனமே மனமே பாவம் செய்வதேன்!

பாடியவர்: அதிரை ஜஃபருல்லாஹ்
வரிகள்: கவிஞர் மலிக்கா ஃபாரூக்
படத்தொகுப்பு: முஃப்தி இனாயத்

மனமே மனமே பாவம் செய்வதேன்
மரணத்தை மறந்தே மமதைகொள்வதேன்
மரணசிந்தனை நினைவில் வரலையா! ஆ ஆ ஆ ஆ
இல்லை "மனிதா
மரணமென்பதே உனக்கு இல்லையா! ஆ ஆ

பூமியில் இறைவன் படைத்த அனைத்துமே
புனிதமனிதனே உனக்காகவே!
அட உனக்காகவே
இங்கு
சிறிதுகாலம் நீ இளைப்பாறவே!-இதில்
பொழுதுபோக்குகள் நிறைந்து கிடக்குது
புண்ணியங்களும் குவிந்து இருக்குது
நிறைய குவிந்து இருக்குது

Friday, January 17, 2020

மண்ணின் மைந்தனாக மயிலாடுதுறைக்கு பெருமையைச் சேர்த்த அசோகன் !

நம்மில் எவ்வளவோ பேர் பிழைப்புக்காக அரபுநாடுகளில் வசிக்கிறோம்
அப்படி பிழைப்புக்காக ஓமன் சென்றவர்தான் அசோகன் அங்கு தலைநகர் மஸ்கட்டில் வேலை பார்த்து அங்கு குடும்பத்துடன் வசிப்பதாக கூறும் அசோகன் அவர்கள் அவர்கள் நாட்டில் அவர்களுக்கு என்ன சலுகையோ அதையே எங்களுக்கும் வழங்கினர்.இந்தியன் என்ற பாகுபாடல்லாம் கிடையாது என்கிறார் .......இத்தனைக்கும் இறந்துபோன மன்னருக்கும் அவருக்கும் நேரிடையான தொடர்பு எதுவும் கிடையாதாம் .நேர்மையானவர் மன்னர் என்பதில் பெருமைப்பட்டுகிறார் .......
அந்த மன்னருக்கு நன்றி செலுத்தும் விதமாக மாபெரும் கட்அவுட் வைத்து அசத்திவிட்டார் அசோகன் குடும்பத்தினர்கள் .

ஆனால் நமக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியையே நாம மதிக்கமாட்டோம்.ஆனால் இவர்?
Nidur Mohamed Nizar


இறையடி சேர்ந்தார் ஜெர்மானிய அறிஞர் முராத் வில்பெர்ட் ஹோஃப்மேன்

இறையடி சேர்ந்தார்  ஜெர்மானிய அறிஞர் முராத் வில்பெர்ட் ஹோஃப்மேன்
(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜிஃஊன்...)
அவர்கள் ஒரு இஸ்லாமிய இதழுக்கு அளித்த பேட்டியில்...

கேள்வி:
தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு
முந்தைய காலங்களில் தங்கள் பகுதி முஸ்லிம்களால் இஸ்லாத்தை ஏற்கும்படி கவரப்பட்டீர்களா? ஏதேனும் குறிப்பிடத்தக்க நிகழ்வு எதுவும் சொல்ல முடியுமா?

பதில்:
இல்லை.என்னைச் சுற்றி ஜர்மெனியில் அன்றைய காலகட்டத்தில் (1980 களில்)முஸ்லிம்கள் யாரும் இருக்கவில்லை.இன்றைய சூழலில் இதை நம்புவதற்கு வியப்பாகவே இருக்கும். ஏனெனில் இன்று ஜர்மெனியில் சுமார் முப்பத்தைந்து லட்சம் முஸ்லிம்களும் சுமார் 2200 பள்ளிவாசல்களும் உள்ளன.நான் இஸ்லாத்தை ஏற்ற காலகட்டத்தில் அது ஒரு புதுமையான(exotic) விஷயமாகவே இருந்தது.எவ்வாறாயினும் அன்றைய1980 கால கட்டத்தில் ஜர்மனியில் மக்கள் இஸ்லாத்தைப்பற்றி அச்சப்பட்டதில்லை.எனவே என்னையும் ஒரு விசித்திரமானவனாகவே கண்டனரேயன்றி ஆபத்தானவனாக பார்க்கவில்லை.
தகவல் :Noor Mohamed

Saturday, January 11, 2020

மகத்தான நற்பாக்கியங்கள் !!!!

Nazreen Salman

மகத்தான நற்பாக்கியங்கள் !!!!

1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்

2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.

3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்‘ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.

4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை மனனமிட்டால் தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற்று விட்டார்.

5) எவர் கடமையான தொழுகைகளுக்கு முன் பின் உள்ள பன்னிரண்டு ரக்அத் சுன்னத்தை தொழுது வருவாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான்

6) எவர் நபியின் மீது ஒரு தடவை ஸலவாத்துச் சொல்வாரோ அல்லாஹ் அவருக்கு பத்து முறை அருள் புரிகின்றான்

7) எவர் மஸ்ஜிதுக்கு செல்வாரோ அல்லது மஸ்ஜிதில் இருந்து திரும்புவாரோ மஸ்ஜிதுக்கு செல்லும் போது அல்லது திரும்பும் போது வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் சுவர்க்கத்தில் அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.

மஸ்கட் மன்னர் பகட்டும் தோரணையும் இல்லாத எளிமையான மனிதர் .... மறைந்தார் ....


வளைகுடா தேசங்களிலிருந்து சற்றே வித்தியாசப்பட்ட கடலும் மலையும் சூழ்ந்த நாடு மஸ்கட் ....

நபிமார்களின் காலத்தில் இஸ்லாத்தை பரப்பிய முன்னோர்கள் சிலரின் வரலாற்று தலங்கள் சிலவற்றை தமக்குள் போர்த்திய தேசம் ....

சரியாக ஐம்பது ஆண்டுகள் (1970 - 2020) மத்திய கிழக்கு நாடான மஸ்கட்டின் நீண்ட கால மன்னராக மக்கள் செல்வாக்கோடு ஆட்சியில் அமர்ந்தவர் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் (79) அவர்கள் ....

தமது தகப்பனார் சையத் பின் தைமூர் அவர்களிடமிருந்து வாலிப வயதான இருப்பத்தி ஒன்பதில் சுல்தான் காபூஸ் ஆட்சியை கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது .....

தமது ஆட்சி காலத்தில் வறுமையை ஒழித்து 'சுல்தானேட் ஆஃப் ஓமான்' என்று பெயர் சூட்டி வளரும் உலக நாடுகளுக்கு ஈடாக தமது தேசத்தின் பொருளாதாரத்தை உயர்த்த பாடுபட்டவர் மட்டுமல்ல மன்னரென்ற பகட்டும் தோரணையும் இல்லாத எளிமையான மனிதர் ....

செல்வம் கொழிக்கும் எண்ணெய் வளமிக்க பூமியான ஓமானை படிப்படியாக முன்னேற்றி வளர்ச்சிப் பாதைகளில் அழைத்துச் சென்று தன்னிறைவு பெற்றிட வியூகங்கள் வகுத்து தொலை நோக்கு பார்வையோடு செயல்பட்டு நவீனமயமான செழுமை மிகுந்த நாடாக மாற்றிய பெருமைக்குரியவர் ....

இந்திய துணைக் கண்டத்தில் பல்கலைக்கழக படிப்பை பயின்ற இவருக்கு ஆசிரியரான பாரத முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா அவர்கள் மஸ்கட் நாட்டில் வந்திறங்கிய வேளையில் மரபுகளை மீறி நேரடியாக விமான நிலையம் சென்று அவரை சிறப்பாக வரவேற்று தாமே அரச வாகனத்தில் அழைத்து வந்து உபசரித்து தமது ஆசிரியருக்கு உரிய மரியாதை செலுத்தியவர் என்றும் பேசப்பட்டவர் ....

தமது தேசத்து குடிமக்களின் குடும்பங்களை முன்னேற்றுவதற்கான முயற்சிகளை கையாண்டு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிலகங்களில் பணிகள் செய்திடவும் சிறிய கடைகள் துவங்கவும் வாகன ஓட்டுநர்களாக பயிற்சி பெறவும் மக்களை ஊக்குவித்து வெற்றியும் கண்டவர் ....

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈரான் நாட்டில் உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தி சிறையில் அடைக்கப்பட்ட மூன்று அமெரிக்கர்களை விடுதலை செய்யுமாறு அந்நாட்டை கேட்டுக் கொண்டவர் ....

ஈரான் மஸ்கட் நாடுகளுக்கிடையே வகுத்த அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாக வித்திட்டவர் ....

கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் தீவிர சிகிட்சை பெற்று இறை நம்பிக்கையோடு வாழ்ந்தவர் ....

திருமணம் செய்து கொள்ளாத மன்னராக வாழ்ந்த இவர் தமக்கு பின்னர் ஓமான் தேசத்தை ஆள்பவர் இன்னார் என்று விரல் நீட்டாமலே மரணித்ததால் புதிய மன்னர் யாரென்று உலக தேசங்கள் இன்று ஆவலோடு சில மணித்துளிகள் உற்று நோக்கியது ....

நபி(ஸல்) நான் கற்ற பாடம்?

எம்.ஏ முஸ்தபா,
நிறுவனர், ரஹ்மத் அறக்கட்டளை.

இஸ்லாமிய ஆங்கில புத்தக நிலையத்தை பற்றி ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்கள்

நூலாசிரியர், கவிஞர் ஏம்பல் தஜம்முல் முகம்மது, எம்.ஏ. அவர்கள் ரஹ்மத் பதிப்பகத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய ஆங்கில புத்தக நிலையத்தை பற்றி தங்களின் கருத்தை பதிவு செய்தார்., எம்.ஏ. அவர்கள் ரஹ்மத் பதிப்பகத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய ஆங்கில புத்தக நிலையத்தை பற்றி தங்களின் கருத்தை பதிவு செய்தார்
Rahmath Pathipagam - ரஹ்மத் பதிப்பகம்

மூதாதையர்கள் ஏன் இஸ்லாத்திற்கு மாறினார்கள்? நடிகர் ராஜ்கிரண் விளக்கம்!

By இந்நேரம்.காம்
சென்னை (18 டிச 2019): எனக்கு எல்லா ஜாதியிலும் சொந்தங்கள் உண்டு என்று நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவரது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பிரித்தாளும் சூழ்ச்சி என்பது, காலங்காலமாக புளித்துப்போன விசயம்…

இஸ்லாமியர்கள், அரபு நாடுகளிலிருந்து வந்தவர்கள் போலவும், அல்லது பாகிஸ்தான் தான் அவர்களது நாடு என்பது போலவும், பாமர மக்களின் மனங்களில் பிரிவினையை உண்டாக்குவதற்கான, நச்சுக்கருத்துக்களை, காலங்காலமாக விதைத்து வந்தனர், வருகின்றனர்…

ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த எதிர் பாராத ஆதரவு

By இந்நேரம்.காம்
புதுடெல்லி (08 ஜன 2020): ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டத்திற்கு நடிகை தீபிகா படுகோனே ஆதரவளித்துள்ளார்.

ஜேஎன்யுவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் மீது நடத்தப்பட்ட முகமூடி அணிந்திருந்த மர்ம கும்பலின் கொடூரத் தாக்குதலைக் கண்டித்து ஜேஎன்யு முன்னாள் மாணவர்கள் பொதுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்தக் கூட்டதத்தில் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜேஎன்யு முன்னாள் மாணவர்கள் சீதாராம் யெச்சூரி, கண்ணையா குமார், டி. ராஜா மற்றும் யோகேந்திர யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னாள் IAS அதிகாரி சசிகாந்த செந்தில் அருமையான பேச்சு (

CAA-NRC-NPR என்றால் என்ன, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன, எப்படி போராடி வெற்றி கொள்வது. முன்னாள் IAS அதிகாரி சசிகாந்த செந்தில் அருமையான பேச்சு (காஷ்மீர் 370 நீக்கம் எதிர்த்து கலெக்டர் பதவி துறந்துவர்) அவசியம் பாருங்கள், பகிருங்கள். நன்றி - தமுமுக.

நீடூர் நெய்வாசலில் அனைத்து பொதுமக்களும் பங்கேற்ற, குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி நடைபெற்ற கண்டன பேரனி

 இன்று 05/01/2020 ஞாயிறன்று காலை 09:00 மனிக்கு நீடூர் நெய்வாசலில் அனைத்து பொதுமக்களும் பங்கேற்ற, குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி நடைபெற்ற கண்டன பேரனி&ஆர்ப்பாட்டத்தில் தேசிய கொடியுடன் பெரும் திரளாக மக்கள் கலந்து கொண்டனர்

#குறிப்பு: ஐயா ஜெயராமன் மற்றும் நாம் தமிழர் சகோதரர் காளிதாஸ் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்,ஆகியோரின் உரை மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதா இந்திய மக்களுக்கு ஏற்படும்  வீபரீதத்தை எடுத்துரைத்தனர், காவல்துறையினர் பாதுகாப்புக்கு வந்திருந்தும்,போக்குவரத்தை விழா குழுவினர் மிக சிறப்பாக சீர்படுத்தினர்,TNTJ மற்றும் TMMK  ஆம்புலன்ஸ், நிகழ்ச்சி முடியும் வரை இருந்தது.

நீடூர் நெய்வாசலை சார்ந்த அனைத்து சமுதாய மக்களுக்கு காலை 08:00 மனியிலிருந்தே குவிய தொடங்கினர்.

பிரமிக்க வைக்கும் முஸ்லிம் சிறுவனின் சாதனை.

பிரமிக்க வைக்கும் முஸ்லிம் சிறுவனின் சாதனை.
லட்சத்தில் ஒருவன் என்பதைவிட கோடியில் ஒருவன் எனலாம்!

டாக்டர் ஜெய்ன் காதிரி



டாக்டர் ஜெய்ன் காதிரி
குமரி மாவட்டம் கோட்டாரை
சார்ந்தவர்.இடலாக்குடி அரசு
உயர் நிலை பள்ளியின் பழைய
மாணவர்.சாதாரண தமிழ்
மீடியத்தில் படித்தவர்.மதுரை
மருத்துவ கல்லூரியில் படித்து
டாக்டரான இவர்,கோட்டாறு
ஊரின், முதல் தமிழ் இளைஞர்.

வந்தேறிகள்

Vavar F Habibullah

உலக சரித்திரத்தின் பக்கங்களே
வந்தேறிகளால் தான் நிரம்பி வழிகிறது.
அகன்ற நில பரப்பை
கட்டி ஆழ்வதே அன்றைய மகா
வீரர்களின் லட்சியமாக இருந்தது.

கிரேக்கம்,ரோமானியம்
பாரசீகம்,அரபகம்,எகிப்து
துருக்கி அல்லது இந்தியா
தான் வந்தேறிகள் வாழும்
நிலமாக உருவெடுத்தது.
கடல் புற தேசமாக அமைந்த
இயற்கையின் வெகுமதி
காரணமாகவே சிறு நாடுகளான
போர்த்துகல்லும்,ஸ்பெயினும்,
பிரஞ்சும்,டச்சும்,இங்கிலாந்தும்
உலக பெரும் நாடுகளை தங்கள்
வலைகளில் எளிதாக விழ வைத்தன.