நோன்பின் மாண்பும், மறுமையும் !

ஹெர்போ கேர் மருத்துவர் திரு.நவீன்பாலாஜி
வர இருக்கும் நோன்பை
பற்றி அருமையாக விவரிக்கிரார்.
வாழ்த்துக்கள்.

நாமெல்லாம் முன்மாதிரி சமுதாயம் என்று சொல்லிக்கொண்டு🙄 சிந்திக்க வேண்டாமா?

படித்ததில் மனதை உறுத்தியது🙄

நாமெல்லாம் முன்மாதிரி சமுதாயம் என்று சொல்லிக்கொண்டு🙄
சிந்திக்க வேண்டாமா?
--- --- -----
இது நான் எழுதியது அல்ல.  ஆனால் ஒவ்வொரு இஸ்லாமியரும் கண்டிப்பாக படிக்க வேண்டும். எழுதியவருக்கும் அனுப்பியவருக்கும் நன்றி

*நாலு பேர் ஒரு ஹோட்டலில் நுழைந்தார்கள். அதில் ஒருவர் சலஃபி, ஒருவர் தப்லீக்கி, ஒருவர் தரீக்கத்வாதி, ஒருவர் தவ்ஹீத்வாதி.*

💡நாலு பேரும் அமர்ந்து 'டீ' ஆடர் செய்து குடித்துக்கொண்டிருக்கும் போது திடீரென்று எரிந்து கொண்டிருந்த பல்பு அணைந்து அறைமுழுவதும் இருள் சூழ்ந்து விட்டது.

One of rare of the rarest views

Many people have seen the sunrise, but how many people have seen the moon rise? This video from the Byron Bay lighthouse at the northern tip of New South Wales, Australia, is the easternmost spot on the continent. Because of its unique geographical location, it can be seen and photographed only locally.
Enjoy the moon rise for more than three minutes to witness the most beautiful view from the easternmost part of Australia!
One of rare of the rarest views you will remember for a long time. See horizontally in your mobile for a better view.

Wednesday, April 24, 2019

*'மினிமலிஸம்'* நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை !

J.Punitha Kumar, B.com. LL.B,  Advocate, Vellore.
----+++++---+-++++++++++

*'மினிமலிஸம்'*
நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை !
------------------
``எங்கப்பா என்னைவிட குறைவாத்தான் சம்பாதிச்சார்.
வீட்ல நாங்க நாலு பிள்ளைங்க .
நாலு பேரையும் *நல்லாப் படிக்க வச்சு,* அவங்களுக்கு வேண்டியதை எல்லாம் பண்ணிட்டு,
கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும்
கட்டிட்டு, *கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார்.*

ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன்.
*ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல..."*

இப்படிப் புலம்புகிற இந்தத் தலைமுறை இளைஞர்களை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க
முடிகிறது.

கற்பனை கோளாறுகள்

நிர்ப்பந்ததின் கோளாறால் துன்புறுதல்
(கற்பனை கோளாறுகள் )
சுத்தம்
சுத்தமாக இருப்பதில் கடுமை
சுத்தமாக இருக்கிறதா என்பதில் உன்னிப்பாக கவனித்தல்
சுத்தம் சீரான முறையில் கையாளப் பட்டதா என்பதில் கவனம்
தன்னிலை வேலையில் சந்தேகம்
வீட்டின் கதவு சரியாக பூட்டப் பட்டதா
கையை முறையாக கழுகாமல் விட்டு விட்டேனா

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் 156 ஆம் ஆண்டு விழா 75 ஆம் ஆண்டு பட்டமளிப்பு பவள விழா!

வரலாற்று சிறப்பு வாய்ந்த லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 156 ஆம் ஆண்டு விழா , 75 ஆம் ஆண்டு பட்டமளிப்பு பவள விழா   14-4-2019 காலை 10-00 மணி முதல் தாருல் தப்ஸீர் கலைக்கூடத்தில் ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி தலைவர் ஜெ.அப்துல் ஹமீது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி செயலாளர் கே.ஏ.அமானுல்லா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்கள்.

ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி பேராசிரியர் மவ்லானா காரி ஆர்.இஜட்.முஹம்மது அஹ்மது அவர்கள் கிராஅத் ஒதினார்கள்.

இரக்கமுள்ளவனே ...


இறைவா ...
இரவுகளின் ஆட்சியாளனே !
விண்மீன்களின் எஜமானனே !

விண்ணுக்குள் இருந்தும்
விடியலை
எங்கள்
விழிகளுக்குள் மறைத்து
வைப்பவனே !

விடியும்வரை
விழித் திரைகளில்
நித்திரையை
இமைத்திரை கொண்டு
போர்த்துபவனே !

Sunday, April 14, 2019

ஊடகத் துறையில் முஸ்லிம்கள் கால் பதிக்க வேண்டும்!

ஆக்கம்: சத்தியமார்க்கம் -
வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிலிப்ஸ் பென்னட்
“எனக்கு முஸ்லிம் பத்திரிகையாளர்கள் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள்”




கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திற்குக் கடந்த மார்ச் 4ம் தேதியன்று (04-03-2008) வருகை தந்திருந்த பிரபல வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரானஃபிலிப்ஸ் பென்னட் பேசியபோது வெளிப்பட்ட ஆதங்கம் இது.

“இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களைக் கொண்டுள்ள ஊடகங்களே எனது கூற்றிற்கு அடிப்படைக் காரணம்!” என்கிறார் இவர்.

இந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி!

இந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி!

ஆக்கம்: சத்தியமார்க்கம் - 
சில காலத்திற்கு முன்னால் என் இந்து நண்பர் ஒருவர் விடுமுறையைக் கழிப்பதற்காகக் கஷ்மீருக்குக் கிளம்பினார். கிளம்புவதற்கு முன்னால் ஏதோ ஒரு மனத்தாங்கலோடு என்னை வந்து சந்தித்தார். “14 வயது நிரம்பிய என் மகன், டெல்லியில் உயர்ந்த பள்ளிக்கூடம் ஒன்றில் பயில்கிறான். முஸ்லிம்களைப் பற்றித் தாறுமாறான தவறான எண்ணங்கள் அவன் மனத்தில் இருக்கின்றன. அவர்களை ஏதோ பூதங்களைப் போல் கருதுகிறான். ஏதாவது ஒரு முஸ்லிம் குடும்பத்தில் சில நாட்கள் விருந்தாளியாக அவனைத் தங்க வைத்தால் நல்லது என எண்ணுகின்றேன்!”.

காலில் விழுந்து கெஞ்சிய போப் ஆண்டகை

தமிழக அரசியல் களத்தில் முக்கியமான பதவிகளை பெறுவதற்காக வெட்கமில்லாமல் பிறர் காலில் விழுந்து எழுவது அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை..
ஆனால் உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் தலைமை மதகுரு போப் ஆண்டகை வன்முறையை கைவிட்டு அமைதிப் பாதைக்கு திரும்ப வலியுறுத்தி ஒரு நாட்டின் அதிபர் காலில் விழுந்து கெஞ்சிய நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது...

நீடூர் அரபி கல்லூரியில் நாகை எம் எல் ஏ தமீமுன் அன்சாரி அவர்கள் #73 ம் ஆண்டுபட்டமளிப்பு விழாவில்

Nidur AbuAyman '
நன்றி Nidur AbuAyman அவர்களுக்கு
நீடூர் அரபி கல்லூரியில் நாகை எம் எல் ஏ தமீமுன் அன்சாரி அவர்கள் #73 ம் ஆண்டுபட்டமளிப்பு விழாவில்
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."



எத்த‌னை கூறுக‌ளாக‌ பிரிந்து சித‌றுண்டு கிட‌க்கிறீர்க‌ள் நீங்க‌ள்..?

என் அன்பிற்குரிய‌ முஸ்லிம் ச‌முதாய‌த்துக்கு ஒரு ம‌ன‌ம் திற‌ந்த‌ மட‌ல்.

நீண்ட‌ நாட்க‌ளாக‌ நான் சொல்ல‌ நினைத்தை, சொல்ல‌ வேண்டுமா என்று ப‌ல‌முறை யோசித்த‌தை, இன்று உங்க‌ளோடு ப‌கிர்கிறேன்‌, கால‌த்தின் தேவை க‌ருதி. நீண்ட‌ ப‌திவுதான், சில‌ நிமிட‌ங்க‌ள் என‌க்காக‌ ஒதுக்க‌ நேர‌மிருந்தால், அவ‌சிய‌ம்  ப‌டியுங்க‌ள்.

Wednesday, April 10, 2019

சிலர் வாழ வாழ..../ Dr.Vavar F Habibullah

by .Dr.Vavar F Habibullah
கலைஞர் இல்லை
ஜெயலலிதா இல்லை
கரிஷ்மேடிக் லீடர்கள்
எவரும் தமிழக அரசியல்
களத்தில் இல்லை
மக்கள் கூட்டமும்
அதிகம் இல்லை.

மஸ்ஜித் - மந்திர் / Dr.Vavar F Habibullah






உலகம் முழுவதும் 4 மில்லியன்
பள்ளிவாசல்கள் உள்ளன.ரோம்
நகரிலேயே,செயின்ட் பீட்டர்
சிடி அருகில் மிகவும் பிரசித்தி
பெற்ற மசூதி ஒன்றை போப்
பால் சில வருடங்களுக்கு முன்
திறந்து வைத்து மத ஒற்றுமை
குறித்து ஆற்றிய பேருரை
அகில கிருத்துவ நாடுகளையும்
வியப்பில் ஆழ்த்தியது.

Friday, April 5, 2019

ஆலிம்களின் அதிகார எல்லைகளும் தண்ணீர் கலக்காத கெட்டிக்கஞ்சியும்..!

#நிஷாமன்சூர்

ஆலிம்களுக்கு அரசியல் தெரியாது கொஞ்சம் சும்மா இருங்க என்று சிலர் கூறியதாக முன்னணி ஆலிம்கள் குறைபட்டுக் கொண்டார்கள். எனக்கு அவர்களைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. ஆலிம்கள் அறியாத அரசியலே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆனால் அவர்களது அரசியல் என்பதும் சாதுர்யம் என்பதும் பள்ளிவாசல் செகரட்ரரிகளை சரிக்கட்டவே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு பலவீனமாக்கப் படுகிறது என்பது துயரகரமான விஷயமாகும்.

ஹஜ்ரத்மார்களோடு பழக்கம் வெச்சுக்கிட்டா மார்க்க விஷயங்களில் தெளிவு கிடைக்கும் என்று நண்பன் ஒருவன் சிறுவயதில் சொன்னது நினைவில் இருக்கிறது. பலத்த பீடிகையோடு சிலர் கொஞ்சம் விளக்கம் கொடுப்பார்கள்.ஏனையவர்கள் டீ சொல்லுங்க தம்பி என்று சொல்லிவிட்டு வழக்கம்போல ஊர்ஃபித்னாக்களை நோண்டவே விருப்பம் கொள்வார்கள்.

சீன அதிபர் சொன்ன தத்துவக் கதை.

Vaalmihi Journalist

சீன அதிபர் சொன்ன தத்துவக் கதை...

``சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக் கொள்வேன்.

இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னை விட்டு விலக ஆரம்பித்தார்கள். 

ஒரு கட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய் விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை;

மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள் தாம்  வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன.

Thursday, April 4, 2019

பச்சை_பச்சையாயிருந்தால்தான் #மரியாதை

Abu Haashima

ஒரே பச்சை கலர் கொடியா இருக்கேன்னு
ஆச்சரியப்பட்டு செய்தியை பார்த்தா
அப்படி ஒரு சந்தோஷம்.
கேரளாவில் ராகுலை வரவேற்க வந்த
முஸ்லிம்கள் கொண்டு வந்த
பச்சைக் கொடியாம் இது.
பார்க்கவே எவ்வளவு அழகா இருக்கு.
பச்சை பசேல்னு .
ஒரே நிறம்
ஒரே கொடி
அற்புதம் !
இதைத்தான் பச்சைப் பிறைக்கொடின்னு
சொல்வாங்க.

Wednesday, April 3, 2019

யாருக்காக!

Dr.Vavar F Habibullah
சமீபத்தில் எனது நண்பர்
ஓய்வு பெற்ற தமிழக அரசு
முன்னாள் உயர் போலீஸ்
அதிகாரியுடன் நீண்ட நேரம்
பேசிக் கொண்டிருந்தேன்.
தமிழக நிகழ்கால அரசியல்
குறித்த அவரது தகவல்கள்
என்னை சற்று ஆச்சரியம்
கொள்ள வைத்தது.

மறுதலித்தோர் !

ஆக்கம்: சபீர்

எத்துணை எடுத் தியம்பியும்
இசையாத இனத்தோர்க்கு – ஏக
இறைவன் ஒருவனே யென்று
ஏற்காத குலத்தோர்க்கு,

இனியும் எத்தி வைப்பீர்
இறைச் செய்தி என்னவென்று – அந்த
நம்பிக்கை அற்றோர்க்கு
நல்வழி விட்டோர்க்கு,

“வரைந்தவை வார்த்தவையென
வணங்குவீர், அவற்றையெலாம் -புனித
மார்க்கமும் மறையும் பெற்ற
நான் வணங்க மாட்டேன்!

நான் உரைக்கும் மீட்சியை
நீங்கள் ஏற்க மாட்டீர் – நித்தம்
நான் வணங்கும் இறையை
நீவிர் வணங்க மாட்டீர்!

Monday, April 1, 2019

எதையும் தாங்கும் இதயம்


சந்தவசம்தம் இணையக் குழுமத்தில் ஒரு கவிப்பட்டிமன்றம் நடத்தப்பட்டது. வாழ்க்கைக்குத் தேவை  எது? நல்ல நண்பர்கள், உழைப்பு, அனுபவம், அறிவு, முகத்துதி, பிறர் உதவி, நெஞ்சுறுதி, தன்னம்பிக்கை, விடா முயற்சி, எதையும் தாங்கும் இதயம் என்று பத்துத் தலைப்புகள் பத்துக் கவிஞர்களுக்கு வழங்கப்பட்டன. அத்தனைத் தலைப்புகளுமே அபாரம். எதைப் பாடி எவர் வெல்வார் என்பது மிகக் கடுமையானதாக இருந்தது. எனக்குக் கிடைத்த தலைப்போ ’எதையும் தாங்கும் இதயம்’. கிடைத்ததும் பெரிதும் மகிழ்ந்தேன். அப்படி மகிழ்ந்து எழுதிய பட்டிமன்றக் கவிதையே இது.

நல்ல நண்பர்கள் என்பது
கற்பனையின் உச்சம்
வாழும் காலம் தராத கனவு முத்தம்

வாழ்க்கை இனிமையானது


வெறுமனே
காலிப்பாத்திரமாய்
அனுபவ வீணைகளை
மீட்டிப் பார்க்காத
பிஞ்சு விரல் நுனிகளுடன்

காலப் பனிக்கற்கள்
கரைந்த கணங்களில்
என்னில்
தெளிந்த நீரோடையாய்
வாழ்க்கை