Friday, November 30, 2018

Sydney Storm: Tennis-ball sized hailstones, Three women hit by lightning

Australia experienced hailstones rain fall yesterday. Stone size almost of tennis ball. See video 1.54 mnt as received. Awesome God! Whoever thinks that God can't destroy this earth within a second should revise his/her notes 🙏

Pls watch video

Thursday, November 29, 2018

எனது அன்பு இந்திய வாலிபர்களே இளைஞர்களே உங்களுக்கு தான் இந்த செய்தி :--


1970 முதல் தமிழ்நாட்டின் மக்கள் அரபு நாடுகளாகிய துபாய் அபுதாபி சார்ஜா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் , சவூதிஅரேபியா பஹ்ரைன் ஓமன் கத்தார் குவைத்து போன்ற நாடுகளுக்கு ஆரம்ப காலம் முதல் கடந்த சில ஆண்டுகள் வரை பிழைப்பு தேடி போனவர்கள் அதில் நன்றாக சம்பாதித்து வெற்றி கண்டவர்கள் பலர் , வீணா போனவர்களும் சிலர் உண்டு

தற்போது சவூதிஅரேபியா வின் மற்றும் அரபு நாடுகளில் வேலை வாய்ப்பு மிகவும் குறைந்து வருகின்றது இது யாவரும் அறிந்ததே

அரபு நாடுகளுக்கு மாற்றாக வேறு பல இஸ்லாமிய நாடுகள் அதிக பெட்ரோல் வளம் மிக்க நாடுகளும் உள்ளது பலர் இதனை அறியாமல் இருக்கலாம்

தற்போது அதில் சில நாடுகளை அறிந்து கொள்ளுங்கள் :--

Wednesday, November 28, 2018

வயிற்றினிலே கல்சுமந்து நின்ற மன்னர்..!

வயிற்றினிலே கல்சுமந்து நின்ற மன்னர்..!

சிலையிலும் படங்களிலும்
அல்லாமல்,
சிந்தனையிலும் செயல்களிலும்
உணர்வுகளிலும் ஒழுங்குகளிலும்
நினைவு கூறப்படும்
சாதனைத் தலைவர்.

மொழிகளை வென்றவர்
நிறங்களை வென்றவர்
இனங்களை வென்றவர்
இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும்
நிரந்தர தலைவர்.

உயிர்களும் உடமைகளும்
உதிரமும் உறவுகளும்
தாயும் தந்தையும்
சகலமும் அர்ப்பணமாக்கப்படும்
சாந்தத்தின் சொந்தக்காரர்...

Tuesday, November 27, 2018

நன்றியுணர்வை வெளிப்படுத்துவோம்


நன்றியுணர்வை வெளிப்படுத்துகிற பண்பும், குணமும் அது இறைவனின் நல்லடியார்களின் சிறப்பான இயல்புகளாகும்.

வானவர்களின் வணக்கமாகும். நபிமார்களின் அடையாளமாகும். ஒட்டு மொத்தத்தில் அது சுவனவாசிகளின் தன்மையாகும்.

நன்றியுணர்வோடு நடக்கின்ற ஒரு மனிதன் இப் பூமியில் மதிக்கப்படுகின்றான், பாராட்டப்படுகின்றான், வாழ்த்துக்கள் பலதிற்கு சொந்தக்காரனாகின்றான்.

நன்றியுணர்வு இல்லாத ஒரு மனிதன் அவன் வையகத்தில் உள்ளவரை இகழப்படுகின்றான், மக்களால் வெறுக்கப்படுகின்றான், சமூகத்தால் புறக்கணிக்கப்படுகின்றான்.

காரணம் ஆறறிவு இல்லாத மிருகங்களும், பறவைகளும் கூட அந்த இயல்பை வெளிப்படுத்துவதால்..

இந்த நன்றியுணர்வை படைத்த இறைவனிடத்திலும், சக மனிதர்களிடத்திலும் வெளிப்படுத்த வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

அது தான் ஒரு மனிதனின் ஈருலக வாழ்வின் உயர்வுக்கு வழி வகுக்கும், எண்ணற்ற அருட்பேறுகளை அடையச் செய்திடும், என இஸ்லாம் உயர்த்திக் கூறுகின்றது.

படைத்தோனுக்கு நன்றி செலுத்துதல்.

படைத்தோனுக்கு செலுத்தும் நன்றி என்பது நம்முடைய நாவு மற்றும் உள்ளம், உடல் உறுப்புக்கள் ஆகியவைகளுடன் தொடர்புடைய ஓர் இபாதத் வணக்கமாகும்.

உள்ளத்தின் மூலம் வெளிப்படுத்த வேண்டிய நன்றி என்பது “நமக்கு இவ்வுலகில் வழங்கப்பட்டுள்ள எல்லாவகையான சிறப்புக்களும், அருட்கொடைகளும் (அதை நாம் நம்முடைய முயற்சியின் மூலமாகவோ, அல்லது உழைப்பின் மூலமாகவோ பெற்றிருந்தாலும் சரியே!) அல்லாஹ்வினால் மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது என உளப்பூர்வமாக ஒத்துக்கொள்ள வேண்டும்.

நன்றியுணர்வு: மகிழ்ச்சிக்கு குர்’ஆனிய தீர்வு

உலக செல்வங்கள் அனைத்தையும் பெற்றிருந்தும், குறை கூறிக்கொண்டிருக்கும் ஒருவரை எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா?

ஏழ்மையில் உள்ள ஒரு குழந்தைக்கு யாராவது ஒரு பொம்மை கொடுத்தவுடன் அதன் முகத்தில் பொங்கும் மகிழ்ச்சியைப் பார்த்திருக்கிறீர்களா?

அப்படியிருந்தால், பொருட்கள் மட்டும் சந்தோஷத்தை அளிப்பதில்லை, நீங்கள் பார்த்தது அவற்றைப் பணிவுடனும், மகிழ்வுடனும் பெற்றுக் கொள்வதற்கு தயாரான மனநிலை மற்றும்   அசலான மகிழ்ச்சி.

ஸ்டாலின் செக் வைகோ பக்

காங்கிரஸ், மதிமுக, விசிக ஆகிய கட்சிகள்
திமுக கூட்டணியில் இல்லை
என்று கட்சியின் பொருளாளர் துரை முருகன்
வெளியிட்ட அறிவிப்பு
பல கட்சிகளிடம் கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.

ரொம்பவும் அப்செட் ஆனவர் வைகோ.
“துரைமுருகனின் அறிவிப்பு என்னையும்
என் தொண்டர்களையும் காயப்படுத்தி விட்டது;
ஸ்டாலின்தான் இதற்கு விளக்கம் தரவேண்டும்”
என்று வைகோ சொல்கிறார்.

இஸ்ரேலில் வதைபடும் தாய்லாந்து தொழிலாளர்கள் - பிபிசி புலனாய்வு

இஸ்ரேல் மற்றும் தாய்லாந்து இடையே உண்டான ஒரு விவசாய ஒப்பந்தத்தின்படி சுமார் 25,000 தாய்லாந்து தொழிலாளர்கள் இஸ்ரேலில் பணியாற்றுகின்றனர்.

அழுக்கடைந்த குடியிருப்புகளில் எலிகளுக்கும் குப்பைகளுக்கும் இடையே மோசமான சூழலில் வாழும் அவர்கள் பிபிசி குழுவிடம் பேசவே அச்சப்பட்டனர்.

இதுவரை அவர்களில் 172 பேர் இறந்துள்ளனர். பலரின் இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

Monday, November 26, 2018

அறிவியலின் படு வேகமான வளர்ச்சி.

அறிவியலின் படு வேகமான வளர்ச்சி. இனி கைவலிக்க தமிழில் தட்டச்சு செய்ய வேண்டிய அவசியமில்லை. தரப்பட்டுள்ள முறையை கையாண்டால் நாம் பேசுவது அப்படியே தமிழில் தட்டச்சு செய்யப்பட்டு விடும்.

இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.முயன்று பாருங்கள் மிகச் சிறப்பாக செயல்படுவதை உணர்ந்து கொள்ளலாம்.எவ்வளவு பெரிய பதிவாக இருந்தாலும் எளிதாக இரண்டு நொடிகளில் தட்டச்சு செய்து விடலாம்.

அந்தச் செயல் முறையை கீழே தந்துள்ளேன். இத்தகைய அருமையான செயலியை உருவாக்கிய பொறியாளர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

போலி அந்தரங்க வீடியோக்களை உருவாக்கும் DeepFake தொழில்நுட்பம் ஓர் பார்வை...




DeepFake (explained in Tamil) எனப்படும் போலி அந்தரங்க வீடியோ தயாரிக்கும் தொழில்நுட்பம் அதீத அறிவாற்றலுடன் வளர்ந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தின் செயல்பாடுகளையும் தீர்வுகளையும். நம்மையும் எப்படி தற்காத்து கொள்வது எனும் விளக்கங்களையும் விவரிக்கிறார் TechTamil கார்த்திகேயன்.

இந்த நீடூரிலிந்து தான்

Nidur AbuAyman
#நாகைமாவட்டம்
மயிலாடுதுறை அருகில் கணிசமாக இஸ்லாமியர்கள் வாழும் ஊர் தான்
#நீடூர்_நெய்வாசல்

இந்த ஊரில் பலர் வெளிநாட்டில் பல விதமாக பொருள் ஈட்டியும் பலர் ஊள்ளூரிலும் பொருள் ஈட்டியும் வருகிறார்கள்

இந்த நீடூரிலிந்து தான்
#கஜாபுயலில்_பாதித்த அனைத்து சமுதாய மக்களுக்காவும்
#நீடூர்நெய்வாசல் ஜமாத் சார்பாக ஒரு குழுவும்
~~~~~~~~~~~~~~~~

#நன்றி #ராமகிருஷ்ணன் #அவர்களே!

#நன்றி #ராமகிருஷ்ணன் #அவர்களே!

உதவுவாரில் எங்கே பார்த்தாலும்...
குல்லாக்கள்... SDPI, TNTJ, TMMK
பாதிக்கப்பட்டோரில் யாரைக் கேட்டாலும்...
"பாய்கள்", "முஸ்லீம்காரவங்க வந்து காப்பாத்துனாங்க",
"சாய்புகள்தான் சாப்பாடு போட்டுகிட்டிருக்காங்க".

'தொடக்கி விட்டுவிட்டார்கள்' என்றில்லை;
'இடையில்தான் வந்தார்கள்' என்றில்லை;
'திணறி நின்றார்கள்' என்றில்லை;
'சோர்ந்து விலகிவிட்டார்கள்' என்றில்லை!

தங்கள் மனிதத்தை தங்கள் கடவுளுக்கும்,
தங்கள் ஆண்மையை தங்கள் எதிரிகளுக்கும், தங்களுக்கும் உணர்த்திக்கொண்டஇவர்களது அதிரவைக்கும் அற்பணிப்பு!

காஜா புயலால் பாதிக்கப்பட்டவரின் சார்பாக அன்பான வேண்டுகோள் .அவசியம் கேளுங்கள்

காஜா புயலால் பாதிக்கப்பட்டவரின் சார்பாக அன்பான வேண்டுகோள் .அவசியம் கேளுங்கள்

குடிக்கக்கூட தண்ணீர் தட்டுப்பாடாம்

காஜா புயல் வீசிய இடத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிக்கக்கூட தண்ணீர் தட்டுப்பாடாம்
ஒரு காலம் இருந்தது
அனைத்து இடங்களிலும் கை பம்பில் நீர் வரவைத்து குடித்தார்கள் .அப்பொழுது நிலத்தடி பதினெட்டு அடியில் இருந்தது
அரசும் இந்த மக்களும் தாங்களாகவே நிலத்தடியில் உள்ள நீரை பாதாளம் வரை செல்லும்படி செய்து விட்டனர்
ஆற்றில் இருக்கும் மணலை அடியோடு வாருவது
அந்நிய முதலீட்டார்கள் நீரை விற்க முயன்றது
கேஸ் .பெட்ரோல் இன்னபிறவற்றை எடுக்கும் கார்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கம்
இவைகளால் எறபட்ட பாதிப்புகள் மக்களை இப்பொழுது வேதனையில் சேர்ப்பித்துவிட்டது

ஆப்பிளுடன் உயர்தல் - 1

==ரமீஸ் பிலாலி==

ஆப்பிளுடன் உயர்தல் - 1
 ”மெத்தை அருளல் வேண்டும்” என்னும் கட்டுரையில் பெப்ஸ் மெத்தை வாங்குவதற்காகத் தனக்கு உடனடியாக நாற்பதாயிரம் ரூபாய் வேண்டும் என்று சாரு நிவேதிதா எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டினேன். அதனைச் சுற்றியே சிந்தனை சுழன்று கொண்டிருந்தது.

சாருவின் இந்த வரிகளைக் கவனியுங்கள்: “என்னுடைய இப்போதைய பிரார்த்தனையை மட்டும் சொல்லி விடுகிறேன். நீ கேட்பியா மாட்டியா என்ற கேள்விக்குள் நான் போக விரும்பவில்லை. இப்போது எனக்கு அர்ஜெண்ட்டாக ஒரு மெத்தை தேவை. ப்பூ. இவ்வளவுதானா என்று கேட்காதீரும். இதில் என் வாழ்க்கை வரலாறே அடங்கியிருக்கிறது”

Thursday, November 22, 2018

#TNTJ_நீடூர்_நெய்வாசல்_கிளை சார்பாக கஜா_புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் 700 நபர்களுக்கு #உணவு

Taxi Mohamed Jubair

#இன்று 22/11/18 வியாழன் #கஜா_புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் 700 நபர்களுக்கு #உணவு தயாரித்து திருவாரூர் மாவட்டம் மணலி, கச்சனம்,மேலும் நிவாரனம் செல்லாத உள்கிராமங்களில் கொடுக்கப்பட்டது மேலும் கொசு வத்தி,நாப்கின்,பிஸ்கட்,மெழுகு வர்த்தி,திப்பெட்டி, போன்றவைகளும் #முதற்கட்டமாக_கொடுக்கப்பட்டது.

#குறிப்பு:சகோதரர்களே அந்த பகுதி முழுதும் கரண்ட் வரவே 10,15 நாட்கள் ஆகலாம்,இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துவிட்டது, நாம் கொடுக்கு நிவாரனம் சிறிதாக இருந்தாலு அதை வாங்குபவர்கள் ஓவ்வொருவரும் கண்ணீர் மலுக நன்றி கூறுகின்றனர்,அப்போது கல் மனதும் கரைந்து போகும், அவர்களின் துயரம் விரைவாக நீங்க நாம் அனைவரும் ஏக இறைவனிடம் துஆ செய்வோம்

நன்றியுணர்வு

மழை
பனி
குளிர்
வெயில்
இவைகளுக்கு தாக்குப்பிடிக்க மட்டுமா ஆடை ?
அனைத்துக்கும் மேலாக மானத்தை பாதுக்காக்கும் ஆடை.

ஆடை அணிவது நாகரீகத்தின் வெளிப்பாடு .
வார்த்தைகளால் சொல்வது மட்டும் நன்றி அல்லது வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதுமோ ?
அது வெளிப்படும் இடம் உள்ளத்தின் நாதமாக இருத்தல் வேண்டும் .

இது தான் அம்மா ! ! ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

"வீட்ல சும்மா தான இருக்க"

எல்லோரும் கூறுகின்ற இந்த வார்த்தையை இப்பொழுது குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க..

" நீ சும்மா தான மா இருக்க..
இது செஞ்சி குடுத்திடு மா..."

'எல்லாரும் சொல்றது போல ஒரு நாள் சும்மா இருந்தா என்ன'ன்னு தோனுச்சு.

வீட்டில் உள்ள அனைவரும் கிளம்பிட்டாங்க.

அவரவர்க்கு தேவையான உணவுகளை சமைத்து கொடுத்து விட்டேன்.

 இன்றைக்கு சும்மா இருப்போம் என்ன தான் ஆகும் பாப்போம்.

மாலை கணவரும், பசங்களும் வீட்டிற்கு திரும்பினார்கள்.

#இன்பத்_தமிழ்_நாட்டில் #இனிக்கும்_இஸ்லாம் ... அபு ஹாஷிமா

Abu Haashima

#மக்காவில்_அன்று.....

சூரியனின் வெளிச்சம் பட்டு பொன்னைப்போல் மின்னிக் கொண்டிருந்தது மக்காவின் மணல் பூமி. சூரியனின் வெண்மையைவிட எங்கள் உள்ளம் அதிக வெண்மை என்று எடுத்துச் சொல்வதைப்போல அங்கே கூடிநின்ற ஒரு லட்சத்து இருபத்து நாலாயிரம் ஹாஜிகளின் வெண்ணிற இஹ்ராம்(ஹாஜிகள் அணியும் தையல் இல்லாத வெள்ளாடை) ஆடைகள் மின்னிக் கொண்டிருந்தன.

அகிலத்தின் அருட்கொடையாக வந்துதித்த முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்)அவர்கள் இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றிய மகிழ்வோடு இணையற்ற அல்லாஹ்வை போற்றித் துதித்தார்கள்

ஜின்னாதெரு பள்ளிவாசல் சுஹைப் இமாம் அவகளுடைய சிறபான பயான்

மாஷாஅல்லாஹ்
நீடுர் நெய்வாசல் ஜின்னாதெரு பள்ளிவாசல்
சுஹைப் இமாம் அவகளுடைய சிறபான பயான் அல்ஹம்துல்லிலாஹ் \Mohamed Rabeek

Sunday, November 18, 2018

கஜா புயல்


கஜா என்றால் யானையாம்
இலங்கை சூட்டியப் பெயராம்

அந்தமானருகே
குட்டியாய்  ஜனித்த
கஜா

நாகையை மிதித்து
வேதாரண்யம் வளைத்து
பேயாட்டம் போட்டுக்
கதிகலக்கிய
கஜா

Saturday, November 17, 2018

மீலாது சொற்பொழிவு / ஹுதைபிய்யா உடன்படிக்கை /அல்ஹாபிழ் புகாரி மௌலானா Buha...

மீலாது சொற்பொழிவு / ஹுதைபிய்யா உடன்படிக்கை /அல்ஹாபிழ் புகாரி மௌலானா Buhari Anwari

வீடியோ உதவி Abdul Rahman

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

ஹுதைபிய்யா உடன்படிக்கை


 அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் , அதிரை அஹ்மது
::::: தொடர் - 22 :::::
‘வளர்ச்சிக்கான வாயில்’ என்று நபி வரலாற்றில் ஒரு நிகழ்வைக் குறிப்பிட வேண்டுமாயின், அது ‘ஹுதைபிய்யா உடன்படிக்கை’தான் என்றால், அது மிகையாகாது. மக்கத்துக் குறைஷியருக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் இடையில் நடந்த இந்த ஒப்பந்தத்தை மேலோட்டமாகப் பார்த்தால், முஸ்லிம்களுக்கு அது ஒரு பின்னடைவுதான் என்று நினைக்கத் தோன்றும்.

தற்பெருமையும் ஆணவமும்!


உள்ளத்தில் அணுவளவு பெருமை உள்ளவன் சுவனம் செல்ல முடியாது: –

இப்னு மஸ்ஊத்  رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: –

 “யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் மறைப்பதும் மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் சுவனபதியில் நுழையாதவர்கள்: –

அல்லாஹ் கூறுகிறான்: –

‘எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா. மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் – இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்’ (அல்குர்ஆன்: 7:40)

மிக்க பாக்கியம் பெற்ற மறுமையின் வீடு பெருமையடித்தவர்களுக்கு அல்ல!

அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு. (அல்-குர்ஆன் 28:83)

அகப்பெருமைக்காரர், ஆணவம் கொண்டோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்: –

‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்-குர்ஆன் 31:18)

அகந்தையுடன் நடப்பவரும், பெருமையடித்துத் திரிபவரும் நரக வாசிகளாவார்கள்: –

ஹாரிஸா இப்னு வஹப்  رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: –

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் கேட்டேன் ”உங்களுக்கு நரகவாசியைப் பற்றி அறிவித்துத் தரட்டுமா? அவர் யாரெனில் மிகக் கடுமையானவரும், அகந்தையுடன் நடப்பவரும், பெருமையடித்துத் திரிபவருமாவார்.” .  (ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி)

தற்பெருமை கொள்பவனுக்கு உவமானம்!

அபூஹுரைரா  رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: –

‘எவன் தன் தலைமுடியை வாரி அழகுபடுத்தி நல்ல ஆடைகளை அணிந்து கர்வத்துடன் தலை நிமிர்ந்து தன்னில் தானே பூரிப்பு அடைந்த வண்ணம் நடந்து செல்கின்றானோ அவன் பூமியில் திடுமெனச் செருகப்பட்டு மறுமை நாள் வரை அதன் அதலபாதாளத்தில் முட்டி மோதி மூழ்கடிக்கப்பட்டு விடுபவன் போலாவான்’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)

தற்பெருமை மற்றும் ஆணவம் கொண்டோர் அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளானவர்களாவார்கள்:-

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ”எவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹவை சந்திக்கும் நாளில் அல்லாஹ அவர் மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்.” (ஆதாரம் : அல் அதபுல் முஃப்ரத்)

ஆடையைப் பூமியில் பெருமையுடன் இழுத்துச் செல்பவனை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான்: –

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ”எவன் தனது ஆடையைப் பூமியில் பெருமையுடன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமை நாளில் பார்க்க மாட்டான்.” (ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி)

பெருமையடிக்கும் ஏழையுடன் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான்: –

#மாநிலமெங்கும் #மாநபி_வாசம் ... ! அபு ஹாஷிமா


Abu Haashima
December 17, 2012
#மாநிலமெங்கும்
#மாநபி_வாசம் ... !
அபு ஹாஷிமா

தமிழ் நாட்டின் ஒரே ஒரு 
#சதாவதானி
குமரி மண் பெற்றெடுத்த பாவலரேறு #சதாவதானி_செய்குத்_தம்பிப்_பாவலர் அவர்கள் எழுதிய 
#நபிகள்_நாயக_மான்மிய_மஞ்சரி யிலிருந்து ஒரு பாடலை குமரி மாவட்ட இஸ்லாமிய இசையருவி 
#குமரி_அபூபக்கர் அவர்கள் 
நமக்காக பாடுகிறார்.

அபுபக்கர் அண்ணனின் சொந்த ஊர் 
குமரி மாவட்டத்திலுள்ள 
#காஞ்சாம்புரம்.

ஏன் பிறந்தேன்!

Vavar F Habibullah


இன்று காலையில்...
தம்பி டாக்டர் தனசிங் சாத்தூரில் இருந்து போன் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அரசியல் நகைச்சுவை கலந்து பேசும் நல்ல அரசு மருத்துவர் அவர்.

சார்..பிறந்த நாள் என்றாலே அது
நம் நாட்டில் அரசியல் தலைவர்களை போற்றி புகழ் பாடும் நாளாயிற்றே..!
தொண்டர்கள் புகழ்ந்து பேசினால்
அண்ணாவாக இருந்தால் தம்பி என்பார்.
கலைஞர் என்றால் உடன் பிறப்பே என்பார்.
எம்ஜிஆர் என்றால் ரத்தத்தின் ரத்தமே என்பார்.

*அழகிய வினாக்கள்; அற்புதமான பதில்கள்*

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.
📝 *01) நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?*
👉 நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.
📝 *02) மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?*
👉 தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.
📝 *03) நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?*
👉 ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்
📝 *04) நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.*
👉 ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.
📝 *05) நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ?*
👉 நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்

"மழை பெய்யும்போது வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் ...."

Yembal Thajammul Mohammad

"மழை பெய்யும்போது வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் ...."
*******
மதீனா முனவ்வராவில் கடுமையான மழையின் காரணமாக வைகறை - ஃபஜ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லும்போது "Hayya allal Falah"- என்று சொல்வதற்குப் பதிலாக

"Assalahtu fee Rihalakum" என்று கூறப்பட்டது.

இதன் அர்த்தம் "தங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள்” என்பதாகும்.

இது நபி பெருமானார் (Saws - Peace be upon him) அவர்களின் நன்னடைமுறைகளில்- சுன்னத்துகளில்- ஒன்றாகும்.

*முஹம்மது நபி* *(ஸல்)* *அவர்களுக்குப் பிடித்த உணவுகளும் அவற்றின் நன்மைகளும்!*


1. பார்லி – Barley
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள் : காய்ச்சலுக்கு இதை
சூப்பாகக் குடிப்பது நல்லது என்று …

2. ஈச்சம் பழம் – Dates
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள் :ஈச்சம் பழம் இல்லாத
வீடு உணவு இல்லாத வீடு என்றும் பிள்ளைபிறக்கும் நேரங்களில் உண்பது மிகவும் நல்லது என்றும்

3. அத்திப்பழம் – Figs
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்:
அத்திப்பழம் சுவர்க்கத்துக் கனியாகும் இது மூல நோய்களுக்கு உகந்தது

4. திராட்சைப் பழம் –Grapes
ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மிகவும்விரும்பிச் சாப்பிட்ட திராட்சைப் பழம்,
ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு கிட்னியின் ஆரோக்கியத்துக்கு மிகவும் உயர்ந்தது

5. தேன் – Honey
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்: வயிற்றுப் போக்குள்ளவர்கள் தேனை சுடு நீரில் கலந்து சாப்பிடுவது நல்லது இதை காலையில் இளம் சூடான நீரில் கலந்து குடிப்பது நன்மை
பயக்கும்

6. தர்பூசணி = Watermelon
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்:
பிரசவமாகியுள்ள பெண்கள் தர்பூசணிக் காய்களை உண்டால் அழகிய முகத் தோற்றமும் நல்ல
குணங்களையும் உள்ள பிள்ளைகளை உற்பத்தி செய்ய முடியும் என்று ….

7. பால் – Milk
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்: பால் இதயத்தின்சூட்டைத் தணிப்பதோடு, மூளை பார்வையை புதுப்பிப்பதோடு மறதியையும் போக்கச் செய்கின்றது.

அருள் மணக்குது"

மாற்று மத அன்பர்களும் விரும்பும் நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய பிரபல கவிஞர் நாகூர் சலீம் எழுதிய "அருள் மணக்குது" என்ற பிரபலமான பாடல்..

நபியின் சிறப்பை கண்ணியப்படுத்தும் அற்புதமான வரிகள் அடங்கிய பாடல் இது..

பாடலின் ஒரு சில வரிகள்..

"உலக நெஞ்சில் 
நபியின் தியாகம் 
மறைய முடியுமா..!?"

"இருளிலிருந்தது இழிவிருந்தது நபி பிறக்குமுன்னே..."

"இன்று அரிய உந்தன் மார்க்கம் கண்டு அகிலம் வியக்குதாம்..!"

"இறைவா உந்தன் 
தூதர் செய்த சேவை கொஞ்சமா..!?"

"ஒப்பில்லா இறைவா உந்தன் தூதர் செய்த சேவை கொஞ்சமா..!?"

#மலையாள சகோதரி ஸ்ருதியின் தமிழ் உச்சரிப்பு அற்புதம்..

நிர்வாகப் பதவிக்கு ஆசைபடுகின்றீர்களா...!?


7148. இறைத்தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் ஆட்சிப்
பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை
நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி
(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்..
(புகாரி Volume :7
Book :93)

இதெல்லாம் எப்படி நடந்தது - 26


இறுமாந்த கவிஞன் - கவிஞர் திலகம்!!!

முப்பதைந்து நாற்பது வருடங்களுக்கு முன்பு , கூத்தானல்லூரில் ஒரு தெரு (பெயர் நினைவுக்கு வர மறுக்கிறது)

அடி பைப்பில் தண்ணீர் அடித்து, ஒரு மனிதர் தெருவில் குளித்து கொண்டிருந்தார்.

நான் பார்க்க ஆசைப்பட்ட அந்த மனிதர்தான் அவர் என்று எனக்கு அப்போது தெரியாது.

ஆனால் அவரைத் தேடித்தான் அந்தத் தெருவிற்குள் நுழைந்தேன்.

அறிவின் மாணவன் தினமும் கற்றுக் கொள்ள நினைக்கிறான்

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
சூல்

 அறிவின் மாணவன் தினமும் கற்றுக் கொள்ள நினைக்கிறான்

தாவோவின் மாணவன் தினமும் கற்றதைக் கழித்துவிட நினைக்கிறான்

அதிகமாக தெரிந்து கொள்ளும் ஒருவன்

தன்னுடைய இருப்பை இழக்கிறான்

அவன் ஒரு தகவல் குப்பையாகிப் போகிறான்

தாவோவின் மாணவன்

சுமையை தினமும் கழித்துக் கொண்டே வருகிறான்

ஒரு முனிவரிடம் போவது என்பது

கற்றதைக் கழிக்கத்தான்

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5 சூல்

பைஸாந்தியச் சக்ரவர்த்தி ஏழாம் மைக்கேலின் கோரிக்கைக்கு, போப் கிரிகோரியினால் படையை அனுப்பி வைக்க முடியாமல் போனதல்லவா? அதன் பிறகு, இரு தரப்பிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன.

அங்கு இரண்டாம் அர்பன் போப்பாகப் பதவிக்கு வந்திருந்தார். இங்கு அலக்ஸியஸ் சக்ரவரத்தி ஆகியிருந்தார். இவரும் போப்பின் திருச்சபைக்கு, துணைப்படைகளை அனுப்பச் சொல்லித் தகவல் அனுப்பி வைத்தார்.

பண்டைய ரோம சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி கான்ஸ்டன்டைன். கிரேக்க வம்சாவளியைச் சார்ந்தவர். கிரேக்கர்களின் காலனியாகத் திகழ்ந்த பைஸாந்தியப் பகுதியில் ஏகாதிபத்தியக் குடியிருப்புகளைப் புதிதாக உருவாக்கி அந்நகருக்கு, “கான்ஸ்டன்டினோபிள்” என்று தம் பெயரையே சூட்டிவிட்டார். அதுதான் இன்றைய இஸ்தன்புல். இவர் கி.பி. 312ஆம் ஆண்டு கிறிஸ்தவ மதத்தைத் தழுவ, அதன்பின் உலக அரங்கில் கிறிஸ்தவ மதம் விரிவடைய ஆரம்பித்து ஐரோப்பா முழுவதும் பரவியது.

ஜெருசல நாயகனின் வீர வரலாற்றை முதல் பகுதி PDF நூலாக/ MP3 Player வடிவில்

அஸ்ஸலாமு அலைக்கும்.

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி - இந்த ஜெருசல நாயகனின் வீர வரலாற்றை சத்தியமார்க்கம்.காம் (www.satyamargam.com) இணையதளத்தில் எழுதி வருகிறேன்.

அதன் முதல் பகுதி PDF நூலாக வெளியாகியுள்ளது. வாசகர்கள் ஒருசேர வாசிப்பதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அதனை இணைத்துள்ளேன். வாசியுங்கள். பகிருங்கள்.

உங்களது ஆலோசனைகளும் கருத்துகளும் மெருகேற்றிக்கொள்ள உதவும். பகருங்கள்.

அன்புடன்,
-நூருத்தீன்
ஸாஜிதா பதிப்பகத்தார் வெளியிட்ட “ரியாளுஸ்ஸாலிஹீன்” புத்தகம், வாசகர்கள் எளிமையாகக் கேட்டு பயன் பெறும் வண்ணம், சத்தியமார்க்கம் தளத்தில் MP3 Player வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தளத்தில் வேறு பக்கங்களைப் பார்வையிடும்போது தடையின்றி தொடர்ச்சியாகக் கேட்க தனி Tab இல் திறக்க இங்கே க்ளிக் செய்யவும். சத்தியமார்க்கம்.காம்

(நன்றி: www.tamilaudioislam.com )

இன்பத்_தமிழ்_நாட்டில் #இனிக்கும்_இஸ்லாம் ....

Abu Haashima

(படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்காக )

பெயர் காரணம்

சங்க காலம் முதல் தமிழகத்துடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். தொடக்கத்தில் யவனர் என்றழைக்கப்பட்டனர். பின்னர் இப்பெயர் மாறி முஸ்லிம்கள் என்றும், சோனகர்,[1] உலகாவிய இஸ்லாமிய ஆட்சிதலைவர்களான கலிபாக்கள் துருக்கியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்ததால் துலுக்கர் என்றும் அழைக்கப்பட்டனர்.மார்க்கப் என்பது கப்பலைக் குறிக்கும் அரபுச் சொல். கப்பல் அல்லது மரக்கலத்தில் வந்தவர்கள் மரக்கலராயர் என்றாகி பின் மரைக்காயர் ஆனார்கள்.

இஸ்லாமிய பணியில் ஈடுபட்டோர் லப்பைக் என்ற அரபிச் சொல்லை பயன்படுத்திட அதுவே லப்பை என்றானது.

துபாய் ஈமான் அமைப்புக்கு இன்ப அதிர்ச்சி அளித்த அரசு அதிகாரிகள்



 துபாய் : துபாய் ஈமான் கல்சுரல் செண்டருக்கு துபாய் அரசின் சமூக மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் சிறந்த சேவைக்கான விருதினை 15.11.2018 வியாழக்கிழமை வழங்கி இன்ப அதிர்ச்சியை அளித்தனர்.

துபாயில் அரசு பதிவு பெற்ற தமிழக மக்களின் ஒரே சமூக அமைப்பாக ஈமான் கல்சுரல் செண்டர் இருந்து வருகிறது. இந்த அமைப்பு கடந்த 1976-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. துபாய் அரசு சமூக சேவை அமைப்புகளை முறைப்படுத்த புதிய சட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்தது. அப்போது பதிவு பெற்ற ஒரே தமிழ் அமைப்பாக ஈமான் கல்சுரல் செண்டர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

Wednesday, November 14, 2018

சொந்தம் யாரு ! பந்தம் யாரு !

என் எண்ணங்களை நான் வெளிப்படுத்துவது

வரிகளால், வார்த்தைகளால் மட்டுமல்லாமல்,
கவிதையாய், பாடலாய் வடிப்பதும் என் இளமை காலம் தொட்டு வந்த வழக்கம்.
அதில் ஒன்று இன்றும்..... கேட்டு மகிழ்ந்து
கருத்து கூறுங்கள்.! நன்றி.
Haja Maideen

புனித மக்கா மாநகரில் / அவசியம் படியுங்கள்


பத்து வருடங்கள் புனித
மக்கா மாநகரில் பிரசித்தி
பெற்ற மருத்துவமனையில்
குழந்தைகள் நலம்,
அடோலசண்ட் பிஸிசியன்
மற்றும் அடோலஸண்ட்
சைக்கலாஜி.. ஸ்பெசலிஸ்ட்
மருத்துவராக பணி புரிந்த
அநுபவம் இன்றும் மறக்க
இயலாத ஒன்று.

வெளி நாடுகளில் மருத்துவராக
பணி புரிவது என்பது அவ்வளவு
எளிதான விசயம் அல்ல.
அமெரிக்கா,லண்டன் போலவே
இங்கும் மிகவும் கடுமையான
தேர்வுகளில் பாஸ் செய்தால்
மட்டுமே MOH சர்டிபிகேட்
கிடைக்கும்.மக்கா மதீனா
நகரங்களில் அதிகம் இண்டர்
நேஷனல் பேசியண்ட்ஸ் வந்து
போவதால் மிக மிக திறமை
வாய்ந்தவர்களே இங்கு
டாக்டர்களாக பணி புரிய
முடியும்.

தினம் தினம் குழந்தைகள் தினம் ....


ஆனந்தம் பிறக்க
கவலைகள் மறக்க
ஆசையோடு தேடி
அரவணைத்து கொஞ்சும்
அன்பான செல்லங்கள்
இறைவன் வழங்கிய
அருட் செல்வங்கள் ....

சத்தம் குறையாது
நித்தம் கொடுத்தாலும்
பூவிதழில் பதிக்கிற
முத்தம் அலுக்காது ....

Tuesday, November 13, 2018

கண்களில் நீரை வரவழைத்த மலரும் நினைவு

by Kaniyur Ismail Najee Manbayee

இந்தப் புகைப்படத்தைப் பார்த்தபொழுது என் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.ஏனென்றால் ஒரு நாள் நானும் இது போன்று ஒரு கடைவாசலில் நின்றேன்.
1967 ம் ஆண்டு லால்பேட்டை மதரசாவிலிருந்து மவ்லவி பாஜில் பட்டயம் பெற்று தேவ்பந்து மதரசாவில் கல்வி கற்க ஆசைப்பட்டேன்.அந்த நேரத்தில் 12 பிள்ளைகளுக்கு தந்தையான என் தந்தை மிகவும் பொருளாதார சிரமத்தில் இருந்தார்.
என் தாத்தா இஸ்மாயில் ராவுத்தர் துவக்கிய இஸ்லாமிய அரசு உதவி பெரும் ஆரம்ப பாடசாலையின் தாளாராக இருந்தவர் அவருக்கான வருமானம் குறைவாக இருந்ததால் நான் ஏதேனும் பணியில் சேர்ந்தால் நல்லது என நினைத்தார். அப்பொழுது
எனது உஸ்தாத் லால்பேட்டை ஷைகுல்வரா அப்துல்ஜமீல் ஹஜரத்(ரஹ்) அவர்களின் ஆலோசனைப்படி இஸ்திகாரா செய்ததில் சென்டரல் ரயில் நிலையத்திலிருந்து ரயில் ஏறுவது போல் கனவு கண்டேன்..இதனை என் தந்தையிடம் சொன்னபோது என் தந்தை தேவ்பந்த் செல்ல அனுமதித்தார்.
தேவ்பந்தில் தவ்ரதுல்ஹதீஸில் சேர நுழைவுத் தேர்வு நடைபெற்றது.

ஆணே அஸ்திவாரம்..


ஆண்....
அவனைக்கண்டு அச்சமேற்படின்
பெண்ணுக்கு அவன்
ஆடையல்ல
ஆகாத வாடை...

ஆணே! நீ....

மெழுகு
உருகி
ஒளிதருவதில்,,,

உளி
குடும்பச் சிற்பம்
செதுக்குவதில்....

மன்னிப்பைப் பற்றி மருத்துவம் சொல்வது

*மன்னிப்பைப் பற்றி*
மருத்துவம் சொல்வது
பகீர் தகவலாக உள்ளது.

'நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது.

உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது.

அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது.

அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்' என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

Friday, November 9, 2018

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் ஏம்பல் தஜம்முல் முகம்மது Yembal Thajammul Mohammad

உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.கவிஞர் ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்கள் .
இவர் சிறந்த சொற்பொழிவாளர் ,மனிதநேயம் பெற்றவர். சமூக சேவையில் நாட்டம் காரணமாக  பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பயணிக்கின்றார் கவிதை மற்றும் கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வருகிறார்..
சமரசம் பத்திரிகையிலும் இவரது எழுத்துகள் அவ்வப்போது வெளியாகியுள்ளது..
பல்வேறு துறைகளில் செயற்கரிய சாதனைபடைத்த  பெருமக்களை அறியப்படுத்தவில்லை என்றால் அது அடுத்த தலைமுறைக்கு தெரியாமலேயே போகும். சான்றோர்களை போற்றுவது மானிடர்க்கு சிறப்புத்தான்

ஏம்பல் தஜம்முல் முகம்மது Yembal Thajammul Mohammadஅவர்களுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்

Thursday, November 8, 2018

நீதானா அது நீதானா


இருளைப் பார்த்துப்
பயம்கொள்ளாதீர்

இருள்
வெளிப்படையானது
வெளிச்சம்தான்
மாயமானது
தந்திரமானது

ஒளிந்துகொண்டு
கண்ணாமூச்சு ஆடும் ஒளி
எங்கே இருந்தது
எங்கிருந்து வெளிப்படுகிறது
என்பது
மாயவித்தையல்லவா

ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்களுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்



ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்களுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்
இவர் ஒரு சிறந்த எழுத்தாளர்,இவர் ஒரு ஆசிரியரும், கவிஞருமாவார். இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் பிரசுரமாகியுள்ளன.
இவரது ஆக்கங்கள் எமது நீடுர் சீசன்ஸ் வலைப்பதிவில் நிறைய உள்ளன

இவர் எழுதிய நூல்கள்

வீரம் செறிந்த இஸ்லாம்
நிழலில்லாத சூரியன்
தூது வந்த வீரர்
இஸ்லாமும் மேற்கு நாடுகளும்
இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம்

Wednesday, November 7, 2018

கடந்த கால காட்சியெல்லாம் கண்ணில் அலையாய் மோதி டும்

அபுதாபியில் நடந்த அய்மானின் 443வது செயற்குழு கூட்டத்தில், தாயகத்திலிருந்து வருகை தந்த கலைமாமணி தேரிழந்தூர் தாஜுத்தீன் அண்ணன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அபுதாபி மக்களால் அய்மான் பாடகர் என்று அன்புடன் அறியப்பட்ட அய்மானின் ஆரம்ப கால தூண்களில் ஒருவர். அய்மானுக்காகவும் சமுதாயத்திற்காகவும் தன்னை அற்பணித்தவர் தாஜுத்தீன்.

முப்பது வருடங்களுக்கு முன்னர் அய்மானில் தன் நினைவலைகளை, அருமையான காலங்களை கணீரென்ற குரலில் பாடி
கடந்த காலத்துக்கு நம்மையும் அழைத்துச் சென்று அசத்தினார்.

"கடந்த கால காட்சியெல்லாம்
கண்ணில் அலையாய் மோதி டும்
நடந்த யாவும் நெஞ்சை விட்டு
நீங்க மறுத்தே நிலைத்திடும் "

நாங்கள் இரும்புக் கட்டிகள்...!

Hilalmstafa: 

நாகூரில் ஹஜ்ரத் அவர்கள் வீட்டில் நாங்கள் சிலர் அவர்கள் முன்னர் அமர்ந்திருந்தோம்.

ஹஜ்ரத் அவர்கள் ஒரு அற்புதச் செய்தியை விளக்கிக் கொண்டிருந்தார்கள்.

எங்களில் ஒருவருக்கு அந்தச் செய்தியின்  அழுத்தத்தைப் புரிந்து கொள்வதில் சில சிக்கல்கள் இருந்தன.

கொஞ்சம் கனமான தகவல்கள் நிறைந்திருந்ததால் திணறினார். மெதுவாக ஹஜ்ரதைப் பார்த்துக் கொண்டே அமர்ந்த நிலையிலே நகர்ந்து நகர்ந்து அவர்கள் அருகில் வந்தார்.

புரிந்து கொண்ட ஹஜரத் நண்பர் நகர்தலின் பொருளறிந்து, " என்ன செய்தி" என்று கேட்டார்கள்.

பாட்டும் பாவமும்

மதுரை மருத்துவக்கல்லூரி
என்றாலே பல நினைவுகள்
மனதில் வந்து போகும்.

டாக்டர் பசும்பொன்..எனது
நெருங்கிய நண்பர்.தேவர்
பெருமகனாரின் சொந்தக்காரர்.
பெரிய குளத்தை சார்ந்தவர்.
வக்கீலுக்கு படித்து பின்னர்
மருத்துவம் படிக்க வந்தவர்.
வக்கீல் என்பதால் அரசியல்
செல்வாக்கு உள்ளவர்.

உன்னை அறிந்தால்

by.Dr.habibullah

கொஞ்சம் வெயிட்
பண்ணுங்க சார்...பிளீஸ்

என்ன...என்னையா வெயிட்
பண்ண சொல்றே!
நான் யார் தெரியுமா!!

சாதாரணமாக எல்லா ரிசப்ஸன்
கவுண்டர்களிலும் பொறுமை
இழந்த சில விஐபி க்களால்
அவ்வப்போது எழுப்பப் படும்
அதிகாரக் குரல்கள்...

இந்த விதிகளை மீறிய
ஒரு விசித்திர விஐபி.

Friday, November 2, 2018

நோய்க்கு, மருத்துவம் செய்தல்

நாளும்  ஒரு  நபி மொழி பயான் :  மெளலவி MKI.
முஹம்மது மன்சூர் அலி நூரீ
(கதீபு,புதுப்பள்ளி,கீழக்கரை)
தலைப்பு :
நோய்க்கு, மருத்துவம் செய்தல்

*பிறப்பிற்கும்* *இறப்பிற்கும் இடையில்,*

*பிறப்பிற்கும்*
      *இறப்பிற்கும் இடையில்,*
      *நீ செய்யும்* *பாவம்*
      *புண்ணியம்* *மட்டுமே*
      *உனக்கு மிஞ்சும்...*
      *உன்னுடன் கடைசி*
      *வரை வருவதும்*
      *இதுவே...!!*

01) பெற்றோர்களை 
     நோகடிக்காதே...
     நாளை உன் பிள்ளையும்
     உனக்கு அதை தான்
     செய்யும்...!!

நாளும் ஒரு நபி மொழி தற்காப்புக் கலை

பயான் :  மெளலவி MKI.
முஹம்மது மன்சூர் அலி நூரீ
(கதீபு,புதுப்பள்ளி,கீழக்கரை)

Thursday, November 1, 2018

அல்லாஹ்வின் திருப் பெயர்கள்

அல்லாஹ்வின் திருப் பெயர்கள்: அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 1) அல்லாஹ் - அல்லாஹ் 2) அர்ரஹ்மான் - அளவற்ற அருளாளன் 3) அர்ரஹீம் - நிகரற்ற அன்புடையவன் 4) அல் மலிக் -...

ஸஹாபாக்கள் என்றால் யார்? அண்ணல் நபி(ஸல்) அவர்களின் திருத்தோழர்கள் -2


அவர்கள்(ஸஹாபாக்கள்) இஸ்லாம் மார்க்கத்தை நடைமுறையில் செயற்படுத்திக் காட்டுவதில் மட்டற்ற ஆர்வம் கொண்டிருந்தார்கள்.அவர்கள் காட்டிய ஆர்வம்,அல்லாஹ்வையே திருப்தியுறச் செய்யும் அளவுக்குத் தூய்மையானது; மகத்தானது(9:100). எத்தகைய தியாகங்களைச் செய்தால் அல்லாஹ்வுடைய சாந்தியும் வெற்றியும் கிடைக்குமோ அத்தகைய தியாகங்களை முழு மனதோடு செய்தவர்கள்(48:18-19).அந்த தியாகங்களின் காரணமாக உண்மையான விசுவாசிகள்- ஸாதிக்கூன்(59:08) என்ற சிறப்பைப் பெற்றவர்கள்.

ஸஹாபாக்கள் என்றால் யார்? அண்ணல் நபி(ஸல்) அவர்களின் திருத்தோழர்கள் -3

திருத்தோழர்கள் ஏவாத நன்மையும் இல்லை;தடுக்காத தீமையும் இல்லை. தமக்கே பாதகம் ஏற்பட்ட நிலைகளில் கூடத் தம்முடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, மனசாட்சியைப் புதைத்துவிட்டு, தன்னலம் பேணுபவர்களாக இல்லாமல் நீதியை நிலைநாட்டிய வேதவீரர்கள் என்னும் வியப்பிற்குரியவர்கள் அவர்கள்! எனவேதான் வாழ்வின் எல்லாத் துறைகளையும் பற்றிய சட்டங்களும் உலகத்திற்குக் கிடைக்க அவர்கள் காரணமானவர்களாக இருக்கிறார்கள்.