Monday, July 31, 2017

புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகக் கழகத்தின் முன்னாள் செயலாளர் திரு.கா.முகமது இஸ்மாயில் அவர்கள் 28/07/2017 வெள்ளிக்கிழமை மதியம்(வபாத்து) காலமானார்

புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகக் கழகத்தின் முன்னாள் செயலாளர், எனது தந்தையார் திரு.கா.முகமது இஸ்மாயில் அவர்கள் கடந்த 28/07/2017 வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணியளவில் இயற்கை எய்தினார்.
செய்தி அறிந்து நேரிலும், அலைபேசியிலும், குறுஞ்செய்தி மற்றும் முகநூல் மூலமும் எனக்கு ஆறுதலும், தேறுதலும் அளித்த அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள், சினிமா வர்த்தகம் உள்ளிட்ட பிறதுறை நண்பர்கள், பள்ளி,கல்லூரி மற்றும் இணைய வழி தோழர்கள், உற்றார் உறவினர்கள் இவர்களோடு, உடன் தோள் நின்ற கழக உடன்பிறப்புகள் அத்தனை பேருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். அவர் இறைவனின் பாதத்தில் சொர்கவாசியாக விளங்க உங்கள் பிராத்தனைகளைக் கோருகிறேன். நன்றி.
M.m. Abdulla
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
குர்ஆன் 67:2

*நோய்கள் குணமாகும் இடங்கள் !*


*நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.*

*இதோ*

*1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்.*

*2 - மூலிகை தேனீர்*

*3 - சுக்கு மல்லி காபி*

*4 - பனங்கருப்பட்டி*

*5 - பனங்கற்கண்டு*

*6 - வெல்லம்*

*7 - கரும்பு சர்க்கரை*

Sunday, July 30, 2017

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் தமிழ்நெஞ்சம்.

அறியப்பட வேண்டிய நண்பர் தமிழ்நெஞ்சம் .

தமிழ்நெஞ்சம்.அவர்கள்  இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் தமிழ்நெஞ்சம். அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)

Saturday, July 29, 2017

சி.ஐ.ஏ விரித்த வலை! ஃபைஸல் கொடுத்த விலை!

Noor Mohamed
சில நாட்களாக முகநூலில் சவுதியின் முன்னாள் மன்னர் காலம் சென்ற ஃபைஸல் இப்னு அப்துல் அஸீஸ் அவர்களுடைய படமும்,சிலவார்த்தைகளும் அடங்கிய படம் ஒன்று பல நண்பர்களால் பதிவும் பகர்வும் செய்யப்பட்டிருந்தது.முன்னாள் அமெரிக்க அதிபர்
ரிச்சர்ட் நிக்சனின் வெளியுறவு அமைச்சர் ஹென்ரி கிஸிங்கர் மன்னர் ஃபைஸலுக்கு விட்ட மிரட்டலும் அதை மன்னர் துணிவுடன் எதிர்த்து நின்ற செய்தியும் அதில் சிலாகிக்கப் பட்டிருந்தது.
மன்னர் தன்னளவில் இறுதிவரை துணிவுடன்தான்
இருந்தார்.ஆனால் அதற்கு அவர் கொடுத்த விலை என்ன தெரியுமா?அவரது உயிர்!
ஒரு சின்ன flash back !

நாடுதழுவிய நல்ல பழக்கம் ....!

சுத்தம்.
ஒழுக்கத்தின் முதல்படி சுத்தம். இது நாட்டுக்கும் வீட்டுக்கும் எனக்கும் உனக்கும் பொருந்தும்.
ரூவாண்டாவில் இனப்படுகொலை நடந்தது 1994 ம் வருடம். பல வருடங்களாகவே ரூவாண்டாவிற்கு வந்துபோய் இருந்தாலும், அந்த துயரகரமான சம்பவத்துக்கு பிறகு 1998 ல் மீண்டும் எனது பயணம் தொடர ஆரம்பித்தது.
இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது எனது எண்ண ஓட்டம் பின்னோக்கி செல்கிறது. அப்போது இடுகாட்டு
அமைதி நிலவிய ருவாண்டா நாடு இன்று வேகமாக வளரும் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றாக அமைதி பூங்காவாக திகழ்கிறது.
உலகிலுள்ள சுத்தமான நகரங்களில் ரூவாண்டாவின் தலைநகரம் கிகாலி மூன்றாவது

நுண்சதிகள் கணக்கற்றவை. இதைப் புரிந்து கொள்ள தனித்திறமை ஏதும் தேவையில்லை.

கலாம் உயிருடன் இருந்தபோது வீணை வாசித்தார், கீதையை படித்தார் என்பதெல்லாம் உண்மை எனும்போது கலாம் வீணைவாசிப்பது போலும் அருகில் கீதை புத்தகம் இருப்பது போலும் சிலை அமைத்தது ஹிந்துத்துவ அரசியலாம். அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்//
— வாசு ராமதுரை
கலாம் கீதை வாசித்தார். அவரே சொல்லியிருக்கிறார். சந்தேகமே இல்லை. ஆனால் அவர் கீதை வாசிப்பதையே முழுநேரத் தொழிலாக வைத்திருக்கவில்லை. கீதையை மட்டுமே வாசிக்கவில்லை. அவர் வாசித்த எத்தனையோ நூல்களில் கீதையும் ஒன்று. கீதை மட்டுமே சிறந்த நூல் என்று அவர் சொல்லியிருக்கிறாரா என்ன? அல்லது கீதையில் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தாரா?

அண்ணன் அ. அய்யுபு அவர்களை நான் நினைவு கூறவில்லை...!


மனிதம் காத்தவர்களை மறக்காமல் இருக்க 
இறைவனே என்னை தூண்டுகிறான்.!
மாணிக்கம் மறைந்ததை மறக்கத்தான முடியுமா?? 
மண்ணுக்குள் மறைத்தாலும்.. 
மின்னாமல் இருக்குமா.???
ஒரு பிடி மண்ணையும் காசாக்கும் 
உலகத்தில்.. 
மருபடி மருபடியும் காசே வாங்காமல் 
கல்விக்கு இடம் தந்தாய்..!

Friday, July 28, 2017

குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார்.
இப்போதெல்லாம் *அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை !*

*அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை !*

Thursday, July 27, 2017

சரியான திட்டமிடல்:

************​தன்னம்பிக்கை கதை.*********


அடர்ந்த காடு ஒன்று இருந்தது.
அதைச் சுற்றிலும் அழகான குட்டிக்குட்டித் தீவுகள் இருந்தன.
அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார்.
அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.
அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார் .
அந்தக் காட்டில் , பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது. கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
எனவே தலைவர் போட்டிகளை
அறிவிக்கும்படி தன்னுடைய
உதவியாளர்களுக்குக்
கட்டளையிட்டார்.

Wednesday, July 26, 2017

பிக்பாஸ் அவதானிப்புகள்

ஆதி, பரணி என ஆண்கள் தான் என்னால் இங்கே வசிக்க முடியவில்லை, தயவு செய்து விட்டு விடுங்கள் என தெறித்து ஓடினார்கள். ஆண்களின் இயல்பே இதுதான், பிரச்னைகளில் இருந்து தெறித்து ஓடுவது.. பெண்கள் பிரச்னைகளை எதிர்கொள்ள முனைபவர்கள். ‘’இவ்ளோதானா, இன்னும் இருக்கா பார்த்துடலாம்’’ என்னும் சர்வைவல் குணம் பெண்களின் ஆதிகுணம்...

அரபுத்தமிழ் = அர்வி - 1

அரபுத் தமிழ் பற்றி முன்பு எழுதியுள்ளேன். Dravidian Sahibs and Brahmin Moulanas என்ற நூலிலும் இதுபற்றிய குறிப்புகள் உண்டு. இதை அர்வி என்றே அடையாளப்படுத்தியுள்ளனர். இதுபற்றி Torsten Tschacher என்பார் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் எழுதியுள்ள Islam in Tamilnadu: Varia என்ற நூல் இணைய வழி வாசிக்கக் கிடைத்தது. நூலாசிரியர் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து எழுதி இருக்கிறார். அதுதவிர மேலும் சில தேடல்களிலிருந்து...

என் நூல்கள்: சாரு நிவேதிதா

சாரு நிவேதிதா
நான் பிறந்து வளர்ந்த ஊர் நாகூர். அது ஒரு சிற்றூர். ஒரு பறவைக்கோ, முற்றும் துறந்த முனிவனுக்கோ தேச, இன, மத அடையாளங்கள் இருக்க முடியுமா என்ன? என் எழுத்திலோ சிந்தனையிலோ இந்த அடையாளங்கள் எதுவும் இருக்காது. மனித வரலாற்றில் இந்த அடையாளங்களை முன்னிட்டே பேரழிவுகளும் பெரும் போர்களும் நிகழ்ந்தன. எனவே ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதுதான் மனித இனத்தின் விடுதலைக்கான கோட்பாடு என இளம் வயதிலேயே எனக்குப் புரிய வைத்தது நாகூர்.


உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?
பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத்
தொடங்குகிறது...
ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை...
கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை...
எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்...
இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை...
ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை...

மெக்சிகன் / லெபனிஸ் உணவு

மெக்சிகன் / லெபனிஸ் உணவு வகைக்கான தேவை சந்தையில் அதிகரிக்கிறது.
(ஜலபினோ , ஹம்முஸ் , கார்லிக் பேஸ்ட், டோர்ட்டில்லா, நாச்சோஸ் மற்றும் பல) பொதுவாகவே மெக்சிகன் உணவு வகைகள் சற்று காரவகை சார்ந்தவை இன்று பல உணவகங்களில் இவை விற்பனைக்கு வந்துவிட்டன. 
சென்னையில் மொத்த விற்பனைக்கான சந்தையை சற்று ஆராய்ந்து பார்க்கவும். நிச்சயம் இந்த தொழிலுக்கான சாத்தியங்கள் உயரும். நட்சத்திர மற்றும் மத்தியதர உணவகங்களில் இந்த தொழிலுக்கான அனுகூலம் அதிகம்.Sheik Mohamed Sulaiman


Tuesday, July 25, 2017

வெயில் காலத்திற்கு இதமானது

வெயில் காலத்திற்கு இதமானது
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெள்ளரி சிறிதாக நறுக்கி , எலுமிச்சையை மெலிதாக சீவி, தேவைக்கேற்ப புதினா இலை சிறிது லவங்கப்பட்டை மற்றும் கருப்பு மிளகு இவை அனைத்தையும் குவளை / பாட்டில் தண்ணீரில் இட்டு குளிர்பெட்டியில் ஒரு மணிநேரத்திற்கு மேல் வைக்கவும். பின்னர் குடித்து பாருங்கள் ருசியான பானம் இயற்கையானது , விலை குறைவானது , உடல் எடையை குறைத்திடும் வல்லமை படைத்தது. சிறிது நாட்கள் தொடர்ந்து முயற்சித்து. மாற்றத்தை சொல்லுங்கள்.

வந்த சனமெல்லாம் குந்தணும்

கடையில் அந்த குந்துமணையையும் அதற்கான விளக்கத்தையும் பார்த்ததும் அதிர்ச்சியும் வியப்பும் கலந்து தாக்கியது. இலகுவான Stoolக்கு ஸ்டூல் என்றது அப் பொருள் பயன்பாட்டு விளக்கம்.

இதென்ன புது வியாபாரம் என்று வாயையும் மூக்கையும் கையால் பொத்திக்கொண்டு விபரங்களை நோண்டினால் தகவல்கள் ஆச்சரியம். சங்கோஜத்தை சற்று ஒதுக்கிவிட்டு நம் தினசரிக் கடனின் பின்னணி, அதற்கான உடல் இயங்குமுறையின் நுட்பம் ஆகியவற்றை அறிந்துகொள்வது அவசியம்.

குடுக்க குடுக்க தீர்ந்துப் போகாத பல விஷயங்கள் நம்மிடம் உண்டு.....!







இறைவா........... சிலருக்கு பிழை 
இன்றி நீ எழுதிய தலை விதியை....
பிழையாக நான் நினைத்து, 
அதை பிழைத் திருத்தும் முயற்சியில் 
நான் பெரும் பிழை செய்து விட்டேன்.
என் பிழைப் பொறுத்துக் கொள்ளவாயாக...!
எங்கள் சிற்றறிவை சீர்படுத்துவாயாக..!

-------------

பலமும் பலகீனமும்:

நான் சிலருக்கு உதவியது. 
நான் சிலரை மன்னித்தது. 
நான் சிலர் மீது நேசம் கொண்டது. 
நான் சிலரை நம்பியது. 
நான் சிலருக்காக பரிந்து பேசியது. 
நான் சிலரிடம் சிலவற்றில் கைகோர்த்தது. 
நான் சிலரிடம் நட்பு கொண்டது. 
நான் சிலரிடம் பகைத்துக் கொண்டது. 
நான் சிலர் மீது இரக்கம் காட்டியது. 
நான் சிலரை மீண்டும் இனைத்துக் கொண்டது. 
நான் சிலரை,சிலருடன் இனைத்து வைத்தது. 

விவசாயிகள் மீண்டும் தில்லியில் போராட்டத்தைத் துவக்கியிருக்கிறார்கள்.

விவசாயிகள் மீண்டும் தில்லியில் போராட்டத்தைத் துவக்கியிருக்கிறார்கள். எட்டு நாளாயிற்று. அதில் பங்கேற்க வந்த ஒருவர், ஏற்கெனவே எனக்குப் பழக்கமானவர். அவர் பெயர் முருகன் என்று வைத்துக் கொள்வோம்.
நான்கைந்து நாட்களுக்கு முன்னால் போன் செய்தார். அவசரமாக ஊருக்குப் போக வேண்டியிருக்கிறது, ரயிலில் டிக்கெட் எடுக்க வேண்டும், நீங்கள் வந்து எடுத்துத்தர முடியுமா என்று கேட்டார். வேலை நிறைய இருக்கிறது, வர இயலாது, நீங்களே போய் எடுத்துக்கொள்ளலாமே என்று கேட்டேன். எனக்கு எழுதப்படிக்க தெரியாது என்றார். (போனமுறை ஒருவன் டிக்கெட் எடுப்பதாகச் சொல்லி பலரையும் ஏமாற்றிவிட்டு 20 ஆயிரம் ரூபாயுடன் ஓடிவிட்டது நினைவு வந்தது.) யாரையாவது துணைக்கு அழைத்துச்சென்று எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டேன்.

Monday, July 24, 2017

தந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்

 
சமீபத்தில் வெளியான  +2 தேர்வு முடிவுகளில் சமூகவலைதளங்களும் பரபரப்பாகின. தத்தம் உறவுகள் எடுத்த மதிப்பெண்களை பதிவிட்டு உற்சாகத்தை வெளிபடுத்தும் சமயத்தில் நமக்கு அறிமுகமானார் 1192 மதிப்பெண் எடுத்த ரிஹானா பாத்திமா.




ரிஹானா, கம்பம் பகுதியை சார்ந்தவர். தந்தை இஷாக் மளிகைக்கடை நடத்திவருகிறார்.  அவரிடம் முதலில் பேசினோம்.

இருப்பு.

இருப்பு.
இருப்பு என்பதற்கு இருப்பது (Sitting) என்பது மட்டுமே பொருளல்ல.
'இருப்பு சரியாக இருந்தால் எல்லாமே சரியாகத்தான் இருக்கும்' என்பது எங்கள் தந்தையார் அடிக்கடி சொல்லும் வாசகங்களில் ஒன்றாகும். அந்த காலத்தில் பெரும்பாலான வியாபார நிறுவனங்களில் கணக்கு எழுதும் கணக்காப் பிள்ளைகள் ஜமுக்காளம் விரிக்கப்பட்ட தரையில் அமர்ந்து காலில்லாத மேஜையில் பெரிய பேரேடுகளை வைத்து சம்மணமிட்டு அமர்ந்து கணக்கு எழுதுவார்கள்.
இங்கும் இருப்பு மிக முக்கியம். அவர்களது தொழில் தனிப்பட்ட கணக்காளராக இருந்ததால் இருப்பு கணக்கு மிகமுக்கியமாகப் பட்டிருக்கலாம். லாப நஷ்ட கணக்கு சரியாக வரவேண்டுமானால் சரக்கு இருப்புக் கணக்கு மிகச்சரியாக இருக்கவேண்டும் என்பது கணக்குப்பதிவியலின் அடிமட்ட அத்தியாவசியங்களுள் முதன்மையானதாகும்.

அனைவருக்கும் பயன்படும் தகவலாய் இருக்கிறதே...!

சிலவற்றை நாம் படிக்கும் போது...அனைவருக்கும் பயன்படும் தகவலாய் இருக்கிறதே...! என நம் உள் மனது நமக்கு கூறும் அப்படிப்பட்ட தகவல்கள் இது...
#### *** ####
ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்..!
முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.
1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.
2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.
3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது
4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.
5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

Sunday, July 23, 2017

ஆண்டவனும் முகநூல் கணக்கும்

அவன் படைப்புகளின்
எண்ணிக்கையை பட்டியிலிட
எந்த கூகுளும் இணையத்தில் இல்லை !
அந்த படைப்பாளியின் பயோடேட்டா
எந்த WIKIPEDIA-விலும் எழுதப்படவில்லை !
அவனது அண்ட ரகசியங்களை வெளியிட
எந்த WIKILEAKS-ஸாலும்
ஒருபோதும் முடியாது !

நினைவுகளைப் பகிர்ந்தபோது.

என்னுடைய ஊர் கடலூர் முதுநகர். அதாவது கடலூர் ஓ.டி. நான் கடலூரில் 1933-ல் பிறந்தேன். எங்கள் தெரு வுக்கு மோகன்சிங் வீதி என்று பெயர். எங்கள் ஊரில் ஒரு அக்ரஹாரம் உண்டு. இப்போது எல்லா சாதியினரும் குடியிருக்கும் அந்த அக்ரஹாரத்தில், அப்போது பார்ப்பனர்கள் மட்டுமே குடி யிருந்தார்கள். அந்த அக்ரஹாரத்தில் உள்ள ஒரு வீட்டில் ஸ்வர்ணத்தக்கா என்கிற ஒருவரிடம்தான் நான் இரண்டாம் வகுப்பு வரை பயின்றேன். அவர்கள் வீட்டின் திண்ணையிலேயே பள்ளிக்கூடம் நடக்கும். நான் படித்த அந்தத் திண்ணைப் பள்ளிக் கூடத்தை நடத்திய சொர்ணத்தக்கா, என் அருமை நண்பரும் எழுத்தாளருமான ஜெயகாந்தனின் அத்தைதான். அப்போது ஜெயகாந்தனின் பெயர் முருகேசன். நாங்கள் இருவரும் அதன்பின் இப்போது செயின்ட் டேவிட் பள்ளி என்று அழைக்கப்படுகிற எஸ்.பி.ஜி. பள்ளியில் சேர்ந்தோம்.

Saturday, July 22, 2017

பயணம் ! - அபு ஹாஷிமா

மேகங்களை 
கிழித்தெறிந்தபடி
மின்னல் வேகத்தில் 
பறந்து கொண்டிருந்தது
பயணம் !
கர்பலாவிலிருந்து 
கொடூர சிரிப்பொலி எழுந்தது !
ஹுசைனாரின் 
அறுத்தெடுக்கப்பட்ட 
தலையை வைத்துக் கொண்டு 
கூபா வாசிகள் 
கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள் !
டமாஸ்கஸ் நகரின்
அரண்மனை 
மஞ்சத்தில் 
யஜீது சிரித்துக் கொண்டிருந்தான் !
பயணம் கொஞ்சம் 
முன்னேறிச் சென்ற போது 

தமிழ் வளர புலம் பெயர்ந்த தமிழர் என்ன செய்ய வேண்டும்?


நான் பல தமிழ்ச் சங்கங்களுக்குச் சென்றிருக்கிறேன், பல இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன், ஈழத் தமிழர்கள் வாழும் கனடாவில் வாழ்கிறேன், தமிழகத் தமிழர்கள் நிறைந்திருக்கும் இடங்கள் பலவற்றுக்கும் சென்றிருக்கிறேன்.

அங்கெல்லாம் நான் கண்ட ஓர் கசப்பான உண்மை இதுதான். நாற்பதைக் கடந்தவர்களே அவை நிறைய வீற்றிருப்பார்கள். இளைஞர்கள் மிக அரிதாகவே தென்படுவார்கள்.

உலக வாழ்க்கை....!

வாழ்க்கைப் பெருங்கடலை
நீந்திக் கடக்க முயற்சித்து முடியாமல் முடியும்வரை நீந்தியே வாழும்
மீன் குஞ்சுகளே மனிதர்கள்
வருத்தமே வாழ்க்கையென
வருந்துவோரே அதிகமிருந்தும்
வாழ்க்கையை வாழ்வோரும்
அதிகம் அதிகம் உண்டு
நாடியது நடக்க வேண்டுமென

எதையும் வரையறைக்குள் வைத்திருப்பது அவசியம்

நாடகம் பார்க்க ஆரம்பித்தோம் தொடர்கதையானது வருடங்கள் கடந்தது ஓர் எபிசோட் பார்க்க மறந்தால் அழுத்தம் அதிகமானது வீட்டுக்கு திரும்பியவுடன் என்ன நடந்தது என்றோ அல்லது நட்புகளை தொடர்புகொண்டு கேட்கும் அளவுக்கு போனது. உளவியல்ரீதியாக பலரின் வாழ்க்கையை பாதித்தது. சிலர் தங்கள் வாழ்க்கையை அதனுடன் ஒப்பீடுசெய்தும் பலவற்றை இழந்தனர் .

Friday, July 21, 2017

புறக்கணிப்பின் நோவுகள்.!

எனக்குத் தலை வலிக்கிறது என்று
எப்போதாவது உன்னிடம்
சொல்லவரும்போது
உனக்கு எப்போதுமே
தலை வலித்துக் கொண்டிருப்பதாக
அலுத்துக் கொள்கிறாய்
பல்வலிப்பது போலிருக்கிறது எனும்போது
நீ எப்போதுமே பல்வலியோடே
வாழ்ந்து கொண்டிருப்பதாக மாய்ந்துபோகிறாய்

Wednesday, July 19, 2017

Abu Haashimaவும் அப்துல் கபூரும் ..../ உகாண்டா வந்திறங்கி பணிகள் துவங்கின ...


இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ....

அமுதெனும் தமிழால் பண் பாடி உலவும் வெண் தாடி வேந்தருக்கும் எனக்கும் நிலவும் ஆத்மார்த்த அன்பு வலிமை வாய்ந்தது ....

கவிஞர் எழுத்தாளர் கட்டுரையாளர் சமுதாய சிந்தனையாளர் புராதன வரலாற்று ஆய்வாளர் சமூக ஆர்வலர் போன்ற இன்னும் பல வண்ணமய நூல்களால் நெய்த ஏற்றம் மிகுந்த அவதார ஆடைகளை அணிந்து மகிழ்பவர் ...

முகநூல் சுற்றம் பாராட்டும் முற்றம் பத்திரிகை ஆசிரியரான கரீமுல்லாஹ் என்கிற அபு ஹாஷிமா அவர்களை ஊரில் சந்தித்து நான் உரையாடிய தருணங்களில் மகிழ்ச்சியெனும் பேனா எம்மிருவரின் உள்ளக் காகிதங்களில் வர்ணங்களை வரைந்தது ....

Tuesday, July 18, 2017

மன அழுத்தம் எங்கு போனதென்றே எனக்குத் தொியவில்லை.

நம் வாழ்வில் நித்தம் எத்தனையோ பிரச்சினைகள், சம்பந்தமே இல்லாதோா்களிடமிருந்தும் தூற்று மொழி, மிகவும் வேண்டப் பட்டோா்களிடமிருந்து காழ்ப்பு மொழி...என்ன செய்வது...தவித்து விடுவோம் ; திகைத்து விடுவோம்.
அடுத்தடுத்த நம் செயல்பாடும் தடைபட்டு விடும்.

ஆர்கானிக் உணவுப் பொருட்கள்! '

பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப்  பொருட்கள் விற்கப்படும் “மால்”
கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. “மால்” கலாசாரம் தவறில்லை தான் ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம். ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்டசமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள் சார்ந்தது. எது ஆர்கானிக், அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்.

Sunday, July 16, 2017

என்னிருப்பு ....!

மலரில் மயங்கி 
மனதில் மகிழ்ந்து 
இதழில் புன்சிரியுடன் 
இன்முகம் காட்டி 
நற்குணம் கொண்டு 
உறவுகளுடன் கூடிவாழ்ந்து 
ஆயுளை கூட்டி 
வெறுப்பை துறந்து 
மனிதம் பேணி 
சுகந்தம் சுவாசித்து

நோய்கள் என்றால் என்ன?

நோய்கள் என்றால் என்ன?
நமது உடலில் இயற்கையாகவே 3 சக்திகள் உள்ளன.
இயங்கு சக்தி. -32 %
செரிமானசக்தி- 32 %
நோய் எதிர்ப்பு சக்தி - 36 %
காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல் இருந்தால், அந்த செரிமான சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% ஆக மாறி விடும்....
மேலும் நாம் ஓய்விலிருந்தால் இயங்கு சக்தியின் அளவான 32%...நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 100 %
ஆக மாறி காய்ச்சல் விரைவில் குணமாகி விடும்.
இப்போ சொலுங்க சாதாரண காய்ச்சலுக்கெல்லாம் மருந்து மாத்திரைகள்ஆண்டிபயாடிக் எல்லாம் வேணுமா?
நமது உடலில் தேங்கும் கழிவுகள் மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்துவிடும் அல்லது வெளியேற்றிவிடும்.

என்னமா யோசிச்சிருக்காய்ங்கன்னு நினைக்காம இருக்க முடியலே.

எனக்கு வேலைப்பளு எப்போதுமே அதிகம், இப்போ ரொம்ப அதிகம். டைப்செட்டிங் செய்யறதுக்கு புதுசு புதுசா புத்தகம் கைக்கு வந்துட்டே இருக்கு. எல்லாமே வெவ்வேறு மொழி நூல்கள். குஜராத்தி-இந்தி, இந்தி-பஞ்சாபி, இந்தி-கன்னடம், இங்கிலீஷ்-இந்தி-போடோ, இங்கிலீஷ்-இந்தி-மணிப்புரி.... இப்படியே நீ........ளு.....து பட்டியல்.
முன்னொரு காலத்தில் இருந்தமாதிரி இப்போ கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் கிடைக்கிறதில்லே. அப்படியே கிடைக்கிற ஆட்களுக்கு இந்த வேலையை இப்படிச் செய்யணும்னு நாம எவ்வளவு சொல்லிப் புரிய வச்சாலும் கடைசியில அவங்க அவங்க புரிதல்படிதான் வேலை செய்யறாங்க. 300 பக்க புத்தகத்தைக் குடுத்தா டபுள் ஸ்பேஸ்ல டைப் செஞ்சு 500 பக்கமா கணக்கு காட்டுவாங்க. காசு குடுத்து டைப் செஞ்ச பினனாடியும் அதை சரி செய்யற வேலையும் சேந்துக்குது.

Saturday, July 15, 2017

பெண் பார்ப்பது எப்படி?!

பெண் பார்ப்பது எப்படி?!

ஒரு தத்துவ ஞானியிடம் ஒரு வாலிபன் சென்று எனக்கு பெண் பார்க்க வேண்டும் என எனது தாய் ஆசைப்படுகிறாள், நான் எப்படியான பெண்ணை தெரிவு செய்ய வேண்டும்? என்று சொல்லித் தாருங்கள் என்றான் .

அதற்கு அவர்,

''அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படுவான்.

அலங்கோலமானவளை முடிக்காதே! உனக்கே அவள் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும்.

பெண்ணின் வலிமை!


[ வலி ஏற்பதில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள். ஆனால் ஒரு வித்தியாசம். பெண் மன வலியைப் பொறுப்பாள். அத்தனையையும் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருப்பாள். ஆண் உடல் வலியைப் பொறுப்பான். பெண் அதைப் பார்த்து பதறிப்போவாள்.

ஒரு பெண் ஆணுக்கு நிகராக மட்டுமல்ல அவனைவிடவும் அறிவு பெற்றிருப்பது சிறப்பு. ஆண் ஆலோசனை கேட்பதில் மிகவும் விருப்பம் உள்ளவன். அது அவன் மனைவியிடமிருந்து கிடைத்தால் அதைவிட பாக்கியம் வேறில்லை.

குழந்தைகள் 24 மணி நேரமும் தாயைத் தேடுபவர்கள். எழுபது வயது ஆனாலும் கூட தாயைத்தேடும் மனிதர்களாகத்தான் நம்மவர்கள் இருக்கிறார்கள்.]

அதுக்கு இப்ப என்ன செய்யனும் சொல்லு?",

மரண பயம்:
இப்ப ஒரு காஃபி ஷாப்ல நாங்கள் நண்பர்கள் சிலர் பேசிட்டு இருந்தோம். அப்ப ஒரு நண்பர் மட்டும் தொடர்ந்து தத்துவம் பேசுவதாக நினைத்து ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்.

நாம பணக்காரனாகவோ, இல்லை ஏழையாகவோ இருக்கலாம்:
சரி:

உயர்ரக உணவோ, இல்லை நடுத்தர உணவோ உண்ணலாம்:
சரி:

Friday, July 14, 2017

பருவம்

பருவம் :
கோடை தணிந்து 
தென்றல் தவழ்கிறது 
வெடித்து சிரித்த நீ
சட்டென்று
நாணமுற்றதைப்போல்


என் இருளில்
நட்சத்திரங்களை
விசிறிச்சென்றவள்
கொடும் பகலில்
நிழலை 
விரித்து வைத்தவள்
தேவதைகளின் 
வழிவந்தவள்

சிஷேரியன்

நம்பிவந்த
எங்களை பணத்திற்கு
பகடைக் காய்களாக்கி;
சுக பிரசவத்தை
தடுத்திட நினைத்தாயோ;
என் நரம்புகளெல்லாம்
அறுத்திட துடித்தாயோ!

அனஸ்தடிக் என்றாய்;
அறுத்தெடுக்க
தனி கட்டணம் என மென்றாய்;
உயிர் பயம் காட்டி;
எங்கள் உள்ளத்தை வாட்டி;
உன் கட்டடத்தை உயர்த்துகிறாய்;
அதற்குதானா எங்கள்
பணத்தை உருவுகிறாய்!

Thursday, July 13, 2017

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது
"ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா
கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்
தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் ஜவஹர்லால் நேரு
என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்
மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

Sunday, July 9, 2017

குற்றப்பத்திரிக்கை

சிறு வயதில், பள்ளியிலிருந்து திரும்பிய பொழுதில், வீட்டின் மாடத்தில் யாரோ வைத்திருந்த ஒரு ரூபாய் என் கண்ணில் பட்டது. அதை எடுத்துக் கொண்டு, கடைவீதியில் இருக்கும் லாலா மிட்டாய்க் கடைக்கு ஓடிச்சென்று காராபூந்தி வாங்கினேன்.
வாங்கியவன், அங்கேயே தின்றிருக்க வேண்டும். வீட்டிற்கு கொண்டு வந்து எல்லோருக்கும் கொஞ்சம் கொடுத்து விட்டு சாப்பிட்டது என் தவறுதான்.
"காராபூந்தி வாங்க காசு ஏதுடா?"- என் அக்கா
"நான் சேத்து வச்ச காசுல இருந்து வாங்கினேன்" -நான்.
உடனே, மாடத்திலிருந்த ஒரு ரூபாயைச் சென்று தேடினாள். சத்தியமாக, அந்த எருமையின் ஒரு ரூபாய் என்று தெரியாது.
"டேய், இங்க இருந்த ஒரு ரூபாயை எடுத்துட்டு போயிதான வாங்குன? உண்மையச்சொல்லு"

Saturday, July 8, 2017

வாழ்க்கை என்பது

வாழ்க்கை என்பது நேசம், நட்பு, உறவு இவைகளால் நிரப்பப்பட்டது. இவற்றில் ஒன்று குறைந்தாலும் மனதில் வெறுமை தோன்றும். தனிமை நம்மை ஆட்கொள்ளும். இவ்வளவு பெரிய உலகத்தில் நாம் மட்டும் தனியாக தவிக்க விடப்பட்டதுபோல வாழ்வே வெறுப்பாக தோன்றும். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதுபோல எண்ணத் தோன்றும்.
வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதித்து விட்டதுபோல நினைக்கும் மனிதர்கள்கூட, உறவுகளை கவனிக்கத் தெரியாவிட்டால் அவர்களின் சாதனையே செல்லாக் காசாகிவிடும். உலகமே ஒருவரை போற்றினாலும், அவர் உறவுகளால் ஒதுக்கப்படும்போது இனம்புரியாத வெறுமையையே உணர்வார்.

Thursday, July 6, 2017

பலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை... பகுதி - 6

பலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை... இறுதி பகுதி - 6
------------------------------------------------------------
Saif Saif
நபி(ஸல்) அவர்களுக்கு குரைஷிகளால் பல ஆபத்துகள் இருந்தது..சாதாரணமாக ஐந்து வேளை பள்ளிக்குச் சென்று தொழுகையை நிறைவேற்றுபவராகத் தான் இருந்தார்கள்..எதிரிகள் எப்போதும் கூடவே இருந்தார்கள்..ஆட்சியதிகாரம் கைகளில் இருந்த பிறகும் எளிதில் பிறர் சந்திக்கும் நபராகத் தான் இருந்தார்கள்..இதையறிந்த இறைவனும்,
அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்;. நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.(5:67)

வித்வான் அபூபக்கர்

Vavar F Habibullah
வித்வான் அபூபக்கர்    
சமீபத்தில் சென்னையில் எனது நண்பர் முன்னாள் ஏடிஜிபி சந்திர கிஷோர் IPS அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். இவர் அந்த நாட்களில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஆக பணியாற்றியவர்.குமரி மாவட்ட சம்பவங்களை என்னிடம் நினைவு படுத்திக் கொண்டிருந்த போது திடீரென்று
உங்க ஊர் வாத்தியார்....அவர் பெயர் மிஸ்டர் அபுபக்கர் சார் எப்படி இருக்கிறார் என்று கேட் டார்.நான் அவர் மறைந்து விட்ட செய்தியை சொன்ன போது மனம் நெகிழ்ந்து போனார்.
அவர் சொன்னார்
அந்த நாட்களில் அபுபக்கர் தான் நாகர்கோவில் முஸ்லிம் மக்கள் தொடர்பான பிரட்சனைகளுக்காக என்னிடம் வருவார்.பொதுவாகவே குமரி மாவட்ட காவல் துறைக்கு ஒரு சிறந்த நண்பராக அவர் திகழ்ந்தார்.மிகவும் நல்ல மனிதர்.
சொன்னவர் காவல் துறையின் மிக உயர்ந்த பதவியில் இருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
வித்வான் அபுபக்கர்
மிகச் சிறந்த தமிழ் அறிஞர் நாஞ்சில் நாட்டில் அந்த நாட்களில் இவர் சொற்பொழிவாற்றாத தமிழ் மேடைகள் இல்லை.இந்துக் கல்லூரியின் தமிழ் மன்றங்களில் இவர் தமிழ் மணம் வீசும்.தமிழில் முதுநிலை பட்டம் தமிழில் வித்வான் பட்டம்.அந்த நாட்களில் பனாரஸ் பல்கலை கழகத்தில் தமிழ் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்த தமிழ் மாணவர்.
பண்டித சாஸ்தான் குட்டி பிள்ளை தமிழ் அறிஞர் வானமாமலை வித்வான் ஆறுமுகம் பிள்ளை போன்ற தமிழ் அறிஞர் குழாம் ஒன்று இவரை சுற்றி எப்போதும் இருக்கும்.அவர்களின் தமிழ் விவாதங்களில் புதிய தகவல்கள் புதைந்து கிடக்கும்.சேக்ஸ்பியர் கூட ஜெகப்பியர் என்ற தமிழர் தான் என இவர்கள் எழுப்பும் வாதம் கண்டு சில நேரங்களில் நான் மலைத்ததுண்டு.திருக்குறளை படித்து விடலாம் பரிமேலழகர் உரையை படிப்பது கடினம்.தமிழை விட சமஸ்கிருதம் முந்திய மொழி என்று வாதிடும் சக தமிழ் அறிஞர்களை வாதத்தில் கலந்து எதிர் கொள்ள இந்த தமிழர் குழு சவால் விடுக்கும்.

Wednesday, July 5, 2017

இஸ்லாமிய பாடல்கள் பதிவிறக்கம் செய்துக் கேளுங்கள்

Download






Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download

1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download


1

Ć
Download