Wednesday, June 30, 2021

அலீ (ரலி) வரலாறு -- 5

 


அலீ (ரலி) வரலாறு -- 5

===================

நாகூர் ரூமி NagoreRumi

உஹதுப் போரில்

அலீயின் கையால்

அவ்வுலகம் சென்றவர்கள் ஏழுபேர்!

தீயவர்களின் தலைகளைக் கொய்தே முறிந்தது

அலீயாரின் அற்புதமான வாள்

அதைக்கண்ட அண்ணல் நபி

வீரர் அலீக்கு அளித்தார்கள் பரிசாக

தீயவர்களை துவம்சம் செய்யும்

தன்னுடைய வாளான துல்ஃபிகார்!

வாஞ்சை நபியின் வலது கையான

வீரர் அலீயின் வலது கையில் அடிபட்டிருந்தது

உஹதுப் போரில்

கட்கம்வரை கசிந்துகொண்டிருந்தது

அலீ (ரலி) வரலாறு -- 4


அலீ (ரலி) வரலாறு -- 4

Nagore Rumi

=====================

பகலெல்லாம் பதுங்கிப் பதுங்கி

இரவோடு இரவாக

கால்களெல்லாம் புண்ணாக

கால்நடையாகவே அலீ

காசிம் நபியைக் காணச்சென்றார்கள்

மதினா நோக்கி!

குபா வந்த அலீயை

கட்டியணைத்துக்கொண்டார்கள்

காசிம் நபி

கால் புண்ணுக்கும் தம் கையால்

கட்டிவிட்டார்கள் மருந்தை!

மதினா நகர்தனிலே

மாநபி கட்டிய பள்ளிக்கு

மண்ணும் கல்லும்

சுமந்து சென்றார்கள் அருமை அலீ

அல்லாஹ்வின் இல்லத்துக்கு அருகிலேயே

அவர்கள் தங்கவும் வீடுகள் கட்டிக்கொண்டனர்

அலீ (ரலி) வரலாறு -- 3

 


அலீ (ரலி) வரலாறு -- 3

===================

பரமனின் செய்தி வந்து

பதிமூன்று ஆண்டுகள் ஆயின

மதினா செல்லும்படி

மாநபிக்கு ஆணை வந்தது

குறைஷி எதிரிகள் ஒன்றுகூடி

கோமான் நபியைக் கொல்வதற்கு

கொடும் திட்டம் வகுத்தனர்

அனைவரும் ஒன்றுசேர்ந்து

அல்லாஹ்வின் தூதரை வெட்டி

அல்லாஹ்விடமே அனுப்பிவிடலாம் என்று

ஆலோசனை சொன்னான் அபூஜஹ்ல்

பல பேர் கைகளால் கொன்றால்

பழி யார்மீதும் விழாது என

பகன்றான் அந்தப் பகைவன்

புத்திசாலித்தனமாக

கும்மிருட்டில் கூடிநின்ற

குறைஷிக் கொலைகாரர்கள்

அப்படியே செய்துவிட

ஆர்வமாய் நின்றுகொண்டிருந்தனர்

அலீ (ரலி) வரலாறு -- 2

 


அலீ (ரலி) வரலாறு -- 2

=================

நாகூர் ருமி

அல்லாஹ்வின் தூதரும்

அன்னை கஜீதாவும்

அல்லாஹ்வைத் தொழுவதை

அலீ பார்த்தார்கள்

அதுபற்றி அண்ணலிடம் கேட்ட அலீ

அன்றே இஸ்லாத்தை ஏற்றார்கள்

அலீ (ரலி) வரலாறு

 


அலீ (ரலி) வரலாறு

==================

நாகூர் ருமி

அபாவுக்குள்ளே பிறந்தீர்கள்

காசிம் நபியின் மடியில் கண் திறந்தீர்கள்

பேரீச்சம் பழம் மசித்து பெருமான் கொடுத்ததும்

வாஞ்சையுடன் வாயைத் திறந்தீர்கள்

முஹமது நபியின் முகத்தைத்தானே

முதன் முதலாகப் பார்த்தீர்கள்!

தூதர் முஹம்மதின் தூய உமிழ்நீர் கலந்த

பேரீச்சம் பழமே உங்கள் முதல் உணவானது!

இசை முரசு நாகூர் ஹனீபா-இஸ்லாமிய பாடல்கள் mp3 free Download



 1Hasbi Rabbi Jallallah.mp3

View


Download


View


View


View

Nagore Hanifa Songs Collections 55     


Download


View





View


View


View

Saturday, June 26, 2021

பாத்திமா நாயகியின் வரலாறு🌹 ஈரக்குலைத் துண்டுக்காக!

 Nazreen Salman

நமக்கு ஒரு படிப்பினை.

பாத்திமா நாயகியின் வரலாறு🌹

ஈரக்குலைத் துண்டுக்காக!

ஒரு நாள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் தமது அருமை மகளார் பாத்திமா ரலி அவர்கள் வீட்டுற்கு வந்தார்கள். வீட்டில் பாத்திமா ரலி அவர்கள் சோகமாக காணப்பட்டார்கள். துடிதுடித்துப்போன நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் எனதருமை மகளே! ஏன் நீங்கள் சோகமாக உள்ளாய்? என்ன நடந்து விட்டது? சொல்லம்மா என்று கேட்டார்கள். கன்களில் கண்ணீர் வடித்தவர்களாக என தருமை தந்தையே! நாங்கள் சாப்பிட்டு 3நாட்கள் ஆகிவிட்டது. உன்ன வீட்டில் எந்த உணவும்  கிடையாது உங்கள் அருமைப் பேரக் குழந்தைகளான ஹஸன் ரலி ஹுஸைன் ரலி யைப் பாருங்கள் பசியால் துடிதுடித்துப் போய் மயக்கமுற்று கிடக்கிறார்கள் என்று சொன்னார்கள்..

கண்கலங்கிய கருனை நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் தனது மகளார் குடும்பத்திற்கு உண்வு கொண்டு வர உடனே வெளியே சென்றார்கள். மதினாவில் நம்க்கு ஒரு கூலி வேலை கிடைக்காதா? என்று நினைத்தவர்களாக நடந்துச் சென்றார்கள். அப்போது வெகுதூரத்தில் ஒருவர் கிணற்றில் தண்னீர் இரைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள் உடனே அல்லாஹ்வை புகழ்ந்தவர்களாய் அத்தோட்டம் சென்று நண்பரே! எனக்கு ஏதாவது வேலை தாருங்கள் நான் செய்கிறேன் என்று கேட்டார்கள். நண்பரே! நானும் வேலைக்காரன் தான் இந்தோட்டத்தின் முதலாளி அங்கு உள்ளார் சென்று வேலை கேளுங்கள் தருவார் என்று கூறினார். சரி என அந்த முதலாளியிடம் சென்று செல்வந்தரே! எனக்கு ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கேட்டார்கள். அப்படியா? நீங்கள் தண்ணீர் இரைத்து ஊற்றுங்கள் ஒருவாளிக்கு 3பேரீச்சம் பழ்ம் தருவேன் என்றார் உடனே நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் தண்ணீர் அள்ளி ஊற்றுவத்ற்காக கிண்ற்றுக்குப் போனார்கள்

Thursday, June 24, 2021

வடகரை A.M தாலிப்(முத்தலிப் )பாடல்கள்

 

A.M தாலிப்


மாயவரம் பக்கம் வடகரையைச்சேர்ந்த மலேசியாவில் தொழில் செய்து வந்தவர் பாடுவதில் மிகவும் விருப்பமுள்ள நல்ல குரல் வளமும் பெற்றவர் 1970,72 களில் தாயகம் வந்த போது இன்றைய இசையமைப்பாளர் AR ரஹ்மான் அவர்களின் தந்தையின் இசை வழியாக சுமார் 12 பாடல்களை பாடி இசைதட்டாக வெளிவந்து பிரபலமானவர் ஆனால் மற்ற பாடகர்களைப்போல் மேடைகளில் பாடியதில்லை

தமிழ் சினிமாவில் கூட 79 , 80 களில் ப்ரியா படத்தில் இளையராஜா ஸ்டீரியோ முறையில் பாடல்களை முதல் முதலில் அமைத்துத்தந்தார் ஆனால் அதற்கு முன்பே இவர் ஸ்டீரியோ முறையில் பாடல்களைப்திவு செய்து மக்கள் மத்தியில் யார் இந்த பாடகர் என்ற கேள்வியை கேட்டு ஆச்சரியப்படுத்தியவர்

அவர்பாடிய பாடல்கள்

Tuesday, June 22, 2021

ஒரு முத்தத்தை விட ஒருவரின் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்த சிறந்த வழி இருக்க முடியாது.

 


ஒரு முத்தத்தை விட ஒருவரின் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்த சிறந்த வழி இருக்க முடியாது. இது அன்பின் வெளிப்பாட்டின் ஒரு அழகான வடிவம், அது ஒருவரின் முகத்தில்  புன்னகையை உருவாக்கும்  என்பது உறுதி. உறவுகளை வலுப்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது மட்டுமல்ல, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், ஏனெனில் இது மன அழுத்தத்தை குறைக்கிறது.

ஒரு முத்தத்தின் இந்த சக்தியைக் கொண்டாடும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22 அன்று அமெரிக்காவில் தேசிய முத்த தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த சிறப்பு நாள் வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக உள்ளது.

Monday, June 21, 2021

கவிஞர் வைரமுத்து >> உடல் எழுத்து


உடல் எழுத்து

அதிகாலை எழு.

ஆகாயம் தொழு.

இருதயம் துடிக்க விடு.

ஈரழுந்த பல் தேய்.

உடல் வேர்வை கழி.

ஊளைச்சதை ஒழி.

எருதுபோல் உழை.

ஏழைபோல் உண்.

ஐம்புலன் பேணு.

ஒழித்துவிடு புகை & மதுவை.

ஓட்டம் போல் நட.

ஒளதடம் பசி.

அஃதாற்றின் எஃகாவாய்.

 

கவிஞர்  வைரமுத்து

Saturday, June 19, 2021

இறைசிந்தனை ஜும்ஆ என்பது ஒன்று கூடுதல் என்பதே!

 


Noor Saffiya


💞 இறைசிந்தனை

                                 🌹جمعة مباركة🌹

ஜும்ஆ என்பது ஒன்று

கூடுதல் என்பதே!

ஜும்ஆ தொழுகை என்பது

ஜனங்கள் ஒன்று கூடி

தொழும் நிகழ்வே!

ஆதம்,ஹவ்வா(அலை)

அரஃபாவிலிணைந்த நாள்!

அதனாலேயும்,

ஜும்ஆ நாள் என்பதுமுண்டு!

ரஹ்மத்தின் வாயில்கள்

திறக்கும் நாள்!

மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்

 


மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்

 

Here is an email that elaborates the difficulties and aspirations of Mu’azzins. Though I am not in agreement with everything, this is worth sharing.

 

மொவ்தீன் (மோதினார் அப்பா)என்றல்லாம் நாம் அழைப்போமே அந்த அப்பா நம்மோடு சிறிது மனம் விட்டு பேசினால் எப்படி இருக்கும்.

 

அஸ்ஸாலாமு அலைக்கும்.என்ன தம்பி எப்படி  இருக்கீங்க என்னை பற்றி உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன இருக்கு எதோ நீங்க கேட்கிறீங்க அதனால் சொல்றேன்.

 

தம்பி இந்த பள்ளியில நான் கடந்த 7 வருசமா இருக்கிறேன்.நான் இந்த ஊருக்கு புதுசா தான் வந்தேன். எனக்கு வட மாவட்டத்தை சேர்ந்த தஞ்சாவூரை சேர்ந்தவன்.நான் செய்யற வேலை எனக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு ஆன வேற வழியில்லை.செய்து தான் ஆகணும்.என்ன தம்பி அப்படி பாக்குறீங்க இறை இல்லத்தின் வேலையை கஷ்டம் நு சொல்றாரேன்னு பாகுரீங்கள ?

 

Tuesday, June 15, 2021

வண்ணத்துப் பூச்சி போல் பறக்க நினைக்கிறேன்

 

சில நேரங்களில் வண்ணத்துப் பூச்சி போல்


பறக்க நினைக்கிறேன்

பல நேரங்களில் மனமும் பட்டாம்பூசசி போல் பறந்து, பறந்து போகும்

போராட்ட மனது திசை அறியாது முதலில் தேங்கி நிற்கும்

மேகத்தின் மோதல் இடியாய் ஒலியெழுப்பி வருவதற்குள் முதலில் மின்னலாய் ஒளி வருவதுபோல்

வண்ணத்துப் பூச்சிகள் பல வண்ண நிறங்களில் பறந்து திரிவதைக் காண

படபடத்த மனதும் போராட்ட மனதை மறந்து பறந்து போகும்

ஓசை யெழுப்பும் காற்றே உன்னோடு யென்னையும் உயரமாக தூக்கிச் செல்

ஓசை எழுப்பாமல் உன்னோடு உயர வருகின்றேன்

இருந்த இடம் மறையும் வரை தூக்கிச் செல்