Thursday, March 31, 2016

ஆசைப்படு - அல்லல் படு

Vavar F Habibullah

சோர்ந்து கிடந்த உடலை பார்த்து மனம் சொன்னது...
இதோ பார்...நன்றாக கண்விழித்து பார்..
உனக்கு
பணம் உண்டு
பதவி உண்டு
புகழ் உண்டு
ஆனால்
எனக்கு.....
நிறைய ஆசைகள் உண்டு.
போதும் நிறுத்து.
நீ ஆசை கொள்வதால்
யாருக்கு என்ன பயன்?
உடல்
கோபத்துடன் கேட்டது.

Sunday, March 27, 2016

இசை நினைவலைகள் நிகழ்வு...!

Hilal Musthafa

நேற்று (26/03/2016) சென்னை AVM அறக்கட்டளை இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில், மறைந்த "இசைமுரசு நாகூர் ஹனீபா நினைவலைகள்" என்ற தலைப்பில் ஒரு நிகழ்வு நடந்தேறியது.
இசைமுரசு மகனார் இசைமுரசொலி நௌஷத் அலியின் இசைநிகழ்ச்சி நிகழ்ந்தது. அப்போது நௌஷத் அலி தன் தந்தையின் வாழ்வில் நடந்த
ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அது எனக்குக் கடந்த கால நிகழ்வுகளை மீட்டெடுத்துத் தந்தது.
இசைமுரசு ஹனீபா அண்ணன் தமிழகச் சட்ட மன்ற மேலவை (M.L.C.)உறுப்பினராக இருந்த காலக் கட்டம்.
சென்னை அண்ணாசாலை அரசினர் தோட்டத்திற்குள் இருந்த
அன்றைய தினம் "புதிய எம். எல். ஏ.ஹாஸ்டல்" என அழைக்கப்பட்ட
அடுக்கு மாடிக் கட்டடத்தின் 6 - வது தளத்தில் ஒரு அறை இசைமுரசுக்காகச் சட்டமன்றம் ஒதுக்கி இருந்தது. சென்னைக்கு இசைமுரசு வரும் வேளைகளில் அங்குதான் தங்குவார். பதவி இல்லாத காலத்தில் சென்னை எழும்பூர் கென்னத் லேனில் இருக்கும் லட்சுமி மோகன் லாட்ஜில் தங்குவார்.
ஒருநாள் காலை இசைமுரசின் சட்ட மன்ற ஹாஸ்டல் அறைக் கதவு தட்டப்பட்டது.அறைக்குள் இசைமுரசு, நௌஷத் அலி, இன்னும் சிலர் இருந்தனர். நௌஷத் அலி அறைக் கதவைத் திறக்கிறார். அறைக்கு வெளியே மெல்லிய வடிவத்தில் கறுத்த மேனியில் ஒரு இளைஞர் நிற்கிறார்.
வந்தவர், நௌஷத் அலியிடம் "அய்யாவைப் பார்க்கணும்" என்கிறார்.
தன் பெயரை ராசையா எனச் சொல்கிறார்.

அறிவுக்கூர்மையால் நிகழும் என நினைத்தால்

 உங்களின் அத்துனை அபிலாசைகளிலும் வீசப்பட்ட திராவகத்திற்கு எவரையும் வருந்தி என்ன செய்வது; ஒருவரைப்பற்றிய நம்பிக்கையையும் அதீத பேராசை எண்ணத்தையும் உங்களுக்கு நீங்களே உற்பத்தி செய்துக்கொண்டு, பின் நேசித்தவர்களின் அதிருப்தி செய்கையில் உங்கள் கைகளையும் மூளையையும் பிசைந்துக்கொண்டிருப்பதில் எந்தவொரு பயனுமில்லை; உங்களுக்கு உகந்தவர் ஆகாதவர் என்பதையெல்லாம் இறைவனால் தீர்மானிக்கப்பட்ட விதிகள் எடுத்து இயம்பும்; அவன் இயற்றிய வழியில் நடைப்போடுவது மட்டுமே நம் இயல்பாய் இருக்கும் என்பதை உணர்ந்து இடையில் ஏற்படும் அனைத்து மனமாச்சர்யங்களுக்கும் அதிகப்படியான எந்தவொரு உணர்ச்சி குழம்புகளை வெளியிடுவது அவசியமில்லாதது;

 பத்து நபர்கொண்ட பாலைவனத்தின் பிரயாணத்தில் ஆட்கொண்ட இடியும் மின்னலும் அவர்களை அச்சுறுத்த, எதோ அதீத பாவத்தை எம்மில் எவரோ செய்தவர் உண்டென பிரயாணக் கூட்டத்தில் கூற, அதோ அந்த ஈச்ச மரத்தின் அடியில் ஒவ்வொருவராய் அங்கு நிற்க வேண்டும், தவறிழைத்தவருக்கு இறைவன் இடியையும் மின்னலையும் இறக்கி மற்ற நபரின் பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பான் என ஏகமுடிவுடன் காட்சிகள் அரங்கேறியது; ஒவ்வொருவராய் செல்ல, ஒன்பது நபர்களும் தப்பித்துக்கொள்ள ஒருவர் மட்டுமே மிச்சம்; ஒன்பது நபர்களும் ஒற்றை நபரை பார்த்து உங்கள் தவறுக்கான தண்டனை பெற்று எங்கள் பயணத்தை தொடரவிடுங்கள் என்றுக்கூற...

Thursday, March 24, 2016

அரச கட்டளை

நான் இறந்தால், உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் என் சவப்பெட்டி அருகில் அமர வேண்டும்.
நான் பாதுகாத்து வைத்துள்ள விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள் வழிநெடுகிலும் தூவப்பட வேண்டும்.
என்னை கிடத்தியிருக்கும் சவப்பெட்டியின் இருபுறமும் என் கைகள் வெளியில் தெரியும் வண்ணம் மேல் நோக்கி விரித்து வைக்கப்பட வேண்டும்.
உலகின் பாதிக்கும் மேலான நிலபரப்பை தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து ஆட்சி புரிந்த மாவீரன், அலெக்சாண்டரின் கடைசி ஆசைகளை கேட்டு அவனது தளபதிகள் திகைத்தனர்.
அவனது அப்போதைய வயது முப்பத்திரண்டு.

Tuesday, March 22, 2016

ஒருவர் மூலம் ஒருவர் நண்பர்களாக்கப்படுவோம்

ஒருவர் மூலம் ஒருவர்
நண்பர்களாக்கப்படுவோம்
முகநூல் வாயிலாக
முகம் நேரில் காணாவிடினும்
முகப்பு பக்கமே ஆறுதலாகும்

அவ்வழி வந்தவர்
ஜனாப் முஹம்மது அலி அவர்கள்
நேரில் கண்டதில்லை
காண நாடுகிறேன்
பேசிக் கொண்டதில்லை
பேச விழைகிறேன்

அவர் கவிஞர்களை
கொண்டிருப்பினும்
கவிஞர்கள் யாவரும்
அன்னாரை சார்ந்தவர்கள்

விமர்சிப்பவர்கள் ரசிகர்கள்
இல்லையேல்
கவிதையும் இல்லை
கவிஞர்களும் இல்லை

முகநூல் நண்பரில் ஒருவராக
அன்னாரைப் பெற்றமைக்கு
நான் மட்டுமன்று
என்
முகநூல் பக்கமே மகிழ்கிறது.....

என்ன தலைப்பு வைப்பது? -சுமஜ்லா.

என்ன தலைப்பு வைப்பது? (அவசியம் படியுங்கள்-Must Read)
எத்துணை பேர் இந்த பதிவை, பொறுமையாக, முழுவதும் படிப்பீர்களோ தெரியவில்லை.

கைக்குழந்தையுடன் இருபத்தொரு வயது இளம்பெண். அன்பான அனுசரணையான கணவர். தாய் பறவைகளின் நிழலில் இருந்து விலகி அப்போது தான் தங்கள் சொந்த சிறகை விரித்து பறக்க ஆரம்பித்து இருந்தனர். சந்தோஷத்துக்கு குறைவில்லாத அருமையான தாம்பத்யம்.

பாபரி மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6 இந்தியாவின் கறுப்பு தினம். டிசம்பர் 7, 1997 இவர்கள் வாழ்வின் கறுப்பு தினம். அன்று காலை தன் ஒன்னரை வயது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றி வந்தார். ஞாயிற்று கிழமை ஆதலால், அன்று வீட்டில் இருந்தார். மனைவியை சீண்டி, கேலி பேசிக் கொண்டு சந்தோஷமாக இருந்தவர், திடீரென்று, தலையில் கைவைத்தபடி அமர்ந்து விட்டார். பேச்சு குழற ஆரம்பித்தது.

Monday, March 21, 2016

சிட்டுக்குருவி - நீ

முஹம்மது முஸம்மில்.

சிட்டுக்குருவி - நீ
சிறகடித்துப் பறப்பாய்
சிட்டாய் பறப்பாய்
சிறகொடித்ததாரு - உன்
இனத்தை அழித்ததாரு
வீட்டின் மேலே
ஏதோவொரு மூலையில்
கூடுகட்டி குஞ்செடுப்பாய்
கண்டோம் அதில் ஓரழகு - இனி
கண்டிட இயலுமோ அப்பேரழகே
நெற்பருக்கை நீயெடுக்க
நெல்மணிகள் சிதறியிருக்கும்
கூட்டத்தோடு வந்திடுவாய்
அதனை - நீ
பகிர்ந்திடுவாய்
மின்சாரம் செல்லும் கம்பியும்
உனக்கு எமனாகவில்லை
கொளுத்தும் வெயிலும்
உன்
உயிர் பறிக்கவில்லை

Sunday, March 20, 2016

கூடற்கவிதைப் பொழுதுகள்..!!

ஒரு விடுமுறை தின நண்பகலில்
திட்டமிடப்படாத கலவிக்குப் பின்
தானும் சப்தமின்றிக் குளித்துவிட்டு
குளித்த தடயமின்றி கணவனையும் வெளிவரப் பணிக்கும்
கூட்டுக்குடும்பக் காதல் மனைவியின் கெஞ்சலில் மலர்கிறது
கோடையைக் குளிர்விக்கும் ஒரு மலர்க்கவிதை
ஈரத்தலையை முக்காடிட்டு மறைத்து
மெல்ல ஹாலைக் கடந்து சமையலறையேகுமவள் 
நிம்மதிப் பெருமூச்சுவிட்டு ஆசுவாசமாகும் சமயம்
நனைந்த ரோமநுனிச் சிறுதுளிகளில் சொட்டுகிறது 
நண்பகல் வெறுமையைப் போக்குமொரு குளிர்க்கவிதை

Tuesday, March 15, 2016

நினைத்துப் பார்க்கிறேன்

- Vavar F Habibullah

 1980 களின் துவக்கத்தில்....
எம்ஜிஆர் ஆட்சி தமிழகத்தில் முதன்முறையாக அமைந்த நேரம். அவரது முதல் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர், எம்ஜிஆரின் வலதுகரமாக திகழ்ந்த திருச்சியார் என்ற திருச்சி ஆர்.சவுந்தரராஜன்.பின்னாளில் எம்ஜிஆரின் கனவுத் திட்டமான குழந்தைகள் சத்துணவுத்திட்டத்துறை இலாகாவும் - இவர் பொறுப்பின் கீழ் வந்தது.

எம்ஜிஆர் தலைவராகவும், திருச்சியார் துணைத் தலைவராகவும் பொறுப்பு ஏற்றனர்.
ஜெயலலிதா, தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன், விஜயா ஸ்டுடியோ அதிபர் நாகி ரெட்டி, லடசுமி மில்ஸ் அதிபர் தேவராஜுலு,
பிஎஸ்ஜி குழுமத்தின் தலைவர் ஜி. வரதராஜுலு எம்.பி, மேலும் குழந்தை மருத்துவ நிபுணர் என்ற முறையில் என்னையும், குழந்தைகள் சத்துணவுத்திட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்தார் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் தலைமையில் மாதந்தோறும் நடைபெறும் இந்த கருத்தரங்கில் சில நேரங்களில், மாவட்ட ஆட்சித்தலைவர்களும் கலந்து கொள்வதுண்டு.

Tuesday, March 8, 2016

வெள்ளி பூத்தே விடியும் வானம்மா

நான் எழுதிய என் முதலாவது கவிதை இது
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வெள்ளி பூத்தே விடியும் வானம்மா 
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
பத்து மாதம் சுமந்தே என்னைப்
பரிவுடன் வளர்த்தவள் அன்னை!
இத் தரை தன்னில் இவளருந் தியாகம்
எழுந்தே தொட்டிடும் விண்ணை !
கண்ணே ! என்று இமையைப் போலவே
காத்திருப்பாள் இவள் நிதமே !
பொண்ணே என்றும் பூவே என்றும்
பொழியும் அன்போர் விதமே !
ஈயோடெறும்பு எதுவும் அணுகா(து)
இனிதாய் வளர்த்த உள்ளம்
தோயும் அன்புச் சுடராய் என்னைத்
துலங்க வைத்தாய் உய்வோம் !
பள்ளிப் பாடம் சொல்லித் தந்தே
பண்பாய் அனுப்பி விடுவாள்

Monday, March 7, 2016

பிரிகின்றேன் கண்மணி

எப்போதும் இல்லாத அளவில் இப்போதெல்லாம் வெளிநாட்டுப் பயணங்கள். வளைகுடா இழுக்கிறது. அமெரிக்கா அழைக்கிறது. சிலருக்கு ஆசை துரத்துகிறது; பலருக்கோ ஏழ்மை விரட்டுகிறது. இம்மாதிரிப் பயணங்களால் வாழ்வில் பிரிவுத்துயர் பெருகிப் பெருகி திட்டமிட்ட விபத்துகளில் அதுவும் ஒன்றாகிவிடுகிறது. இக்கவிதை அம்மாதிரி ஒரு பிரிவின் துயரை இங்கே விவரிக்கிறது.
பனிமலரே புது நிலவே
பருவமழைத் தேன் துளியே
தனிமரமாய் நீ நின்று
தவிப்புடனே எனை நோக்க
கனிவான உன் முகத்தைக்
கண்ணீரில் மூழ்கவிட்டு
வெண்ணீரில் விழும் புழுவாய்
வெளிநாடு புறப்பட்டேன்

Sunday, March 6, 2016

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் நிஷா மன்சூர்

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில்  நிஷா மன்சூர்
ALHAJ,  M.I.MANSUR ALI., M.A., (Socialogy)

அல்ஹாஜ், மன்சூர் அலி M.A., ( நிஷா மன்சூர்) அவர்கள்  இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கவிஞர்நிஷா மன்சூர் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

Saturday, March 5, 2016

கவிஞர் நிஷா மன்சூருடன் முஹம்மட் சர்ஜான் நேர்காணல்


கவிஞர் நிஷா மன்சூருடன் முஹம்மட் சர்ஜான்  நேர்காணல்
கலை உலகம்  Daily Ceylon  -  கவிஞர் நிஷா மன்சூருடன் முஹம்மட் சர்ஜான்  நேர்காணல் -


Thursday, March 3, 2016

கப்பல் - விமானம் - பயணம் - திரைகடல் - திரவியம் - பாலை - துயர்

விமானம் மேலே மேலே
ஏறிக்கொண்டிருந்தது
மனசு கீழே கீழே
விழுந்துகொண்டிருந்தது

கைக்குழந்தையுடன்
விமான நிலையத்தில்
இன்னும் கையசைத்துக்
கொண்டிருக்கிறாள்
மனைவி

*

Wednesday, March 2, 2016

"கும்தலக்கடி"க்கு என்ன அர்த்தம்?

"உட்டாலக்கடி"க்கு விளக்கம் கொடுத்தீர்கள். "கும்தலக்கடி"க்கு என்ன 

அர்த்தம்? என்று ஒரு இம்சை நண்பர் இன்பாக்ஸில் மெஸேஜ் அனுப்பி 

இருக்கிறார்.

கடைசியில் நம் நிலைமை இப்படி ஆகி விட்டதே என்று நொந்துப் போய் விட்டேன். வேறு வழியில்லை சொல்லித்தான் ஆகவேண்டும். Yembal Thajammul Mohammad அவர்களும் ரசித்துத்தான் ஆக வேண்டும்.
சென்னை செந்தமிழில் “கும்தலக்கடி” சொற்பதமும் இன்றிமையாத ஓர் அங்கம். "Ghoomtha" என்றால் சுழலுகின்ற/ சுற்றுகின்ற என்று பொருள். "லக்கடி" என்றால் கம்பு/கழி.. வெரி சிம்பிள்.
“கும்தா +லக்கடி” என்றால் சுழலுகின்ற கழி என்று பொருள்.
ரஜினிகாந்த் ஒரு படத்தில் “கண்ணா..! நான் சுத்திச் சுத்தி அடிப்பேன்..!” என்பாரல்லவா …? அதேதான்.

தலைத்துணி - ஹிஜாப் - பர்தா - அபாயா

அன்புடன் புகாரி
 பர்தா என்றால் பெர்சியன் மொழியில் திரைச்சீலை என்று பொருள். ஆனால் அதற்கு இன்னொரு பொருளும் உண்டு. அதுதான் முஸ்லிம் பெண்கள் அணியும் மேலங்கி. அதையே அரபு நாட்டில் அபாயா என்றழைப்பார்கள்

பர்தா என்பது உடையல்ல உடைக்கு மேல் அணியும் ஓர் அங்கிதான்.

தமிழ் முஸ்லிம்கள் ஊருக்கு ஊர் வேறு மாதிரி இருந்தார்கள் இந்த பர்தா விசயத்தில்.

தஞ்சாவூரின் கடலோரப் பகுதிகளில் அத்தனை முஸ்லிம் பெண்களும் கண்டிப்பாக துப்பட்டி என்னும் வெள்ளை நிற மேலங்கியை அணிவார்கள். இதிலும் விரிதுப்பட்டி கூசாலி துப்பட்டி என்று இருவகை உண்டு.

விரி துப்பட்டி என்பது அளவில் சிறியது. மூட்டப்படாமல் ஒரு வேட்டியைப் போல விரிந்து இருக்கும். கூசாலி துப்பட்டி என்பது அளவிலும் பெரியது மூட்டப்பட்டும் இருக்கும்.

Tuesday, March 1, 2016

நாங்களும்தானே காலம்காலமாய் உழைக்கிறோம் ...

 J Banu Haroon

நாங்களும்தானே காலம்காலமாய் உழைக்கிறோம் ...
எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி வறுமையே வாழ்க்கையா இருக்கு ஆச்சி ..? -ஒரு பெண் என்னிடம் கேட்டாள் .

எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை ...வருத்தமாக தலை குனிந்து யோசிக்க முடியாமல் நிமிர்ந்தேன் .அவளின் நகைகள் என் கண்களை உறுத்தியது ...

''இதெல்லாம் என்ன ?..'என்றேன் .

''அத்தனையும் கவரிங் ஆச்சி !...''

''''கவரிங் லே ஏன் காசை போட்டு வேஸ்ட் பண்றே ?..''

''இருக்கறவங்க பவுன் போட்டுக்கறீங்க ..இல்லாதவங்க எங்களுக்கு ஆசைக்கு இதுதானே ஆச்சி ?..''

''நான் என்னிக்காவது நகை போட்டு பாத்திருக்கியா ?..''

உட்டாலக்கடி

“இந்த உட்டாலக்கடி வேலையெல்லாம் நம்ம கிட்ட வேணாம்”. இப்படி பலரும் எச்சரிப்பதை நாம் கேட்டிருக்கிறோம்.

“உட்டாலக்கடி” என்ற தத்துவச் சொல்லுக்கு என்னதான் அர்த்தம் என்று 1.36 கிலோ எடையுள்ள மூளையை பலரும் போட்டு கசக்கக் கூடும். இதோ சொல்லுகிறேன். ஆனால் கொஞ்சம் பொறுமை தேவை.

சென்னைத் தமிழின் பிரதான அங்கம் இந்த “உட்டாலக்கடி” சொற்பதம்.

“உட்டாலக்கடி கிரி கிரி, சைதாப்பேட்டை வடைகறி” என்ற பழமொழி மிகவும் பிரசித்தம். இந்த கிரி கிரி யார்? அழகிரியா அல்லது வி.வி.கிரியா என்று எனக்குத் தெரியாது. ஆனால் சைதாப்பேட்டை வடைகறியைப் பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும்.

சைதாப்பேட்டையில் குமரன் வைத்திருக்கும் 65 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த “மாரி ஹோட்டல்” வடைகறிக்கு பிரசித்தமானது.