Wednesday, January 7, 2015

அம்மா அம்மா நீ எங்க அம்மா/ Amma Amma Song lyrics | Velai Illa Pattadhaari

Amma Amma Song Lyrics அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்கு யாரு அம்மா
தேடிப் பார்த்தேனே காணோம் உன்ன
கண்ணாம்பூச்சியே வா நீ வெளியே

தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும்
நான் பாடும் பாட்டுக்கு தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்

நான் தூங்கும் முன்னே நீ தூங்கிப் போனாய்
தாயே என்மேல் உனக்கென்ன கோபம்
கண்ணான கண்ணே என் தெய்வப் பெண்ணே
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்
ஐயோ ஏன் இந்த சாபம்
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்
பகலும் இரவாகி பயமானதே அம்மா
விளக்குன் துணை இன்றி இருளானதே
உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
தனிமை நிலையானதே

நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு
வான் எங்கும் வண்ணம் பூவெல்லாம் வாசம்
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு
நீ என் பெருமையின் எல்லை
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை

ஊரும் பெரிதில்லை கலங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் கண் முன்னே
காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் துணை சேரும்
மீண்டும் நான் உன் பிள்ளை

எங்க போனாலும் நானும் வருவேன்
கண்ணாடி பாரு நானும் தெரிவேன்

கண்ணே நீயும் என் உயிர் தானே

நான் பாடும் தாலாட்டு நீ தூங்க காதோரம் என்றென்றும் கேட்கும்
Po Indru Neeyaga - Velai Illa Pattadhaari

No comments: