Monday, June 30, 2014

யார் அதைச் செய்தது!

யார் அதைச் செய்தது!
யார் அதைச் செய்தது என்பதை
யாரும் அதைக் கண்டு கொள்ளவில்லை
யார் எப்படிப் போனால் நமக்கென்ன
யாவரும் எதைப் பற்றியும் சிந்திக்காமல் கடந்து போனார்கள்

'நரி வலம் போனால் என்ன.,
இடம் போனால் என்ன,
மேலே விழுந்து புடுங்காமல் இருந்தா சரி. '

ஹிப்னோஸிஸ் கற்போம்-பகுதி1!

ஹிப்னோஸிஸ் கற்போம்-பகுதி1!
உடலியல் (Physiology) அல்லது அறிவியல் (Science) கண்ணோட்டத்தில் ஹிப்னோஸிஸ் (HYPNOSIS) - டாக்டர் யூசுஃப் ஆதம்!

ஹிப்னோசிஸ் ஒரு மாயாஜாலம் இல்லை; அது ஒரு உளவியல் மருத்துவம்! மனோதத்துவ மருத்துவ துறையின் சமீபக்காலத்திய மிக முக்கிய அறிவியல் கண்டுப்பிடிப்பு!

அதைப்பற்றி பல மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்தலில், "ஹிப்னோசிஸ் என்பது மனிதனின் சராசரி உடலியல் செயல்களில் ஒன்றுதான். ஒவ்வொரு நாளும்  மனிதனின் மூளையின் இயக்கம்  விழிப்பு நிலைக்கும், தூக்க நிலைக்கும் மாறி மாறி  வரும். இது தினந்தோறும் நடக்கும். இரு உடலியல் நிலைகளான விழிப்பு நிலை, ஆழ்ந்த தூக்க நிலை இவைகளுக்கு நடுவில் உள்ள ஒரு சிறு நிலையே ஹிப்னோசிஸ் என்ற அறிதுயில்" என்கிறார்கள்.


மூளையின் செயல் ஆற்றலை மதிப்பிட மருத்துவர்கள், EEG என்ற Electro Enchepalo Graphy (EEG) யைப் பயன் படுத்தி அதன் ஓட்டத்தை அளவிடுகிறார்கள். EEG என்பது ஒரு மின் மருத்துவக்கருவி. இது மனிதமூளையின் நரம்பு செல்களில் (Neurons) உருவாகக்கூடிய Electric potential (மின் அழுத்தம்)களின் மாற்றங்களை அளவிடக்கூடியது. இதைக் கொண்டு மூளையின் வேலைத்திறனையும், இயக்கங்களையும், தூக்கத்தின் நிலைகளையும் அளவிடலாம். பொதுவாக EEGல் பதியக்கூடிய Electro Potential Waveகளை நான்கு விதமாக பிரிக்கிறார்கள். அவை வருமாறு:

சவுதி அரேபியாவில் நோன்பு மாதம் சிறப்பாகச் செல்லும்.

சவுதி அரேபியாவில் நோன்பு மாதம் சிறப்பாகச் செல்லும். பெரும்பாலான அலுவலகங்களில் அதிகப்படியாய் நாள் ஒன்றுக்கு ஆறுமணி நேரம் பணி செய்தால் போதும்.

சூரிய உதயத்திற்கு முன் நோன்பு வைக்க வேண்டும். அதன்பின் நீர் கூட அருந்தக்கூடாது. சூரிய அஸ்தமனத்திற்குப்பின் நோன்பு திறக்க வேண்டும். பின் எது வேண்டுமோ சாப்பிடலாம்.

சவுதி அரேபியாவில் கோடை காலத்தில் சூரிய உதயம் முன்பே நிகழ்ந்துவிடுவதால், அதிகாலை மூன்று மணிக்கே நோன்பு வைக்க வேண்டி வரும்.

நோன்பில் பெற்ற நல்ல வழிகள் - ரமலான் நல் வாழ்த்துகள்

வெய்யிற் காலம் வந்து போகும்
வேடந் தாங்கல் பறவைக் கூட்டம்
மெய்யின் மாதம் மலர்ந்த பின்னர்
வேடந் தாங்கும் பக்தர் கூட்டம்

உதயம் தொடங்கி அந்தி வரைக்கும்
உணவும் நீரும் வேண்டா(து) ஒதுக்கல்
இதயம் கொள்ளும் இறைமை நினைவை
இருந்தும் நாவில் ஏனோ பொய்கள்?

நோன்பில் வந்த ஞான வேதம்
நன்றாய் ஓத நன்மை கற்போம்
நோன்பில் மட்டும் ஓதி விட்டு
மூடி வைத்தல் யாரின் குற்றம்?

இலங்கையில் இஸ்லாமியர்கள் ஏன் தாக்கப்படுகிறார்கள்?

“இலங்கையில் மதங்களுக்கு இடையேயான பதட்டநிலை பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. முஸ்லிம், இந்து, பவுத்த மதங்களை சேர்ந்த மக்கள் ஒருவருக்கொருவர் அவநம்பிக்கையோடு இருக்கிறார்கள்” அமெரிக்க காங்கிரஸுக்கு அந்நாட்டு அரசாங்கம் கடந்த ஆண்டு இறுதியில் சமர்ப்பித்த அறிக்கை ஒன்றில் இடம்பெற்றிருந்த வரிகள் இவை. இலங்கையில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஆங்காங்கே நடந்த சிறு தாக்குதல்கள், பவுத்த பிக்குகளால் இஸ்லாமிய பள்ளிவாசல்கள் அழிப்பு என்று நடந்த சம்பவங்களை அவ்வறிக்கையில் எடுத்து சொல்லப்பட்டிருந்தது. இலங்கையில் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் மதமோதல்கள் எழலாம் என்றும் கவலையோடு அமெரிக்க அரசு சுட்டிக் காட்டியிருந்தது.

Sunday, June 29, 2014

மர்மட்யூக் பிக்தால்

                                                                மர்மட்யூக் பிக்தால்
பெயர் மர்மட்யூக் பிக்தால்

பிறப்பு 1875

இறப்பு 1936

தந்தை சர்லஸ் கிரேய்சன் பிக்தால்

தாயார் மேரி-ஒ-பிரேயின்

சாதனை அல்குர்ஆனுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு கொடுத்தது

பிக்தால் என்பவர் யார்? முன்னுரை

பிக்தால் அவர்களின் முழுப்பெயர் மர்மட்யூக் பிக்தால் இவர் கிருஸ்தவ தம்பதியினருக்கு பிறந்தவர். பிக்தால் ஒரு நாவலாசிரியர் மட்டுமல்லாமல் பத்திரிக்கை நிறுபராகவும், தலைமை ஆசிரியராகவும், அரசியல் தலைவராகவும், மார்க்க மேதையாகவும் இருந்தார்.

Saturday, June 28, 2014

சும்மா இருடா

சும்மா சும்மா என்னைச்
சும்மா இரு என்கிறாய்
சும்மா சொல்கிறாயா இல்லை
நிசமாகத்தான் சொல்கிறாயா

சும்மா இருப்பதென்பது
சும்மா வருமா அம்மா?

ம்ம்...
கட்டிக்கொண்டாயிற்று
என் கைகளை
பொத்திக்கொண்டாயிற்று
என் வாயை
மூடிக்கொண்டாயிற்று
என் கண்களை
அடைத்துக்கொண்டாயிற்று
என காதுகளை
ஒதுங்கிக்கொண்டாயிற்று
என் தனிமையில்

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 2

வித்தியாசங்களே வலிமையானவை !

சின்ன வயதில் நிறைய பாட்டிக் கதைகள் கேட்டிருப்போம். அரசகுமாரியின் உயிரை ஏழு மலை, ஏழு கடல் தாண்டி ஒரு குகையில் கிளியின் உடலில் ஒளித்து வைத்திருப்பான் அரக்கன். அந்த அரக்கனைக் கொன்று இளவரசியை மீட்பான் இளவரசன். பிரம்ம பிரயர்த்தனத்துடன் இளவரசன் நடத்தும் வீர தீரப் போராட்டங்கள் மெய் சிலிர்க்க வைக்கும். குடும்ப வாழ்க்கையும் இத்தகைய ஒரு மிகப்பெரிய சவாலான, கஷ்டமான, போராட்டமான விஷயம் என்று தான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அப்படியல்ல. பெரிய பெரிய போர்களிலல்ல, சின்னச் சின்ன விஷயங்களில் தான் குடும்ப வாழ்க்கையின் வெற்றியின் ரகசியம் இருக்கிறது.

ஒரு மிகப்பெரிய தேரின் வலிமை சின்ன அச்சாணியில் இருக்கிறது. இந்த காலத்தில் தேரும் அச்சாணியும் மறந்து போயிருக்கும். வேண்டுமானால் ஒரு காரின் பயணம் அதன் உள்ளே உலவும் சில துளி பெட்ரோலில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். என்ன தான் ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்து போஸ் ஸ்பீக்கர் வாங்கி மாட்டினாலும், பெட்ரோல் இல்லாத வண்டி ஓடாது. எனவே இது சின்ன விஷயம் தானே, முதல்ல பெரிய விஷயங்களைக் கவனிப்போம் என்று இருந்து விடக் கூடாது. அடிப்படை விஷயங்களில் கவனம் தேவை !

முகமது அலி - சிறப்பு பகிர்வு

சில மனிதர்களை பற்றி எழுதுகிற பொழுதே ஒரு சிலிர்ப்பு தோன்றும் . அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தவர் முகமது அலி. காசியஸ் க்ளே என்கிற பெயரோடு பிறந்த இவர் பிறப்பால் அமெரிக்க ஆப்ரிக்கர். அப்பா பில் போர்டுகளுக்கு படம் வரைந்த கொண்டு இருந்த எளிய மனிதர்'க்ளேவாக குத்துச்சண்டை களத்துக்குள் புகுந்த இவர் அங்கே பெற்றதெல்லாம் வெற்றி வெற்றி தான்

தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை குவித்த இவர் ஒரே பஞ்ச்சில் எதிராளிகளை வீழ்த்திய வரலாறெல்லாம் உண்டு. "பட்டாம்பூச்சியை போல மிதந்திடுங்கள் ;
தேனீயைப்போல கொட்டிவிடுங்கள் !" என்கிற அவரின் வாசகம் அமெரிக்கா முழுக்க எதிரொலித்தது. "I'M THE GREATEST !" என்று அவர் சொன்ன பொழுது ரசிகர்களும் "ஆமாம் ! ஆமாம் "என்று கொண்டாடினார்கள்.

Thursday, June 26, 2014

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 1

நம்பினால் நம்புங்கள், கணவன் மனைவியரிடையே உள்ள பிரச்சினைகளின் மையம் இந்த விஷயம் தான். “எனக்காக அவரு டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டேங்கறாரு” !

ஆண்களுடைய விருப்பங்களும் பெண்களுடைய விருப்பங்களும் தனித்தனியானவை. ஆண்களுக்கு கிரிக்கெட் மோகம் இருக்கும் போது, பெண்களுக்கு சீரியல் மோகம் இருக்கும். ஆண்கள் தூங்கி ஓய்வெடுக்க விரும்பும் போது பெண்கள் பேசிக்கொண்டிருக்க விரும்புவார்கள். ஆண்களுக்கு ஷாப்பிங் அலர்ஜியாய் இருக்கும். பெண்களுக்கோ அது தான் எனர்ஜியாய் இருக்கும். இப்படி மாறி மாறி இருக்கின்ற ரசனைகள் ஒரு கூரையின் கீழ் வந்து சேர்வது தானே குடும்பம் ! இந்த இடத்தில் ரசனைகள் முட்டிக் கொள்ளாமல் எப்படி இணைந்து பயணிக்கின்றன என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.

Wednesday, June 25, 2014

அனுகூல சத்ருக்கள், பீவேர்!


சரி, சரி, ஒத்துக் கொள்கிறேன். மோடி இப்போது வெறும் பிஜேபி தலைவர் அல்ல, இந்தியாவின் பிரதமர். எனவே அவருக்கு கிடைக்கும் புகழ் எல்லாம் நமது நாட்டுக்கு கிடைத்த புகழ். அதனால் நமக்கு கிடைத்த புகழ்.

இருந்தாலும்...

அட, ’ட்விட்டரில் அதிகமான ரசிகர்களை கொண்ட உலகின் 5வது தலைவராக மோடி திகழ்கிறார்’ என்று சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபமும் கிடையாது.
‘வெள்ளை மாளிகையை மோடி முந்திவிட்டார், பின்னுக்கு தள்ளிவிட்டார்’ என்று அறிவிக்கும் போதுதான் கிர்ர்ரடிக்கிறது.

கம்பேரிங் ஆப்பிள்ஸ் வித் ஆரஞ்சஸ் அபத்தம் என்பார்கள். இரண்டும் பழங்கள்தான். ஆனாலும் வெவ்வேறு குணங்கள். நீங்கள் வெள்ளை மாளிகையை ஒரு கருப்பு மாளிகையோடு ஒப்பிடுங்கள், தப்பில்லை. அறிவாலயத்தோடு ஒப்பிட்டாலும் ஆட்சேபம் இல்லை. இரண்டும் கட்டடங்கள்.

இது ஒரு 'ஸ்பெசல் மாம்பழம் ' சுவையோ! சுவை!

மாம்பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்
மாம்பழத்தில் பல வகை உண்டு
மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது.
மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது.
இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் அதனை அளவோடு சாப்பிட வேண்டும்
அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு வந்து விடும்
மாம்பழத்தில் இனிப்பும் அதிகமாக இருப்பதால்
மாம்பழத்தை  சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வார்கள்

மயிலாடுதுறை பாதிரியார் ஒரு புது வகை மாம்பழத்தை உருவாக்கினார்
அதனால் அந்த மாம்பழத்திற்கு' பாதிரி மாம்பழம்' என்ற பெயர் வந்து விட்டது 
இது மயிலாடுதுறை பக்கத்தில் மட்டும் உற்பத்தி செய்யப் படுகின்றது
' பாதிரி மாம்பழம்'  மிகவும் சுவையானது .

எனது நண்பர் வாலாஜாபாத் தோட்டத்தில் ஒரு புது மாம்பழம் இருந்தது .
அதிலிருந்து பல மாம்பழங்களை எனது நெருங்கிய நண்பர் திரு .தாஸ் எனக்கு தந்தார்
அதனை எங்கள் ஊர் நீடூருக்கு கொண்டு வந்து சாப்பிட்ட பின் அதன் கொட்டைகளை
எரு குழியில் போட்டு விட்டோம்
தூக்கி எறிந்தது முளை விட்டு செடியாகி பெரிய மரமாக வளர்ந்து நிறைய பழங்களைத் தருகின்றது

இது ஒரு 'ஸ்பெசல் மாம்பழம் '
இதன் சுவையோ தனி சுவை .
புளிப்பு இருக்காது .
இதனை பலருக்கு கொடுத்தேன் .அதனை சாப்பிட்டவர்கள் அனைவரும் மகிழ்ந்து தங்களுக்கு ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டுமென விரும்புகின்றார்கள் .இம்மாதிரி  'ஸ்பெசல் மாம்பழம் '  இப் பக்கமே கிடையாது



Saturday, June 21, 2014

பெட்ரோல் விலை 100ஐ தாண்டினால்...


இராக்கில் உள்நாட்டு போர் ஓய வேண்டும் என்று பிரார்த்திப்போம். உலகத்தில் எங்கே யார் நாசமாக போனாலும் அது நம்மையும் பாதிக்கிறது. கம்ப்யூட்டரும் செல்போனும் வந்த பிறகு உலகம் சுருங்கிவிட்டது என்று சொல்லும் கதையல்ல இது. இந்தியா இறக்குமதி செய்கிற ஏதோ ஒரு முக்கிய பொருள் பற்றாக்குறை ஆவதால் உண்டாகும் பாதிப்பு.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் ஆகாது. ஈரான் அணுகுண்டு தயாரிப்பதாக அமெரிக்காவுக்கு சந்தேகம். அதை தடுக்க அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா. ஆனால் ஈரானில் இருந்துதான் மிக அதிகமான கச்சா எண்ணெயை நாம் இறக்குமதி செய்கிறோம். டாலருக்கு பதிலாக ரூபாயாக கொடுப்பதை ஈரான் வாங்கிக் கொள்கிறது. மற்ற நாடுகள் சம்மதிப்பதில்லை. ஈரான் எண்ணெய் அதிகம் இறக்குமதி செய்ய அதுவும் ஒரு காரணம். அமெரிக்கா அதை தடுத்தது. பெரியண்ணனை எதிர்க்க முடியுமா? ஈரானிடம் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து அப்புறம் நிறுத்திக் கொள்கிறோம் என்று இந்தியா சொன்னது. போனால் போகிறது என்று அமெரிக்கா ஒத்துக் கொண்டது. அதற்கும் நம்மிடம் சில காரியங்கள் ஆக வேண்டியிருப்பதால்.

தீமைகளின் தகாத உறவுகள்..!


ஒரு மனிதக் கொலை மிகக் கொடூரமான நிலையில் நடந்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்ட அம்பத்தூரில் அந்த மாவட்டத்தின் இந்து முன்னணி அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த சுரேஷ் குமார்தான் இந்த படுகொலைக்கு ஆளாகி இருக்கிறார்.

சுரேஷ் குமார், அவரின் அலுவலகத்தின் முன்னால், இரவு 10 மணி அளவில் கொலை செய்யப்பட்டு உள்ளார். சுரேஷ் குமார் கொலை செய்யப்பட்ட சி.டி.எச். சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். ஜூன் 18ஆம் தேதியும் இந்த நிலைதான் அத்தெருவில் காணப்பட்டது.

சுரேஷ் குமார் வீழ்ந்து கிடந்த இடத்திற்கு அருகில்தான் போலீஸ் இணை ஆணையர் அலுவலகம் இருக்கிறது.

கொலை செய்ய வந்த நபர்கள் பைக்கில் வந்து சுரேஷ் குமாரைக் கோரமாக வெட்டி வீழ்த்திவிட்டுத் தப்பி விட்டனர். இந்தக் கொலை எந்த நோக்கத்திற்குச் செய்யப்பட்டு இருந்தாலும், யார் செய்து இருந்தாலும், ஏற்றுக் கொண்டு நியாயப்படுத்த எவரும் முன் வரக் கூடாது.

குற்றவாளிகள் தண்டிக்கப்படட்டும்!


திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணித் தலைவர் சுரேஷ்குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார் என்பது கண்டனத்துக்குரியது. குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொலை, கொள்ளை என்பவை அன்றாட வானிலை அறிக்கை போல ஆகிவிட்டன. இந்தப் பிரச்சினையில் அரசும், காவல்துறையும் ஏன் இப்படி மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கின்றன என்பது தெரியவில்லை.

இந்து முன்னணிப் பிரமுகர் படுகொலையைத் தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர் பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஆடிய வன்முறை வெறியாட்டம் கண்டனத்துக்குரியதே.

Thursday, June 19, 2014

கவிதை எழுதுவது எப்படி ??


முன் ஜாமின்: சற்றே நீண்ட பதிவு இது.திட்டிவிட்டு கூட படிக்க ஆரம்பிக்கலாம்.ஆனால் ப‌டித்து முடித்த‌வுட‌ன் காரி உமிழ‌க் கூடாது.

கடந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப் பேற்றிருந்த நம் அதிரை ஜமால் அவர்கள்,வலையுலகின் தலைசிறந்த கவிஞர்களை அறிமுகப் படுத்தி இருந்தார்.அந்த கவிப்பேரரசுகளின் படைப்புகளை படித்து விட்டு,எல்லோருக்கும் ஏற்படுவதைப் போல், நாமும் ஒரு கவிதை எழுத வேண்டும் என உள்ளுக்குள் இருந்த பட்சி பீதியை கிளப்பியது.

"பேனா திற‌ந்து
பேப்ப‌ர் பிரித்து
விட்ட‌ம் வெறித்து
மூளை க‌ச‌க்கி "................எழுத‌ ஆர‌ம்பிக்கிறேன்...

ஆனா ஒரு க‌ண்டிச‌ன்...

இந்த‌ க‌விதைய‌ எழுதி முடிக்க‌ற‌ வ‌ரைக்கும் ந‌ம்ம‌ புதியவ‌ன்,ச‌ர‌வ‌ண‌க்குமார்..அய்ய‌னார் இந்த‌ மாதிரி பெரிய‌வா ஆத்துப்ப‌க்க‌ம் த‌ல‌ வெச்சி ப‌டுக்க‌ப் ப‌டாது.மீறி ப‌டுத்தால் இவர்களின் பாதிப்பு ந‌ம்மையும் தொற்றிக் கொள்வ‌தோடு ம‌ட்டுமின்றி,ந‌ம் மூளையும் செக‌ண்ட் ஹேண்ட் மூளையாகக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று குத்த வைத்திருந்த அதே பட்சி குறி சொல்லிற்று.

எல்லாவ‌ற்றையும் ம‌ன‌த்தில் இறுத்திக் கொண்டு,மீண்டும் எழுத‌ ஆர‌ம்பிக்கிறேன்....

எதைப் பற்றி எழுதுவது ??? மனம் கொஞ்ச நேரம் ரூம் போட்டு யோசிக்க ஆரம்பித்தது....ஆஆ..காதல்......

கழுத கெட்டா குட்டிச் சுவர்..அட டைட்டில் இதயே வச்சிர்லாம் போல..வேணாம்..கவிதைனா படிப்பவர்கள் மனதைப் பிழிய வேண்டும்.
ஆகவே முதல் முத்தம்..பிரிவு சோகம்..இப்படி எழுதினால் எமோஷனல் வொர்க் அவுட் ஆக கூடும் என்பதால் நம் கற்பனை வண்டிக்கு கிருஸ்னாயில் ஊற்றி, டாப்கியரில் தூக்கினோம்.

Wednesday, June 18, 2014

தத்துவங்கள் ----தாஜ்


ஒன்றின் மீது
அர்த்தப் பொதிவுடன்
வார்த்தைகளால் மெருகூட்டும்
வேலைப்பாடே
தத்துவம்!

தத்துவத்தை ஒருவன்
பக்குவப்பட்ட வயதில்...
அதாவது...
அவனுக்கான காலத்தில்
30% கழிந்தப் பின்னே
அறியவருவான்!
அதுதான் சாத்தியமும் கூட!

பிறப்பு வளர்ப்பு தொட்டு
இடைப்பட்ட காலத்தில்
சமூகத்தாலும், சூழலாலும்...
அவன் கற்ற அத்தனையும்
அவனது இரத்தில் ஊறிகிடக்கும்.

தவிர,
மூதாதையர்களின் ஜீன் வழியாகவும்
பல பழக்கவழக்கங்கள்
அவனின் பிறப்போடே
உடன் வரவும் செய்யும்.

காலையில் பேருந்தில் கண்ட காட்சி



இருந்தாலும்......

நிற்கவும் இடமில்லாத
நகரப் பேருந்து.
அலுவல் அவசரங்கள்
ஆயிரம் பரபரப்பு
நெருக்கடிக்கும் போக்குவரத்தில்
நேரத்திற்குச் செல்ல முடியுமா?
அலைபாயும் என்பார்வைக்கு
அகப்படும் ஒரு காட்சி:
ஓட்டுநர் இருக்கைக்குப் பின்
வாய்த்திருக்கும் சக்கரமேடையின்
இருக்கையில்லா பேரிருக்கையில்
ஏறி அமர்ந்த ஒருவர்
சுற்றுப்புற அக்கறையின்றி
சூழல் மறந்து
தண்மை கொண்டு
தன்கால் நீட்டிச் சாய்ந்து
வேதப் புத்தகம்
வாசித்தபடி.. .

Tuesday, June 17, 2014

மாமியாரா ! மருமகளா


குறையை மட்டும் குடையும்
அன்பு மாமியார்…

பிழைகளுக்கு வலைப்பின்னி;
வறுத்தெடுக்கும் மாமியார்;
குறை சொல்வதே
முறையென – முரைத்து
பிழையை மட்டும்
படம் போட்டு காட்டும்;

Monday, June 16, 2014

How old are you?


‘How old are you?’

மலையாளத்தில் மஞ்சுவாரியரின் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக கேரளாவெங்கும் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம். நடுத்தர வயதை எட்டிவிட்ட மத்தியவர்க்க பெண் ஒருவர் கணவரின் வேலை, குழந்தையின் கல்வி காரணமாக அயர்லாந்துக்கு இடம்பெயர முயற்சிக்கிறார். அங்கே வேலை கிடைக்காவிட்டால் பொருளாதாரரீதியாக சமாளிக்க முடியாது. ஒவ்வொரு முறை வேலைக்கு முயற்சிக்கும்போதும் அவர் எதிர்கொள்ளும் கேள்வி இதுதான். ‘முப்பத்தியாறு’ என்று வயதை சொன்னதுமே எல்லா நேர்முகத் தேர்வுகளிலும் திருப்பி அனுப்பப்படுகிறார். இதனால் தன்னம்பிக்கை குலைந்து, மனவுளைச்சலுக்கு உள்ளாகி அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் படத்தின் கதை.

Life is stranger than cinema.

விஜயவாடாவில் பிறந்த பாலாமணிக்கு பதினாறு வயதில் திருமணம் ஆனது. அப்போது பத்தாம் வகுப்புதான் முடித்திருந்தார். மேற்கொண்டு படிக்க ஆசை. இருந்தாலும் இல்லற வாழ்க்கை அனுமதிக்கவில்லை. ஓய்வு நேரத்தில் டைப்ரைட்டிங் பழகத் தொடங்கினார். இதற்கிடையே ஒரு பெண், ஒரு ஆண் என்று இரண்டு குழந்தைகள் பிறந்துவிட இல்லற ஜோதியில் முற்றிலுமாக ஐக்கியமானார்.

Sunday, June 15, 2014

"வெயில்” அதுக்கு முக்கியம் !

 வெயிலுக்குப் பயப்படும் ஆண்களே உஷார் !

இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் பெரும்பாலானோருக்குத் தந்திருக்கிறது எனலாம். அலுவலகத்தில் சுவர்களுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபட்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது சராசரி வாழ்க்கை.

” பாலைவனத்திலிருந்து ஒரு பரிதாபக் குரல்”

திரியாய்த் தானே வாழ்வினில்
 *****தினமும் எரியும் ஆசைகள்
புரியா மடமை இலாமலே
 *******புரிந்தே நாங்கள்  உணர்வதும்
தெரியா தொன்றும் அல்லவே
 ********தெரியும் வெளிச்சம் காணவே
சரியா பிழையா விடைகளை
 *******சரியாய்த் தெரியா வாழ்விதே!

Saturday, June 14, 2014

"பொடி சுடப்போகுது, பாத்துப்போ கண்ணூ"

"பொடி சுடப்போகுது, பாத்துப்போ கண்ணூ" என்ற கரிசனமொழிகள் கேட்டு வளர்ந்த,பாதணிகள் எட்டாக்கனியாக இருந்த, வெறுங்காலால் நடந்து பழக்கமுள்ள எளியவன் நானென்பதாலும்

செருப்புகள் அணியக்கிடைத்த காலத்தில் மிகச்சுமாரான தரமுள்ள செருப்பென்பதால் தன் துளையிலிருந்து மீண்டும் மீண்டும் வெளிவந்துவிடும் வாருக்கு பின்னூசி குத்தி சரிசெய்ய முயல,அது பலனளிக்காமல் மீண்டும் வெளிவந்துவிடும் வாரை பின்பக்கம் ஒரு இரும்பு வாசர் வைத்து சரிசெய்ய முயன்றது மட்டுமல்லாமல் வேகமாக நடந்தால் எங்கே பிய்த்துக்கொண்டு வெளியே வந்துவிடுமோ என்கிற பயத்தில் பையப்பைய அடிமேலடி வைத்து நடந்து பழகிய எளிய வாழ்விலிருந்து வந்தவன் என்பதாலும்

இதயத்தில் இருந்து எழுதுகிறேன்...

இன்றைக்கு நான் பெரும் பணக்காரி. எனக்கென்று தனி செல்வாக்கு இருக்கிறது. ஆனால் இந்த நிலைமையை அடைவதற்கு நான் பட்ட கஷ்டங்கள் அதிகம். எனக்கு பின்னணி கிடையாது. அதனால், மரியாதை கிடைக்க ரொம்பவும் உழைக்க வேண்டியிருந்தது.

அப்போது என்னை சிலர் அவமதித்தார்கள். அசிங்கமாக பேசினார்கள். பகிரங்கமாகவே அப்படி நடந்து கொண்டார்கள். என்னுடன் வேலை செய்து கொண்டிருந்தவர்களும் சரி, சுற்றி இருந்த மற்றவர்களும் சரி, அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. இப்போது நினைத்தாலும் கூசுகிறது.

அதனால்தான், பொறுத்தது போதும் என்று துணிந்து விட்டேன். இந்த முறை இதை இப்படியே விடுவதாக இல்லை. இத்தனை பேர் கண் முன்னால் இப்படி நடந்து கொள்ளும் அசட்டு துணிச்சலுக்கு ஒரு முடிவு கட்டுவோம் என நானும் துணிந்து விட்டேன்.

Friday, June 13, 2014

கோழி வளர்ப்பதென்றால் அலாதி பிரியம்.

சின்ன வயசில் எனக்கு கோழி வளர்ப்பதென்றால் அலாதி பிரியம்.
எங்கள் வீட்டில் ஏறக்குறைய இருபது கோழிகளுக்கு மேல் இருக்கும் அப்போது. அதற்கென தனியா கோழி கூடே சிமெண்டில் கட்டி வைத்திருந்தோம். காலையில் கோழிகளை திறந்துவிடுவதும் மாலையில் அந்த கோழிகளை எண்ணிக்கை பார்த்து கூட்டில் அடைப்பதும் வழக்கமாக என் வேலை.

அப்படி வளர்க்ககும் கோழிகள் இடும் முட்டைகளை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தியது போக மீதியை சேர்த்து வைத்து அடை வைப்போம். அடை என்பது முட்டைகளை ஒரு அகலமான சாந்து சட்டியில்(சிமெண்ட் கலவை போட கொத்தனார் பயன் படுத்தும் சட்டிதான் சாந்து சட்டி என்பது) வைத்து அதில் கோழியை வைத்து பஞ்சாரத்திதை போட்டு மூடி விடுவது. சில நாட்களில் கோழி குஞ்சு பொறித்திருக்கும். அதற்காக சில சம்பிரதாயங்களை எங்கம்மா செய்யும்.

புவியுள்ளவரை பொருளியல் -3 - புதுகை அப்துல்லா


லயோனல் ராபின்ஸின் பற்றாக்குறை இலக்கணம்  (scarcity definition of Lionel Robbins) :

ஒருபய சொன்னதும் சரியில்லை,பேசாம நம்மளே ஒரு இலக்கணத்தைச் சொல்லிருவோம்னு முடிவு பண்ண ராபின்ஸ் 1932 ல ”பொருளியலின் இயல்பும்,முக்கியத்துவமும் பற்றியக் கட்டுரை” அப்படின்னு ஒரு நூலை வெளியிட்டாரு.இதில் அவர் சொன்ன இலக்கணம்தான் பற்றாக்குறை இலக்கணம் அப்படின்னு அழைக்கப்படுது.

ராபின்ஸின் இலக்கணம் – ”பொருளியல் என்பது மனிதனின் விருப்பத்திற்கும்,மேலும் பலவித பயன்களுக்குப் பயன்படுத்தக்கூடிய பற்றாக்குறையான பொருட்களுக்கும் இடையே இருக்கக்கூடிய மனித நடவடிக்கைகளைப் பற்றி கூறுகிறது”.

முகப்புத்தகமும் முஸ்லிம்களும்


அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்-
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி அன்றாட மனித வாழ்வில் தொழில் நுட்பத்தை ஓர் தவிர்க்க முடியாத அங்கமாக மாற்றியுள்ளது. இப் பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கமாகவே இணையத்தின் (Internet) தோற்றமும் அதன் அசுரவளர்ச்சியும் கருதப்படுகின்றது. வாலிபனாயினும் சரி வயோதிபராயினும் சரி மனிதனின் வாழ்வில் பின்னிப்பிணைந்த ஓரு சாதனமாக இணையம் விளங்குகின்றது.

Monday, June 9, 2014

தோழ்சாய்நத நினைவுகள்

தோழ்சாய்நத நினைவுகள்
.......................... .....................
மண்ணொன்றாய்
மகிழ அருந்திய
நீரொன்றாய்
பின்னொன்றாய்த் தழுவிய
புவிகாற்றொன்றாய
கண்ணொன்றாய்
கண்தொட்டப்
பகல் ஒளிவொன்றாய
பருவத்துளிர்த்தொட்டவரை
ஒவ்வொன்றாய்
வேர் பிணைந்த செடிகளின்று
மண்விட்டு மனைத்தாண்டி
பூவிட்டு காய்கண்டு
கல்லடிக்கணைகளேற்றோம்
பசித்தோர்க்குப் பழமீண்டோம்
பிறர் படுத்துறங்க நிழலானோம்

புவியுள்ளவரை பொருளியல் - 2

மார்ஷலின் பொருள்சார்ந்த நல இலக்கணம் (marshalls`s welfare definition) :

நம்ம அண்ணன் ஒருத்தரு எப்படியும் டாக்டராயிருவேன்னு பியூர் சயின்ஸ் குரூப் எடுக்குறாரு. ஆனா கொஞ்சூண்டு மார்க்ல அவருக்கு மெடிக்கல் சீட் கிடைக்கலை. ச்சேய்.. பேசாம மேக்ஸ், சயின்ஸ் எடுத்துருந்தா இன்ஜீனியரிங்காவது போயிருக்கலாம்னு வீட்ல பொலம்புறாங்க. இப்ப நம்ம என்ன செய்வோம்?  +1 சேரும்போது கொஞ்சம் உஷாரா மேக்ஸ், சையின்ஸ் குரூப் எடுப்போம்.. இல்லையா? அதே மாதிரிதான் ஆடம் ஸ்மித்தின் இலக்கணம் பணத்தைப் பத்தி மட்டுமே பேசுது, மனுஷனப்பத்தி பேசலைன்னு எல்லாரும் குறை சொன்னதால திரு.மார்ஷல் பொருளியல் நடவடிக்கை பற்றிய தனது ஆய்வை பொருளோடு அதைத் தேடும் மனிதனின் நடவடிக்கையையும் சேர்த்தே ஆராய்ந்தார்.

19 ஆம் நூற்றாண்டோட இறுதியில ஆல்பிரட் மார்ஷல் தன்னோட பொருளியல் ஆய்வுகளை “பொருளாதாரக் கோட்பாடுகள்” என்ற நூலா வெளியிட்டாரு. இவர் பொருளைப்பற்றி மட்டுமில்லாம அது சார்ந்த நலனுக்கும் முக்கியம் தந்ததால இவரது இலக்கணம் “பொருள்சார் நல இலக்கணம்” அப்படின்னு சொல்லப்பட்டது. அதாவது பொருளை ஈட்டுவதால் சமூகத்துக்கு விளையும் நலன்களை என்று உணரலாம். இவரு “பொருளாதாரம் ஒருவகையில் செல்வத்தைப் பற்றிய இயல் என்றால் மற்றொரு பக்கம் அதை ஈட்டும் மனிதனைப் பற்றிய இயலுமாகும்” என்கிறார்.

Friday, June 6, 2014

காலில் விழும் கலாச்சாரம் வேண்டாம்: எம்.பி. க்களுக்கு மோடி அறிவுரை - தி இந்து

காலில் விழும் கலாச்சாரம் வேண்டாம்: எம்.பி. க்களுக்கு மோடி அறிவுரை - தி இந்து



என் காலில் விழுந்து வணங்காதீர்கள்:
காலில் விழுந்து வணங்கும் கலாச்சாரத்தை எம்.பி.க்கள் பின்பற்றக் கூடாது.
புதிதாக பதவியேற்றுக் கொண்ட எம்.பி.க்கள் சிலர், என் காலில் விழுந்து
வணங்கினர். எனது காலில் மட்டும் அல்ல, வேறு எந்த தலைவர்கள் காலிலும்
விழுந்து வணங்கக் கூடாது. தேவையற்ற துதிபாடுதல்கள் தேவையில்லை. மாறாக
மக்கள் நலப் பணிகளில் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும்” என்று பிரதமர்
நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

Wednesday, June 4, 2014

ஆண்களை போலவே பெண்களாலும் சாதிக்க முடியும்,

 பெண்களின் கனவுகள், லட்சியங்கள், சாதிக்கத் துடிக்கும் ஆசை... இத்யாதி இத்யாதி எல்லாம் வேலை, திருமணம், குழந்தை என்று ஆன பிறகு கரைந்து விடுகிறது. தங்களைத் தாங்களே சமாதானப்படுத்தி கொண்டு சின்ன வட்டத்துக்குள் சுருங்கி விடுகிறார்கள். இதுதான் பெரும்பாலான பெண்களின் நிலை.

ஆனால், ஆண்களை போலவே பெண்களாலும் சாதிக்க முடியும், கனவை நினைவாக்க முடியும், லட்சியத்தை அடைய முடியும்... இதற்கு வயதோ, குடும்பமோ, குழந்தைகளோ தடையாக இருப்பதில்லை... என்பதை, தன் வாழ்க்கையின் வழியே நிரூபித்திருக்கிறார் பிருந்தா.

யெஸ், 35வது வயதில் கராத்தே கற்க ஆரம்பித்த இவர், இன்று அதில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார்.

சிறுவயதில் ஏற்பட்ட தனிமையுணர்வு இவரை கவிஞராக்கியது என்றால் -

மகளுக்கு வித்தை கற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அலைந்த அலைச்சல், இவரையே வீராங்கனையாக்கியிருக்கிறது.

புவியுள்ளவரை பொருளியல் - 1

  ஒருத்தரைப் பத்தி நாம முழுசாத் தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி குறைந்தபட்சமா அவரோட பேரு என்ன? ஊரு என்ன? என்ன தொழில் செய்யிறாரு? இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் தெரிஞ்சுக்குவோமில்லையா? அதுமாதிரி பொருளாதார அறிவியலின் பல்வேறு பிரிவுகளை நாம பாக்குறதுக்கு முன்னாடி இதுக்கு முன்னோடியா இருந்த சில அறிஞர்கள், அவர்கள் சொன்ன கருத்துகள் இதையெல்லாம் பாத்துருவோம், பொண்ணை நேர்ல பாக்குறதுக்கு முன்னாடி ஃபோட்டோல பார்த்துட்டு போற மாதிரி.

  ஆரம்ப காலத்துல பல பேரு பொருளாதாரத்துக்குப் பல்வேறு இலக்கணங்கள் தந்திருந்தாலும் ஒரு நாலு பெரிய மனுஷனுங்க சொன்ன இலக்கணம்தான் இன்னிக்கி வரைக்கும் ரொம்ப முக்கியமா கருதப்படுது. அப்பேர்ப்பட்ட மனுஷனுங்க யாராரு?

புவியுள்ளவரை பொருளாதாரம்

  கேப்டன் விஜயகாந்த் ஒரு படத்துல சொல்வாரு “மன்னிப்பு..தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை”. அதே போல தமிழர்கள் அனைவருக்கும் விருப்பு வெறுப்பின்றி தமிழில் பிடிக்கும் ஒரு பழமொழி இருக்குமென்றால் “அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை”. எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்றால் பொருளாதாரத்திற்கு வயிறே பிரதானம். உணவிற்காகத் துவங்கிய மனிதனின் பொருளியல் நடவடிக்கை துளியாய், மழையாய், பெரு மழையாய், வெள்ளமாய், ஆறாய், கடலாய் ஆனது போல இன்று ஒரு தனி அறிவியலாக உருவாகிவிட்டது. வாரிசுச் சண்டையில் இருந்து வல்லரசுச் சண்டைவரை, ஆன்மீகத்தில் இருந்து நாத்தீகம்வரை, சுயமரியாதையில் இருந்து சகிக்கும் அவமானம்வரை, உழைப்பில் இருந்து சோம்பேறித்தனம்வரை அத்தனைக்கும் இறைவனுக்கு அடுத்தபடியாய் ஒரே காரணமாய் இருப்பது பொருளாதாரம் மட்டுமே.

மென்மையான இரவுகளை ஸ்பரிசிக்கும் போதெல்லாம்

மென்மையான இரவுகளை
ஸ்பரிசிக்கும் போதெல்லாம்
தேகம்
மணமகனைப்போல்
மாலை அணிந்து கொள்கிறது !

வாதாம் மரத்து
அடர்ந்த இலைகளினூடே
ஊடுருவிப் பயணித்து
என் புகையை
தழுவிக் கொண்டு
ஓவிய நடனமாடும்
மெலிசான நிலாவின்
வெளிச்ச வழிசல்
கவிதை வரிகளை இசைக்கும் !

மேக பூதங்கள்
விரட்டிவருவதைப் பார்த்து
ஓடி ஒளியும்
நட்சத்திரக் குழந்தைகள்
ஒளிந்து நின்று
கள்ளச் சிரி சிரிக்கும் !

Tuesday, June 3, 2014

நெஞ்சமெல்லாம் நிறைய வாழ்த்துகள் கலைஞர் அவர்களுக்கு

நெஞ்சுக்குள் நீதி உள்ள எவரும் கலைஞர் அவர்களுக்கு வாழ்த்துகள் சொல்ல முடியாமல் இருக்க முடியாது.
தாத்தாவாகிய நான் கலைஞர் தாத்தாவுக்கு நெஞ்சமெல்லாம் நிறைய வாழ்த்துகள் சொல்வதில் பெருமிதம் கொள்கின்றேன்

பாசத்துடன் முகம்மது அலி ஜின்னா 


குஜராத்திகளின் ராஜ தர்பார்..!

குஜராத். இது ஒரு விநோதமான மாநிலம்.

இந்தியச் சுதந்திர வரலாற்றைத் தொட்டு, கொஞ்சம் முன்னும் பின்னும் நடந்திருக்கும் நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும் பொழுது குஜராத்தை ஏதோ ஒரு சாமானிய மாநிலமாகக் கணித்து விட முடியாது.

குஜராத்திகளில் இருவரை புறந்தள்ளி விட்டு இந்தியச் சுதந்திரத்தைப் பற்றி எழுதுகிற எழுதுகோல் உலகின் எந்தச் சரித்திர ஆசிரியரிடமும் இல்லை.

பனியா இனத்தில் பிறப்பெடுத்த மோகன்லால் கரம் சந்த் காந்தி. இந்த கரம்சந்த் காந்தி சட்டம் படிக்க லண்டன் சென்றார், பின்னாளில் மஹாத்மா காந்தியாக அறியப் பட்டார்.

Monday, June 2, 2014

'முகநூலை பொறுத்தவரை லைக்ஸ், பிரபலம் என்பதெல்லாம் மாயை.' / ரஹீம் கஸாலி

முகநூலில் பிரபலமானவர்களுக்கே லைக் விழுகிறது என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. நான் ஆரம்பத்தில் முகநூல் வந்த போது எனக்கு கிடைத்த லைக் ஒன்றுதான். அதுவும் நானே போட்டுக்கிட்டதுதான். பின் என் கருத்துக்களுக்காக அந்த ஒன்று ஐந்தானது. ஐந்து பத்தானது. பத்து இருபதானது. இருபது ஐம்பதானது. ஐம்பது நூறானது. நூறு நூற்றம்பதாகியுள்ளது. பிரபலங்களுக்குத்தான் லைக் என்றால் என்னை ஒன்றிலிருந்து நூற்றம்பது லைக்கிற்கு உயர்த்தியது எது?, லைக் என்பது ஆரம்பத்தில் கருத்துக்கு விழுகிறது. அதுவே பிரபலப்படுத்துகிறது. ஒன்று வாங்கும் போது பிரபலமில்லை நான். அதுவே நூற்றம்பது லைக் வாங்கும்போது பிரபலமாக அறியப்படுகிறேன் என்றால் என் பதிவால் மட்டுமே. அந்த பதிவே அத்தனை லைக்கை கொண்டு வருகிறது.