Friday, August 23, 2013

லுங்கி(கைலி) ஒரு சுவாரஸ்யமான உடை. அதனுடைய பின்னணிக் கதைகளும் சுவாரஸ்யமானவை

“லுங்கியுடன் ஆபீஸ் போவதற்கு மனத்தடை இருக்கிறது. அரை டிராயரில் அது இல்லை!” –சமீபத்தில் டவுசர் பற்றிய விவாதம் ஒன்றின்போது ட்விட்டரில் எழுத்தாளர் பாரா சொன்னது இது.

’லுங்கி கட்டிக்கொண்டு படம் பார்க்கும் போராட்டம் நடத்துவேன்!’ சில வாரங்களுக்கு முன்பாக எழுத்தாளர் ஞாநி குமுதத்தின் ’ஓ’ பக்கங்களில் சென்னை கமலா தியேட்டர் நிர்வாகத்தை இவ்வாறாக எச்சரித்திருந்தார். அதாவது புதுப்பிக்கப்பட்ட கமலா தியேட்டருக்கு லுங்கி கட்டிக்கொண்டு படம் பார்க்க வருபவர்களை அனுமதிக்கவில்லை என்பதற்காக இவ்வாறு ஞாநி எச்சரித்திருந்தார். பிற்பாடு கமலா தியேட்டர் ’லுங்கி கட்டிக்கொண்டு வரலாம்’ என்று ஞாநிக்கு சிறப்பு அனுமதியும், மற்றவர்களுக்கு சாதா அனுமதியும் தந்தது, தொடங்கவே தொடங்காத அவரது போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படம் வெளியானபோது தங்கர்பச்சான் புலம்பினார். சென்னை ஐநாக்ஸில் அப்படத்தை திரையிட மறுத்திருந்தார்கள். ‘வேட்டி, லுங்கியெல்லாம் கட்டினவங்க எல்லாம் உங்கப் படத்தைப் பார்க்க வருவாங்க!’ என்று மறுப்புக்கு நியாயம் சொன்னதாம் ஐநாக்ஸ் நிர்வாகம்.

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக லுங்கி கட்டி வருகிறேன். பத்து வயதில் அப்பா, இரண்டு மாஸ்டர் லுங்கி (ஒன்று வெள்ளைப்பூ போட்ட ப்ளூ, இன்னொன்று பச்சை என்று நினைவு) வாங்கித் தந்தார். கிறிஸ்டியன் ஆண்ட்டி வீட்டு டியூஷனுக்கு கூட அந்த லுங்கியோடு போய் வந்ததாக நினைவிருக்கிறது. பிற்பாடு ஏஜூக்கு வந்து நைட் ஷோக்களாக பார்த்துத் தள்ளியபோது, குரோம்பேட்டை வெற்றி தியேட்டருக்கும் லுங்கியோடே போய்வந்தேன்.

Tuesday, August 20, 2013

மருத்துவ மனையில் டாக்டர் அப்துல்லாஹ் பெரியார் தாசனின் இறுதித் தருணங்கள் !

ஞாயிறு அன்று காலையில் நண்பர் இப்ராகிம் காசிம் அவர்கள் மும்பையில் இருந்து போன் செய்து செங்கிஸ் கான் பாய் நாம் நினைத்தது போல் நடந்து விட்டது ! டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் மரணத் தருவாயில் இருக்கிறார் என அவரது மகன் வளவனிடம் நான் பேசினேன் அவரது உடலை நம்மிடம் தர மாட்டார்களாம் இது பற்றி அனைத்து அமைப்புகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லுங்கள் ! நான் உடனே மும்பையில் இருந்து இரவுக்குள் விமானத்தில் சென்னை வந்து விடுகிறேன் என்று கூறினார்.

சனியன்று இளையான்குடியில் நடை பெற்ற பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? ஆவணப்பட திரையிட்டு நிகழ்ச்சியை முடித்து விட்டு சென்னைக்கும் பேருந்தில் சமயத்தில் அவரும் நானும் டாக்டரின் உடல் நிலை குறித்தும் அவருடைய குடும்பத்தார் இன்னும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் , அவரும் ஆவண ரீதியாக தனது பெயரை மாற்றாத நிலையில் அவருக்கு ஏதேனும் நேர்ந்தால் அவரை இஸ்லாமிய அடிப்படையில் சிக்கல் வரலாம் ' என கவலைப்பட்டுக் கொண்டு வந்தோம் ! அது ஞாயிறு அன்று நடந்தே விட்டது !

நான் உடனடியாக வளவனின் நண்பரான தமுமுக வின் ஹாஜா கனி அவர்களுக்கு தகவலைத் தெரிவித்து விட்டு நீங்கள் அவரோடு பேசுங்கள் எனக் கூறிவிட்டு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்போலோ ஹனிபா அவர்களிடம் ' 'அண்ணே அவரது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடுப்பதில் இரு வேறு கருத்துக்கள் இருப்பதால் நாளை அவர்கள் குடும்பத்தார் முன்னிலையில் நமது கருத்து கருத்து வேறுபாட்டை வைக்காமல் முன்னத்கவே கூட்டமைப்பு சார்பில் ஒரு முடிவு எடுத்து செயல்படுவது நல்லது ஆகையால் கூட்டமைப்பைக் கூட்டி முடிவு எடுங்கள் நாங்கள் இங்கு மருத்துவ மனையில் இருந்து நிலைமையை பார்க்கிறோம் எனக் கூறிவிட்டு பெரும்பாக்கம் குளோபல் மருத்துவ மனைக்கு விரைந்தோம்!

Sunday, August 18, 2013

அப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைவு: அறிவுக் கருவூலத்தை இழந்தோம்!


                               அப்துல்லாஹ் பெரியார்தாசன்
 ---------------------------
ஆளூர் ஷாநவாஸ்
---------------------------------
சேசாசலம் எனும் இயற்பெயர் கொண்ட பெரியார் தாசன் 1949 ஆகஸ்ட் 21 ஆம் நாள் சென்னை பெரம்பூரில், வீராசாமி - சாரதாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எளிய குடும்பமும், ஏழ்மைச் சூழலும் சேசாசலமாக இருந்தவரை சாதனையாளராக உருமாற்றம் செய்தது. சென்னை பெரம்பூரிலுள்ள R .B .C .C .C பள்ளியில் தமது கல்விச் சிறகை விரித்த அவர், பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் வென்றார். பின்னர் அதே கல்லூரியிலேயே 1971 இல் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து பரிணமித்தார்.

சாதிக்க வேண்டும் என்றத் துடிப்பும், தனித்துவத்தோடு திமிறி எழ வேண்டும் என்ற வேட்கையும், அவரை மேலும் அதிகமாகப் போராடத் துரத்தியது. அதன் வெளிப்பாடாக லண்டன் ஆக்ஸ்போர்டு பலகலைக் கழகத்தில் மனோதத்துவத் துறையில் அவர் டாக்டர் பட்டம் பெற்றார். தம்மைச் சுற்றி நடக்கும் சாதிய இழிவுகளைக் கண்டித்தும், சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் அவர் ஆரத்தெழுந்தார். அதற்காக அவர் கையிலெடுத்த கருவிகள் தான் கல்வி, கலை, இலக்கியம் மற்றும் சொற்பொழிவு.

எழுத்திலிருந்து தமது சமூகப் பயணத்தைத் தொடங்கிய அவர், 120 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மற்றவர்களைப் போல் அல்லாமல் எதையுமே வேறுபடுத்திப் பார்த்துப் பழகிய அவர், தமது எழுத்திலும் தனித்துவத்தைக் காட்டினார். எழுத்தில் மட்டுமின்றி சொற்பொழிவுகளிலும் தம் அபாரத் திறமையை வெளிப்படுத்திய அவர், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர் ஆனார்.

பெரியார் பிரசவித்த பகுத்தறிவு வீச்சும், மார்க்சிய தத்துவங்கள் ஏற்படுத்திய பாதிப்பும், அம்பேத்கரின் சமூகப் புரட்சியும் அவரை ஆர்ப்பரிக்கச் செய்தது. தத்துவங்களை படித்துப் படித்துப் பேசினார். தமது உரை வீச்சின் மூலம் மடமைக்கு அடிகொடுத்தார். சமூகக் கொடுமைகளைக் கொன்றொழித்தார். பெரியாரின் முன்னிலையில் உரையாற்றி பெரியார் தாசனாக உருமாறினார்.

தன்னை சிரிக்க வைத்தவர்களைப் பார்த்தே ஒருநாள் .... சந்தி சிரிக்கும் !

சந்தி ....
அந்தி நேரங்களில் கூடும்
வம்புகளை வளர்க்கும்
அம்புகளைத் தொடுக்கும்
வாதங்களைக் கேட்கும்
விவாதங்களை ரசிக்கும்
பக்கத்திற்கொன்றாய்
வாத்தியமும் இசைக்கும்
மூடனைக்கூட
மேதையென விளிக்கும்
சத்தமிடுபவனை
சத்தியவான் எனச்சொல்லும்
சண்டைக்காரனை
சாதனையாளனாய்
சிலாகிக்கும்
சண்டாளனை
சாகசக்காரனென
சரசம் செய்யும்
சாக்கடைகளை
சந்தனமெனச் சொல்லி
சந்தோசம் தரும் !
சத்தியத்தை இகழ்பவனை
உச்சி மோந்து மெச்சும்
********

Tuesday, August 13, 2013

ஒரு முஸ்லிம் நண்பரை ஏன் பாய் என்று அழைக்கிறார்கள்?


இஸ்லாம் சகோதரத் துவத்தைப் போற்றும் ஒரு மார்க்கம்.

எல்லோரும் எல்லோரையும் ஒரு சகோதரனைப்போல உறவாகக் காணவேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டது.

அயலானை நேசி என்பது இஸ்லாத்தின் அடிப்படைப் பண்பு.

இதில் பாய் எங்கிருந்து வந்தது?

ஆங்கிலத்தில் Bro அழைத்துக்கொள்வார்கள். இது Brother என்ற சொல்லின் சுருக்கம்.

விஜய் துப்பாக்கி படத்தால் முஸ்லிம்களைச் சுட்டுவிட்ட காயத்துக்கு மருந்துபோடுவதாய் தலைவா படத்தில் Bro Bro என்று சொல்லித் திரிவாரே அந்த Bro தான் இது.

என்றால் தமிழர்கள் எப்படி முஸ்லிம்களை அழைத்துக்கொள்ள வேண்டும்?
பாய் பாய் என்றா?

இல்லை.

அது தவறாக அழைப்பு.

சரியான அழைப்பு ”சகோ” என்று  இருக்க வேண்டும். சகோதரா என்பதன் சுருக்கம்தான் சகோ.

பிறகு ஏன் பாய் என்று அழைக்கிறார்கள்?

இது உருது மொழியைத் தமிழில் திணிக்க விரும்பிய அந்தக்கால சில முல்லாக்களால் வந்த விணை.

உருது மொழியில் பாய் என்றால் சகோதரா என்று அர்த்தம்.

பாய் என்று ஒரு தமிழன் அழைப்பது அவன் தன் தாய்மொழிக்குச் செய்யும் துரோகம்.

Monday, August 12, 2013

முரண்பாடு

அகமொன்றும் புறமொன்றும்
அநீதிக்கு வழி வகுக்கும்
ஆன்மாவின் சொல்லிதுவே
ஆங்காங்கே ஒலிக்கட்டும்

Sunday, August 11, 2013

THE MUSLIM MINORITY COLLEGES OF INDIA - இந்திய சிறுபான்மை முஸ்லிம் மக்கள் நடத்தும் கல்லூரிகள்

 ஒவ்வொரு முஸ்லீம் சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனம் / இந்திய கல்லூரிகள் கண்டுபிடிக்க
maqsoodview.com : Home : all types of Muslim minority institutes / colleges of India with...
www.maqsoodview.com
Find out about every Muslim minority institute / college of India for engineering, MBA, Business management, MCA, Master's in computer application, Pharmacy and 
 ஒவ்வொரு முஸ்லீம் சிறுபான்மையினர் நடத்தும்  நிறுவனம் / இந்திய கல்லூரிகள் கண்டுபிடிக்க Please click here http://www.maqsoodview.com/

TAMIL NADU
01
Mohamed Sathak A.J. College of  Engineering
Sholinganallur
Tamil Nadu

02

M. A. M. College of Engineering, Tiruchirappalli

Chennai

Tamil Nadu

03

C. Abdul Hakeem College of Engineering and Technology

Melvisharam

Tamil Nadu

04

National College of Engineering

Thirunelveli

Tamil Nadu

05
Aalim Muhammed Salegh  College of Engineering
Avadi
Tamil Nadu

06

Danish Ahmed College of Engineering and Technology

Padappai

Tamil Nadu

07
PET Engineering College
Vallioor
Tamil Nadu
08
 ANNAI COLLEGE OF ENGINEERING COLLEGE
Tamil Nadu
09
SYED AMMAL ENGINEERING COLLEGE
Tamil Nadu
10
AL-AMEEN ENGINEERING COLLEGE
Tamil Nadu
11
M.A.R. COLLEGE OF ENGINEERING AND TECHNOLOLGY
Pudukottai
Tamil Nadu
12
MIET Engineering College
Tamil Nadu
13
Tamil Nadu
OTHERS [confirm minority status]

14

B. S. Abdur Rehman Crescent Engineering College

Chennai

Tamil Nadu

15

As-Salam College of Engineering & Technology

Tanjavur

Tamil Nadu

16

The New College

Chennai

Tamil Nadu

17

Jamal Mohamed College

Tiruchirappalli

Tamil Nadu

18

S M Kader Engineering College

Sriperumbudur
Tamil Nadu

19

Mohamed Sathak Engineering College

Ramanath-apuram

Tamil Nadu

OTHER IMPORTANT INSTITUTES

01

Measi Academy of Architecture

Chennai

Tamil Nadu

02

Noorul Islam University

Kanyakumari

Tamil Nadu

Source : http://www.maqsoodview.com/Engineering%20Colleges2.htm

'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

 1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF!!!

தனி படுக்கையில்  அல்ல அம்மா அப்பாவுடன் படுத்து உறங்கியவர்கள் தான் நாங்கள்•

எந்த வித உணவுப் பொருட்களும் எங்களுக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக நாங்கள் இருந்ததில்லை.

சைக்கிள் ஓட்டும் போது ஹெல்மட் மாட்டி ஓட்டி விளையாண்டது இல்லை.

Friday, August 2, 2013

ஒரு மில்லியன் திர்ஹத்தை நன்கொடையாக ...

துபாய் அரசால் வழங்கப்படும் சிறந்த ஆளுமைக்கான விருதுக்கு வழங்கப்பட்ட ஒரு மில்லியன்  திர்ஹத்தை பீஸ்  டிவிக்கு நன்கொடையாக வக்ப் செய்தார் – டாக்டர் ஜாகிர் நாயக்.

அஸ் - ஸலாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

அஸ் - ஸலாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில்
முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா
பேராசிரியர் மேஜர் அரவாண்டி சிறப்புரை

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே உள்ள திருமங்கலக்குடியில் அமைந்துள்ள அஸ் - ஸலாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் இன்று (01/08/2013) முதலாம் ஆண்டு புதிய வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் M. J .A . ஜமால் முஹம்மது இப்ராஹிம் தலைமை தாங்கினார். துணை தலைவர் முஹம்மத் ஹுசைன், இணை செயலாளர் சிராஜுதீன், சாதிக் மைதீன், அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர்கள் முஹம்மது சிராஜுதீன், முஹம்மது சுல்தான், ஷாகுல் ஹமீது, அப்துல் மாலிக், முஹம்மது இக்பால், அஷ்ரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் ராமசுப்ரமணியன் அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் செயலாளரும் தாளாளருமான ஏ. எம். ஷாஜஹான் வாழ்த்துரை வழங்கினார். அவர் தனது உரையின் போது மாணவர்கள் ஆங்கில மொழியை சிறப்பாக கற்க வேண்டியதின் அவசியம் பற்றியும், தங்களது தனி திறமையை மேம்படுத்திகொள்ளும் வகையில் 4 வருட பட்டப்படிப்பை 8 பருவமாக பிரித்து ஒவ்வோரு பருவத்திலும் கூடுதலாக ஒரு சான்றிதழ் படிப்பை படித்து முடிக்கும் வகையில் திட்டமிட வேண்டும் என்றும் எடுத்து கூறினார்.மேலும் கல்லூரியின் சிறப்பம்சங்கள், ஆய்வக வசதிகள், சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள், அனுபவமிக்க பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளது பற்றி எடுத்து கூறினார். சிறப்பு விருந்தினராக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் கணினி துறையின் முன்னாள் தலைவர் மேஜர் அரவாண்டி கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது சிறப்புரையில் மாணவர்கள் எந்தவிதமான கவன சிதறலும் இல்லாமல் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஒழுக்கம் நிறைந்த மாணவனாக இருக்க வேண்டும், பெற்றோர்கள் கண்ட கனவை நனவாக்கும் விதத்தில் கடுமையாக உழைத்து பல்கலைகழக அளவில் சிறப்பிடம் பெற முயல வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். விழா முடிவில் கல்லூரியின் இயக்குனர் காரல் மார்க்ஸ் நன்றியுரை நிகழ்த்தினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்களும், மாணவர்களும் சிறப்பாக செய்து இருந்தனர்.
Regards






அமைதியான "இரண்டாவது வெள்ளை புரட்சி " பார்க்க வேண்டிய காணொளி ஆங்கிலத்தில்

அருணாச்சலம் முருகானந்தம் அவர்களின் பார்க்க வேண்டிய காணொளி ஆங்கிலத்தில்.
பெண்கள்  நலம் கருதி அவரது சேவை உயர்வானது .நாப்கின்ஸ் தயாரிப்பில் புதிய கண்டுபிடிப்பு . நாட்டில் பலருக்கு வேலை வாய்ப்பு
குருஜிக்கும் ,சுவாமிக்கும் கிடைக்கும் தொண்டர்கள் அவருக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் அவரது ஆய்வு தொடர்ந்து வெற்றியை தந்தது .