Saturday, September 29, 2012

அமெரிக்க ஆதரவாளர்களின் கைகளில் நபிகள் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்று புத்தகம்


  நபிகள் பெருமானாரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக உலகம் கொந்தளித்தது. மக்களின் கோபம் ஆத்திர அலைகளாக வெடித்தது.. சில இடங்களில் அசம்பாவிதங்களும் நடைபெற்றன.
எதிர்ப்பினை ஆர்ப்பாட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்துவது ஒரு போராட்ட முறை.குறுக்கு புத்தி படைத்த மூடர்கள் திருத்தப்பட முடியாத நிலையில் இருப்பவர்களை சட்டத்தின் மூலமாக கடுமையான நடவடிக்கைகளின் மூலம் திருத்துவது ஒருவகை .




அதேவேளையில் அறியாமையில் இருப்பவர்களை திருத்துவதற்கு அழகிய முறையில்அழைப்பு பணி மூலம் தெளிவடைய வைப்பது மற்றொரு வகை.
இந்த கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக தலைநகர் டெல்லியில் அமெரிக்க தூதரக அலுவலகம் நூலகம் உள்ளிட்டவை அமைந்துள்ள அமெரிக்க மையத்தின் முகப்பு வாயிலில் சமுதாய ஆர்வலர்கள் சிலர் உலக வழிகாட்டி தூயவர் நபிகள் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை அமெரிக்க தூதரக அதிகாரிகள் , ஊழியர்கள், மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர் அரைமணி நேரத்தில் 125 புத்தகப்பிரதிகள் அன்பளிப்பாக வழங்கியதாகஹுதை ஹித்மத்கர் அமைப்பின் நிர்வாகி பைசல் கான் தெரிவித்தார்.

Friday, September 28, 2012

வால் அருந்த பட்டம் போன இடம் தெரியாது !


வால் அருந்த பட்டம் போன இடம் தெரியாது 
இடுக்கு இல்லா சட்டம் இல்லா இடமில்லை

பொது இடத்தில  மது அருந்த முயன்றேன்
காவலர்  சட்டம் சொல்லி என்னை மடக்கினார்

'குற்றம் செத்தாய் உன்னை அழைத்து செல்ல வேண்டும்'
'நான் வெளிநாடு இது எங்கள் நாட்டில்  குற்றமில்லை'  என்றேன்
'இந்த நாட்டு சட்டம் அறிந்து இங்கு இருக்க வேணும்
சட்டம் அறியாமல் இருப்பது உன் குற்றம்தான்' என்றார்
'அறியாமல் செய்தேன் வருந்துகின்றேன்' என்றேன்
'பணத்தை கொடு விட்டு விடுகிறேன்' என்றார்.
'பணம் வாங்கி விடுவிப்பது குற்றமாகாதா?' என்றேன்
'அதைப்பற்றி நீ பேசினால் உன்னை அடைக்க வேண்டியதுதான்' என்றார்

Thursday, September 27, 2012

மூடர்கள் மௌனத்தை சோதித்தார்கள்!

  பேச வேண்டியதை பேச வேண்டிய    இடத்தில்  அவசியம்  பேச வேண்டும் . பேசாமல் இருப்பதும் தவறு. கோபமடைந்து பேசுவதும், செயல்படுவதும் மற்றும் அமைதிக்கு பாதிப்பு வகையில் பேசுவதும் தவறு. ஒரு தவறு மற்றொரு தவறு செய்வதற்கு  தூண்டுதலாக அமைந்து விடக் கூடாது.
அமைதியாக இருப்பது என்பது ஒரு செயலிலும் ஈடுபடாமல் இருப்பதல்ல . செய்யக் கூடாததை செய்யாமல் இருப்பதே அமைதியாகிவிடும்.  மௌல்விகள்  பாதிரிகள் மற்றும் ஞானிகள் சில  நேரங்களில் அமைதி காப்பதும், கோபமடைவதும் அனைவரையும் அழித்துவிடும்!
 சிலர் கோபமடையலாம் அல்லது வருத்தமடையலாம். நான் எழுதியதில் தவறு இருப்பின் சுட்டிக் காட்டுவதும் அவர்களது கடமை . அதை விடுதது நாங்களே  முற்றிலும்  அறித்தவர்கள் என்பது போன்ற முடிவுக்கு  வருவதும்,
 அமைதி காப்பதும் சிறப்பாகாது. படம் பண்ணி மற்றவர்களை அவமானப் படுத்தும்போதும் கோபமடையாமல் முறையான பதில் கொடுக்கலாம். அமைதி காக்க அது பலவித கேடுகளையும் கொண்டு வர வாய்பும் உண்டாகலாம்

Tuesday, September 25, 2012

கடுமை சொல் சொன்னாலும் கருணை சொல் சொல்வார்!

கடுமை  சொல் சொன்னாலும்
கருணை சொல் சொல்வார்

முகமதைக் கண்டோர் முகம் மலர்வர்
அகமது குளிர மனம் மகிழ்வர்

துன்பப் பட வைத்தோர்க்கும்
நன்மை பட செய்வார் நபி

காய்வழி  வந்து கனியாகி சிறப்படைய
சேய்வழி நகர்ந்து பணிவாகி பெரியோர் போற்ற

அறவழி    அறிந்து பிறவழி நாடுவார்
மறைவழி அறிந்து நபி வழி பேணுவதன்றோ சிறப்பு

கடுஞ்சொல்  சொல்வோர் நல்வழி வர நாளாகுமோ !
பெருஞ்செயல் செய்வோர் அறவழி வழி செய்யச் செய்வது சிறப்பாகுமே

அயலானை அரவணைத்து செயல்பட்டால்
கயவோனும் மறையறிந்து தூய்மையடைவான்

விவேகமில்லா   வீரம்   விரயமாகும்
பணிவில்லா  பாசம்  குறையாகும்
அறிவில்லா ஆற்றல் நாசமாகும்
நமக்கோர் பக்குவம் வந்திட
நாமெல்லாம் ஒட்றுமை அடைந்திட
எடுத்தோம் தொடுத்தோம்  என்றில்லாமல்
நல்லதோர் திட்டம் தீட்ட
செம்மையாய் செய்து முடிக்க
செழுமையாய் சேவை செய்து
பசுமையாய்  மனதில்  நிறுத்திட
இறை  வணக்கம்  இயல்பாய்  இருந்திட
இறைக்   கருணையும்  இருத்தல் வேண்டும்
நமக்கும் நற்பண்புகள் வந்திடும்
நமக்கும் நற்பயன்கள் கிடைத்திடும்

கயவோனை காய்ச்சியெடுத்தால் மாண்டு போவான்
மாக்கள் மக்களாக மாற வேண்டும்
மக்களின்றி நாமிருந்து என்ன  பயன்

கற்றதும் பெற்றதும் காயப்படுத்துவதற்கா
கற்றவை நான் நலம்பட வாழ மற்றும்

மற்றவர்க்கு போதிக்க வந்த அமானுதமே(அடமானமே) உம் கல்வி

Monday, September 24, 2012

ஏதுண்டு உம்மிடத்தில் என்பார் ?


ஏதுண்டு உம்மிடத்தில் என்பார்? 
வேதமுண்டு எம்மிடத்தில் என்போம்
வேதத்தை உம்மனத்தில் நிறுத்தினாயா என்பார்? 

பேதமை எம் மனதில்  ஊன்றியதால் பொருள் விளங்காமல் போயிற்று
சேதம் வராமல் சேர்த்து வைத்தேன்
கல்லாமை கல் நெஞ்சம் உருவாகியது
சேதமின்றி பொருளறிந்து பெற்ற வேத அறிவு விளக்கம் கொடுத்தது
கல் நெஞ்சம் கருகி மேன்மையை அடைத்த உள்ளம் ஒளி வீச உணர்கின்றேன்

ஒற்றுமையில் சிக்குண்டி நம்மில் நாமே மோதுண்டோம் கல் நெஞ்சம்
ஒற்றுமையின்  உயர்வை  வேதம் காட்ட சிக்கல் அவிழ்ந்தது
புல்லுரிவிகள் புகழ் நாடி .பணம் நாடி நம்மை பிரித்தாளும் சக்தியை முறியடித்தோம்
 வேதம் அறிந்து கல்விகற்று  களையடுக்க வேண்டும்
அயலானின் ஆற்றலால் நம்மாற்றல் வீழ்ந்திடுமோ!
 செயலானின்    ஆற்றல் ஓய்ந்த்திடுமோ !
அறிவின் ஆக்கம் அனைத்தையும் வெல்லும்
'சீன தேசம் சென்ராயினும் சீர் கல்வியை நாடு' என நபி மொழி இருக்க
நக்குள்ளே ஒளிந்திருக்கும் ஆற்றல் ஒளியாய் வீச மற்றவர் நம் வழி நாடுவார்

ஒதுவோம் பொருள் அறிந்து ஓதுவோம்
ஓதிய வழியே வாழ்ந்து மறை ஒளி மிளிரச் செய்வோம்
இறைவன் காட்டிய வழி வாழ்வின் நன்னெறி
இறைவனைத்  தொழுது  நிறைவு கொள்வோம்  

சகிப்புத் தன்மையில்லா முஸ்லிம்கள்

கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக ,இன்னொஸென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் திரைப்படத்தைத்  தடை செய்யக் கோருவது நியாயமா? - கோபாலன், பொள்ளாச்சி


கருத்துச் சுதந்திரம் எதுவரை? யாருக்கு..? இந்த விஷயத்தில் இந்தியர்களான நாம் இரட்டை நிலைப்பாட்டைக் கைக்கொள்கிறோம்.

இந்தியாவில் சமீப காலமாக , ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராகக் கீழ்த்தரமாக்  எதையும் செய்யலாம்  எதையும் எழுதலாம் பேசலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதை இணையதள வாசகர்கள் நன்கறிவர். தமக்கு எதிராகப் பரப்பப் படும் கீழ்த்தரமான அவதூறுகளுக்கு அவர்கள் மறுப்புச் சொன்னால் "கருத்துச் சுதந்திரம் போச்சே" எனக் கூப்பாடு போடுகிறார்கள்.

வேண்டாததை வேண்டி வினையில் மாட்டினேன்


கவிதை வேண்டுமென்று கவிஞர்  வைரமுத்துவுடன் போனேன்
வைரமும் முத்துவும் இருந்தால் வா! ' தருகிறேன் என்றார்

பணம் சேர்க்க வழி சொல்லுங்கள்' என கனிமொழியைக் கேட்டேன்
கனிவாக பதில்  சொல்லாமல் நகர்ந்து போனார்

கல்  வெட்டி  பணம் சேர்த்த  செல்வந்தரிடம் 'பணம் பண்ண வழி' கேட்டேன்
'பணம் சேர்த்த பின் கடுஞ்சிறையில்  போக விருப்பமானால் சொல்கின்றேன்' என்றார் 

'புகழ் வேண்டுமென்று' கலைஞரிடன் ஆலோசனை கேட்டேன் 
அதற்கு மக்கட்பேறு வேண்டுமென்று கலையாகச் சொன்னார்

வேலை வேண்டுமென்று' முதல்வரைக் கேட்டேன்
எனக்கு  ஓய்வில்லை உனக்கு பதில் சொல்ல. வேண்டுமென்றால் இனாம் தருகிறேன் வாங்கிப் போ' என்றார்

கல்வி நாடி கல்லூரி நாடினேன்
'காசைப்  போட்டால் கல்வி கிடைக்குமென்றார்'

Sunday, September 23, 2012

இஸ்லாமியப் பார்வையில் குற்றவியல் சட்டங்கள்

by நீடூர் A.M.சயீத்
இஸ்லாமியப் பார்வையில் குற்றவியல் சட்டங்கள்
கற்பு என்பது விலை மதிக்க முடியாத அளவுக்கு உயர்வானது. ஒரு முறை கற்பை இழந்தால் திரும்ப பெற முடியாத இழப்புதான். ''கற்பெனப்படுவது பிறர் நெஞ்சு புகாமை'' என்று சொல்வர் ஆன்றோர்கள். ஆனால் இன்றைய சமூக வாழ்வில் கற்பு என்ற தத்துவமே மறு பரிசீலனைக்கு உரியதாகிவிட்டது. பொருளாதாரப் பிரச்சினையால் பருவமடைந்து பல ஆண்டுகளாகியும், திருமணமாகாத பெண்கள் இருப்பதாலும், பத்திரிகைகளிலும், படங்களிலும், காமஉணர்வைத் தவறுதலாக புரிந்து கொண்டு கல்வி கூடங்களிலும், தொழில் நிறுவனங்களிலும் ஆண்களும், பெண்களும் சேர்ந்து பழகும் நிலையினாலும், கற்பழிப்பு குற்றங்கள் கணக்கிலடங்காமல் வந்து கொண்டிருக்கின்றன.
குற்றங்கள் மலிவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் சினிமா என்னும் ''ஆக்டோபஸ்'' ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. பெரும் பாவங்களில் ஒன்றான சினிமா சமூகத்தின் வாழ்வை, அதன் பொருளாதாரத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டை பல முனைகளிலும் தாக்கி சீரழித்து வருகிறது.''காட்டும் திரைப்படத்தில் கற்பில்லை பொறுப்பில்லை. கல்லூரி பாடத்தில் வாழ்க்கை நம்பிக்கையில்லை. நாட்டில் ஒருமைபாடில்லை. எனவேதான் நாம் விழாக்கள் கொண்டாடல் சரியில்லை'' என்று பாடினான் ஒரு கவிஞன். காம உணர்வைத் தூண்டும் காட்சிகள் போதாதென்று பொருந்தாக் காமம், முறைதவறிய காமம், வக்கரித்துப் போன காமம் ஆகியவற்றையும் கட்டுரைகளிலும், கதைகளிலும் நவீனங்களிலும் இடம் பெறச் செய்து வருகிறார்கள். இதன் விளைவாக கோபத்தினால் செய்யும் பாவங்களை விட, ஆசையினாலும், காமத்தினாலும் செய்யும் பாவங்கள் அதிகமாக வருகின்றன என்பதே கசப்பான உண்மை.

Saturday, September 22, 2012

சைத்தான் வேதம் ஓதி சரித்திரம் புரட்ட படம் பிடிக்கின்றது!

 அமெரிக்காவில் உள்ளோர்  அனைவரும்  கெட்ட மனம் கொண்டவர் அல்லர் . அடைக்கலம் தேடி வந்தவருக்கு உதவி செய்ய ஆட்சியே மறைமுகமாக அவர்கள் கையில் சிக்கிப் போனதுதான் வேதனை.
உலகமெல்லாம் ஒடுக்கப்பட்ட  யூதர்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கிடைத்தாலும்  பதினெட்டாம் நூற்றாண்டில்தான் நாட்டின் குடியுரிமை கிடைத்தது. ஊடுருவிய புல்லுரிவிகள் தன் குணத்தை மாற்றாமல் மறைமுகமாக அமெரிக்காவின் ஆதிக்கத்தையே தன் வசம் கொண்டு வந்து விட்டனர்.உலகில் உள்ள யூதர்களில் 75% விழுக்காடு அமெரிக்காவில் உள்ளனர்.அவர்கள் உலகத்தையே தன் வசம் ஆக்கிக் கொள்ள திட்டம் தீட்டுகின்றனர். அதற்கு முதல்படியாக மற்ற மக்களுக்கிடையே குழப்பம் உண்டாக்குவது  மற்றும் நாடுகளை  பிரிப்பது இதற்கு பெயர் உரிமைப் போர்.

Wednesday, September 19, 2012

ஏழு பேர் பார்த்ததோடு எடுத்தெறியப்பட்டிருக்க வேண்டிய படம்

ஏழு பேர் பார்த்ததோடு
எடுத்தெறியப் பட்டிருக்க வேண்டிய
மஞ்சள் படம்
இன்று
ஏழு பில்லியன் மக்களின்
ஆவலைத் தூண்டுகிறது

நமக்குள் பல பாதுகாப்புகள்.



மனதுக்கும் உடல் நலத்திற்கும் தொடர்பு உள்ளது .நல்ல சிந்தனை, உயர்வான எண்ணங்கள்,  தாழ்வு மனப்பான்மை அற்ற  மனநிலை ஆரோக்யமான உடல் நலம் தர உதவும். சிந்தனைச் சிதறல், முறையற்ற வாழ்க்கை ,குறிக்கோள் அற்ற வாழ்வு, தன் மீதே நம்பிக்கையற்ற குணம் , எதிலும் தவறாகவே சித்திப்பது ,பய உணர்வு  இவைகள் உடல் நலத்தைப் பாதிக்கும் .

 அறிவின் வளர்ச்சி அபிவிருத்தி செய்ய அது நாற்பது வயதைக் கடக்கும் போது பக்குவம் அடைகின்றது ,அது அறிவின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது . மனித மூளையின் செல்கள்  அறிவைத் தூண்ட  பன்மடங்காக பெருகுகின்றது. அதாலதான் நாற்பது வயதைத் தாண்டியோர் சிறந்த செயல்பாட்டுத் திறன் கொண்டவர்களாக உள்ளனர்(மருத்துவர், வழக்கறிஞர்கள் கலைஞர்கள்  மற்றும் அறிவு ஜீவிகள் ) மனித உடல் தனித் தன்மையுடன் இருப்பதால்தான் தன்னைத் தானே சரி செய்துக் கொள்ளும் ஆற்றலையும் பெற்றிருக்கின்றது. இவைகள் நகராத்  தன்மையைக் கொண்ட உணர்வற்ற ஜடப் பொருளுக்கு கிடையாது.(நாற்காலி உடைந்தால் நாம்தான் சரி செய்ய வேண்டும்) காயம் ஏற்படும்போது தோலில் உரசல் ஏற்படிருந்தால் உடல் தோலின் வளர்ச்சி ஏற்பட்டு சரி செய்து விடுகின்றது . மாரடைப்பு ஏற்பட மருத்துவர் வலி நீங்க பெதடின் ஊசி போட்டு வலியை குறைக்கின்றார். இரத்தத்தை மென்மையாக்கி இரத்த ஓட்டத்தை எளிமையாக்குகின்றார். ஓய்வு எடுக்க சொல்கின்றார் . அதில் முக்கியமான ஒன்று  இருதயம் தன்னைத் தானே சரி செய்துக் கொள்வது இறைவனது ஆற்றல்.


 இறைவன் நம் உடம்பில் இயற்கையாகவே நம்மை பாதுகாக்க பல ஆயத்தங்களை செய்துள்ளான். அதன் மகிமையை நாம் அறிந்துக் கொளவதில்லை. ஒரு சொட்டு கண்ணீர் பல கிருமிகளை அழிக்கக் கூடிய சக்தி வாய்ந்தது. கண்களில் தூசி விழாமல் அனிச்சை செயலாக நம்மை அறியாமலேயே  நம் கண்கள் மூடிக் கொள்கின்றன. அதுவும் மீறி கண்களில் தூசி விழ கண்ணீர் சுரந்து பாதுகாப்பு கொடுக்கின்றது. கண்களின் இமைகளை அடிக்கடி மூடி திறப்பது நல்லது. கணினியில் அதிக நேரம் ஒரே இடத்தை நோக்கி அமரும் பொது கண்ணுக்கு ஓய்வு தருவதில்லை .அதனால் கண்ணீர் சுரப்பது குறைகின்றது. அதனால் சிறிது நேரம் இடைவெளி  கொடுத்து மறு பக்கம்  திரும்பி இமைகளை திறந்து மூடுவதால் கண்களுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கும்.
மூக்கின் முடிகள் தூசி நம் இருதயத்திற்கு செல்லாமல் தடை செய்கின்றது. அதுவும் மீறினால் மூக்கில் ஒரு இறுக்கம் தருவதற்கு கூழ் உண்டாகி தூசியை தடை செய்கின்றது  இதனையும் மீறும்போது இருமல் வந்து நம் இதயத்திற்கு ஒரு பாதுகாப்பு தருகின்றது. ஒரு சாதாரன இருமல் வந்தாலும் நாம் மருந்து எடுத்துக் கொள்கின்றோம் . தொடர் இருமல் வரும்போதுதான் மருத்துவரை நாட வேண்டும்.

 மணல் ஏற்றி செல்லும் லாரியில் மணல் மீது போர்த்தப் பட்டிருக்கும் துணி மீது சிலர் நிம்மதியாக தூங்குவதனை நாம் பார்த்திருக்கலாம். அவர் வேலை செய்த களைப்பினால் அயர்ந்து தூங்குகின்றார். நாம் ஒரு உடல் உழைப்புமில்லாமல் தூக்கம்  வராமல் தூக்க மருந்து வாங்கி விழுங்குகின்றோம். பின்பு அதற்கு அடிமையாகி விடுகின்றோம். தூக்கம் வராமல் வருந்துவது மிகவும் பாதிக்கும். ஒரு மனிதனால் தொடர்ந்து தூங்காமல் இருக்க முடியாது. அவன் இடை இடையே பூனைத் தூங்குவது போல் தூங்கி இருப்பது அவர் அறிந்திருக்கமாட்டார். மரணத்தை விட மரண பயம் மிகவும் கொடியது.
இறை நம்பிக்கையும் ஆத்ம திருப்தியும் ,உடல் உழைப்பும் அவசியம் தேவை . உள்ளம் கெட்டால் அனைத்தும் கெடும்.
 சிறுவனாக இருந்தபோது பள்ளிக் கூடத்தில் எழுதியிருந்ததை மாற்றி 'தேகாத்ணாவி தைத்லகா' என்று மனனம் செய்தது நினைவுக்கு வருகின்றது. அது இதுதான் - காலத்தை வீணாக்காதே

Tuesday, September 18, 2012

"ஒரு கையில் சூரியனையும் மறு கையில் சந்திரனையும்"

எங்கள்  அன்புக்குரிய இறுதி நபி முஹம்மது நபி (ஸல்) அவர்களை   எங்கள் உயிரை விட மேலாக நேசிக்கின்றோம்   அவர் மீது இருக்கும் மீது உள்ள பாசமும் , நேசமும் உலகம் உள்ள அளவும் மாறாது குறையாது அது கூடிக் கொண்டே இருக்கும். "ஒரு கையில் சூரியனையும்  மறு கையில் சந்திரனையும்" கொடுத்தாலும் இஸ்லாம் போதித்த ஓர் இறைக் கொள்கையையும்   குர்ஆன் போதித்த கொள்கைகளையும்,  இறுதி நபி முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் மீறி நடக்க மாட்டோம் .
"ஒரு கையில் சூரியனையும், மறு கையில் சந்திரனையும் தந்து கேட்டாலும் ஏகத்துவப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டேன்" என்று  மக்களுக்குப் போதித்த இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மிக உறுதியாகச் சொன்னார்கள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் தலைவராக இருந்து – தலைமைப் பொறுப்பில் இருக்கும் போதே மரணித்தார்கள். மரணித்த மாமன்னரின் சொத்தின் மதிப்பைப் பாருங்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மரணத்தின்போது திர்ஹமையோ, தீனாரையோ, (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ) அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோ விட்டுச் செல்லவில்லை. தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம் ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர. (அறிவிப்பவர், அன்னை ஜூவைரிய்யா பின்த்து ஹாரிஸ்(ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண்: 2739)

நிலைப் பேழையிலிருந்து சிறிது பார்லியைத் தவிர உயிருள்ளவர் உண்ணக் கூடிய பொருள் எதுவும் என் வீட்டில் இல்லாத நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு அதை நான் அளந்தேன். (அதனால் சிறிது காலத்திற்குப் பின்) அது தீர்ந்து போய்விட்டது. (அறிவிப்பவர், அன்னை ஆயிஷா (ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண்: 3097)

நபி(ஸல்) அவர்கள் தம் ஆயுதத்தையும் தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும் தவிர வேறெதையும் (தாம் மரணித்தபோது)விட்டுச் செல்லவில்லை. மேலும் அவர்கள் ஒரேயொரு நிலத்தை (மட்டும்) தருமமாகவிட்டுச் சென்றார்கள். அறிவிப்பாளர், அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண் 3098)

Sunday, September 16, 2012

திருமணம் போனபின் மறுமணம் செய்வதில் ஏன் தடை!

திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும்போது நல்லதை நாடுவோம்,

விதவைகளுக்கு மறுவாழ்வு
புரட்சி“மறுமணம்”
கோரிக்கையற்று கிடக்குதண்ணே வேரில் பழுத்த  பலாமிகக் கொடியதென்று பட்டதண்ணே குளிர்கின்ற வட்டநிலா”
புரட்சிக்கவிஞன் பாரதிதாசன் மனக்குமுறலுடன் பாடிய கவிதை இது.பண்டைய காலத்தில் விதவைத் திருமணம் என்பது கிடையாது.கணவன் இறந்தால் பெண்கள் உடன்கட்டை ஏறும் (சதி) பழக்கம் இருந்தது. இறந்த கணவனை ஈமக்காட்டில் படுக்க வைத்து கட்டைகளை அடுக்கி, உயிரோடு இருக்கும் மனைவியையும் அவனோடு படுக்க வைத்து, கொடூரமாகத் தீயிட்டுக் கொளுத்தி வந்தனர். இதனால் உடன்கட்டை ஏறுவதைத் தடுக்கும் சட்டம் (சதி சட்டம்) 1829ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.

மனைவி இறந்துவிட்டால் மறுமணம் செய்து கொள்ள முதுமை அடைந்தவனும் துடிக்கின்றான். ஆனால் இளம் பெண்ணாக இருக்கும் போதே விதவையான  மங்கைக்கு மறுமணம் செய்ய உரிமை கிடையாதே என்ற வேதனையில் தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இப்படிப் பாடினார்.
‘தேடிகன்ற அன்றிலை போல் மனைவி செத்தால் பெருங்கிழவன் காதல் செய்ய பெண் கேட்கிறான்.
வாடாத பூப் போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ!’
இது போல அறிஞர்கள் பலர் விதவைத் திருமணங்களை சமுதாயத்திற்கு இருக்க வேண்டும் என்ற புரட்சிகரமான கருத்தை மக்கள் ஏற்க வேண்டும் என்பதற்காகவே இறைத்தூதர் அண்ணல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே தமது முதல் திருமணத்தை கதீஜா பிராட்டியார் (ரளியல்லாஹு அன்ஹா) என்ற விதவையுடன் செய்து கொண்டார்கள்.

விதவைகள் திருமணம் செய்து கொள்ள அனுமதி உண்டு என்பது மட்டுமல்ல; விதவைகளுக்கு மறுவாழ்வும் உண்டு.
ஒரு பெண் கணவனை இழந்த விதவையானாலும், அல்லது கணவனால் விவாகரத்துச் செய்யப்பட்டவளானாலும் மறுமணம் செய்து கொள்ள அனுமதி உண்டு. இது வெறுமனே ஏட்டளவில் இல்லாமல், சமூகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது.

Saturday, September 15, 2012

ஏன் சிலர் நல்லவர்களாகவும் மற்றவர்கள் கெட்டவர்களாகவும் இருக்கின்றார்கள்?

 ஏன் சிலர் நல்லவர்களாகவும் மற்றவர்கள் கெட்டவர்களாகவும் இருக்கின்றார்கள். இது விதியா? பிறப்பினால் வந்ததா? அல்லது வியாதியா? சிலர் நல்லவர்களாகவும் மற்றவர்கள் கெட்டவர்களாகவும் காரணங்கள் உள்ளனவா என்ற சிந்தனை நமக்கு விடை கிடைக்க உதவலாம். அதற்கு  ஏதாவது சிகிச்சை உள்ளதா என்பதிலும் நமக்குள் ஓர் ஆய்வு தேவையாகலாம்.
நல்லவர்கள் நல்லவர்களாக தொடர்ந்து இருப்பார்களா? இதனையும் நாம் சிந்திக்க வேண்டும்.
நல்லவனாவதும் கெட்டவனாவதும் இறைவன் வசம்தான் உள்ளது என்று அனைத்து பொறுப்பையும் அதன் பாரத்தையும் இறைவன் மீது போட்டு தப்பிக்க முயல்வது இயலாமையைத்தான் காட்டுகின்றது.
சூழ் நிலை, சந்தர்ப்பம் ,பரம்பரை , நட்பு இவைகள் ஒரு காரணமாய் இருந்து ஒருவர் கெட்டவர்களாக மாறிவிட்டார்
என்பதில்தான் நம் கவனம் உள்ளது. என் பையனை அவன் கெடுத்து விட்டான் என்று மற்றவர் மீது குற்றம் சாட்டி நாம் தப்பித்துக் கொள்கின்றோம் .ஒருவர்  கெட்டவராக மாறிப் போவது அவரே ஒரு காரணமாகவும் இருக்கலாம் என்பதை நாம் சிந்திப்பதில்லை.

Friday, September 14, 2012

பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது! (பகுதி -1)

பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது!

சென்னையிலிருந்து பாரிஸ் நகரத்திற்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விமானம் ரோம் நகர விமான தளத்தில் தரை இறங்கியது, அதில் எனக்கு மட்டும் அங்கு ஒரு நாள் தங்குவதற்கும் ரோம் நகரத்திற்குள் செல்லவும்  தற்கால அனுமதித்  தாள் (Temporary visa)கொடுத்ததோடு,  ரோம் நகர விமான  தளத்தில் வேலை செய்யும்  ஒரு அதிகாரி நான்  தங்குவதற்கு வசதி செய்துக் கொடுக்க தனது காரில் அழைத்துக் கொண்டு போனார்.  நான் அவருடன் பேசிக் கொண்டிருப்பதனை அவர்  விரும்பியதால் 'விடுதிக்குப்  பிறகு போகலாம் அதற்குள் ரோம் நகரத்தினை உங்களுக்கு காட்ட விரும்புகின்றேன்' எனக் கூறி தொடர்ந்தார்

வேதத்தினால் விளைந்த விவாதமும் விளக்கமும் இறைவனது பொருத்தத்திற்கு ஏற்புடையதா?

இதயம் ஒரு நபரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் பதிவு செய்துவிடும் என பண்டைய எகிப்தியர்கள் நம்பினார்கள் .ஒரு நபர் ஒரு ஒழுக்கமான நெறி தவறா வாழ்க்கை வாழ்ந்திருந்தால் அவர் சுவனம் செல்வதற்கு தகுதியுடையவராவார்  மற்றும் நிலையாக நிரந்தரமாக வாழ தகுதி அளிக்கப்படும் (சுவனத்தில் மறுவாழ்வு வாழ்வார்) என்பதும் அவர்களது நம்பிக்கை .



  பொதுவாக எல்லா மார்க்கமும் இந்த கொள்கையோடு ஒத்து போகின்றது . இஸ்லாத்தின் கொள்கையில் முக்கியமான அடிப்படை சிந்தாந்தம் முக்கியமானதாக உள்ளது . இஸ்லாம்  ஏகத்துவம் என்ற முக்கிய கொள்கையை அடிப்படையாக தன்னகத்தே கொண்டிருக்கின்றது . ஒரு நபர் ஒரு ஒழுக்கமான நெறி தவறா வாழ்க்கை வாழ்வதோடு ஏகத்துவம் ஏன்ற கொள்கையையும் தன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். இதயம் நன்மையான செயல்களுக்கு தூண்டப்படலாம் அது அவன் புகழை நாடி இருந்து இறைவன் அருளைப் பெறுவதற்கு இல்லாமல் இருப்பின் அது இறைவனால் அங்கீகரிக்கப் படாமல் போய்விடும் . அதே நேரத்தில் ஏகத்துவ கொள்கையை ஏற்றுக் கொண்டு நெறி தவறிய வாழ்கை வாழ்ந்தாலும் ஒரு பயனுமில்லை. ஒருவனே இறைவன் அவன் உருவமற்றவன் அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை அவனும் யாரையும் பெறவுமில்லை மற்றும் எங்கும் நிறைந்தவன் அவனே அனைத்துக்கும் அதிபதி ன்ற நம்பிக்கைத்தான் ஏகத்துவமாகும் .

Wednesday, September 12, 2012

குத்பா அரபி மொழியில்தான் இருக்க வேண்டுமா?



وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّلْعَالِمِينَ
 

மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. 30:22Source: http://www.tamililquran.com/ 
'குத்பா அரபு மொழியில் இருக்க வேண்டும் என்பதற்கு  எந்த ஹதீஸ்களிலும்  ஆதாரம் இருப்பதாகத்  தெரியவில்லை.
நபிகள் நாயகம்  ஸல் அவர்கள்
குத்பாவை அரபி மொழியில்தான் உரையாற்றினார்கள்.

அல்லாஹ் (இறைவன் ) மக்களுக்கு வழிகாட்டியாக ஒரு லட்சத்து இருபத்து நாலாயிரம்   நபிமார்களை அனுப்பி
யுள்ளான்.  ஆனால் குர்ஆனில் இருபத்தைந்து நபிமார்களின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டுள்ளான். அதனால் ஒவ்வொரு  மொழி பேசுபவர்களுக்கும் நபி வந்திருப்பது உறுதி . தமிழ் மக்களுக்கும் ஒரு நபியை இறைவன் அனுப்பி இருப்பான் என்றும் நாம் நம்பலாம் . நமக்கு அவர் யார் என்பது தெரியாமல் இருக்கலாம் . அந்தந்த பகுதியில் அனுப்பப் பட்ட நபிகள் அந்த மொழியிலேயே பேசி மக்களை நல்வழிப் படுத்தினார்கள் . இறுதியாக அனுப்பப் பட்ட இறைத்தூதர்தான் 
எம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்)  அவர்கள்.


ஏதாவது ஒரு மொழியில்தான் உலகளாவிய
இறைத்தூதரை அனுப்ப முடியும் என்ற ஒரே
அடிப்படையில் தான் முகம்மது நபிக்குத் தெரிந்த
அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது
 
அரபு மொழி நபியின் தாய்மொழி மற்றும் அவர்கள் பிறந்து வளர்ந்த நாட்டின் மொழி . அரேபிய நாட்டில் நபிகள் நாயகம் இருந்தமையால் குர்ஆனும் அரபிய மொழியில் இறக்கப் பட்டது.  நபிகள் நாயகம் .அரபிய நாடு அல்லாத மற்ற நாட்டு மன்னர்களுக்கும் மற்ற தலைவர்களுக்கும் அரபி மொழியிலேயே கடிதம் அனுப்பினார்கள் . அவர்கள் மொழி பெயர்ப்பாளர்களை வைத்து தனது கடிதத்தின் பொருளை அறிந்துக் கொள்வார்கள் என்பதை நாயகம் அறிவார்கள்.

ளுகர் தொழுகை நான்கு 
ரக்அத்தாக இருக்க ஜும்மா தொழுகை இரண்டு   ரக்அத்தாக உள்ளது.ஆனால் குத்பாவின் சிறப்பு அந்த விடுபட்ட இரண்டு க்அத்திற்கு தொழுகைக்கு கொடுக்கப்படும் சிறப்பினைக் கொண்டது. அதனால்தான் குத்பா நடைபெறும் பொது நாம் அவசியம் கலந்து கொள்வதும் பேசாமல் அமைதி காப்பதும் அவசியமாகின்றது.   
அதற்கு
குத்பா ஒரு மார்க்க விளக்கமாக, அல்லாஹ்வை துதி செய்வதாகவும் மற்றும் இறைவனின் அருள் நாடி வேண்டப்படுவதாக அமைதல் வேண்டும் . குதுபா ஒரு சாதாரண மேடைப் பேச்சு போன்று ஒரு காலும் அமைந்து  விடக் கூடாது. குத்பாவிற்கென்று சில விதி முறைகள் கையாளப் பட வேண்டிய அவசியம் உள்ளது . அதில் ஒரு துண்டாடப் படாத இறைவசனமும் அவசியம் சேர்க்கப் படவேண்டும். இதில் எந்த வகையிலும் தவறுகள் ந்து விடாமல் இருப்பதற்குத் தான் முதலிலேயே தயாரிக்கப்பட்டதனை  வைத்து குதுபா உரை நிகழ்த்தும் வக்கம் கடைப் பிடிக்கப்படுகின்றது. பல நாடுகளில் (அரேபிய ,மலேசிய மற்றும் பல இஸ்லாமிய நாடுகளில் அரசே குத்பா உரையை தயார் செய்து  கொடுத்து விடுகின்றது.)

பேசாமல் இருந்தால் நாம் நம் நிலை அறியோம்!


இறைவன் மானிடருக்கு கொடுத்த தனிப் பெரும் கருணை பேசுவதும் மற்றும் சிந்திப்பதும் .

ஒலி எழுப்புவத்தின்   வழியாக மற்ற இனங்களும் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றன.ஆனால் அவைகளுக்கு நம்மைப்  போல் சிறப்பான பேசும் ஆற்றலும்,  சிந்திக்கும்    திறனும்  கிடையாது .
நாம்  பேசுவதால்  நன்மையும்  தீமையும்  விளைகின்றது. அதனால் நாம் பேசும்போது கவனத்துடன் பேச வேண்டும்.
சிலர் மௌனமாக இருப்பதையே விரும்புவார்கள் . இறைவன் தந்த பேசும் ஆற்றலையும் மற்றும் சிந்திக்கும் திறனையும் முறையாக பயன்படுத்த வேண்டியது நம் கடமை

உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்!
 "நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்."
-திருக்குர்ஆன் 2:42

Tuesday, September 11, 2012

வெள்ளிக் கிழமை தொழுகைக்குக் பின் குத்பா உரை!



இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெள்ளிக் கிழமை தொழுகைக்குக் பின் குத்பா உரை நிகழ்த்திய காலம் இருந்தது. ஒருநாள் தொழுகை முடிந்தபின் குத்பா உரை நிகழ்த்திய போது ஓங்கிய ஒலியில் திஹ்துல் கலபி சஹாபி ஓர் அழைப்பு விடுத்தார்கள். 'ஸாம் நாட்டிலிருந்து பல பொருள்கள் விற்பனைக்கு கொண்டு  வந்துள்ளேன் தேவையானவர்கள் வந்து வாங்கிச் செல்லலாம்' என்பதாக. அந்த சப்தத்தை கேட்டபின் குத்பா உரை கேட்காமல் பலர் பொருள்களை வாங்க நாடி சென்று விட்டார்கள். பிலால் ரலி)  மற்றும் சுமார் பதினைந்து பேர்கள் மட்டும் குத்பா உரை கேட்பதில் ஆர்வமுடன் தங்கி விட்டார்கள். இது திஹ்துல் கலபி அவர்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு முன் நிகழ்ந்தது .(திஹ்துல்  கலபி மிகவும் அழகானவர்கள்.அவர்கள். இஸ்லாத்தில் தன்னை இனைத்துக் கொண்டார்கள் . நபி (ஸ.ல்) அவர்களுக்கு பெரும்பாலும்   வான் தூதர் ஹழ்ரத் ஜிப்ராயில்(அலை)   திஹியதுள் கலபி  சஹாபி உருவத்தில் தான் வஹியைக்  கொண்டு  வருவார்கள்  )
அப்பொழுதுதான் இறைவனிடமிருந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஒரு வசனம்  இறக்கியது.

ஸூரத்துல் முனாஃபிஃகூன்
63:9. ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். (குர்ஆன்  63:9.)

அதன் பிறகுதான் வெள்ளிக் கிழமை குத்பா உரைக்குக் பின் தொழுகையை நாயகம் அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் இரண்டு பெருநாளுக்கு மட்டும்(ஹஜ் மற்றும் நோன்புப் பெருநாள்)  தொழுகைக்குப் பின்  குத்பா உரை நிகழ்த்தப் படுகின்றது.

4895. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
நான்அவர்களுடனும். அபூ பக்ர், உமர், உஸ்மான்(ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அப்போது அவர்கள் அனைவரும் உரை (குத்பா) நிகழ்த்துவதற்கு முன் தொழுபவர்களாக இருந்தனர். அதன் பிறகே உரை நிகழ்த்துவார்கள். (உரை முடிந்த பின்) நபி(ஸல்) அவர்கள் (மிம்பர் - மேடையிலிருந்து) இறங்கி, மக்களைத் தம் கையால் அமரச் செய்ததை இன்றும் நான் (என் கண்ணெதிரே) காண்பது போல் உள்ளது.

Sunday, September 9, 2012

Salaam Express தக்பீர் பாடல் - அன்புடன் புகாரி

அது ஓர் இனிய அனுபவம். முபீன் என்பவர் அமீர் என்ற என் நண்பர் மூலம் எனக்கு ஒரு மடல் இட்டிருந்தார்.

ஓர் இஸ்லாமிய பாடல் எழுத விருப்பமா என்று கேட்டிருந்தார். மகிழ்ச்சியோடு சம்மதித்தேன்.

நான் எழுதிய முதல் இஸ்லாமியப் பாடல்.

கருத்துக்கள் வந்தால் மகிழ்வேன் - நன்றி
அன்புடன் புகாரி


எழில் தரும் எகிப்து

எகிப்தின் நைல் நதி எகிப்தின்  பண்டைய நாகரீகத்தின் வளர்ச்சிக்கு முக்கியமாக அமைந்து விட்டது .கிளியோபாத்திரா எகிப்தின்  புகழ் வாய்ந்த ராணியாக இருந்த சரித்திரம் மிகவும் புகழ் பெற்றது .     கெய்ரோ இந்நாட்டின் தலைநகர் ஆகும். சூயஸ் கால்வாயை நாட்டுடைமையாக்கி பிரான்ஸ், இங்கிலாந்து அரசின் ஏகபோகத்தை ஒழித்த பெருமையைப்  பெற்றவர் கமால் அப்துல் நாசர் அவர்கள்

அரபுகளின் வரலாற்றிலும், நபிமார்களின் வரலாற்றிலும் எகிப்துக்கு தனி இடம் உண்டு.

Saturday, September 8, 2012

நினைவின் நதியில்.......

அவனைப் பார்த்தே
அநேக வருடங்கள் ஆகியிருந்தன
இன்னமும் நினைவிலிருக்கிறது
கடைசியாய் அவனுடன்
கொண்ட கோபம்

பள்ளிக்கூடக் குறிப்பேட்டில்
பதிந்திருந்த சச்சரவை
இருவருமே மறக்காமல்
இதயத்தில் குறித்துக்கொண்டோம்

கைகலப்பில் கீறல்கள்
உடலங்கள் மீதில்.

அவ்வப்போது
வரும் நினைவுகளிலும்
அவனுக்கு மட்டும் ஏனோ
கோப முகம்.

அன்றொரு நாள்
பழைய நண்பனின் திருமணத்தில்
பார்வையில் பட்டோம் பரஸ்பரம்

பாறையில் பூத்த மலராய்
பழைய கோபங்களின் மீது
பூத்த புன்னகை
பெருஞ்சிரிப்பாய் வெடித்த போது
நாங்கள்
பால்யத்துக்குத் திரும்பியிருந்தோம்.

 பக்ருதீன் இப்னு ஹம்துன்



Friday, September 7, 2012

திகைக்க வைக்கும் துபாய் -Stunning Dubai


துபாயை அறியாதோர் யாரும் இல்லை. இருப்பினும் நம் மக்களுக்கு வேலை தருவதில் முக்கிய அங்கம் வகிக்கும் நகரங்களில் துபாய் இருக்கும் பொழுது அது நம் நினைவில் வந்துக்  கொண்டே இருக்கின்றது , ஏதோ ஒரு வகையில் நம் குடும்பத்தில் உள்ளோர் ஒருவர் அங்கு சென்று வேலை செய்து வருவதனை நாம் அறிவோம்,
 எங்கள்குடும்பத்திலும் அதிகம் நபர் துபாயில் அதிகம் உள்ளனர்.
                                                  
துபாய்  ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பெரிய நகரமாகும். அங்கு போதிய அளவு எண்ணெய் வளம்  இல்லாததால் துபாய் தன கவனத்தினை வேறு ஒரு வகையை தேடிக் கொண்டு அதில் வெற்றியும் பெற்ற நகரமாக விளங்குகின்றது . ஹாங்காங் போன்று தன்னை ஒரு உலக சந்தை கூடமாக தன்னை உருவாக்கிக் கொண்டது . ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் இது மிகவும் பிரசித்திப் பெற்றது. இது ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும் இஸ்லாமியர் மட்டுமில்லாமல் அனைத்து மார்க்கத்தினை சார்ந்த மக்களும் இங்கு வாழ்கின்றனர்.(இஸ்லாமிய நாடாக இருந்தாலும் அனைத்து கேளிக்கைகளுக்கும்  அது இடமாகவும் உள்ளது)
   இஸ்லாமியர், கிருத்துவர்கள் மற்றும் இந்துக்கள் பெருமளவில் உள்ளனர். அனைத்து மத மக்களும் இங்கே நல்லிணக்கத்தோடு வாழ்கின்றனர்.ஆனால் அரபியர்களைத் தவிர மற்றவர்களுக்கு அது குடிஉரிமை கொடுப்பதில்லை.வெளிநாட்டு  முதலீடு பெருக சில பகுதிகளில் சொத்து வாங்க அனுமதி அளித்துள்ளது .  துபாயைச் சார்ந்த அரபியர்களைக்  காட்டிலும் மற்ற மக்களே மிகைத்து அங்கு உள்ளனர்.

Thursday, September 6, 2012

ஹஜ் பயணத்தால் ஏற்பட்ட மற்ற நன்மைகள் .

ஹஜ்  செய்வது  உடல் தெம்பு மற்றும் வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகின்றது . இஸ்லாம் பல நாடுகளில் பரவிய காலங்களில் முன்பெல்லாம் இப்பொழுதுள்ள வசதிகள் கிடையாது . அதனால் பல நாடுகளிலிருந்து  ஹஜ் செய்ய வரும் மக்கள்   ஹஜ் செய்வதற்குரிய போக்கு வரத்து பற்றிய வழிகளை பற்றி ஆய்வு செய்ய முற்படுவார்கள் . அது முஸ்லிம் மக்களிடையே நிலவியல் ஆராய்ச்சிக்கு வழி வகுத்தது.முஸ்லிம்கள் நிலவியல் சம்பந்தமான நூல்களை அப்பொழுதே எழுதி உள்ளனர். பல இடங்களை கடந்து வரும்போது பலதிறப்பட்ட மக்களை சந்திக்கும் வாய்ப்பினையும் உருவாகியது . அது வியாபார நுட்பங்களையும் மற்றும் ஒருவருக்கொருவர் உறவாடிக் கொள்வதில் அன்பினைப் பரிமாறிக் கொள்வதோடு ,ஏற்றத் தாழ்வின்றி ,நிற வேறுபாடின்றி ஒருவருக்கொருவருவர் உதவி செய்துக்  கொள்வதிலும் மனித பண்பினை மேன்மை படுத்தியது . முஸ்லிம்களுக்குள் ஓர் ஒற்றுமையை உண்டாக்கியதில் ஹஜ் ஓர் பெரிய பங்கினைத் தருகின்றது
கிப்லாவினை நோக்கி தொழுவதற்கு திசை கண்டுபிடிக்கும் கருவியினை முஸ்லிம்கள் கண்டுபிடித்தனர் 


வாஸ்கோ டி காமா இந்தியாவை நோக்கி பயணம் செய்வதற்கு 'கடலின் சிங்கம்' என்று அழைக்கப்பட்ட ஷிஹாப் அல் டின் அகமது இபின் மஜித் உதவி மிகவும்  முக்கியமானதாகும். ஷிஹாப் அல் டின் அகமது இபின் மஜித் அவர்கள் கடலியல் வழிசெலுத்தல் சம்பந்தமாக பல கையேடுகளின் ஆசிரியராவார்.

Tuesday, September 4, 2012

பேரழிவு ஆயூதங்களை ஆரம்பித்து வைத்தவர் யார்?

பேரழிவு ஆயூதங்களை  ஆரம்பித்து  வைத்தவர் யார்?

இஸ்லாமியர்களில் விஞ்ஞானம் கண்டுபிடிப்புகள் கணக்கிலடங்காதவை
கி .பி. 700 முதல்1200 வரை இஸ்லாமியர்களின் கண்டுபிடிப்புகள் ஏராளம் .
முஸ்லிம்கள் கண்டுபிடிப்புகளில் ஒன்று கூட மக்களை அழிக்கக் கூடிய கண்டுபிடிப்புகளாக இருந்ததில்லை.
ஹைட்ரோ க்ளோரிக் அமிலத்தை கி. பி. 800 ரில் அபு மூஸா ஜாபிர் இப்ன் ஹய்யான் (Geber) கண்டுபிடித்தார்
ஜாபிர் இப்னு அல் ஹய்யான் இஸ்லாமிய விஞ்ஞானி ஆனால் ஆங்கிலேயர் முஸ்லிம் என்று அறியாதவாறு அவரை geber ஜெபர் என்று அறிவிக்கின்றனர்
ஜாபிர் இப்னு அல் ஹய்யான் கண்டு பிடித்த அமிலங்கள்
Hydrochloric acid

Nitric AcidHNO3

Sulfuric AcidH2SO4

தங்கத்தை கரைக்கக் கூடிய  அஃஉஆ ரிஜியா அமிலத்தை   கண்டுபிடித்தவர் யார் .  அதிலிருந்து மற்றவைகள் தொடர்ந்தன.
ஹைட்ரோ க்ளோரிக் அமிலத்தை கி. பி. 800  ரில்   அபு  மூஸா  ஜாபிர்  இப்ன்  ஹய்யான்  (Geber) கண்டுபிடித்தார்

இஸ்லாமிய விஞ்சானி என்று அறியாதவாறு நாம் இருக்கின்றோம்
இஸ்லாம் கொடுத்த விஞ்ஞானம் வைத்து மற்றவைகள் உருவாகியது அநேகம் .

அபு  அல் -ரய்ஹான்  முஹம்மது  இப்ன்  அஹ்மத்  அபு  அல் -ரய்ஹான் 

http://en.wikipedia.org/wiki/Ab%C5%AB_Ray%E1%B8%A5%C4%81n_al-B%C4%ABr%C5%ABn%C4%AB

நாம் இஸ்லாமியர்களின் அறிவின் ஆற்றல்களை அறியாமல் மற்றும் தெரிந்து கொள்ளாமல் உள்ளோம்.
இவைகளை நாம் மக்களுக்கு அறிய வைக்க வேண்டியது நம் கடமை


Please visit http://www.1001inventions.com/

Geber -
 http://en.wikipedia.org/wiki/J%C4%81bir_ibn_Hayy%C4%81n

Who invented aqua regia

Who invented aqua regia?
An Arab scientist Jabir Bin Hayan in 800 AD

 ஆனால் ஆங்கிலயர்களும் இஸ்ரேலியர்களும்தான் மக்களை அழிக்கக் கூடிய பேரழிவு ஆயூதங்களை  (கண்டுபிடுப்புகளை) தொடக்கி வைத்தார்கள்.

Monday, September 3, 2012

அது ஒரு நூல்


அது
ஒரு நூல்

அந்த
அற்புத நூல்
உன் கைகளில்

உனக்கும்
அந்த நூலுக்கும்
விட்டுப் பிரிவதியலாத்
தொடர்பு

ஆனால்
பரிதாப ஆச்சரியம்
யாதெனிலோ
அந்த நூல் பற்றி
ஏதும் தெரியாது
உனக்கு

வெறுமனே
அதை வாசித்தாலே
நன்மைகள் கோடி என்ற
பிழையான நினைப்புதான்
உனக்கு

நீ கற்றவன்
ஆனால் அந்த நூலை
நீ கற்றதில்லை

வெட்கம் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் இருக்க வேண்டியது.


வெட்கம் என்பது ஆண் பெண்  இருபாலருக்கும் இருக்க வேண்டிய ஒன்று
வெட்கப்படுவதற்கு வெட்கப் பட்டுத்தானே ஆகவேண்டும். வெட்கப்படும் குணம் மனிதப் பிறவிக்கு கொடுக்கப் பட்ட மகத்தான அருள். வெக்கப் படுவது பெண்களுக்கு மட்டும் தேவையானது என நினைக்க வேண்டாம் . அது ஆணுக்கும் மிகவும் அவசியமானது. அந்த மாண்பு இயற்கையாக
நல்லோர்களுக்கு தானே வந்தடையும்.வெட்கப்படுவதனை விரும்பாமல் இருப்பவர்களும் உள்ளனர்.அந்த குணம் அவர்களுக்கு இருந்தாலும் அதனை தன்னிடம் வராமல் இருக்க அவர்கள் வாழும் முறையில் ஏற்பட்ட மாற்றத்தினால் வந்ததாகும்.

வெட்கப்படும்  போது அந்த நபரின் முகத்தில் மாறுதல் ஏற்பட்டு அவர் முகம்   சிவப்பாக மாறுவதனை நாம் காண முடியும்.வெட்கப்படுவதின் செயல்முறை போது, அந்த நபரின் பரிவு நரம்பு விரிவடைவத்தின் காரணமாக  இரத்தம் தோல் மற்றும் முகத்தில் ஒரு சிவப்பாக்குதல் விளைவாக, இரத்த நாளங்களின் வேலை அதிகரிக்கும்.

Sunday, September 2, 2012

இஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்....


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் நிலவுவதாக...ஆமின்.

சில சகோதர/சகோதரிகளை நீங்கள் கண்டிருக்கலாம். அவர்கள் இஸ்லாத்தை நன்கு ஆராய்ந்திருப்பர்,  இஸ்லாத்தை தழுவ வேண்டுமென்ற முடிவிற்கும் வந்திருப்பர். ஆனால்......

முன்னே பார்த்த பத்தியை நீங்கள் பல காரணங்களை போட்டு பூர்த்தி செய்யலாம். அவற்றில் குடும்ப நிலவரங்கள், இஸ்லாத்தை ஏற்றால் பல கட்டுபாடுகளை பின்பற்ற வேண்டுமோ? என்பது போன்ற காரணங்கள் முக்கியமானவை.

இந்த பதிவு உளவியல் ரீதியாக இப்பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் அந்த சகோதர/சகோதரிகளுக்காக....

இந்த பதிவில் நாம் பார்க்கப்போகும் நபரும் இது மாதிரியான போராட்டத்தை சந்தித்தவர் தான். தன் மனைவி இஸ்லாத்தை ஏற்கும் வரை தானும் ஏற்கபோவதில்லை என்று நிபந்தனை போட்டவர்.

அவர் சகோதரர் ஜெறோம் பௌல்டர் (Jerome Boulter) அவர்கள். பிரிட்டன் நாட்டவரான இவர் இன்று மதினாவின் தைபாஹ் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிகின்றார். (இவரை தொடர்பு கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியை காணவும்).

பணி நிமித்தமாக சௌதி அரேபியாவிற்கு வந்த அவருக்கு குரான் அறிமுகமாக, சில நாட்களில் குரான் இறைவேதமென்ற முடிவுக்கு வந்து இஸ்லாத்தை தழுவலாம் என்ற முடிவுக்கும் வந்தார். ஆனால்............................


"எனக்கு தெளிவாகி விட்டது. குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் இறைவனின் தன்மைகளைத்தான் என்னால் தொடர்புபடுத்தி பார்க்க முடிகின்றது.

இப்போது என் குடும்பத்தை நினைத்து பார்த்தேன். என் மனதுக்குள் இருக்கும் மூன்று பிரச்சனைகள் விலகி விட்டால் இஸ்லாத்தை தழுவுவதென முடிவெடுத்தேன். அவை,

    என் மனைவியும் இஸ்லாத்தை தழுவ வேண்டும்.
    அவர் தன்னுடைய வேலையை விட்டு விலகிவிட்டு என்னுடன் சௌதி அரேபியா வந்து வாழ வேண்டும்.
    எனக்கும் அவருக்கும் இருக்கும் ஒரு தனிப்பட்ட பிரச்சனை தீர வேண்டும்.


என்னுடைய இந்த நிபந்தனைகள் நிறைவேறும் வரை இஸ்லாத்தை தழுவுவதை தள்ளி போடுவதென முடிவெடுத்தேன்.

இது தொடர்பாக என் மனைவியுடன் பேச ஆரம்பித்தேன். இமெயில் இமெயிலாக அனுப்பினேன். msnனில் நீண்ட நேரம் இது குறித்து பேசியிருக்கின்றோம். இன்டர்நெட்டில் கிடைக்கக்கூடிய இஸ்லாம் குறித்த தகவல்களை ஆவலுடன் பகிர்ந்து கொள்வேன். அதிலும் குறிப்பாக, இஸ்லாம் புதிய மார்க்கமில்லை என்பதையும், கிருத்துவத்தின் தவறுகளை களைய வந்த மார்க்கமென்பதையும் சுட்டி காட்டுவேன்.

என்னுடைய இந்த ஆர்வம் என் மனைவியை திகிலடைய செய்தது. ஒருமுறை கேட்டே விட்டார்,


"எனக்கென்னவோ நீங்கள் இஸ்லாத்தை தழுவி விட்டதாக தோன்றுகின்றது"

இதனை கேட்டவுடன் பேசுவதை சற்று நேரம் நிறுத்திவிட்டேன்.

ஆம்... நான் அப்போது தான் உணர்ந்தேன், என் வாயால் தான் நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை, மனதாலோ அந்த அடியை எடுத்து வைத்து விட்டேனென்று. என் மனைவிக்கு நான் சொன்ன பதிலும் இதையே பிரதிபலித்தது.

"ஆம், நான் ஏற்றுக்கொண்டேன்"

அவ்வளவுதான்...அந்த சமயத்திலிருந்து என் மனைவி என்னை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். இவ்வளவு பெரிய முடிவை நான் எடுக்கும் முன் அவரிடம் ஏன் ஆலோசிக்கவில்லை என்று கோபப்பட்டார். நான் அவரை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தேன்.