Thursday, May 31, 2012

அரபுதேசப் பிரவேசம்

பசி வந்தால்
பத்தும் பறந்துபோகும்
அப்படி ஒரு பசி
அவனுக்கும்
வந்தது

அஃறிணைத் தோட்டத்தில்
ஆகாரம் கிடைப்பதாய்க்
கேள்வி

மனக்குரல் பாதங்களில்
கிழிந்து கூக்குரலிட
அவமதித்தி
அவசரமாய் நடந்தான்

எதிரே நரிவர
நரியானான்

நாய்வர
குரைத்தான்

ஆந்தைவர
இமைகளைத் தொலைத்தான்

இன்று அவனிடம்
பசியும் இல்லை
Source : http://anbudanbuhari.blogspot.in/

Wednesday, May 30, 2012

சர்வாதிகாரம் இஸ்லாத்தில் கிடையாது ! ராணுவ ஆட்சியையும் இஸ்லாம் ஆதரிக்கவில்லை.

சர்வாதிகாரம் இஸ்லாத்தில்  கிடையாது. நினைத்தவாறு நடக்கும் ஒரு அரசினை இஸ்லாம் அனுமதிக்கவில்லை

  இறைவனால் அருளப்பட்ட  மார்க்கம் இஸ்லாம். அது ராணுவ ஆட்சியை
ஆதரிக்கவில்லை. அதுபோல்  இஸ்லாத்தில் யாரையும் கட்டாயப் படுத்தி இணைக்க வேண்டிய அவசியமில்லை மற்றும் அது அனுமதிக்கவுமில்லை

    "(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்." (2:256)

  யாரும் இஸ்லாத்திற்கு வர விரும்பினால் அவர்கள் சுய சிந்தனையோடு அவர்கள் விரும்பியே இஸ்லாத்திற்குள் இணைவதனை இஸ்லாம் விரும்புவதுடன் அதுதான் இஸ்லாமிய சட்டமாக உள்ளது. யாரையும் கட்டாயப்படுத்தி முஸ்லிமாக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் கொள்கையாக இருக்கும் நிலையில் ஒரு முஸ்லீம் இராணுவ பலத்தைக் கொண்டு சர்வாதிகாரியாக இருந்து தனது ஆட்சியை திணிக்க உரிமை கிடையாது..

    முஹம்மது நபிக்குப் பிறகு இஸ்லாத்தில் வந்த நான்கு கலிபாக்களும் மக்களால்,சஹாபாக்களால்   தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அவர்கள் பரவலான ஆதரவும் மற்றும் மரியாதையும்  பெற்று ஆட்சி செய்து மகிழ்ந்தனர். ஹஸ்ரத் அபுபக்கர் (ரலி)ஹஸ்ரத்உமர்(ரலி),ஹஸ்ரத் உதுமான்(ரலி),மற்றும் ஹஸ்ரத்அலி (ரலி)சமூகத்தின் நம்பகமான பெரியவர்கள் குழுக்களில் தேர்ந்தெடுக்கப்படும் போது ஹஸ்ரத் அபுபக்கர் (ரலி)திறந்த பொது இடத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.கலிப் அமீர் முவையா சரியாக வழிநடத்திய ஆட்சியாளர். அமீர் முவையா தனது  மகனை தன்னிச்சையாக   ஆட்சி செய்ய நியமனம் செய்தார்.  அமீர் முவையாவின் மகனார் முறையற்ற வழியில் ஆட்சியை கைப்பற்றி தவறான இராணுவ ஆட்சி செய்ததால் அதனை எதிர்த்துப் போராடிய நபியின்  சொந்த பேரன் ஹஸ்ரத் இமாம் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் மற்றவர்கள் வேண்டுதலுக்கு இணங்க எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை உண்டானது.

 இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்.(42:38)

    குரானும் நபிவழியும்தான்  முஸ்லிம்களுக்கு வழிகாட்டி. அதன்படி வாழ்பவனே முஸ்லிம். எதேச்சையான அதிகாரத்திற்கும், ராணுவ முறையில் ஆட்சியை கைப்பற்றுவதும் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாததினால் இஸ்லாமிய கிராமங்களில் கூட தொன்றுதொட்டு மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட ஒருவர்தான் வழி நடத்தப் பட அனுமதிக்கப்படுகின்றார். அது 'முத்தவல்லி'யாகவோ அல்லது  நாட்டாண்மை பஞ்சாயத்தாக மற்றும் நிர்வாகத்தினராக  இருந்தாலும் இதுதான் இஸ்லாம் காட்டிய வழி. இந்த நிலை இருக்கும்போது எந்த ஒரு நாட்டையும்  ராணுவ முறையில் ஆட்சியைக்  கைப்பட்ற இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தவறான முறையில் ஆட்சிக்கு வருவதனை தடுத்து நிறுத்துவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாக்கப் பட்டுள்ளது .

 பல இஸ்லாமிய நாடுகளில் ராணுவ ஆட்சி நடைப் பெருவதனைப் நாம் பார்க்கின்றோம். ஏன் சில முஸ்லீம்கள் மக்களாட்சி  பற்றி ஆர்வமாக இல்லை? மக்கள் விருப்பப்படியா பல இஸ்லாமிய நாடுகளில் ராணுவ ஆட்சி நடைப்பெருகின்றது?  அதிகாரத்தை மக்கள் இருந்து எடுக்கப்பட்டது யாருடைய "ஆலோசனை"?

 இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும்  உரிமைகள் மற்றும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் முறைதான் மகிழ்ச்சியடைய வைக்கும் .இது அனைவருக்கும் பொருந்தும்.

 சர்வாதிகாரர்களின்   ஆட்சி கேவலமான முறையில் வீழ்த்தப் படுவதனை உலகம் கண்டுதான் வருகின்றது, இவர்கள் முறையற்ற முறையில் ஆட்சிக்கு வந்தாலும் தவறான முறையில் ஆட்சி செய்தாலும் மக்களிடமும் இறைவனிடமும் பதில் சொல்லியாக வேண்டும், அதற்கு துணைபோபவர்களும் விடுபடமாட்டார்கள். முசோலினி, ஹிட்லர் போன்றவர்களும்  கடைசியில் தோல்வியைத்தான் தழுவினார்கள்,உலகத்தில் இப்பொழுதும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில்    அதே நிலை தொடர்கின்றது. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன். வேண்டாம் தவறான பாதை. வாழுங்கள் வாழவிடுங்கள்.   சர்வாதிகாரம் இஸ்லாத்தில்  கிடையாது. ராணுவ ஆட்சியையும் இஸ்லாம் ஆதரிக்கவில்லை.



Tuesday, May 29, 2012

இமாம் கஸ்ஸாலி+Mohammad Ghazali - Medieval Persian Scientist and Philosophers

இமாம் கஸ்ஸாலியின் இரக்ககுணம்

இமாம் கஸ்ஸாலி (ரஹ்)அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் ”ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்” - ”அறிவுலகப்பேரொளி” என்று போற்றப்பட்டவர்.இவர் ”இஹ்யாவு உலூமித்தீன்”,”கீமியாயே சாஆதத்” என்ற மாபெரும் நூற்களை புனைந்து வரலாறு போற்றப்படும் பேரறிஞர்.இவர் எழுதிய நூற்கள் காலவெள்ளத்தைக்கடந்தும் நிலைத்து நிற்பவை.

ஒரு நாள் அவர் தம் எழுது கோலால் மையை தோய்த்து எழுதிக்கொண்டிருந்தார்.அப்பொழுது ஒரு ஈ அவரது எழுதுகோலின் முனையில் வந்து அமர்ந்து அதிலிருந்த மையை குடித்தது.அந்தக்காலத்தில் மைகள் எல்லாம் அரிசி,மாவில் இருந்துதான் தயாரிக்கப்படும்.

ஈ தன் தாகம் தீரும் வரை குடிக்கட்டும் என்று எழுது கோலை ஆடாமல் அசையாமல் பிடித்து இருந்தார்.ஈ தன் தாகம் தீரும் மட்டும் குடித்து விட்டு அங்கிருந்து பறந்து சென்றது.அது வரை பொறுமையுடன் காத்திருந்து பிற்பாடே அவர் மறுபடியும் தொடர்ந்து எழுதத்தொடங்கினார்.அவரது இந்த இரக்க சுபாவம் காலவெள்ளத்தைக்கடந்தும் போற்றப்படுகின்றது.
Source : http://allaaahuakbar.blogspot.in/
 

Please click here to read more


"வைகல் தோறும் தெய்வம் தொழு" ‘‘தூக்கத்தை விட தொழுகை மேலானது தொழ வாருங்கள்"

"ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம்" என்று காலை விடியல் வேளை தொழ அழைக்கும் பாங்குக்கு இரண்டு முறை சொலப்படுகின்றது. இப்பொழுதெல்லாம் பல ஊர்களில் தொழ ஆறம்பிக்கும் சுமார் பத்து நிமிடத்திற்கு   முன் ‘‘தூக்கத்தை விட தொழுகை மேலானது தொழ வாருங்கள்" என்று தமிழில் சொல்லி அழைக்கவும் செய்கின்றனர்
‘‘தூக்கத்தை விட தொழுகை மேலானது எழுந்து வாருங்கள்" ("ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம்") என்று விடியல் வேளையில் தொழுகைக்கு அழைப்பவர் இரண்டு முறை குரல் கொடுக்கின்றார்.

 (தொழுகைக்காக மக்களை அழைப்பது பற்றி ஆலோசனை நடந்த போது) சிலர் நெருபபை மூட்டுவோம் என்றனர். சிலர் மணி அடிப்பதன் மூலம் அழைக்கலாம் என்றனர். அவையெல்லாம் யூத, கிறித்தவ கலாச்சாரம் என்று (சிலரால் மறுத்துக்) கூறப்பட்டது. அப்போது பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தை ஒற்றைப் படையாகவும் கூறுமாறு பிலால்(ரலி) ஏவப்பட்டார்கள். அனஸ்(ரலி) அறிவித்தார் (- ஹதீஸ் 603.புகாரி )

12ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த ஔவையார் "வைகல் தோறும் தெய்வம் தொழு" என்பதும் "ஆலயம் தொழுவது சாலவும் நன்று"  என்பதும் இஸ்லாமிய சமுதாயத்தில் பள்ளிவாசலில் சென்று தொழுவதற்கு கொடுக்கும் முக்கியதிற்கும் மற்றும் காலைத் தொழுகையான  ஃபஜர்  தொழுகை மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது என்பதற்கும் பொருந்துவதனைக் காண மகிழ்வாக இருக்கின்றது.

காலையில் எப்படியாவது வைகறை [பஜர் ] தொழுகைக்கு எழுந்தாக வேண்டும்.தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுது வந்தால் உடலின் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைத்திருக்கலாம்.

ஜமாஅத்து(கூட்டுத்)தொழுகை தொழுகையைக் கடைபிடியுங்கள். ஜகாத்தையும் கொடுத்து விடுங்கள். ருகூஃ செய்வோருடன் சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்! (2:43)

ஒரு மனிதர் தனித்துத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.அறி:இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:புகாரி,முஸ்லிம்,திர்மிதி
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஓதுவதற்கு இஸ்லாம் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றது.
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. 96:௧

இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.(2:151)

(யாவற்றையும்) படைத்த உம்முடைய தொழுகை திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. ( குர்ஆன் 96: 1)

 ஔவையாரும் இதனை "ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்" -ஔவையார்
 மூன்று ஔவையார் வாழ்ந்ததாகவும் அவர்கள் பெண் பாவலர் என்றும் சொல்கின்றார்கள்

Monday, May 28, 2012

இறைவன் ஆணா? பெண்ணா?

சத்யமார்க்கம் http://www.satyamargam.com/1853 கட்டுரையை வாசித்தேன். குர்-ஆன் வரிகளுக்கு நேரடிப் பொருளையே தரும் சாதாரண கட்டுரையாகவே அது இருந்தது.

ஆனால் அங்கே ஒரு பொற்குவியலையே என். சர்ஃபாத் அஹ்மது என்பவர் கொட்டித் தந்திருக்கிறார்.

அதன்படி, இறைவன் என்பவன் ஆண் பெண் என்ற பாலினத்திற்கு அப்பாற்பட்டவன்.

அஃறிணை உயர்திணை என்கின்ற திணைகளுக்கும் அப்பாற்பட்டவன்.

இறைவனை அவன் என்று அவனே கூறுவது, மரியாதை நிமித்தமாகக் கூறப்படும் கால வழக்குச் சொற்கள் காரணமாகவேயன்றி வேறில்லை.

சில இடங்களில் ’அவன் கூறுகிறான்’ என்பதுபோல ஒருமையிலும் சில இடங்களில் ’நாம் கூறினோம்’ என்பது போல பன்மையிலும் இறைவன் குறிப்பிடப்படுகிறான்.

நாம் கூறினோம் என்பதை நேரடிப் பொருளாக எடுத்துக்கொண்டு, இறைவன் ஒருவன் அல்லன், பலர் என்று கூறுவது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் இறைவன் ஆண்பால் என்று கூறுவதும்.
* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *
Source : http://anbudanbuhari.blogspot.in

ஆள்பவனே நீ யார்! உன்னிடம் சில கேள்வி ?

இதனையும் கிளிக் செய்து படியுங்கள்    

Is Allah Masculine in Gender

Question:
Why do we quote Allah (swt) as - Him/His ?

                                                                                                                                                          - Jameela Arif

Answer:
a) The Arabic word 'Allah' has no gender. The Arabic grammar has only two genders, male and female and male gender is of two types:

1. Masculine Haqeeqi i.e. Real, which is used to denote the masculine gender in humans, animals.

2. Masculine Majazi i.e. Unreal, wherein it is used as Masculine but in reality it is not so e.g. (Angels) Malak, Layl (Night), Bab (door). The word Allah (swt), too falls in the second category i.e. Masculine Majazi.

The English language has got three genders; male, female and neutral. So if we translate the Arabic word 'huwa' into English, it can be translated as 'he' or 'it'. And the Arabic word 'hiya' can be translated as 'she' or 'it'.

Allah (swt) is unique and cannot be referred as 'it' in English, since Allah (swt) has no gender, neither male nor female or neutral.

Some people may argue that the Arabic word 'huwa' and 'hiya' both can be used for 'it' or neutral gender, then why Allah has used 'huwa' and not 'hiya' ?

In Arabic grammar there are certain rules and criteria for feminine gender. First, if it is female by nature, like the word mother (ummum), it becomes feminine in gender. Allah is not a female. Second, if it ends with the third Arabic letter 'ta' like 'mirwahtun' (fan), it becomes feminine. The Arabic word 'Allah' doesn't end with 'ta' so it cannot be feminine. Third, if the word ends with 'Alif Mamduda'  (big Alif), it becomes feminine. But the Arabic word 'Allah' doesn't end with 'Alif Mamduda' so, it cannot be feminine. And lastly, if the object occurs in pairs, like pairs of the body, e.g. 'Ainun' (eyes), 'yadun' (hands), they are considered feminine. But Allah (swt) says in the Glorious Qur'an in Surah Ikhlas, chapter 112, verse 1"

 Please click here to read more Source  :http://www.irf.net/index.php?

குர்ஆன் அல்லாஹ்வினால் அருளப்பட்ட திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை,

This is the Book about which there is no doubt, a guidance for those conscious of Allah -
இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.(குர்ஆன்- 2:2)

 Sahih International
And who believe in what has been revealed to you, [O Muhammad], and what was revealed before you, and of the Hereafter they are certain [in faith].
(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.2:4

Sahih International
Those are upon [right] guidance from their Lord, and it is those who are the successful.
இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.

And if you are in doubt about what We have sent down upon Our Servant [Muhammad], then produce a surah the like thereof and call upon your witnesses other than Allah , if you should be truthful.(குர்ஆன்- 2:5)
இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள்.(குர்ஆன்- 2:23)  

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு - கருத்தாடல் 2

 அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது என்று யூதர்கள் கூறுகிறார்கள்;. அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன 5:64


இதன்படி அல்லாஹ்வுக்கு கைகள் இருக்கின்றன என்று சிலர் கூறுகிறார்கள். அதனால் இறைவன் உருவம் உடையவன் என்கிறார்கள். ஆனால் மேலே உள்ள வசனத்தை எப்படிப் பொருள் கொள்ளலாம் என்று பார்க்கலாம். குர்-ஆன் வசனங்கள் கவிதை நடையிலேயே இருக்கின்றன. அவற்றுக்குக் கவிதைமனம் கொண்டவர்களால்தான் சரியாக விளக்கம் கூற முடியும்.

அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன என்று யூதர்களைப் பார்த்து இந்த வசனம் இறங்கி இருக்கிறது. இந்த வசனம் இறங்கியபோது, யூதர்களின் கைகள் கயிற்றால் பிணைத்து கட்டப்பட்டு இருந்தனவா? இல்லையே? பிறகு ஏன் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது?

ஒருவனின் கைகள் கயிற்றால் கட்டப்படாதிருக்கும்போது, என் கைகள் கட்டப்பட்ட நிலையில் நான் நிற்கிறேன் என்று ஒருவன் சொன்னால் அதற்கு என்ன பொருள்? தன்னால் இயன்றதை தன்னால் செய்யமுடியாத இக்கட்டில் நான் நிற்று தவிக்கிறேன் என்று பொருளல்லவா?

யூதர்களின் கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன என்று கூறினால், யூதர்களால்தான் எதையும் செய்யமுடியாது என்று இறைவன் கூறுவதல்லவா? குர்-ஆன் வசனங்களை எப்போதும் நேரடியாப் பொருள் கொள்ளக்கூடாது. அப்படிப் பொருள் கொண்டால் அது அபத்தான நிலைக்கு நம்மைக் கொண்டுபோய் விட்டுவிடும். அறிவுடையோனாய் இருப்பவனே இஸ்லாமியன் என்றுதான் இஸ்லாம் கூறுகிறது. நம் அறிவை முழுவதும் பயன்படுத்திச் சரியான பொருளை விளங்கிக்கொள்வது தேவையான ஒன்றல்லவா?

அல்லாஹ்வின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன என்று யூதர்கள் சொன்னால் அதன் பொருள் என்ன? அல்லாஹ்வால் எதையும் செய்யமுடியாது என்று ஏளனம் செய்து அதை நம்பவும் வைத்து இஸ்லாமியர்களின் நம்பிக்கையை உடைத்தெறியும் நோக்கமல்லவா? அதற்காகவே தொடுக்கப்பட்ட ஏளனச் சொற்கள் அல்லவா அவை?

இங்கே கைகள், கைகள் என்று கூறுவது, யூதர்களுக்கும் வெறும் கைகள் அல்ல, இறைவனுக்கும் வெறும் கைகள் அல்ல என்பது தெளிவாகிறதா?

இங்கே கை என்பது சக்தி. ஆகவே அந்தக் குர்-ஆன் வசனத்திற்கு என் விளக்கம் இதோ:

அல்லாஹ்வால் எதையும் செய்ய முடியாது அதற்கான சக்தி அவனிடம் இல்லை என்று யூதர்கள் கூறுகிறார்கள். யூதர்களுக்குத்தான் எதையும் செய்யக்கூடிய சக்தி இல்லை. இப்படி யூதர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் இறைவனால் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வோ எதையும் செய்யக்கூடிய வல்லமையை வேண்டும் மட்டும் பெற்று இருக்கிறான்

Source : http://anbudanbuhari.blogspot.in/

'லாஇலாஹா இல்லல்லாஹ்' - தனித்தவன், இணையற்றவன்.

தயவு செய்து இதனை க்ளிக் செய்து படியுங்கள்   "அற்புதம் என்றாலும் ஆண்டவன் என்றாலும் " என்ற இந்த அர்த்தமுள்ள பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் எனது ஆசிரியத் தந்தை நீடூர் வக்கில் S.E.A. முஹம்மது சயீத் அவர்கள்.
- தேரிழந்தூர் தாஜுதீன்

பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் ,

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு - கருத்தாடல் 1


அப்துல் லத்தீப் - அர அல: அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு. இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு பின்னர் ஏன் இஸ்லாமியர் இறைவனுக்கு உருவம் இல்லை என்கின்றனர் என்பதைக் குறித்து காண்போம்.

அன்புடன் புகாரி: இப்படியான இரு நிலைப்பாடு நான் அறிந்து இஸ்லாம் மார்க்கத்தில் இல்லை. சரியான புரிதல் இல்லாமையே இரு நிலைப்பாட்டிற்கான காரணமாக இருக்க முடியும். ஆகவே நம் புரிதலில் எங்கோ தவறிருக்க வேண்டும் என்று அழுத்தமாக நம்புகிறேன்.

ஒரு சிலர் உருவம் இல்லை என்றும் வேறு சிலர் உருவம் உண்டு என்றும் மேலும் சிலர் உருவம் உண்டு ஆனால் இல்லை என்று கொள்ளவேண்டும் என்றுமாய்க் குழப்புகின்றனர். தெளிவினை நோக்கிய ஆய்வுக் கட்டுரைகளை நான் தேடுகிறேன்.

*ஒருவனின் வயிறு கவிதையால் நிறைந்திருப்பதைவிட, சீழ், சலத்தால் நிரம்பியிருப்பது மேல்* என்று நபிகள் ஓரிடத்தில் கூறியதாக அறிகிறோம். இதை எப்படிப் பொருள் கொள்வது?

--கவிதை என்பது ஒருவகை உணவு
--அது ஒருவனின் வயிற்றில் நிரம்பக்கூடியது
--ஒருவனின் வயிறு சீல் சலத்தால் நிரம்பி இருக்கலாம், அதனால் கேடு ஒன்றும் இல்லை

என்றெல்லாம் பொருள் கொண்டால் எப்படி இருக்கும்?

குர்-ஆனும் சரி ஹதீசும் சரி ஒருவகையான கவிதை நடையிலேயே பல உவமைகளையும் உருவகங்களையும் கொண்டதாக இருப்பதையே காண்கிறோம். அவற்றுக்கு நேரடிப் பொருள் கொள்வதைவிட அவை குறிப்பால் உணர்த்துவதைச் சரியாகப் பிடித்துக்கொண்டால், தெளிவு தானே வந்துவிடும். பின் உருவம் உண்டா இல்லையா என்பதில் ஒரே ஒரு கருத்து வந்துவிடும்.

எங்கும் நிறைந்த இறைவன் என்று சொன்னால், அப்படியான இறைவனை ஓர் உருவத்துக்குள் கொண்டுவருவது எப்படி சாத்தியமாகும். ”பிடரி நரம்புக்கும் அருகாமையில் இறைவன் இருக்கிறான்” என்று சொன்னால் எனக்குப் புரிவதில் தகராறு உயர்கிறது. உருவமிருந்தால் இது எப்படி இயலும்?

பார்வையால் அடைய முடியாதவன் என்று சொல்லும்போது எண்ணத்தால் உள்ளத்தால் மட்டுமே அடைய முடிந்தவன் என்றுதான் கொள்ள வேண்டி இருக்கிறது. என்றால் அங்கே Physical-உருவ இருப்பு கேள்விக்குறியல்லவா? Logical-அருவ இருப்பொன்றே ஆகக்கூடியது என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?

எனக்கு அடிப்படையிலேயே ஒரு கேள்வியுண்டு. இறைவனை ஏன் ஆண்பாலாக மட்டுமே அவன் இவன் என்று சுட்டுகிறார்கள்? இதற்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா?

என் ஆராய்ந்தறியும் நம்பிக்கை உருவமற்றவன் இறைவன் என்பதில்தான் அழுத்தமாக நிற்கிறது.
Source : http://anbudanbuhari.blogspot.in/

'லாஇலாஹா இல்லல்லாஹ்' - தனித்தவன், இணையற்றவன்.

தயவு செய்து இதனை க்ளிக் செய்து படியுங்கள்   Al-Ikhlas (Arabic: سورة الإخلاص ) aka At-tawhid (سورة التوحيد) (Monotheism) is the 112th Sura of the Qur'an. It is a short declaration of tawhid, God's absolute unity, consisting of 4 ayat. Al-Ikhlas means "the purity" or "the refining", meaning to remain pure and faithful or a state of purging one's soul of non-Islamic beliefs, such as paganism and polytheism.

This sura establishes the Oneness of the Creator: the doctrine of Tawhid. It says that God is without equal, without origin, without end, and unlike anything else that exists. The fourth line, "Nothing is like Him", is a fundamental statement of tanzih; God as the incomparable.

Sunday, May 27, 2012

இருட்டைக் கண்டாலே பயம் !


இருட்டைக் கண்டாலே பயம்.  மின் விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கு, இருட்டைக் கண்டால் பயம். இது அவரே சொன்னது. இரவு நேர இருட்டில் திருடன் வந்துவிடுவான் என்ற அச்சம் காலம் மாறிப்போச்சு பகலிலேயே திருடன் திருட வரும் காலம்.  அக்காலத்தில் சொல்வோம்  'பகல் கொல்லைக்காரன்' என்று . அவன் நம்மை ஏமாற்றி பிழைப்பதால் அப் பெயர் வந்திருக்கலாம். இது இப்பொழுது சர்வ சாதாரண அன்றாடம் நிகழும் நிகழ்வு.   நமக்கு தெரிந்தாலும் அதனைக் கண்டு கொள்வதில்லை. தெரிந்து சொன்னால் வேலை நடக்காது அல்லது ஆபத்து நம்மை வந்து அடையும் என்ற  மனப்போக்கு.   ஆள் பலம் ,அரசியல் பக்க பலம்,பண பலம் இருப்பவர்களுக்கே இந்த பயம் இருந்தாலும் அவர்கள்  வெளியில் காட்டிக் கொள்ளாமல் 'பந்தா'  பண்ணுவார்கள்

Saturday, May 26, 2012

தேரிழந்தூர் தாஜுதீன் - பேட்டி. "இந்த பாடல்களில் உயிரும் இருக்கிறது உணர்வும் இருக்கிறது"!


தேரிழந்தூர் தாஜுதீனின் மூன் டிவி பேட்டி(ஒரு பகுதி )

தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.

ஒலி, ஒளி இன்னிசை குருந்தகடு கொடுத்துதவிய காவியக் குரலோன் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு மிக்க நன்றி.
பாடலை எழுதிய கவிஞர் அவர்களுக்கும் Moon T. V க்கும் மிக்க நன்றி.

பேட்டி எடுப்பவருக்கும், பாடல்களை எழுதிய கவிஞர்களுக்கும்,பேட்டியில் பங்கேற்கும் எனது அருமை நண்பர் கிளியனூர் இஸ்மத் அவர்களுக்கும் நம் வாழ்த்துகள்!
S.E.A. முஹம்மது அலி ஜின்னா.
நீடூர்.
Jazakkallahu Hairan நன்றி.

மக்கா நேரலை الحرم المكي Watch Makkah Live

நல்ல காலம் வருது!

வந்தாச்சு வந்தாச்சு நல்ல காலம் வந்தாச்சு
வந்தாச்சு வந்தாச்சு நல்ல ஆட்சி வந்தாச்சு

சிலர் பெட்ரோல் பண்ண சிலர் கண்ரோல் பண்ண
பைக் வாங்க கார் வாங்க பணம்  போட்டாச்சு
மைக் போட்டு வோட்டு கேட்டு வாங்கியாச்சு

பலர்  வோட்டு போட சிலர் காசு பண்ண
சிலர் கோட்டு போட  பலர் வாடி வதங்க

வந்தாச்சு வந்தாச்சு நல்ல காலம் வந்தாச்சு
வந்தாச்சு வந்தாச்சு நல்ல ஆட்சி வந்தாச்சு

நல்லவை வர அல்லவை போக
கெட்டவை வர நல்லவை போக

மகிழ்வு  வர  துயரம் போக
துயரம் வர    மகிழ்வு போக

சிலர் பாசம் காட்ட   சிலர் நேசம் காட்ட
சிலர் கோபம் காட்ட   சிலர் வேசம் காட்ட

சிலர் உதவி செய்ய  சிலர் கேடு செய்ய
சிலர் பதவி நாட       சிலர் பதவி விட

சிலர் மகிழ்வு தர    சிலர் துயரம் தர
சிலர் வேடிக்கை  காட்ட        சிலர் வேடிக்கையாகி  விட

சிலர் ஆசி தர       சிலர் தூற்றி  விட
சிலர் காசி தர    சிலர் காசி பெற

சிலர் நடிக்க   பலர் ஏமாற
சிலர் படிக்க   பலர் தத்தளிக்க

உலகம் சுற்ற  நாமும் சுற்ற
கண்டது என்ன! காணப் போவது என்ன!
கண்டவர் விண்டிலர் விண்டவர்  கண்டிலர்

நாகூர் ஹனீபா 87: ஆளூர் ஷாநவாஸ் கட்டுரை!

அரசியல் மற்றும் இசைத் துறையில் நாகூர் ஹனீபா ஆற்றியிருக்கும் அளப்பெரும் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில், ஆளூர் ஷாநவாஸ் தொகுத்த ஹனீபா பற்றிய 87 அரிய தகவல்கள் சமநிலைச் சமுதாயம் ஜனவரி 2012 இதழில் வெளிவந்துள்ளன. அதை இந்த வார குமுதம் இதழும் பதிவு செய்துள்ளது.

Friday, May 25, 2012

அனைவருக்கும் தான் தலைவராக வேண்டுமென்ற ஆவல்!

   அனைவருக்கும் தான் தலைவராக வேண்டுமென்ற ஆவல் இருப்பது இயல்பு. ஆனால் அதற்கு யார் தகுதியானவர் என்பது பற்றி   மக்களுக்கு சிந்தனை இருந்தாலும் சரியான தலைமையை தேர்ந்தெடுப்பதில் நாட்டம் வருவதில்லை. தற்காலத்  தலைவர்  பொறுப்பில் இருக்கும் பலர்  சுயநலப் போக்கினை தன கையில் எடுத்துக் கொள்வதால் தலைவரை தேர்ந்தெடுப்பதில் மக்களுக்கு ஆர்வமில்லை, ஆனால் தலை இல்லாத உடம்பில்லை, வழி நடத்துவதற்கு ஒரு தலைமை அவசியம் தேவைப்படுகின்றது. தலைமை ஏற்று வழி நடத்துபவர் ஒருவர் இல்லையென்றால் குழப்பமே வந்து சேரும் . உங்களில் இருவர் இருந்தாலும் அவர்களில் ஒருவரை உங்களுக்கு தலைமையாகிக் கொள்ள வேண்டும்.
மூவர் ஒரு பிரயாணம் செய்தாலும் அதில் ஒருவரை தலைவராக நியமித்துக் கொள்ளுங்கள்” (புகாரி, முஸ்லிம்)

தலைமைப் பொறுப்பினை தேடி அலையக் கூடாது அது நமது ஆற்றலைக் கண்டு மற்றவர்கள் நமக்குத் தரப்பட்டதாக இருத்தல் சிறந்தது. பொறுப்பு கிடைத்த பின்பு ஆதிக்க மனப்பான்மை இல்லாமல் சேவை உணர்வே உயர்ந்தோங்கி இருக்க வேண்டும். தமக்கு கொடுக்கப்படும் தலைமைப் பொறுப்பினை 'வேண்டாம்.' என தட்டிக் கழிக்கக் கூடாது. அது இறைவனால் கொடுக்கப் பட்ட மக்களுக்கு சேவை செய்யும்  அருள். இத்தகைய அறிய வாய்ப்பினை  இறைவன் அனைவருக்கும் கொடுப்பதில்லை. தலைமைப் பொறுப்பினை ஏற்ற பின்பு அதன் சேவையை செய்ய முடியாத நிலை ஏற்படும்போது அதனை விட்டு விலகி விடுதல் உயர்ந்த செயல்.
தலைமைப்  பொறுப்பிலிருந்து செயல்படுவதற்கு சிறந்த வழிகாட்டி திருக்குர்ஆன்,அடுத்து நபிமொழிகள் இறுதியாக இவைகளில் காணப்படாதவற்றில் சந்தேகம் வருமானால் மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்து அறிவுப் பூர்வமாக  முடிவுக்கு வர வேண்டும்.   

Wednesday, May 23, 2012

ஒரு சில கல்லூரி மாணவர்கள் மத்தியில்..மொபைல் போன்களில் இடையில்,..(செக்ஸ்டிங் sexting )

21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரபலமான மொபைல் போன்களில் இடையில், வெளிப்படையான பாலியல் செய்திகளை அல்லது புகைப்படங்களை அனுப்பும் செயல் ஆகும். (செக்ஸ்டிங் sexting )
ஒரு சில கல்லூரி மாணவர்கள் மத்தியில் இது  ஒரு தொற்றுநோயாக  மாறிவிட்டது. ? ஒரு ஆய்வின் படி, மாணவர்கள் 56% பாலியல் படங்கள் மற்றும் பாலியல் தொடர்பான செய்திகளை அனுப்பவும்    மாணவர்கள் 78% பெறவும் நிலையாக உள்ளது.  ஒரு சர்வே,  கவரேஜ்  விளக்கப்படம் பாருங்கள் அதே போல் தேவையற்றவைகளை  தொடர்ந்து எவ்வாறு சமாளிக்க முடியும்?  மாணவர்களுக்கு பயனுள்ளதாகவுள்ள  குறிப்புகள் காணுங்கள்.
செக்ஸ்டிங் செயல்பாடு   மிகவும் கண்டிக்கத்தக்கது இது சட்டப்படி குற்றமாகும். இது செயல் நடக்கக்
கூடாத மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு உண்டாக்கப்பட வேண்டும்.

"ஹலால் இந்தியா" - அடுத்த அதிரடி ஆரம்பம்



  டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் அடுத்த சூடான விசயத்தை கிளப்பி உள்ளது. இந்தியாவின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்கள் பொருட்களுக்கு "ஹலால்" முத்திரை (ஹலால் இந்தியா நிறுவனத்திடம் இருந்து) வாங்குகின்றன என்ற செய்தி தான் அது. 

இது ஒரு வியாபார யுக்தி என்ற எண்ணம் இருந்த போதிலும், அந்த நிறுவங்களின் தலைமைகள் ஹலால் குறித்து கூறியுள்ள கருத்துக்கள் ரொம்பவே ஹாட்டாக இருக்கின்றன. 

"ஹலால் என்றால் அந்த பொருள் மிகச் சிறந்த தரத்துடன் இருப்பதாக பொருள் (Halal signifies highest standards of quality and hygiene in ingredients, processes and products)" - என்கின்றது ஒரு தலைமை. 

"Islam in many ways is a way of life. To that extent, Islamic branding is all about using brands as good deeds" - இப்படி சொல்கின்றது இன்னொரு நிறுவனம். 

"இந்த விசயத்தை நாம் ஆழ்ந்து நோக்கினால் ஒன்று தெளிவாகின்றது. ஹலால் என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமானதல்ல, இயற்கை ரீதியாக எல்லாருக்குமே ஒத்துவரக்கூடியது (A more careful look reveals that a lot of these values do not just suit Islamic audiences, but are of a universally appealing nature)" - இது இன்னொரு தலைமை...

ஹா ஹா ஹா...இப்படி ஒரு கட்டுரையை போட்டால் சும்மா விடுவார்களா. கமெண்ட் பக்கத்தில் டைம்ஸ் ஆப் இந்தியாவை போட்டு விமர்சித்து தள்ளுகின்றார்கள் சிலர்...

அந்த முழு கட்டுரையை படிங்க...http://timesofindia.indiatimes.com/business/india-business/Indian-brands-get-halal-stamp/articleshow/13332220.cms

வஸ்ஸலாம்...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Tuesday, May 22, 2012

பாதுகாப்பு வளையம் போடாமல் நீங்கள் பாதுகாவலனாக இருங்கள்.

  நீரை விசிறியாக்கி நீர் துளிகள் நமது உடலில் தெளிக்க பன்னீர் தெளிப்பது போல் மகிழ்வு கிடைக்கும். எத்தனை அற்புதம் இயற்கையோடு விளையாடுவதில். சிறு வயது விஞ்ஜானிகள் நமக்குள் இருக்க நாம் திகைத்து பார்ப்பதோடு இருந்து விடுகின்றோம். விளையாட்டிலும் எத்தனை அறிய புதிய கண்டுபிடிப்புகள்! குழந்தைகளின் அறிவின் வளர்ச்சி விளையாட்டாகவே குழந்தைகள் பருவத்தில் ஆரம்பித்து விடுகின்றன. நாம்தான் அவர்களை உற்சாகப் படுத்தாமல் 'என்னடா இந்த வீண் விளையாட்டு' என்றும் 'விளையாடாதே ஜுரம்(காய்ச்சல்) வந்துவிடும்'  இன்னும் பலவித தடைகள் விதித்து அவர்களின் அறிவை வளர்க்க விடாமல் தடை விதித்து விடுகின்றோம்.

விளையாட்டு உடல்நலத்திற்கும் அறிவின் வளர்ச்சிக்கும் உதவி செய்கின்றது. விளயாடும்போது சில காயங்கள் ஏற்படுவது இயல்பு. பயம் காட்டியே வளர்ந்த குழந்தை தன் வாழ்நாளின் பெரும் பகுதி பயத்திலேயே வாழ்நாளை ஓட்டும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது. சின்ன, சின்ன விபத்து ஏற்படும்போது இயல்பாகவே அது தனக்கு பெரிய ஆபத்து வராமல் பாதுகாத்துக் கொள்ளும் மற்றும் தனது திறமையையும்   வளர்த்துக் கொள்கின்றது. விடுங்கள்.. அது இயற்கையின் அருமையினை அறிந்து தன அறிவினை வளர்த்துக் கொள்ளட்டும்.  பாதுகாப்பு  வளையம் போடாமல் நீங்கள் பாதுகாவலனாக இருங்கள்        
எதில் என்ன இறைவன் மறைத்து வைத்துள்ளானோ! முயன்றால் பயன்தர இறைவனது அருளும் கிட்டும். இயற்கையை கண்டு ரசிப்பதோடு இல்லாமல் அதனை நம் வயப்படுத்திக்கொள்வதே இறைவனது நாட்டமும். இயற்கை நம்முடன் விளையாடும்பொழுது நாமும் அதனுடன் விளையாடி மகிழ்வோம்.

"ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா. கூடி விளையாடு பாப்பா" என்பது பாரதியின் கூற்று.

Monday, May 21, 2012

நீர் துளிகள் நமது உடலில் தெளிக்க பன்னீர் தெளிப்பது போல் மகிழ்வு கிடைக்கும்.

 நீர்வீழ்ச்சிகளை பார்ப்பதிலும் அங்கு குளிப்பதிலும் அனைவருக்கும் மிகுந்த ஆர்வம் இருக்கும் . ஒர் வாரத்திற்கு முன்பு கோனார் நீர்வீழ்ச்சியில் நண்பர்களுடன் குளித்து மகிழ்ந்தேன். அனைவருக்கும் மூனார் நீர்வீழ்ச்சி தெரிந்திருக்கும். கோனார் நீர்வீழ்ச்சி ஆந்திராவில் திருப்பதி அருகில் உள்ளது. ஒரே அருவிதான்.ஆனால் கோடையிலும் நீர் கொட்டுகின்றது .குளித்தவுடன் பசி . ஒரு விடுதியும் இல்லை .இந்த நிலை வராமல் இருக்க பிலிப்பைன்ஸ் குசான் மாகாணத்தில் இருக்கும் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டே பசியைத் தீர்த்துக் கொள்ள அருவியின் அருகிலேயே அருமையான உணவு கிடைக்கும் விடுதி உள்ளது. நீர்வீழ்ச்சியில் குளிக்காதவர்களும் நீர்வீழ்ச்சியின் அழகை பார்த்துக் கொண்டே அந்த அருவியின் குளிர்ந்த நீர் நமது கால்களில் தவழ்ந்து ஓட நீர் துளிகள் நமது உடலில் தெளிக்க பன்னீர் தெளிப்பது போல் மகிழ்வு கிடைக்கும். 
படத்தினைப் பாருங்கள்
 by mail from 'musheer'
 



Thursday, May 17, 2012

Sunday, May 13, 2012

அப்பாவின் கண்டிப்பும் அம்மாவின் ஆறுதலும்!

  தந்தை பணம் செலவழித்து என்னை ‘பெரிய, படிப்பு வைத்தார், படிக்கும்போது அவர் என்னை மிகவும் கவனமாக கண்காணித்து வந்தார். எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றாலும் அவருக்கு மனதிருப்தி அடையாது. ‘இன்னும் நன்றாக படித்திருந்தால் அதிகமாக மார்க் வாங்கி இருக்கலாமே’ என கண்டிப்பார். அத்துடன் மற்றவர்களை ஒப்பிட்டும் பேசுவார். உடனே அம்மா வந்து ‘ஏங்க இப்படி அவனை குறை சொல்லிக்கொண்டே இருக்கீங்க’ என்று சொலும்போதுஎன் மனம் அமைதியடைய ஆரம்பிப்பதற்குள் அடுத்த வார்த்தை தந்தை அம்மாவைப் பார்த்து கோபமாக ‘உனக்கு என்ன தெரியும் நீ படிதிருந்தால்தானே’ என்பதுடன் ‘ நான்ல வாங்கிய சம்பளத்தில் பாதி பணத்தை அவன் படிப்புக்கு வாரி கொட்றேன். முட்டையிட்ட கோழிக்குதானே அதன் சிரமம் தெரியும்’ என்பார் அம்மா. ‘நான் தானே பெற்றேன் அதன் வலி எனக்குத்தானே தெரியுமென்று’ முனுமுனுத்துக் கொண்டே அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட என் மனது மிகவும் வருத்தமாகி கண்களிலிருந்து நீர் சுரக்கும். படிப்பையே நிறுத்தி விட்டு என்கேயாவது போய்விடலாம் என்று நினைக்கும். அம்மாவை விடுத்துப் போகக்கூடாது என்ற வைராக்கியத்தில் தொடர்ந்து படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று படிப்பை முடித்தேன்.

இனி வேலை தேடும் படலம் ஆரம்பமானது. தினம் அது நிமித்தமாக கடுமையாக முயற்சித்தேன். திரும்பவும் அப்பா ஆரம்பித்து விட்டார் ‘அப்பொழுதே சொன்னேன் கம்ப்யூட்டர் இன்ஜினியர் படிக்க ஆனால் இவன் மெக்கானிகல் படிப்பேன் என்று பிடிவாதம் பிடித்தான்.அதற்கு இவன் அம்மா வேறே சிபாரிசு அவன் இஷ்டத்திற்கு படிக்கட்டுமே என்று அதான் இப்ப வேலை தேடி அலையறான் நான் சொன்னபடி கேட்டிருந்தா அருமையான வேலை நல்ல சம்பளத்தோட கிடைத்திருக்கும்’ என்பார்.

( “குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளைத் திணிப்பது தவறு.")

நேர்முக தேர்வு சென்று களைத்து போய் வரும்போது அப்பா கேட்பார் ‘இந்த தடவையாவது வேலை கிடைக்குமா?’ கிடைச்சாலும் சம்பளம் ஒன்னும் பெரிசா இருக்காது. பர்மனென்ட் வேலையா இருக்குமா? இவன் நிலையா ஒரு இடத்தில இருக்க தகுதியான தன் திறமையை வளர்த்துக்குவானா? இப்படி அடுக்கடுக்கான வார்த்தைகள் அவர் வாயிலிருந்து அடைமழைப் போல் கொட்டிக் கொண்டேயிருக்கும்.அது எனக்கு நெருப்பில் எண்ணையை ஊற்றியதுபோல் இருக்கும். அந்த நேரத்தில் அம்மா ‘நீ வாப்பா சாப்பிட பசியோட வந்திருப்பாய்’ என்று அழைத்து செல்லும்போது அது எனக்கு சூடான நெருப்பில் நீர் ஊற்றி அனைத்ததுபோல் மன அமைதி அடையும்.

அதுதான் அம்மா.

 “தாயின் மடியில் சுவனம் உள்ளது” என நாயகம் நவின்றார்கள. தாய் மீது நேசம் காட்டு,மாறாத அன்பு செலுத்து அதுதான் நம் வாழ்வின் அடித்தளம். அம்மா இல்லாமல் நாம் ஏது? அந்த அம்மா இருக்கும் போதே அந்த தாய்க்கு பணிவிடைச் செய்து நன்மையைப் பெற்றிடுவோம். தாய் போனபின் அழுவதனால் ஒரு பயனுமில்லை.

நீடூர் & நீடூர் நெய்வாசல் பெயர் எப்படி வந்தது!

 எப்பொழுதும் அழிவில்லாது நீடியிருத்தலின் நீடூர் எனப் பெயர் பெற்றது என்பர்.இந்நீடூர் இராஜாதி ராஜவள நாட்டைச் சேர்ந்ததாகும்.
நெய்வாசல் பெயர் எப்படி வந்தது
நெய்த வாசல் என்பது நெய்வாசல் ஆக வந்தது . ஆடைக்கு வேண்டிய நூல்கள் இங்கும் அருகிலுள்ள கூறைநாட்டிலும் நூல்கள் நெய்து வந்தார்கள், நெய்வாசல் கீழத் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு பட்டுக்காரர் வீடு என்று இன்றும் சொல்வார்கள், அவர்கள் தெருவில் பட்டு நெய்ததை வைத்து அந்த பெயர் அடைமொழியாக வந்து விட்டது

Saturday, May 12, 2012

எக்கலாமும் மக்கள் மனதில் அழியாத இடம் பிடித்தவர்கள்.(1)

உலகில் பலர் தோன்றி மறைந்தாலும்  ஒரு சிலர் காலத்தை வென்று மக்கள் மனதில் நீளைது நிற்பவர்களாக திகழ்கின்றனர் . ஒவ்வொருவரது  சேவையும்    வெவேறு முறையில் இருந்தாலும்  அவர்கள் செய்த தொண்டு மக்களின் நல் வாழ்விற்க்காகவே இருந்தன, அவர்களின் சிலரை பார்ப்போம் பின்பு தொடர்ந்து மற்றவர்களைப் பற்றியும் தர முயல்வோம் 

கன்புசியஸ்
2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சீன தத்துவஞானி இவர்.
இவர் பிறந்தது  ஆகஸ்ட்  27, 551 B.C. சீனாவில் உள்ள டுஒ வில்
இவர் இறந்தது நவம்பர் 21, 479 B.C சீனாவில் உள்ள குபு வில்
சீன  தத்துவஞானிகளில் மிகவும் புகழ் வாய்ந்தவர் 
இவரது தத்துவங்கள் சீன,ஜப்பான் ,கொரியா ,விஎட்நாம் மக்களுடையே பெரிய தாக்கத்தின ஏற்படுத்தியது
இவரது தத்துவங்கள் கன்புசிய தத்துவம் என அழைக்கப்பட்டது.இது  ஐரோப்பாவில்  இட்டாலியன்  ஜெசூட்  மட்டோ  ரிச்சியினால்   "கன்புசியஸ்" என பெயர்  கொடுக்கப்பட்டு லட்டின் மொழியில்  பிரபலமானது 

அங்காடித் தெரு அனுபவங்கள் (உண்மைக் கதை)

மயிலாடுதுறை சீமாட்டி ஜவுளிக்கடையில் புதிதாக வேலைக்கு சேர்ந்தேன். எந்த செக்‌ஷனில் உனக்கு அனுபவம் அதிகம் என வழக்கமாக ஓனர்கள் கேட்கக்கூடிய கேள்வியை என் ஓனர்  கேட்டார்.(அனைத்து பிரிவிலும் நல்ல அனுபவம் இருந்தாலும் டெக்ஸ்டைல்ஸ் பிரிவில் அதாங்க புடவை, கட்பிஸ் பிரிவில் மாட்டி விடக்கூடாது என்பதற்காக) அண்ணே எனக்கு ரெடிமேடு லைனில் நல்ல அனுபவமுண்ணே எண்றேன். அதிலும் வந்தது சோதனை.
சுடிதார் செக்‌ஷனில் நின்னுக்கே அந்த செக்‌ஷனில் தான் ஆள் இல்லை என்று அதில் தள்ளி விட்டார் Free size சுடிதார் செக்‌ஷன் அதற்கு புடவை பிரிவே எவ்வளவோ மேல் அங்கு வருகிற பெண்கள் கூட்டம் இங்கும் வருவார்கள் சரி சமாளிப்போம் என்று கவுண்டருக்குள் இறங்கினேன்.

2001ல் சாரி மெட்டீரியல் வகை சுடிதார்கள் புதிய மாடலாக அறிமுகமாகிய காலகட்டம் சாரியை பிரிச்சு காட்டுகிற மாதிரியே சுடிதார்களையும் பிரித்து கையில்,கழுத்தில் என்ன டிசைன் வருகிறது என்று விளக்க வேண்டும்.

Friday, May 11, 2012

வாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்!


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.
வாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

. இதற்கு “தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!” என்கிற அழகான பொருள்.

ஒருவர் நமக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று சொல்லும் பொழுது நாம் அவருக்கு
வஅலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு  என்று பதில் சொல்வது நமது கடமையாகும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ” இருவர் சந்தித்துக் கொள்ளும் போது யார் முதலில் ஸலாம் சொல்லி (பேச) ஆரம்பிக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவராவார்”. அறிவிப்பாளர்: இமாம் அந் நவவி:
 ” இருவர் சந்தித்துக் கொள்ளும் போது யார் முதலில் ஸலாம் சொல்லி (பேச) ஆரம்பிக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவராவார்”. அறிவிப்பாளர்: இமாம் அந் நவவி அவர்கள்.

உலகப் பார்வையுடன் துபாய் அன்றும் இன்றும் அதன் வரலாறும்

 உலகப் பார்வையுடன் துபாய் அன்றும் இன்றும் அதன் வரலாறும்  ழ
பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபு . இது அனைத்து மக்களுக்கும் மற்றும் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்  ஆனால் இன்னும் சில நாடுகளும் அதன் மக்களும்  பழைய பழக்க வழக்கங்களை விடாமல் விடாப் பிடியாக பிடித்துக் கொண்டு வாழ்பவர்களும் உள்ளனர் . நாம் மாறிவிட்டாலும் மாற்றத்தையும் தொடர்ந்து செய்து வருகின்றோம் . சில  நாடுகளில் மக்கள் மனது பழைமை விரும்பியாக இருந்து அதன் கலை  கலாச்சாரங்கள் அழிந்துவிடக் கூடாது என்ற நல்ல நோக்கத்தோடு பழமையான கட்டிடங்களை அது அழிந்து விடாமல் பாதுகாத்து வருகின்றனர்அந்த கட்டிடங்கள் வீணடித்து விடாமல் சரி பார்த்தாலும் அது  உருவாக்கிய நிலையிலேயே  காட்சி தரும். இந்த இடத்தில நமது தமிழ்நாடு நிலைமையை பார்த்து தெரிந்துக் கொள்வதும் நல்லது.   கோவில்களை,பள்ளிவாசல்களை மற்ற வணக்கஸ்தளங்களை    நினைவு கொள்ளவேண்டும். பழைமை வாய்ந்த சில கோவில்களை,
பள்ளிவாசல்களை மற்ற வணக்கஸ்தளங்களை அழகாக காட்சி தர வேண்டும் என்ற  எண்ணத்தோடு புதிய வண்ணங்கள் பல வகைகளில் கொடுத்து பழமையான முற்காலத்தில் கட்டப்பட்ட நிலையிலிருந்து மாற்றம் உண்டாகிவிடுகின்றனர். இது மிகவும் வருந்த வேண்டியதாக இருக்கின்றது. ஆயிரக்கனக்கான  வணக்கஸ்தளங்கள்  உண்டாக்கப்படுகின்றன  (வணங்குவதற்கு,தொழுவதற்கு ஆள் இல்லையென்றாலும்)   சவூதி அரேபியாவில் மிகவும் கொடுமை. அங்கே வரலாற்று கட்டிடங்கள் ஒன்றும் பார்க்க முடியாது( ஒரு சிலவற்றைத் தவிர குறிப்பாக கஹ்பா,சஹாபாக்கள் அடங்கியுள்ள இடம், நபிகள் நாயகம் அடங்கியுள்ள இடம் ) நாயகம் வாழ்ந்த வீடு மற்ற வரலாற்று முக்கிய இடங்களை தகர்த்து விட்டார்கள் . இது  மிகவும் வேதனையான நிகழ்வாகும்.

Wednesday, May 9, 2012

பெண்கள் சட்டத்தினை உருவாக்குவார்கள் ஆனால்...!

  அச்சம் ,மடம், நாணம் ,பயிர்ப்பு  இவை பெண்களுக்கு மட்டும் தேவையா! 
   தவறு செய்வதற்கு அச்சம் இருப்பதுதானே முறை. நாணப் படுவதற்கு நாணப்படுவதுதானே உயர்வு "அஞ்சுவது  அஞ்சாமை  பேதமை" .இது ஆணுக்கும் பெண்ணுக்கும் அவசியம் தேவை . வீரம் நிறைந்தவனாக ஆண் மட்டும் இருந்தால் போதுமா! தனக்கு வரும் ஆபத்தினை எதிர்கொள்ள ஒரு பெண்ணுக்கும் அவசியம் தேவை . குணங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சில வேறுபாடுகள் இருந்தாலும் இக்காலத்தில் பலவகையான குணங்களை ஆணும் பெண்ணும் அவசியம் பெற்றுக்கொள்ள தேவைப்  படுகின்றது. அனைத்துக்கும்  மேலாக நல்ல காரியங்களுக்காக ஆணும் பெண்ணும் அனுசரித்து போகும் நிலை அவசியம் தேவைப் படுகின்றது . ஆணின் காலில் விழும் பெண்ணின் குணமும் பெண்ணின் காலில் விழும் ஆணின் குணமும் அவசியம் அழிக்கப் படவேண்டும். சுமரியாதையை வளர்த்து இறைவன் ஒருவனுக்கே  அடிபணிவேன் என்ற மனப்பக்குவம் வந்தே ஆக வேண்டும். உனது உரிமை எனது உரிமையை பாதிக்கக் கூடாது என்பது பொதுவான சிந்தாந்தம். வாழ்வோம் வாழ விடுவோம் இதுதான் நம் கொள்கையாக மாற வேண்டும்  

 பெண்கள் சட்டத்தினை உருவாக்குவார்கள் ஆனால் அந்த சட்டங்கள் எந்த  முன் அறிவிப்பும் இல்லாமல்   மாற்றப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.  பெண்கள் ஒருபோதும் தவறுகள் செய்ய மாட்டார்கள் அப்படியே அவர்கள் தவறு செய்ய நேர்ந்தால் அது ஆண்களால் தூண்டப்  பட்டவைகளாகவே  இருக்க முடியும். பெண்கள் மனது சபலம் வாய்ந்தது மாற்றம் நாடுவது. ஆண்கள் மனது நிலை கொண்டது விரும்பியதை  அடைய எந்த வழியும் கையாளும் குணம் கொண்டது

நான் திருமணம் செய்து வையுங்கள் என்று உங்களைக் கேட்டேனா?

   நான் இந்த உலகத்திற்கு வந்தது இறைவன் அருளால் உங்கள் மூலமாக, நான் உங்கள் விருப்பத்திற்கு மாறாக உருவாக்கப்பட்டேனா அல்லது விருப்பத்தின் காரணமாக உருவானேனா  என்பது நான் அறியேன், ஆனால் நீங்கள் நான் உலகில் வந்து விழுந்ததிலிருந்து என்னை அழிக்க முயலாமல் பாசம் காட்டி வளர்த்தது மட்டும் உண்மை என்பதனை நான் அறிவேன். நீங்கள் இருவரும் எனக்காக  செய்த தியாகங்களை மறக்க முடியுமா!

   அம்மா, நான் பிறந்த போது உன்னைத்தான்  முதலில் பார்த்தேன் அந்த 'அம்மா' என்ற தமிழ்  வார்த்தையை நீ சொல்லிக்  கொடுக்காமல் உன்னை 'ம்மா'  'அம்மா' என்று  அழைக்க இறைவன் சொல்லித் தந்துவிட்டான். நான் பிறந்தபோது  உங்கள் கண்களில் விழுந்தோடிய ஆனந்தக் கண்ணீர் மகிழ்வானது . அது காலமும் நிலைத்து எனது வாழ்வை செம்மை படுத்த நீங்கள் மேற் கொண்ட முயற்சி உயர்வானது.

  அந்த உங்களது ஆனந்த கண்ணீரும், மகிழ்வும்  இப்பொழுது குறைந்து  வந்தாலும் அதனை நீங்கள் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருப்பதனை நான் அறிகின்றேன். இது யார் செய்த குற்றம்! நிச்சயமாக நான் இல்லை. நான் திருமணம் செய்து வையுங்கள் என்று   உங்களைக் கேட்டேனா? நீங்கள்தான் எனக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினீர்கள். உங்கள் விருப்பப் படியே நீங்கள் பார்த்த பெண்ணையே திருமணமும் செய்து வைத்தீர்கள். இப்பொழுது உங்களுக்கும் என் மனைவியுமான  உங்கள் மருமகளுக்கும் கருத்து வேறுபாடு வந்து உங்கள் மகிழ்வில் குறைவு வந்து விட்டதனை நான் அறிகின்றேன். பெற்றோர்களே சிறுது பொறுமையை கடைப்பிடியுங்கள்,  உங்கள் மகிழ்வுக்கு ஒரு வழி கண்டுபிடித்து விட்டேன். உங்களுக்காகவே நாங்கள் உங்களுக்கு பேரக் குழந்தையை பெற்று தருகின்றோம். அது போதும் உங்கள் மகிழ்வின் தொடர்ச்சிக்கு. நீங்களும் குழந்தையோடு குழந்தையாக மாறிவிடுவீர்கள். குழந்தை மனது குறை காணாத மனது,அதனால் இழந்த மகிழ்வு தங்களை வந்தடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.  .

Tuesday, May 8, 2012

அவர் வெளியே இருந்தபோது இடி தாக்கியதுபோல் ...

நடந்தது உண்மை .
எனது ஆத்ம நண்பர் ஒருவர் உடல்நலம் குன்றி இருந்தார். அவரால் சரியாக உணவு சாப்பிட முடியவில்ல . நான் அவரிடம் சொன்னேன் 'எனக்கு மிகவும் வேண்டிய மிகவும் பிரபலமான Gastroenterologist M.D.,. D.M.,வயிறு சம்பந்தமாக பார்க்கும் மருத்துவர்  உள்ளார் அவரைப் பார்த்து ஆலோசனைப் பெறலாம்' என்ற என் வேண்டுதலுக்கு உடன்பட்டார். நாங்கள் இருவரும் அந்த மருத்துவரை சந்தித்தோம். நண்பர் தான் முதலில் காட்டிய மருத்துவரின் ஆலோசனைக் குறிப்புகளும்  மற்றும் அந்த வியாதிக்கு தேவையான மருத்துவ டெஸ்டுகளும் மற்றும்  எக்ஸ்ரே போன்றவைகளை எடுத்து வந்திருந்தார். ஆனால் அவருக்கு என்ன வியாதி உள்ளது என்று  அந்த மருத்துவர் நண்பரிடம் சொல்லாமல் மருந்துகள் மட்டும்  எழுதி கொடுத்திருந்தார். அவருக்கு வந்துள்ள வியாதியை  .உண்மையிலேயே அவரது குடும்பத்தார் எனது நண்பருக்கும் தெரியாமல் வைத்துவிட்டனர்.நானும் அதனைப் பற்றி அறியாத நிலை.

 மருத்துவரிடம் நாங்கள் ஆலோசனைக் கேட்க அதற்கு தேவையான மருத்துவ விபரங்களைக் காட்டினோம்.  மருத்துவர் அனைத்தையும் பார்த்த பின்பு எனது நண்பரை சில நேரங்கள் வெளியே இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அவர் வெளியே இருந்தபோது இடி தாக்கியதுபோல் அதிர்ச்சியான செய்தியை டாக்டர் சொன்னார். 'அவருக்கு வந்துள்ளது கேன்சர்  மற்றும் மிகவும் முற்றி விட்டது இனி எந்த வைத்தியமும் உதவாது. அதிகமாக அவர் இன்னும் மூன்று மாதங்கள் உயிருடன் இருப்பதே அதிசியம் , அதனால் இந்த உண்மையை அவரிடம் சொல்லிவிட்டால் அவர் செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்து விடுவார் பிறகு இறை பக்தியில் அதிகம் ஈடுபட்டு அமைதி காண்பார் . இதனை நீங்கள் சொல்கின்றீர்களா  அல்லது நான் சொல்லவா இல்லையென்றால் தேவை இல்லாமல் பல மருத்துவர்களை நாடுவார் என  வினவினார்!;  வேண்டாம் டாக்டர் அவரிடம் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக ஏதாவது சொல்லி அனுப்புங்கள் என்றேன். மனமுடைந்தேன்,என்னை அறியாமல் என்னை நானே  கட்டுபடுத்த முடியாமல் போனதால் கண்களிலிருந்து நீர் கொட்டியது, மனதை அடக்கிக் கொண்டு வெளியில் இருந்த நண்பரை மருத்துவரிடம்  அழைத்து வந்தேன். நான் விரும்பியபடி ' நீங்கள் சாப்பிடும் மருந்தே உயர்வானது மற்ற சிகிச்சிசைகளும் முறையாக உள்ளது .இதனையே தொடர்ந்து செயல்படுத்துங்கள்.தேவை இல்லாமல் பல மருத்துவர்களை அணுக வேண்டாம் ' என்று  டாக்டர் அறிவுரைக் கூறினார். என் கண்கள் கலங்கி  இருப்பனைக் கண்டு  டாக்டர் சொன்னதில் நம்பிக்கை வராமல் வீடு வரும் வரை   ' டாக்டர் என்ன சொன்னார் சொல்லுகள் ' என்று துருவித் துருவி  கேட்கும்போது மனதை கல்லாக்கிக் கொண்டு   மருத்துவர் உங்களிடம் சொன்னதையே நானும்  சொன்னேன். நல்ல காரியத்திற்க்காக பொய் சொல்வது தவறில்லை என மனம் நினைத்தது .

மணமகள் இருக்குமிடமெல்லாம்....!

 மணமகள் இருக்குமிடமெல்லாம் ஆயிரக்கணக்கான விளக்குகள், அவளை சுற்றி புதிய செயற்கை மலர்கள் மற்றும் இயற்கை மலர்கள்.ஒரு நகைக்கடையே அந்த மணப்பெண்ணின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். ஆயிரக்கணக்கான செலவு செய்து அலங்கரிக்கப்பட்ட மேடை, அதில் பலர் மணமகளை சூழ நின்று மகளோடு படம் பிடிப்பவருக்கு கவனம் கொடுத்து தன்னை முன்னிறுத்திக்கொள்ள செய்வார்கள். இதற்கு மணப் பெண்ணோடு சேர்ந்து நிற்க 'தள்ளுபடி' இத்தனையும் இருக்கும்.
 இப்பொழுது இது ஒரு திருமண காட்சி பகுதியாக இருந்து வருகின்றது. இதன் பின் ஒரு விசித்திரமான  கதை ஒளிந்துள்ளது. திருமணம்  என்பது  பெண்ணின் கனவு - அந்த ஒரு சரியான நாள் வர காத்திருந்து அதற்குள் ஆயிரம் கற்பனைகள் அது நினைத்தபடி நடந்ததா! அல்லது அந்தப்பெண் மாப்பிள்ளை திருமணம் சந்தையில் விலை போனாளா! அதற்காக அவள் வீட்டார் கொடுத்த விலை எவ்வளவு! பட்ட கடன்கள் எவ்வளவு! 
மாப்பிளை வீட்டாரின் வலையில் விழ வேறு காரணங்கள் உள்ளதா! இவைபோன்ற உள்ளார்த்தமான நிகழ்வுகள் மறைக்கப் பட்டு திருமண கோலாகல நிகழ்வுகள் பலவகையான உணவுகளுடன் நடந்துக் கொண்டிருக்கும்

 இதில் சிலர் விருந்தையே குறிவைத்து அமர்ந்திருப்பார்கள். ஒரு சிலர் தம்மை திருமணதிற்கு அழைக்கவில்லையே என்ற கோபத்தில் அவர்கள் வீட்டில் அல்லது கடைத்தெருவில் மாப்பிளை மற்றும் பெண்ணைப் பற்றி வாய்க்கு வந்தபடி கதை அளந்து அவதூறு பேசவும் தயங்க மாட்டார்கள் இந்த அவதூறு திருமண மண்டபத்திலேயும்   பேசுவார்கள் .

Monday, May 7, 2012

القرآن كامل سعد الغامدي The Complete Holy Quran In One Video(longest video on youtube)




For the first time on YouTube video of 24-hour non-stop. Holy Qur'an full voice intoned, Sheikh Saad al-Ghamdi

அம்மாவுக்கும் மகளுக்கும் உள்ள நேசம் உயர்வானது .

 
     அம்மாவுக்கும் மகளுக்கும் உள்ள நேசம் உயர்வானது . அம்மாவின் அன்புதான் மகளின்  அறிவை வளர்க்கும். தாய்  மகளுக்கு தனக்கு தெரிந்த அத்தனை கலையையும்  சொல்லித் தருவாள்.தனக்கு தெரியாததையும் அறிந்துக் கொள்ள வழி வகுப்பாள். உடை உடுத்துவது முதல் சமைப்பதுவரை தெரியவைப்பாள். பொதுவாக  தாயின்   குணமே மகளுக்கும் இருக்கும்.  அதனால்தான் தாயைப்போல பிள்ளை நூலைப் போல சேலை  என்பார்கள். ஒரு தகப்பன் கெட்டவனாக இருந்தால் அதனால் அந்த தாய் படும் அவதியினைப் பார்த்து அந்த தாய்க்கு  பிறந்த குழந்தைகள் பொறுப்புடன் நடப்பார்கள்.ஆனால் அந்த தாய் நல்லவளாக இல்லையென்றால் அந்த குடும்பமே சீர்கெட்டுவிடும். உன் நண்பனைப் பற்றி சொல் உன்னப் பற்றி  சொல்கின்றேன்
என்பதுபோல் தாயைப்பற்றி சொல் அவள் மகளைப்  பற்றி அறிய முடியும் என்பார்கள். பெண் பார்க்க போகும்போது தாயின் குணங்களை கேட்டு அறிந்துக் கொள்வார்கள். தாயின் வளர்ப்பு முறையும் தாயின் குணமும் பொதுவாக அவள் மகளுக்கு வந்தடைய வாய்ப்பாக உள்ளது.

ஒரு  தாய்க்கு தன்  மகளுக்கு செய்யும்  பணி எளிமையாக  இருக்க முடியாது. தாய் மகளை அன்பு காட்டி நேசமாக வளர்ப்பதால்  இருவருக்கும் நட்பு  மனப்பான்மை உயர்ந்து நிற்கும்.இந்த நிலை தாய்க்கும் அவளது மகனுக்கும் இருப்பதில்லை. தாய்க்கு பணிவிடை செய்வதிலும் மகளே உயர்ந்து நிற்கின்றாள். பெண் பிள்ளை இல்லாத தாய் தனது இறுதிக் காலத்தில் படும் அவதி பரிதாபத்திற்குரியது.
 நபி மொழி
 தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.

பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.

 ''நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்;
முதலாவதாக அவளுடைய செல்வத்திற்காக, இரண்டாவதாக அவளுடைய குடும்ப(வம்ச)பாரம்பரியத்திற்காக, மூன்றாவதாக அவளுடைய அழகிற்காக நான்காவதாக அவளுடைய மார்க்க(நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க(நல்லொழுக்க)ம் உடையவளை மணந்து, வெற்றி அடைந்து கொள். அறிவிப்பவர் : அபு ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி


எதிலும் முழுமை இல்லை.

முழுமையாக நம்பி முற்றிலும் ஏமாற்றமோ!
முழுமையாக நேசம் கொண்டு பாசம் போனதோ!
முழுமையாக கிடைக்க எத்தனித்து இருந்ததும் போனதோ! 
முழுமை கிடைக்க முதுமை வந்துவிடுமோ!

நம்பிக்கை வைத்து நடை போடு அவசரப்பட்டு தடுக்கி விழுந்து விடாதே!
அன்பு செலுத்து அதை மற்றவரிடமிருந்து எதிர் பார்க்காதே! 
நம்பிக்கை கொள் நடப்பது நடந்தே தீரும் என்ற எண்ணத்தோடு! 
வேண்டியது கிடைக்கவில்லையெனில் அதுதான் நியதி!

எதிலும் முழுமை இல்லை.
முழுமையாக கிடைத்தால் உன்னை நீ மறப்பாய்.
முதுமை கிடைத்தாலும்
முழுமை கிடைக்காது

இறப்பில்தான் முழுமை உண்டு அது பிறப்பிலும் இல்லை.
இறைவனின் ஆற்றலை நம்பு உண்மை விளங்கும்.
இயன்றதைச் செய் மற்றதை இறைவனிடம் விட்டு விடு
இறைவனை நேசி இன்பம் காண்பாய்.

Saturday, May 5, 2012

இஸ்லாமியக் கவிதைகளுக்கும் பொய்தான் அழகு! இல்லை என்று யார் சொன்னது?

அதிரை நிருபர் என்கிற வலைத்தளத்தில் அதிரை சித்திக் அவர்கள் ”கவிதைக்கு பொய் அழகு என சில கவிஞர்கள் இன்றும் சொல்ல கேட்கிறோம்” என்று கூறி இருந்தார். அவருக்கு மறுமொழியாக நான் இப்படி எழுதினேன்:

கவிதைக்குப் பொய்யழகு என்பதில் யாதொரு தவறும் இல்லை. நாம் புரிந்துகொள்வதில்தான் தவறிருக்கிறது. பொய் என்று சொல்வது இங்கே கற்பனை வளம் ஏற்றுவதை, அழகு ஊட்டுவதை, இசை கூட்டுவதை. உதாரணம்: ஒரு பெண் குழந்தை என்பது உண்மை. அந்த உண்மைக்கு, பட்டுடுத்தி, பவுடர் இட்டு, கண்ணுக்கு மையிட்டு, சடை பிண்ணி, பூமுடித்து என்ற அத்தனைப் பொய்களையும் செய்து பார்ப்பது தவறல்ல, அழ்கு பெண்ணுக்கு அழகு.

அதுபோலத்தான் கவிதைக்கும் அழகு தேவை. ஒரு கவிதை பொய்யை நடுவில் வைத்து உண்மையைச் சுற்றிக் கட்டி ஏமாற்றுகிறதா அல்லது உண்மையை நடுவில் வைத்து கற்பனை, சொல்லழகு, இசை போன்று பொய்களைச் சுற்றிக்கட்டி நயமாக்குகிறதா என்பதே முக்கியம்.

கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு

என்ற கவிஞர் வைரமுத்துவின் கவிதையைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். கண்ணுக்கு மை என்ற பொய் எப்படி அழகோ அப்படித்தான்,  கவிதைக்குக் கற்பனை என்ற பொய் அழகு. ஆகவே, கவிதைக்குப் பொய் அழகே தவிர கவிதை என்பது மெய்யால் செய்யப்பட்டால் மாத்திரமே அது கவிதை. கவியெனும் மெய்யில் இழைக்கப்படும் அழகு கற்பனைப் பொய்களே கவிதையைக் காலத்தால் அழியாததாய் ஆக்குகின்றன. உரைநடைக்கும் கவிதைக்குமான வித்தியாசம் அதுதானே?

யாரால் இது முடியும்! முயலுங்கள் வெற்றி வரும் ...!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.- திருக்குறள்

  ஸூரத்துல் அலஃக்(இரத்தக்கட்டி) - குர்ஆன்
குர்ஆன் - மக்கீ, வசனங்கள்: 19
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
96:1    اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
96:1. (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
96:2   خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ
96:2. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
96:3   اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ
96:3. ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
96:4   الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
96:4. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
96:5   عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ
96:5. மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.