Thursday, March 31, 2011

பொறுப்புணர்ச்சி தான் தலைமைத்துவத்தின் அடையாளம்!

by நீடூர் SA மன்சூர் அலி M.A., B.Ed.,
தலைமைத்துவம் (Leadership) என்பதை சுருக்கமாக விளக்கி விட விரும்பினால் அதனை “பொறுப்பு” (Responsibility) என்ற ஒரே சொல்லில் வைத்து விளக்கி விடலாம்! .
ஆமாம், தலைமைத்துவத்தையும் பொறுப்பினையும் நாம் பிரிக்கவே முடியாது!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப் படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் தம் குடி மக்கள் குறித்து விசாரிக்கப் படுவார். குடும்பத்தலைவன் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப் படுவான்.
மனைவி தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளி ஆவாள். அவள் அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்கப் படுவாள். பணியாள் – தன் எஜமானனின் செல்வத்திற்குப் பொறுப்பாளி ஆவான். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப் படுவான். அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள்.(நபி மொழி ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
அபூ பக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் கலீஃபாவாக தேர்ந்து எடுக்கப் பட்ட போது, மதீனாவே மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால் அந்த மகிழ்ச்சியில் இரு சிறுமிகள் மட்டும் பங்கு பெறவில்லை. காரணம், அபூ பக்ர் அவர்கள், தம் வீட்டின் அருகே வாழ்ந்த அந்த சிறுமிகளுக்கு, அவர்களது ஆடுகளிலிருந்து பால் கறந்து கொடுப்பது வழக்கம். அபூ பக்ர் அவர்கள் கலீஃபாவாக தேர்ந்து எடுக்கப் பட்ட போது, அந்த சிறுமிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதாவது அபூ பக்ர் அவர்கள் வழக்கம் போல தங்களுக்குப் பால் கறந்து தருவார்களா – என்பது தான் அந்த சந்தேகம்.
இந்தத் தகவல் அபூ பக்ர் சித்தீக் அவர்களின் காதுகளில் விழுந்தது. உடனே அவர் அந்த சிறுமிகள் இருக்கும் இடம் தேடிச் சென்று சொன்னார்: இறைவன் அருளால் என் பதவி எனது வழக்கமான வேலைகளை மாற்றி விடாது என்று நம்புகிறேன். நான் நிச்சயமாக உங்களது ஆடுகளில் இருந்து பால் கறந்து கொடுக்கும் பணியை தொடருவேன்! அதன் பின்னர் அந்த வழியாக அவர் செல்லும் போதெல்லாம், “உங்கள் ஆடுகளில் பால் கறக்க வேண்டுமா?” என்று கேட்பது வழக்கம்.
இதனைத் தான் நாம் பொறுப்பு என்கிறோம். இந்தப் பொறுப்புணர்ச்சி தான் தலைமைத்துவத்தின் அடையாளம் என்கிறோம்.

ஜப்பானிடமிருந்து நாம் அறிந்து கொள்ளவேண்டியது.

 ஜப்பானிடமிருந்து நாம் அறிந்து கொள்ளவேண்டியது.
அமைதிக் காத்தல்,பொறுப்பு,நிதானம்,மற்றவருக்கு உதவுதல், அலட்டிக்கொள்ளாமை, மன உறுதி, உண்மையான உழைப்பு. மற்றவருக்கு பாதிப்பு ஏற்படாமல் அதே நேரத்தில் அவர்களுக்கு உதவுவது இன்னும் எத்தனையோ இருந்தாலும் அதனை ஜப்பானில் தற்பொழுது எற்பட்ட பாதிப்பில் நாம் அனைவரும் பார்த்து அதிசியத்தோம்
ஜப்பான் பூமி அதிர்ச்சி  / சுனாமி /நூக்லியர்  ரியக்டோர்ஸ்  பாதிப்பு    ஏற்பட்டபோது அவர்களிடமிருந்த அமைதி அதிசியமானது .
 அவர்கள் யாரும் தனது மார்பில் அடித்துக்கொண்டு கதறவில்லை.
தண்ணீர் கிடைக்காதபோதும் தண்ணீர் வேண்டி அவர்கள் முறையாக வரிசையில் நின்று அமைதி காத்தனர்.
அவர்கள் கட்டிய கட்டடங்கள் மிகவும் பாதிப்பு ஏற்படாமல் உறுதியாக நின்றன
தேவைக்கு மட்டும் அவர்கள் வேண்டி நின்றனர், அதிகப்படியாக அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

பாதிப்பு உண்டானவுடன் தனது தேவைக்கு கடைகளில் புகுந்து கொள்ளை அடிக்கவில்லை
கடைகளில் மிகவும் விலை
யினை குறைத்து விற்றனர்.
மீடியாக்கள் அற்பத்தனமான செய்திகளை வெளியிடவில்லை. மக்களை பாதுகாப்பதற்கான செய்திகளுடன் அவர்களுக்கு மன அமைதிக்கான வழிகளை செய்துக் கொண்டிருந்தன .

Tuesday, March 29, 2011

என்ன கொடுமை - இது கவிஞர் இரா .இரவி



கிரிக்கெட் காண அனுமதிச் சீட்டு தாருங்கள்
கிட்னி தருகிறேன் என்கிறார்     ரசிகர்
உயிர் காக்கும் உன்னதத்தை
கேளிக்கைக்காக தருகிறேன் எனும் அவலம்
கிட்னியைத்   தேவைப்படும் நண்பனுக்கு
குடும்ப உறுப்பினர்க்குக் கொடுக்கலாம்
கிட்டினியை இட்லிக்கு வைக்கும்
சட்னியைப் போல தருகிறேன்  என்கிறார்
ஊடகங்கள் போட்டிப் போட்டு
ஊதி ஊதிபெருசாக்கி விட்டனர் கிரிக்கெட்டை
கால்ப்பந்துக்கு ஈடாகுமா ?  கிரிக்கெட்
கபடிக்கு    ஈடாகுமா ?  கிரிக்கெட்
குளிர்ப் பிரதேசத்து ஆடையை
வெப்பப்பூமியில்   அணியும் மடமை
ஆவலுடன் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்
அனைவரையும் முட்டாள் ஆக்குகின்றனர்
முந்தைய விளையாட்டுகளில் நடந்த
சூதாட்டங்கள் அம்பலமாகி விட்டது
ஒழுக்கம் என்றால் என்னவென்று அறியாத
ஒழுக்கம் கெட்ட கிரிக்கெட் வீரர்கள்
விளையாட்டை விளையாட்டாகப் பாருங்கள்
விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள்
இந்தியா பாகிஸ்தான்  கிரிக்கெட் விளையாட்டை
இந்தியா பாகிஸ்தான் போராகப் பார்க்காதீர்கள்
பிரதமர்களும் முதல்வர்களும்  கிரிக்கெட்டைப்
பார்க்க நேரில் செல்வதை நிறுத்துங்கள்
விளையாட்டை வெறியாக மாற்றாதீர்கள்
விரயம் செய்யாதீர்கள் பொன்னான நேரத்தை

இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Source : http://eraeravi.wordpress.comஎன்ன கொடுமை இது கவிஞர் இரா .இரவி

Saturday, March 26, 2011

எம்மாகிட்ட கை கூலி எத்தா வாங்கினாரு! - காசுக்கு என்னை விக்காதீங்க என்று சொல்லிபார்தேன்! !

அங்கே இங்கே  தேடவேணாம்    தானா வருது காசு 

எம்மாகிட்ட கை கூலி எத்தா வாங்கினாரு
எம்மா கொடுத்த  பணத்திலே என்னை பெத்து வளர்த்தாரு,
இப்போவந்து என் வரவை எதிர் பாக்கிறாரு.

எத்தாபேரு    ஆண்பிள்ளை 

எங்க அம்மா பெயர் பொம்பளை,
இப்போ...என்   பெயர் மாப்பிள்ளை ,

 மாப்பிள்ளை நான் ஆனதாலே மதிப்பு  ஏறி  போச்சு,
முக்கியம்மா நாலுபேரு மதிப்பு போடலாச்சி.....
அரபு நாடு போய் வந்துட்டேன் அதுவும் பெரிய  பேச்சு,
அங்கே இங்கே தேட வேண்டாம் தானா வருது காசு

காசுக்கு என்னை விக்காதீங்க என்று சொல்லிபார்தேன்
காலமெல்லாம்  கெட்டப்பெயர் நல்லா சொல்லிபார்த்தேன்
உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு எம்மா சொல்லுறாங்க
இந்த ஒன்னும்  தெரியா  மாப்பிள்ளைக்கா  இவ்வளவு ரேட்டு

எம்மே(M.A) படிச்ச மாப்பிலேன்னு எத்தா  சொல்லுறாரு
எம்மாம்! பெரிய படிப்புன்னு ரேட்டை ஏத்துறாரு
படிச்ச நானு பணம் பறிச்சா புத்திசாலி யாரு
பின்பு  வரும் கண்ணீரை துடைப்பது யாரு

பெண்ணுக்கு மஹர் கொடுக்க சொல்லி மார்க்கம் சொல்லுது
ஆண் எனக்கு  மஹர் கொடுக்க யார் சொன்னது
மண்ணுக்கு நீங்க பாரமாக வந்தா சேர்ந்தீங்க
பெண் இனத்தை கொஞ்சமாச்சும் வாழ விடுங்க .


பாடியவர் தேரிழந்தூர்  தாஜுதீன்


"இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!" என நபியவர்கள் கூறினார்கள்.
Prophet Muhammad (s) said: “Among my followers the best of men are those who are best to their wives, and the best of women are those who are best to their husbands. To each of such women is set down a reward equivalent to the reward of a thousand martyrs. Among my followers, again, the best of women are those who assist their husbands in their work, and love them dearly for everything, save what is a transgression of God’s laws.”

Friday, March 25, 2011

மனம் மகிழுங்கள் - 41 : குறையற்ற மனம் - அளவற்ற மகிழ்வு

மனம் மகிழுங்கள்!
41 - குறையற்ற மனம் - அளவற்ற மகிழ்வு
- நூருத்தீன்

நாம் என்ன செய்தாலும் அதில் மகிழ்வடைகிறோமா; மனம் மகிழ்வடைகிறதா என்பது முக்கியம். அந்தச் செயல் தப்புச் செயலாய் இருக்கக்கூடாது என்பது அதைவிட முக்கியம். “ஜட்ஜய்யா! கொலை செய்வது மகிழ்வளித்தது; அதனால் கழுத்தை அறுத்தேன்” என்றால் நீதிபதி கழுத்திற்குத் தீர்ப்பு எழுதி விடுவார்.

ஒருவர் உத்தியோகம் செய்கிறார்; ஆனால் அதில் அவருக்கு அறவே விருப்பமில்லை; அவருக்குச் சம்பந்தமில்லாத வேலை. இன்னொருவர் - அவரது தகுதிக்கேற்ற ஊதியமில்லை; விருப்பத்திற்கேற்ப ஓய்வோ விடுமுறையோ கிடைப்பதில்லை. மனம் லயிக்கும் கலை, விளையாட்டு எதையும் கற்க இயலவில்லை; மனதிற்குப் பிடித்த காரியம் எதுவும் செய்ய முடியவில்லை; இல்லை... முடியவில்லை... என்று ஏகப்பட்ட ‘லை’ களுடன் ஒவ்வொருவருக்கும் தனிமை; மன அழுத்தம்; விரக்தி.

ஒருவர் இத்தகைய பரிதாபகர நிலைக்கு ஆட்பட்டுவிடுவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன.

பட்டியல்!

அவர் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் பட்டியல்!
சென்ற அத்தியாயம் கேளுங்கள் ராசாவே பற்றி பின்னூட்டமும் நண்பர்களின் மின்னஞ்சலும் ஆச்சரியம் பகிர்ந்து கொண்டன. சில விளக்கங்கள் பார்ப்போம் -

முதலாவது ‘கேட்பதும்’ ‘கொடுப்பதுவும்’ ‘மறுப்பதுவும்’ நமது மனங்களில் தவறான பரிமாணத்தில் பதிந்துள்ளன. அதனாலேயே  கேட்கும்போதும் சரி; மறுக்கும்போதும் சரி - பெரும்பாலும் நாம் முற்கூட்டியே மனதில் ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு preconceived notion-டனேயே உரையாடிக் கொள்கிறோம். இது தவறு. Preconception என்பதே தனியொரு நீளமான டாபிக். அது இங்கு வேண்டாம்.

அடுத்தது, கேட்பதிலும் கொடுப்பதிலும் மறுப்பதிலும் உண்மையும் நேர்மையும் வேண்டும். உள்நோக்கம் தவறு. நியாயமான ‘கேட்டல்’ தாட்சண்யமின்றி மறுக்கப்பட்டால், அது கேட்டவரின் குற்றமல்ல. கேட்டவர் கூச்சப்பட ஒன்றுமில்லை. கௌரவத்திற்கும் இழுக்கில்லை. மறுத்தவரின் கீழ்மையைப் பார்த்து அவர்தான் பரிதாபப்பட வேண்டும்.

மாறாய், மறுப்பவர் நியாயமான காரணத்துடன் மறுத்து அதைக் கேட்பவர் உள்நோக்கம் கற்பித்துக் கொண்டால் அது மறுப்பவரின் குற்றமாகாது. கேட்டவரின் கீழ்மை.

இவை இவ்வாறிருக்க எதை யாரிடம் கேட்பது என்பது இயல்பாய் நம் மனங்களில் பதிந்திருக்கும் பொது அறிவு. ‘மக்களின் தேவை எங்களின் சேவை’ என்று வங்கியொன்று விளம்பரம் செய்கிறது என்பதற்காக அதன் கிளையொன்றில் நுழைந்து, “செலவிற்குப் பணமில்லை. இரண்டாயிரத்து நூற்றி இருபத்தஞ்சு ரூபாய் கொடுங்கள்” என்று யாரும் கேட்கப்போவதில்லை. மேலாளர் போலீஸிற்கோ கீழ்ப்பாக்கத்திற்கோ போன் செய்வார்.

கணக்குத் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போது ஆசிரியரிடம் சந்தேகம் கேட்கக் கூடாது. அவர் குட்டினால் வலிக்கும். அது மிகச் சரி. ஆனால் வகுப்பறையில்? “போடா மண்டு. எத்தனைமுறை சொன்னாலும் உனக்குப் புரியாது” என்று அவர் மாணவனின் மண்டையில் தட்டினால் அனேகமாய் மாலையில் அவர் தனி வகுப்பு நடத்தி சம்பாதித்துக் கொண்டிருக்கும் சாத்தியம் அதிகம்.

தொழில், திருமணம், கார் போன்றவை எல்லாம் வெற்றிகரமாய் அமைவதற்கும் கேட்பதற்கும் என்ன சம்பந்தம்?

குளிப்பதற்கு சோப்பு வேண்டும் என்றால் நேராய்க் கடைக்குச் சென்று வாங்கி வந்துவிடலாம். எந்தப் பிரச்சினையும் இல்லை. கார் வாங்க வேண்டுமென்றால்? அதற்கான ஆலோசனைகளை விபரங்களை கடன் உதவிகளை யார் யாரிடமெல்லாம் கேட்பீர்கள் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்; புரியலாம்.


அரசாங்கத்தின்மீது குறை; மனைவி மீது குறை; தம் குழந்தைகளின் மீது குறை; நாள் நட்சத்திரத்தின் மீது குறை; முதலாளி மீது குறை; பொருளாதாரம், தம் துரதிருஷ்டம், குறைவான கல்வித் தகுதி, மாமன், மச்சான், மாமனார் என்று குறை... குறை... கூடை நிறையக் குறை.

குறைகளில் நியாயம் இருக்கலாம்; அநியாயத்திற்கு அபத்தக் களஞ்சியமாக இருக்கலாம். அதன் அலசல் இங்கு கருப்பொருளன்று.

இந்தக் குறைகளெல்லாம் சேர்ந்து சேர்ந்து அவரது மனதில் ஒரு தீர்மானம் ஏற்பட்டு விடுகிறது. வாழ்க்கையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம். ‘குறைகள் என் வாழ்க்கையில் வற்றாத ஊற்று என்றாகிவிட்டது. எனவே நான் வாழ்க்கையில் துயருற்றுக் கிடக்க எனக்குப் போதுமான நியாயம் இருக்கிறது...’ என்று விரக்தி! கன்னத்தில் கை!

தப்பு! இது பெரும் தப்பு! நமது எண்ணத்திற்கு ஏற்பவே வாழ்க்கை அமைகிறது. செயலுக்கு ஏற்பவே முடிவு அமைகிறது.

முழ நீளத்திற்கோ, சென்னையின் நூறடி ரோடு அகலத்திற்கோ உங்களிடம் குறைகளின் பட்டியல் இருக்கலாம். அவை வெற்று லிஸ்ட்! இணைய விரும்பும் கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் இருக்க, தன்னிஷ்டத்திற்குத் தயாரித்துக் கொள்ளும் வேட்பாளர் பட்டியல் போல் அது உபயோகமற்ற பட்டியல். நீங்கள் விரும்பியவாறு உங்களால் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இயலாவிட்டால், விரும்பிய செயல் புரிய இயலவிலலை என்றால், எத்தகைய சாக்குப்போக்குச் சொல்லியும் பயனில்லை.

ஏன்?

தலையைச் சுற்றிப் பாருங்கள்; அல்லது ஊரைச் சுற்றிப் பாருங்கள். நொடிதோறும் எத்தனை பேர் எத்தனை சவால்களை வென்று கொண்டிருக்கிறார்கள்?

கல்வித் தகுதி இல்லாதவர் கூடச் சாதனையின் விலாசத்தைச் சுமந்து கொண்டு திரிகிறார்.

‘உலகப் பொருளாதாரமே சுணங்கிக் கிடக்கிறதாம்; அதனால் நான் இன்று வேலைக்குப் போக மாட்டேன்’ என்றெல்லாம் மனைவியிடம் வம்பு பண்ணாமல் சிரமப்பட்டு உழைத்துச் சம்பாதிப்பவர் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

ஏகப்பட்ட பிள்ளை குட்டிகளுடன் இருப்பவர் உற்சாகமாய் இருக்கிறார்;

மனைவியுடன் சண்டைக் கோழியாய் வாழ்ந்தவர் ஒரு சந்தர்ப்பத்தில் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டு அணுதினமும் காதல் என்று இல்லறத்தை மகிழ்வாய் மாற்றிக் கொண்டுவிட்டார்.

தெருவுக்குத் தெரு இப்படி நிறைய உதாரணங்கள் காணலாம்.

மனம் மகிழுங்கள் - 41 : குறையற்ற மனம் - அளவற்ற மகிழ்வு


Tuesday, March 22, 2011

அரசியல் உறுதிப்பாடினால் சிங்கப்பூர் வழிகாட்டுகிறது,

அரசியல் உறுதிப்பாடினால் சிங்கப்பூர் வழிகாட்டுகிறது   பல  இன ஐக்கியத்திற்குப் பாராட்டு.
  சிங்கப்பூர் இப்போதைய தலைமைத்துவத்தின் கீழ் நெடுங்காலம் அரசியல் உறுதிப்பாட்டுடன் விளங்கி வரும்  சிங்கப்பூரில் விரைவான பொருளாதார் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதற்கு வலுவான தலைமைத்துவமும் மக்களின் கடின உழைப்புமே காரணம்.இந்த இரண்டு சிறப்புகளையும் பெற்றிராததால் தான்  வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் பல தலை தூக்க முடியாத நிலைமையில் இன்று  இருந்து  வருகிறது.
   வளச்சி  வரும் ஆசிய நாடுகளுக்கு சிங்கப்பூர் மிகச் சிறந்த முன்னோடியாக திகழ்கிறது. வளச்சி பெற்றுள்ள நாடுகள் கூட சிங்கப்பூரிடமிருந்து  சிலவற்றை எடுத்துக்கொள்ள  இயலும். பல்வேறு பொருளாதார மாற்றங்களினாலும், அரசின் துணையோடு தன் உள்கட்டுமானத்தினை தரப்படுத்திக் கொண்டதாலும், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கை தரம் பல்மடங்கு உயர்ந்துள்ளது.
   மலேசியா ,தாய்லாந்து , லாவோஸ் , தென்வியட்னாம்,ஜப்பான், ஹான்காங் ஆகிய தென்கிழக்காசிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வந்த பின்பு அறிந்த உண்மை இது .
சிங்கப்பூரின்  அரசியல் பொருளாதார  சமூகவியல் சிறப்புகள் வாய்த்தது.
இங்கு நிலவும் பல  இன மக்களின் ஒருமைப்பாடு தண்மை  வெகுவாக கவரக்  கூ டியது.  ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களைக் கொண்டு சில நாடுகளில் இன ஐக்கியம்  ஒரு பெரிய பிரச்னையாக இருக்கிறது.
    சிங்கப்பூரில் பல இன மக்கள்  வாழ்ந்துவரினும் அரசியல் சமுதாய நீதி  ஆக்கியவற்றை தலைமைத்துவம் வழுவாது பேணி வருவதால் இங்கு இனவாத பிரச்னைக்கு என்றுமே இடமிருக்காது,  சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் சாசனத்தின் மூலம் உத்தரவாதமளிக்கக் கூடிய முற்போக்குக் குடியரசாக   சிங்கப்பூர் விளங்குகிறது.
  
     நாட்டு நடப்புகளை சிங்கப்பூர் மக்கள் நன்கு உணர்ந்தவர்களாக உள்ளனர் .
உழைத்து முன்னேற   விரும்பும் செயல் வேகம் மக்களிடம் மேலோங்கி நிற்கிறது .இதனால் வெற்று  அரசியல் முழக்கங்களுக்கு  இடமேற்படாதவாறு பார்த்துக் கொள்கிறார்கள். சிங்கப்பூர் போன்ற செயல் முனைப்பு உள்ள  சமுதாயத்தில் அரசியல் சந்தர்பவாதங்களுக்கும், சுரண்டலுக்கும் என்றைக்குமே இடமிருக்க முடியாது .

    ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக சிங்கப்பூர்தான் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கின்றது .இந்த வளர்ச்சி வேகம் சிங்கப்பூரில் தொடர்ந்து இருந்து வரும் .வெளிநாட்டு மூலதனங்களைக் கவரும் வகையில் சிங்கப்பூரின் பொருளாதாரக்  கொள்கைகள் இருப்பது இதற்கு நல்ல அடிப்படை.

   பயண தொழில் வளர்ச்சியிலும் சிங்கப்பூருக்கு சிறப்பான இடம் எப்பொழுதும் இருக்குமாறு செயல்படுகிறது .சிங்கப்பூருக்கு வரும் பணக்கார பயணிகள் தங்கள் தாயகத்தில் இருப்பது போன்று உணரக்கூடிய  அளவுக்கு பயணத்துறைப் பணிகள் இங்கு சிறப்பாக இருக்கின்றன.

முஹம்மது அலி ஜின்னா, நீடூர்.)

(nidurali" "நீடூர்அலி") 






Monday, March 21, 2011

ஒருவகை லஞ்சம் போல் தோன்றவில்லையா?

  இலவசமாக தேர்தல் அறிக்கையில்    கிரைண்டர், மிக்ஸி , தொலைக்காட்சி , லேப்டாப் கிடைக்கும் ஆனால் மின்சாரம் மட்டும் காசு கொடுத்தாலும் தடங்கலுக்கு வருந்துகின்றோம் என்ற நிலை வரும் . இனாம் கொடுப்பதனை வெளியில் சொல்வது பண்பாடாக இருக்க முடியாது. இதுதானே நமது  மரபு . ஆனால் இது அரசுக்கு பொருந்தாது. காரணம் நமது பங்கும் அதில் உள்ளது .
கிரைண்டர், மிக்ஸி இவைகளை பயன் படுத்த பொருள் தேவை ! அதற்கு ஒருவர் வருவார் பணமாகவோ அல்லது பொருளாகவோ கொடுக்க விரைவில் ஒரு  அறிக்கையுடன் .
எங்கு கொடுத்தார்கள் எப்படி கொடுத்தார்கள் சொன்னபடி அனைவர்க்கும் அதனை கொடுத்தார்களா?   அதனை வாங்கியவர்கள் பயன்படுத்தினார்களா  அல்லது விற்று  விட்டார்களா என்பது பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும். 

இடுபவர்களை இடாதார் கெடுப்பார் என்ற பெயர் நமக்கு வேண்டாம் .

எங்களுக்கு தேர்தலில் வாக்களித்தால்  இவை  தருவோம் என்பது ஒருவகை லஞ்சம் போல் தோன்றவில்லையா!  இதற்கு முதலில் கருத்து கணிப்பு எடுங்கள். உங்கள் வோட்டு  இந்த
கருத்து கணிப்பில் யாருக்கு ?


Saturday, March 19, 2011

மனம் மகிழுங்கள் - 40 : கேளுங்கள் ராசாவே!

மனம் மகிழுங்கள்!
40 - கேளுங்கள் ராசாவே!
- நூருத்தீன்
நாம் விரும்புவதை அடைய வேண்டுமானால் கேட்க வேண்டுமாம். ‘கேட்டுப் பெறு’ என்கிறார்கள். ‘என்ன கேட்க வேண்டும்; எதைக் கேட்க வேண்டும்’ என்கிறீர்களா?

நம்மிடம் பொதுவாய் ஒரு குணம் உண்டு. யாரிடமும் எதையும் கேட்கக் கூச்சம். கூர்ந்து ஆராய்ந்து, கூறு போட்டு அதைத் தயக்கம், பயம் என்று விதவிதமாகவும் சொல்லலாம்.

அதே நேரத்தில் நேர் எதிர்மாறாய், எங்கெல்லாம் கேட்கக்கூடாதோ அங்கெல்லாம் கூச்சம் மறந்து போகும்!

லஞ்சம், கமிஷன், டொனேஷன்,  எதற்கெடுத்தாலும் இலவசம் இத்தியாதி. இதையெல்லாம் பார்த்து ‘ஆமாமாம், இந்த நாடே உருப்படாது’ என்று சலித்துக் கொள்பவர்கள் பெண் வீட்டில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு, டௌரி, சீர், செனத்தி, கார், நகை, நட்டு, லொசுக்கு என்று கேட்க வெட்கப்படுவதில்லை.

வேடிக்கையாய் இல்லை?

கேட்டுப் பெறுதல் நம் உலக வாழ்வின் செயல்பாடுகளுக்கு, சாதனைகளுக்கு அவசியம். ஆனால் அதை முறையாய்ப் பின்பற்றாமல் போவதில் நிகழ்கிறது பிழை.

வாழ்க்கையில் நாம் வேண்டுவதெல்லாம் நடப்பதில்லை என்று பலரும் அங்கலாய்க்கிறோம்; நம்பிக்கை இழக்கிறோம். ஆனால் நமக்குத் தேவையான உதவிகளை உரிமைகளை கேட்டுப்பெற ஏன் மறுக்கிறோம்; தயங்குகிறோம்?

"பிறருக்கு உதவுவது எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் எனக்கு ஏதாவது வேண்டுமென்றால்தான் பிறரிடம் கேட்கப் பிடிக்காது" ஏன் அப்படி?

Monday, March 14, 2011

குழந்தைகளும் பள்ளிவாசல்களும்



உங்கள் சிந்தனைக்கு இரண்டு நிகழ்ச்சிகள்!

ஒரு தடவை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்களின் பேரக்குழந்தைகளில் (ஹசன் அல்லது ஹுசைன்) ஒருவரைச் சுமந்தவாறு மக்ரிப் அல்லது இஷா தொழுகைக்கு வந்தார்கள். குழந்தையைக் கீழே இறக்கி விட்டு விட்டு தொழுகையைத் தொடங்கினார்கள். அவர்கள் சஜ்தாவுக்குச் சென்றதும் நீண்ட நேரம் அதே நிலையிலேயே இருந்திடவே - நான் சற்று என் தலையைத் தூக்கி எட்டிப் பார்த்தேன். பேரக்குழந்தை நபியவர்கள் முதுகில் அமர்ந்திருந்தது! நான் மீண்டும் சஜ்தாவுக்குச் சென்று விட்டேன். தொழுகை முடிந்ததும் நபித்தோழர்கள் கேட்டார்கள்: யா ரசூலுல்லாஹ்! தாங்கள் நீண்ட நேரம் சஜ்தாவில் இருந்திடவே ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதோ அல்லது தங்களுக்கு வஹி வரத் தொடங்கி வி;ட்டதோ என்று நாங்கள் நினைத்து விட்டோம் என்றார்கள். நபியவர்கள் சொன்னார்கள்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, எனது பேரன் என் முதுகில் அமர்ந்து விட்டார். அவரது மகிழ்ச்சியைக் கெடுத்து விட நான் விரும்பவில்லை! (அன் நசயீ, அஹ்மது, அல் ஹாக்கிம்)

Saturday, March 12, 2011

சுனாமி படங்கள் ! ஜப்பான் நல்ல நிலை அடைய நாம் பிரார்த்திப்போம்.-

  ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப்பேரலையினால் மக்கள் படும் அவதிகள் உலக மக்கள் அனைவர்க்கும் மிகவும் வேதனை தந்துள்ளது . அவர்களுக்காக  நமது ஆதரவு தருவதுடன் பிரார்த்தனையும் செய்வோம் .
இப்படியும் நடக்குமா! இதற்கு மாற்று வழி என்ன? சிந்தனை செய்வோம் ! போரிட்டு  அழியும் மக்கள் (நாடுகள்) நல்ல  வழிக்கு திரும்பி வர வேண்டுவோம்.  இறைவன் நமக்கு அவ்வப்பொழுது  நமக்கு இப்படி பாடம் புகட்டியும் நாம் மாறாமல் மற்றவர் வாழ்வில் விளையாடி அழிவினை உண்டாகுவது ஏன் ?
  உலக யுத்தத்தில் அழிந்த ஜப்பானியர்கள் மிகவும் பலர் .அதன் பிறகு நல்ல நோக்குடன் வெகு வேகமாக முன்னேற்றம் அடைந்தது .பின்பு தன் கொள்கைதனை மாற்றி மக்களுக்கு சேவை செய்யும் கொள்கையுடன் பல நாடுகளுக்கு உதவி செய்வதில் முன் நிற்கின்றது . எந்த நாட்டுடனும் போரில் சேராமல் இருந்து உலக மக்கள் மனதில் நல்ல மதிப்பினை பெற்று வருகின்றது. சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படும் ஜப்பான் 6,800 தீவுகளைக் .கொண்டது. கல்வியில் 100% முழமையான முன்னேற்றம் உடையது. அது திரும்பவும் நல்ல நிலை அடைய நாம் பிரார்த்திப்போம் .

மண்ணால் கட்டப்பட்ட பழங்கால பள்ளிவாசல்( மசூதி )

  ஆயிரம் வருடத்திற்கு முன்பு மண்ணால் கட்டப்பட்ட மிகவும் பழைய மசூதி
ஆப்ரிக்காவில் திம்புக்து  பள்ளிவாசல்... 
                             ஆப்ரிக்காவில் உள்ள  லாராபங்க பள்ளிவாசல்

Friday, March 11, 2011

ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி (வீடியோ)

இந்த நிலநடுக்கத்தையடுத்து ஜப்பானின் பெரும்பாலான விமான நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. ஜப்பானை நோக்கிச் சென்ற அனைத்து கப்பல்களும் நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டன. நாடு முழுவதும் ரயில்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.இந்தப் பூகம்பம் மற்றும் சுனாமியால் பெருமளவில் உயிர்சேதம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

மனம் மகிழுங்கள் - 39 : விடாமுயற்சி!

மனம் மகிழுங்கள்!
39 - விடாமுயற்சி!
- நூருத்தீன்
மிழில் ஒரு பழமொழி உண்டு; கேள்விபட்டிருப்பீர்கள்; "அடிக்க அடிக்க அம்மியும் நகரும்."
அதை ஏன் போட்டு அடித்துக் கொண்டிருக்க வேண்டும்? துணைக்கு ஒருவரை அழைத்து நகர்த்தி வைத்துவிட்டுப் போனாலென்ன? இங்கு தூக்கி வைப்பதன்று பிரச்சினை. விடாமுயற்சி! அதுதான் பேச்சு இங்கு!

விடாமுயற்சி என்றால் என்ன? அது வேறொன்றுமில்லை; ‘சாதனையின் ஆணிவேர்!‘

ஒருவருக்கு ஏகப்பட்ட திறமைகள் இருக்கலாம். ஆனால் அவை மட்டுமே அவரை சாதனையாளராக உருவாக்குவதில்லை. உலகில் திறமையாளர்களுக்கா பஞ்சம்? சொந்தத்தில், உங்கள் தெருவில், எதிர் வீட்டில், பக்கத்து வீட்டில் என்று எத்தனையோ திறமையாளர்கள் இருக்கலாம். அந்த அவர்கள் அத்தனைப்பேரும் சாதிக்கிறார்களா? இல்லையே!

ஒருவர் சிறந்த அறிவாளியாக இருக்கலாம். ஆனால் அது மட்டுமே அவரது சாதனைக்கு உதவாது. அன்று புலவர்கள் பலர் தங்களது அறிவை மன்னனைப் புகழ்ந்து பாடப் பயன்படுத்தினார்கள் என்றால் இன்று அரசியல் தலைவரை. ......

என்ன பிரயோசனம்?

ஒருவர் கல்வியில் சிறந்து விளங்கலாம். ஒரு முழ நீளத்திற்கு அவரது பெயருக்குப் பின்னால் அவர் படித்துப் பெற்ற பட்டங்கள் ஒட்டிக் கொண்டிருக்கலாம். அத்தனைக் கல்வியாளர்களும் சாதனையாளர்களா? சொல்லப்போனால் மாணவருக்குக் கற்றுத்தரும் ஆசிரியரே கல்வியறிவில் சிறப்பானவர் தாமே? அவர், ‘ஏணி, தோணி, வாத்தியார்...’ என்று அப்படியேதானே இருக்கிறார்?

குறிப்பிட்ட சாதனை என்ற ஒன்றைப் புரிய வேண்டுமெனில், இலட்சியமொன்றை அடைய வேண்டுமெனில், தேவை விடாமுயற்சி. தகுதிகளும் திறமைகளும் எண்ணற்ற வகையில் அமையப் பெற்றிருந்தாலும் விடாமல் முயற்சி செய்தால் தவிர எந்தக் காரியமும் முதல் முயற்சியிலேயே வெற்றி அடைவதில்லை.

உலகின் சாதனையாளர்கள் இந்த இரகசியத்தை நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள். ருசியான சமையலுக்கு உப்பு, காரம் போல விடாமுயற்சி தமது இலட்சியத்திற்கு முக்கியமான ஓர் ஆக்கக்கூறு என்று உணர்ந்து கொள்கிறார்கள்.

‘அதெல்லாம் ச்சும்மா’, ‘எனது அறிவும் திறமையுமே சாதனையை எனது வீட்டிற்கு இட்டு வந்து என் தோளில் ஆளுயர மாலையைப் போtடச்செய்யும்’ என்று நம்புபவர்கள் வாழ்க்கையில் அசுவாரசியமாகிப் போகிறார்கள்.

மேற்படிப்பு, தொழில், ஆராய்ச்சி என்று ஏதோ ஒரு புதிய திட்டம் உங்களுக்குத் தோன்றுகிறது. அல்லது ஏதோ ஓர் ஏடாகூட சிந்தனை தோன்றி, குதிரை ஏற்றம் கற்றேத் தீருவது என்று முடிவெடுக்கிறீர்கள். அந்த ஆர்வத்தில், உற்சாகத்தில் பரபரவென அதற்கான முதற்கட்ட ஆயத்தம் செய்தாகிவிட்டது. அடுத்த கட்டமாய் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவும் ஆரம்பித்து விடுகிறீர்கள். அதுவரை எல்லாம் ஓக்கே!

அடுத்து அந்தச் செயலின் ‘ப்ராக்டிக்கலான இன்னல்கள்’ முகத்தில் வந்து அறையும். பிரச்சினைகள், சவால்கள், என்று ஒன்று மாற்றி ஒன்று உங்களை ஆக்கிரமிக்கும்.

குதிரையில் ஏறி அமர்ந்தால் அது கார் ஸீட் போல் சொகுசாய் இருக்காது என்பது ஒருபுறமிருக்க, “ஹை ஹை” என்றால் அந்த ஜந்துவோ உங்களைக் கீழே தள்ளிவிட்டுத்தான் மறுவேலை என்று அடம்பிடிக்கும்.

அடக்கி, ஆண்டு, விடாது அயராது பயிற்சி எடுத்து முடித்தபிறகே ஒருவழியாய்க்  குதிரை ஏற்றன் பிடிபடும். அதற்குள் பாதி அல்லது முக்கால்வாசி இளைத்திருப்பீர்கள்.

Monday, March 7, 2011

ஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே?


(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்.(ஓ)

        பேட்டை முதலாளி என்று செல்லமாக அழைக்கப்பட்ட தோல் வியாபாரத்தில் கொடிகட்டிப் பிறந்த கண்ணிய மிகு காயிதே மில்லத் தனது உடல், பொருள், ஆவி அத்தனையும் இஸ்லாமிய சமூகத்திற்காக அர்ப்பணித்து தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவிலும் தலை நிமிர்ந்து நிற்க வைத்த பெருமை படைத்த அப்பழுக்கற்ற அரசியல் வாதிமட்டுமல்ல நாடடுப்பற்று மிக்க புகழ் மிக்கவர். தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி, பகுத்தறிவு பகலவன் பெரியார், எழைப்பங்காளன் காமராஜர் போன்றவர்களுடன் இணையாகப் பேசப்பட்டவர் காயிதே மில்லத் அவர்கள். 1967 ஆம் ஆண்டு நான் புதுக்கல்லூரி மாணவனாக இருந்த போது பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வர் பொருப்பினை ஏற்ற போது குரோம்பேட்டை வீடு தேடிச் சென்று வாழ்த்துப் பெரும் அளவிற்கு உயர்ந்தவர் காயிதே மில்லத். தனது நீண்ட மேலாடையில்(ஓவர்கோட்) மெலிந்த உருவமானாலும் உயர்நது விளங்கினாரர்.

  அவருக்கு உறுதுணையாக சிம்மக் குரலோன் திருப்பூர் மொய்தீன், ரமணசமுத்திரம் பீர்முகம்மது, இலக்கியச் செல்வன் லத்தீப், முகவை எஸ்.எம். செரீப், வந்தவாசி வகாப், பத்திரிக்கையாளர் திருச்சி ஈசூப், கொள்கைச் செம்மல் ஏ.கே. சமது, இளைஞர் சிங்கம் செஙகம் அப்துல் ஜப்பார் போன்றவர்கள் இருந்ததால் இந்திய பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்தன்மையுடன் இரட்டைப்படையில் பதவி வகித்து இஸ்லாமிய குரலினை ஒலிக்கச் செய்தது. ஆனால் இன்று தங்கள் கட்சியினை அங்கீகாரம் பெற முடியாத அளவிற்கு தாவூத் மியாகான் கட்சி சவால் விடடும், தி.மு.க கட்சியின் பின்னால் ஒளிந்து கொள்ளும் அளவிற்கு தேய்து விட்டது பரிதாபமாக இல்லையா தோழர்களே?

U.A.E அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை

U.A.E அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை  வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கும், அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கி உள்ளது. இதன் ஒரு கட்டமாக அமீரகத்தில் வாழும் இந்திய மக்கள் அங்குள்ள தூதரக இணையதளத்தில் விண்ணபித்து கொள்ள வேண்டும். அதில் அவர்களது விசா எண், முடிவடையும் காலம், பாஸ்போர்ட் எண்ணும், அது முடிவடையும் தேதி, முகவரி, செல்பேசி எண், இந்திய முகவரி போன்ற சில தகவல்கள் கொடுக்க வேண்டும். பின்னர் மின்னஞ்சலுக்கு மற்ற விவரங்கள் வரும். அடையாள அட்டை இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதுவரை இதில் பதிவு செய்யாதவர்கள் உடனே இதை பயன்படுத்தி கொள்ளவும்.
தகவல் :முஹம்மதுஅலி   நசீர்

Friday, March 4, 2011

மனம் மகிழுங்கள் - 38 : திருப்புமுனை!


மனம் மகிழுங்கள்!
38 - திருப்புமுனை!
- நூருத்தீன்
ம் அனைவருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் அது நிகழ்ந்திருக்கும். மந்தமாகவே சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை; தினமும் ஒரே மாதிரி எழுந்து, பல் துலக்கி, காப்பி குடித்து, குளித்து, உண்டு, அலுவலகம் சென்று திரும்பி, மீண்டும் வீடு, உணவு, டிவியில் அடாசு ஸீரியல் என்று இப்படி மெத்தனமாய்க் காலம் நகர்ந்து கொண்டிருக்கும்போது திடீரென வாழ்வில் ஒரு திருப்பம் - உங்கள் பாதையை மாற்றியமைக்கும் திருப்பம் - அமைந்திருக்கும்.

எங்காவது கேட்டிருப்பீர்கள் அல்லது  படித்திருப்பீர்கள். மிகப் பெரிய தொழிலதிபர் ஒருவர் கூறியிருப்பார், "இனிமேல் என் வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்திருந்தேன். மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு சொந்த ஊருக்குச் செல்ல டிக்கெட் வாங்க நினைத்திருந்தேன். அப்பொழுதுதான்..."

திரையுலகைச் சார்ந்த பல பிரபலங்களிடமும் இத்தகைய பேட்டிகளைக் காணலாம்.

பெரிசோ சிறிசோ நிகழும். என் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கிறது. சற்று யோசித்துப் பார்த்தால் உங்களது வாழ்க்கையிலும் இப்படியொன்று நிகழ்ந்திருக்கலாம். இல்லையென்றால் சற்றுப் பொறுங்கள்; நாளை, நாளை மறுநாள் நிகழ்ந்துவிடும்.

வாழ்க்கையின் இலட்சியத்தை எட்டும் பயணத்தில் ‘திருப்புமுனை’ அறிவது அவசியம். நம் கண்ணுக்குத் தெரியாத விதி அது. அது நிகழும்போது ஒருவரது வாழ்க்கையையே மாற்றி விடுகிறது. ஆனால் இதில் சூட்சமம் என்னவென்றால் அவர் அத்தகைய தருணம்வரை மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு போராடி வந்திருக்க வேண்டும். பாதியிலேயே அவர் கையைத் தூக்கிவிட்டால் அரைக் கிணறுதான்.

இறைவன் நம் கர்மத்திற்கு ஏற்பவே பலன் அளிக்கிறான். மனிதன் தனது குறிக்கோளை அடைய மெனக்கெடும்போது அந்த மெனக்கெடல் நிசந்தானா என்று இறைவனின் சோதனை அமையும். சோதித்து, சோதித்து மனிதனின் ஊக்கமும் விடாமுயற்சியும் தளராது தொடர்ந்து கொண்டிருந்தால் சடாரென அத்திருப்புமுனை அவன் பாதையின் எதிரே வந்துவிடுகிறது.

அதுவரை இருள் படர்ந்து சோகமயமாய்க் காட்சியளித்த உலகம் ஒரு நொடியில் வண்ணமயமாய் மாறிவிடும். "எல்லாமே சங்கடமாகவும் பிரச்சினையாகவும் இருக்கிறது. காரியங்கள் எவையும் கைகூட மறுக்கின்றன. எதைத் தொட்டாலும் துலங்கமாட்டேன் என்கிறது.." என்பதான நிலையில் இருந்தால் அதன் அர்த்தம் "இதோ வரப்போகிறது அது... வெற்றி அந்த முனையில் காத்திருக்கிறது" என்று நம்புங்கள் என்கிறார்கள் உளவியலாளர்கள். அதை மனிதன் உணர ஆரம்பித்துவிட்டால் சோகங்கள் இலேசாகிவிடும். மனம் மகிழ்வுடன் முயற்சியைத் தொடரும்; அசராது.

கடினமான பாதையைக் கடந்தால்தான் திருப்புமுனை!
படாதபாடு படுத்தும் இன்னல்களெல்லாம் நம் இலட்சியத்தை அடையத் தேவையான சுமைகள்!

என்று மனம் உணர ஆரம்பித்து விட்டால் நாம் துவண்டு விடாமல் தாக்குப்பிடிக்க அவை உதவும்;

எனவே எவ்வளவுக்கு எவ்வளவு பிரச்சினைகளோ அந்தளவிற்கு நீங்கள் பெருமைப்படலாம், காரியம் கைகூடப் போகிறதென்று.

சரி, திருப்புமுனை வந்தாச்சு! "இனி எல்லாம் வசந்தமே" என்று சுபம் போட்டுவிடலாமா? அது அப்படியன்று.

நாம் மாறினால் மட்டுமே நம் உலகம் மாறும். தானாய் எல்லாம் மாறும் என்று நினைத்து அமர்ந்திருந்தால் அது பொய். பழைய பொய். மாயமாய் வானிலிருந்து ஓர் ஒளி வந்து நம் வாழ்க்கையின் கும்மிருட்டிற்குத் தோரண விளக்கு அமைத்துவிடாது!

"வாழ்க்கையில் நொடித்துப் போயுள்ளேன். நான் மீண்டு எழ வேண்டுமானால் எனக்கு 20 இலட்ச ரூபாய் முதல் இருந்தால்போதும்; தொழில் செய்து முன்னேறி விடுவேன்" என்று ஒருவர் கூறுகிறார். அன்றிரவு அவரில்லத்தில் கூரையைப் பிய்த்துக் கொண்டு ஒரு மூட்டை விழுகிறது; திறந்துப் பார்த்தால் 20 இலட்ச ரூபாய் பணம்.

அடுத்து அவர் நிலை மாற வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்? அவர் சொன்னதைப் போல் அதைக் கொண்டு தொழில் புரிய வேண்டும். அதை விடுத்து அதிர்ஷ்டம்தான் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்ட ஆரம்பித்துவிட்டதே, இனி என்ன தொழில் வேண்டிக்கிடக்கு என்று சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் பணத்தை மட்டும் செலவு செய்ய ஆரம்பித்தால்?

மூட்டை மட்டுமே மிஞ்சும். சுருட்டி முகத்தைத் துடைத்துக் கொள்ளலாம்.

நம்மை மாற்றிக் கொள்ள நாம் மனதினுள்ளே உறுதி பூண்டு அதைச் செயலில் காட்டினாலொழிய வாழ்க்கையில் என்ன திருப்புமுனை ஏற்பட்டாலும் அது நம் நிலையை மாற்ற உதவாது.
இதற்குச் சுருக்குவழி, குறுக்குவழி, ‘சைடு’ வழி என்று எதுவும் கிடையாது. நாம் நம்மை மாற்றிக்கொண்டு செயலில் இறங்க வேண்டும்.

உடனே ஒருவர் இப்படிக் கேட்கலாம். "நான் என்னதான் தலைகீழாக நின்றாலும் எனது விதியில் தோல்வி என்று எழுதி வைக்கப்பட்டிருந்தால் அதுதானே வந்துவிடியும். பிறகு நான் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்; மெனக்கெட வேண்டும்?"

இருக்கலாம். ஆனால் செயல் உங்களது வாழ்க்கையின் கடமை. உங்கள் விதி பணி செய்து கிடப்பதே! அதுதான் மன நிறைவு தரும்; மன மகிழ்வு தரும்.

னம் மகிழ, தொடருவோம்...

பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்க எஸ் க்யூப்!

நீங்களும், உங்கள் துணைவியாரும் காலையிலேயே உங்கள் குழந்தையை பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட்டு பணிக்குச் சென்று விடுகிறீர்கள். குழந்தை ஒழுங்காக பள்ளிக்குச் சென்று சேர்ந்ததா, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டதா? என்கிற அச்சம் அடிக்கடி அடிவயிற்றிலிருந்து பந்தாக எழும்பி நெஞ்சுக்கு வரும் அல்லவா?

அண்மையில் கோவையில் இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு பணிக்குச் செல்லும் பெற்றோருக்கு அடிக்கடி இந்த அச்சம் எழும்புவதுண்டு.

பெற்றோர்களுக்கு உதவும் வண்ணம் 'பள்ளிக் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?' என்கிற அட்டைப்படக் கட்டுரையை, நவம்பர் 18, 2010 இதழில் புதிய தலைமுறை வெளியிட்டிருந்தது. அக்கட்டுரையில் நாம் சில தீர்வுகளையும், காவல்துறையின் யோசனைகளையும், அரசு சொல்லும் வழிமுறைகளையும் குறிப்பிட்டிருந்தோம்.

அந்தக் கட்டுரையை வாசித்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் பிரசன்னபாபு, மென்பொருள் வாயிலாக ஒரு நல்ல தீர்வினைக் கண்டிருக்கிறார். இருபத்தாறு வயதான சுற்றுச்சூழல் ஆர்வலரான பிரசன்னபாபு, சென்னை சிறுசேரியில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார்.

தனது மென்பொருள் கண்டுபிடிப்புக்கு எஸ் க்யூப் (Student Security System) என்று பெயரிட்டிருக்கிறார். இரவு, பகல் பாராத மூன்றுமாத உழைப்பிற்குப் பிறகு இது சாத்தியமாகியிருக்கிறது. பள்ளிக்குச் செல்லும் உங்கள் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் குறுஞ்செய்திகளாக (SMS) பெற்றோரின் கைப்பேசிக்கு எஸ் க்யூப் அனுப்பி வைக்கும்.

எஸ் க்யூப் எப்படி பணியாற்றும்?

Tuesday, March 1, 2011

அந்தத் தோற்றம்! உரை லாவகம்! அத்துடன் ..





by டாக்டர் ஹிமானா சையத்
1987 – ல் சுறுசுறுப்பான எழுத்துலகப் பிரவேசம் . 89 -ல் வெளியூர்களிலிருந்து விழாக்களுக்கான அழைப்புகள்! மாவட்டத்துக்குள் மட்டுமே விழாக்களில் கலந்து கொள்ள முடியும் என்ற தொழில்சார்ந்த சூழல்! ஆனால் ஓர் எல்லையில் வெளிமாவட்டங்களுக்கும் சென்றாகவேண்டிய கட்டாயம் நேர்ந்தது. காரணம், விழாவுக்கு அழைத்தவர்கள் சமுதாய முன்னோடித் தலைவர்கள் அல்லது மிக நெருக்கமான வாசகர்கள்.
  சமுதாய விழாக்களில் மறக்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய கூட்டங்கள் கூடுவது தஞ்சை மாவட்டத்து பள்ளிவாசல் திறப்பு விழாக்களில்தான். எனக்குக் கிடைத்த அத்தகைய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் சிந்தனைச் சித்தர் நீடூர் சயீது ஹாஜியார் அவர்கள் என்பதையும், மயிலாடுதுறை மஸ்ஜிதே மஹ்மூதியா திறப்பு விழா அது என்பதையும் ஏற்கனவே ஊற்றுக்கண்ணில் சொல்லியிருந்தேன். அந்த விழாவில் ஊர் திரும்பும்போது ஹாஜியார் மறக்காமல் சொன்ன இன்னொரு விசயம் முக்கியமானது.”அடுத்த முறை நாம் சந்திக்கும் போது உங்களை தாடியுடன் சந்திக்க வேண்டும் ” என்ற வேண்டுகோள்தான் அது.
அதற்கு முன் அது பற்றிய சிந்தனை இருந்ததில்லை என்பதே உண்மை. உண்மையில் அடர்த்தியான தாடி எனக்கில்லை. ” முடி அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும்போது எப்படி தாடி வைப்பது? ” என்று கேட்டேன். உடனே பதிலைத் தயாராய் வைத்திருந்த ஹாஜியார் “அப்படிப் பட்ட தாடியைத்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் மிகவும் ரசித்திருக்கிறார்கள்” என்றார். இன்ஷா அல்லாஹ்” என்று சொல்லிவிட்டு ஊர் திரும்பிவிட்டேன். ஆனால் அதற்கான ஆயத்தம் செய்யவில்லை. அன்றாடம் ஷேவிங் தொடர்ந்தது. மெல்ல மெல்ல ஹாஜியார் அவர்கள் சொன்னதும் மறந்தும் போனது எனலாம்.

“இவரே நல்லாசிரியர்” – 1


இவரே நல்லாசிரியர்!
காரைக்கால் இக்ரா நர்ஸரி & பிரைமரி பள்ளியில் 26 – 02 – 2011 அன்று நடைபெற்ற “இவரே நல்லாசிரியர்” என்ற ஆசிரியர் பயிற்சி வகுப்பு குறித்து அதில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் கருத்துக்கள்:
இந்த பயிற்சி வகுப்பு எனக்கு முதலில் பிள்ளைகளை அடிக்கக் கூடாது என்பதை தெளிவாக புரிய வைத்தது. பிறகு குழந்தைகளை புரிந்து கொண்டு அவர்களிடம் இருக்கும் திறமைகளை எவ்வாறு வெளிக் கொணர்வது என்பதையும் தெரிந்து கொண்டோம். – ஆசிரியை D.Akila
இந்த பயிற்சி வகுப்பின் மூலம், எவ்வாறு குழந்தைகளின் திறமையை பிரித்தறிந்து அதற்கேற்ப ஊக்கம் கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன். மேலும் அன்பின் மூலம் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்பதையும் தெரிந்து கொண்டேன். – ஆசிரியை K. Kalpana

 --------------------------------------------------------------------------------------------
SA மன்சூர் அலி M.A., B.Ed.,
எஸ்.ஏ.மன்சூர் அலி. நீடூர் (மயிலாடுதுறை)சேர்ந்தவர். கவுன்சிலிங் படித்தவர் .கடந்த பத்து வருஷமாக இஸ்லாமிய படிப்புத்துறையில ஆசிரியராவும்,மாணவர்களுக்கு கவுன்சிலராகவும் வண்டலூர் கிரசன்ட் ஸ்கூலில் பணிபுரிந்துவிட்டு, மனித வள மேம்பாடு பற்றி ஆலோசனை,கருத்து பரிமாற்றம்  செய்கின்றார்.இது மூலமாக நிறைய மாணவர்கள்,தொழில் முனைவோர்,இப்படி எல்லா தரப்பு மக்களும் பயன் பெற்றுவருகின்றார்கள் ."

Please visit his sites:
http://meemacademy.com/
http://www.meemeducation.com/ 
http://counselormansoor.blogspot.com/
மன்சூர் பற்றி அன்வர் சதாத்

சமூகத்தில் நீங்களும் நானும் அங்கமே.
இறைவன் எங்களுக்கு கொடுத்த பெரும் கொடை.அண்ணன் மன்சூர்.
அவர்களை நாங்கள் ஒருபோதும் இழக்க மாட்டோம்.

...வழக்குரைஞர் அலி அண்ணன் அவர்களே,
மன்சூர் அண்ணன் அவர்கள் சென்னை கிரசென்ட் பள்ளியில் சேரும் போது நடந்த நிகழ்வு குறித்து,
மயிலாடுத்துறையின் அடையாளம் மறைந்த மதிப்பிற்குரிய அல்ஹாஜ் செய்து அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்.
கிரசென்ட் பள்ளி யில் சேரும்போது நேர்காணல் நிகழ்ச்சியில் இவரின் ஊர் நிடூர் என தெரிந்ததும் வழக்குரைஞர் செய்து வை தெரியுமா என கேட்டார்களாம்.
அதற்கு இவர் ஆமாம் தெரியும் எங்கள் தெருவுதான் என்று கூறினாராம்.
பிறகு ஒரு நிகழ்ச்சியில் வழக்குரைஞர் செய்து அவர்கள் கிரசென்ட் பள்ளி சென்றபோது அங்கே அதன் முக்கியஸ்தர் கேட்டாராம்.
உங்கள் ஊர் காரர் மன்சூர் இங்குதான் வேலை செய்கிறார் உங்களுக்கு தெர்யுமா என.
வழக்குரைஞர் செய்து அவர்கள் அவர் என் மருமகன்தான் அவர் ஆனால் எங்கேயும் பரிந்துரைகளை அவர் விரும்புவது இல்லைஎன்று பதில் கூறினார்களாம்.
இப்படிப்பட்ட ஒரு மாமனிதன் அண்ணன் மன்சூர் அவர்கள்.
அவர்களை உங்களின் உறவினராக பெற்றது பெரும் பாக்கியம்.
அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்

மன்சூர் பற்றி டாக்டர் ஹிமானா சையத்
பல அதீத திறமை சாலிகளை சரியாக உபயோகிக்காமல் நம் சமுதாயம் வீணடித்திருக்கிறது.

அந்த வகையில் இப்போதும் கூட பலர் திறமையிருந்தும் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டிய பரிதாபச் சூழல்.

இன்று நம்மிடையே இருக்கும் மிகச் சில கல்வி- சமய - நலவாழ்வியல் பயிற்சியாளர்களில் சகோதரர் மன்சூர் தலைசிறந்தவர்.

அவரை சமுதாயம் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயம்.

- டாக்டர் ஹிமானா சையத்