Monday, January 31, 2011

ஸிஹாஹ் ஸித்தா!, ஹதீஸ் தொகுப்பு வரலாறு

 
ஸிஹாஹ் ஸித்தா!

ஹதீஸ் தொகுப்பு வரலாறு

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ அவர் மகத்தான பாக்கியத்தை அடைந்து விட்டார். (33.71,24:52.)
எவர் அல்லாஹ்வின் தூதருக்குக் கீழ்படிகிறாரோ அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிந்தவர் ஆவார். (4:30)
இத்தூதருக்கு வழிப்படுங்கள் உங்கள் செயல்களை நீங்கள் வீணாக்கிவிடாதீர்கள். (47:33)
மேற்கண்ட ஆணைக்கொப்ப ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரமான ஹதீஸை முழுமையாகப் பின்பற்ற   வேண்டுமென்பதை உணருகிறோம்.
அதனடிப்படையில் நபித் தோழர்களும், அவர்களுக்குப்பின் வந்தர்வகளும் ரஸூல் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களைத் தொகுத்தளிக்க ஆரம்பித்தனர். அச்சு இயந்திரம் போன்ற வசதி இல்லாத அக்காலங்களில் அவை செவி வழி வந்த தொடர் செய்திகளாகவும், எழுத படிக்கத் தெரிந்தவர்கள் எழுதி வைத்த  கைப் பிரதிகளாகவும் திகழ்ந்தன .
அந்த ஹதீஸ்களை அவர்களால் முடிந்தவரை மனனமும் செய்து வைத்திருந்தனர். இஸ்லாம் உலகலாவிய நிலையில் பரவிய போது இஸ்லாத்தில் இணைந்த அரபியல்லாதவர்கள் ஹதீஸின் முக்கியத்துவத்தை விளங்கி பெரும் நூல்களாகத் தொகுக்க ஆரம்பித்தனர்.
இவ்விதம் பெரும் ஹதீஸ் நூல்கள் தொகுக்கப்படுவது ஹிஜ்ரீ 100 லிருந்து ஆரம்பமாயிற்று. ஆனால் ஹிஜ்ரீ 200 லிருந்து 300 வரையிலான காலத்தை ஹதீஸ் தொகுப்பின் பொற்காலம் எனலாம்.
இக்காலக்கட்டத்தில் பற்பல ஹதீஸ் தொகுப்புகள் தொகுக்கப்பட்டாலும் முஸ்லிம்களிடையே இன்று ஆறு  நூல்கள், உண்மையான ஆறு ஹதீஸ்  நூல்களின் தொகுப்பு எனக் கருதப்பட்டு "ஸிஹாஹ் ஸித்தா" என்ற பெயரில் விளங்கி வருகின்றது இந்த ஆறு ஹதீஸ் நூல்கள் சஹீஹுல் புகாரி, ஷஹீஹ் முஸ்லிம், ஸூனன் நஸயீ, ஸூனன் அபூதாவூத், ஸூனன் திர்மிதீ,ஸூனன் இப்னுமாஜா என  வரிசைப் படுத்தப்படுகின்றது . இந்த ஆறு நூல்களும் ஹிஜ்ரி 3ம்  நூற்றாண்டில் தொகுக்கப் பட்டன .இந்நூல்களின் விபரம் வருமாறு.
 பெயர்   1. புஹாரி(ரஹ்)
2. முஸ்லிம் (ரஹ்)
3. நஸயீ (ரஹ்)
4. அபூதாவூத் (ரஹ்)
5. திர்மிதீ
6. இப்னுமாஜ்ஜா
பிறப்பு -இறப்பு 194 - 256 ஹி 
206 - 261 ஹி  
214 - 303 ஹி  
202 - 275 ஹி
209 - 279 ஹி
202 - 273 ஹி  
ஊர் நாடு புகாரா ரஷ்யா
நைஷாபூர் பாரசீகம்
ஈரான் (குராசான்)
ஸிஜிஸ்தான் இராக் 
திர்மிதி     குராசான்
கஸ்வின் அஜர்பைஜான்


இவை ஒவ்வொன்றும் சுமார் 4000-க்கும் மேற்ப்பட்ட ஹதீஸ்களைக் கொண்டவை. இந்நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்திலும்,இதற்கு முந்திய கால கட்டத்திலும், இவை போன்ற பல ஹதீஸ் நூல்கள் பற்பல ஹதீஸ் கலாவல்லுனர்களால் "முஸன்னஃப்" என்றும் "முஸ்னது" என்றும் தொகுக்கப்பட்டன .
இங்கு முஸன்னப் என்றால் என்ன? முஸ்னத் என்றால் என்ன? முஸன்னப் என்றால் மக்களின் கேள்வி ஞானத்திற்க் கொப்ப இஸ்லாமிய சட்ட அடிப்படையில்  தலைப்பு களாகப் பிரித்து  வேவ்வேறு ஸஹாபிகள், தாபியீன்கள் மூலம் கிடைத்த ஹதீஸ்களை ஒரே தலைப்பில் தொகுத்ததாகும். உதாரணம் தொழுகை என்ற தலைப்பை ஒழு, பாங்கு, இகாமத், ருகூஉ, ஸுஜுது போன்ற பல சிறு தலைப்புகளாகப் பிரித்து ஒவ்வொரு தலைப்பிலும் பற்பல ஸஹாபிகள், தாபியீன்கள் மூலம் கிடைத்த ஹதீஸ்களைத் தொகுத்தளித்தல்.
முஸ்னத் என்றால் தலைப்புகளின் அடிப்படையில் பிரிக்காமல் தொகுத்த ஹதீஸ் வல்லுனர் எந்தெந்த ஸஹாபி, தாபியீன் மூலம் கிடைத்தாக அறிவிக்கிறாரோ அந்த ஸஹாபி, தாபியீன்களின்  அறிவிப்பாளர் (ஸனது) வரிசையில் தொகுத்ததாகும்.
மேலே குறிப்பிட்ட ஆறு ஹதீஸ் நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்திலும், அதற்கு முந்திய காலத்திலும் வேறு பல ஹதீஸ் நூல்களும் தொகுக்கப்பட்டன. அவற்றில் முக்கியமான சிலதை பார்ப்போம்.
பெயர் 1. முஅத்தா மாலிக்(ரஹ்)
2. முஸ்னது ஷாபிஈ (ரஹ்)
3. முஸ்னது அஹ்மது (ரஹ்)
4. முஸ்னது தவ்ரீ (ரஹ்)
5. முஸ்னது அவ்ஸஈ (ரஹ்)
6. முஸ்னது இப்னு முபாரக்
7. முஸ்னது முஹம்மதுபின் ஸலமா(ரஹ்)
8. முஸ்னது இப்னு உஜன்னா (ரஹ்)
9. முஸ்னது இப்னு முஅம்மர் (ரஹ்)
பிறப்பு-இறப்பு  92-179ஹி 
150-204ஹி 
164-241ஹி
97-161ஹி   
  --157ஹி
-181ஹி
-167ஹி
107-198ஹி
-191ஹி
ஊர்    நாடு மதீனா  சவுதி
மக்கா   சவுதி
பஸ்ரா   ஈராக்
கூஃபா  ஈரான்
ஷாம்      ஈராக்
குராசான் ஈரான்
பஸ்ரா     ஈராக்
கூஃபா    ஈரான்
யமன்     யமன்
இந்நூல்களில் முஅத்தா மாலிக் போன்ற ஓரிரு நூல்களைத் தவிர மற்ற அனைத்தும் முஸ்னதுகளாக (தலைப்புகளின் அடிப்படையில்) அமைந்தன. முஸ்னதுகளில் சாதரணமாக இஸ்லாமிய சட்டங்களை கண்டறிவது மிகவும் கடினம். ஒரு ஹதீஸை அறிவிப்பாளர் பெயர் தெரிந்த்தால் மட்டுமே அதனை பார்க்க முடியும்.
இமாம்களான அபூஹனீபா (ரஹ்),மாலிக்(ரஹ்), ஷாபிஈ(ரஹ்), ஹம்பலி(ரஹ்) போன்றோரில் இமாம் அபூஹனீபா(ரஹ்) எழுதிய ஹதீஸ் அல்லது மார்க்கச் சட்ட நூல்களில் இன்று எதுவும் தற்சமயம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்சமயம் ஹனபி மத்ஹபு பெயரில் புழங்கி வரும் பிக்ஹு நூல்கள் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களால் எழுதப்பட்டவையல்ல. இமாமுல் அஃலம் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுள்ள அபூஹனீபா அவர்களுக்குப் பின் வந்தவர்கள்  தொகுத்தளித்ததாகும். இந்நூல்களுக்கும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களுக்கும்  எவ்விதத் தொடர்பும் இல்லை. தங்களது சொந்த கருத்துக்கள் மக்களிடம் எடுபடாது என எண்ணி இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் பெயரில் அறங்கேற்றியுள்ளனர் .
இமாம் ஷாபீஈ(ரஹ்) முஸ்னது ஷாபீஈ என்ற ஹதீஸ் தொகுப்பையும், இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்) முஸ்னது அஹ்மது என்ற ஹதீஸ் தொகுப்பையும் எழுதினார்கள் .
ஆனால் இமாம் மாலிக்(ரஹ்) தனது தொகுப்பு முஅத்தா மாலிக் என்ற ஹதீஸ் தொகுப்பை முஸன்னஃபாக (பாடங்கள் தலைப்பிட்டு) கொடுத்தார். அதில் சுமார் 2000 ஹதீஸ்கள் உள்ளன. இந்நூல் ஸிஹாஹ் ஸித்தா எனப்படும்
ஆறு ஹதீஸ் நூல்கள் வருவதற்கு சுமார் 75 முதல் 100 வருடங்கள் முன்பாகவே மதினாவில் வாழ்ந்த மாலிக்(ரஹ்) ஹதீஸ் நூலாகவும், மார்க்கச் சட்ட நூலாகவும் தொகுத்தார்கள்.
ஹிஜ்ரீ 3ம் நூற்றாண்டிற்குள் பெரும் ஹதீஸ் தொகுப்புக்கள் பல வெளிவந்துவிட்டன. ஹதீஸ் தொகுப்புகளின் பொற்காலமான 3, 4, 5 வது நூற்றாண்டிலும் இப்னு மாஜ்ஜா இந்த தரமிக்க ஹதீஸ் தொகுப்புகளுடன் இணைக்கப்படவில்லை. ஆனால் பெரும் பான்மையானவர்கள் புஹாரி, முஸ்லிம் இவ்விரண்டயும் "ஸஹீஹைன்" (உண்மையான ஹ்தீஸ்களின் இருநூல்கள்) என்றும், மற்றவைகளை "ஸூனன்" என்றே அழைத்தனர் .
ஹிஜ்ரீ 5ம் நூற்றாண்டின் இறுதியில் அபுல்காஸிம் அலி இப்னு முஹம்மது இப்னு அஸாகிர் (இறப்பு 571ஹி) என்ற ஹதீஸ்கலா வல்லுனர் அபூதாவூது, நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா என்ற நான்கு நூல்களிலிருந்து ஹதீஸ்களை தேர்தெடுத்து ஒரே நூலாக "அல்-அஷ்ராப் அலா மஃரிபத்துல் அத்ராஃப்" எனத் தொகுத்தார். அவரைத் தொடர்ந்து அப்துல் கனி பின் அப்துல் வாஹித் அல்-மக்தஸீ (இறப்பு 600ஹி) என்பவர் புஹாரி, முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா என்ற ஆறு தொகுப்புகளில் இடம் பெறும் அறிவிப்பாளர் களைப் பற்றி ஒரு ஆய்வு நூல் "அல்-கமால்" என்ற நூல் எழுதினார் .
இந்நூல் இவருக்குப்பின் வந்த பெரும் ஹதீஸ் கலாவல்லுனர்களான தஹபி, இப்னுகதீர், முஃகலாதி, இப்னு ஹஜர் போன்றோருக்கு சிறந்த உதவியாக இருந்தது. இவர்களும் இந்த ஆறு நூல்களின் தொகுப்புக்கு தனி பெயரைக் கொடுக்கவில்லை. ஆனால் இவர்களுக்குப்பின் வாழ்ந்த அல்-ஹாபில் அல்ஹஜ்ஜாஜ் அல்-மஜ்ஜி (இறப்பு 742ஹி) என்பவர் ஆறு நூல்களின் தொகுப்புக்கு "துஹ்பத்துல் அஷ்ராப் பீ மஃரிபத்துல் அத்ராப் என பெயர் நல்கினார். இது நாளடைவில் மக்களிடையே "ஸிஹாஹ் ஸித்தா" எனப் பெயர் பெறலாயிற்று .

மத்ஹப்   பற்றி அறிய இந்த பக்கத்தை படிப்பதின் மூலம் தெளிவு பெறலாம். இன்ஷா அல்லாஹ்http://www.readislam.net/four.html

Source : http://www.readislam.net/portal/archives/1948
----------------------------------------------------------------------------------------------------------
 madhabs - bilal philips
Zakir Naik on Following a Madhab

தங்கத்தில் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்...7 (நிறைவு)



தங்கத்தின் விலை ஏறி இறங்குவது போல வைரத்தின் விலையிலும் ஏற்றம் இறக்கம் இருக்கிறது.

இந்த விலையை இணையத்தில் தினமும் நாம் காணலாம். அதன் முகவரி
(www.rapaport.com)
அதில் VVS-1,VVS-2,VS-1,VS-2,SI-1,SI-2

இதன் விலைகளை கேரட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கிறார்கள்.

வைரத்தை சோதிப்பதற்கு இன்று பல கருவிகள் உள்ளன.சாதரன கல்லையும் வைரத்தையும் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
சிலர் ராசிப்பார்த்து தான் கல்லை வாங்குவார்கள்.வைரம் சிலருக்கு ராசி இல்லை என்று நம்புவார்கள்.இது அவரவர்களின் நம்பிக்கையை பொருத்த விசயம்.
பிறந்த மாதங்களை வைத்து கற்களை தேர்வு செய்கிறார்கள்.
அசலான கல்கலுக்கு சில தன்மைகள் இருப்பதாக சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வைரக்கல்லை பரிசோதிக்கும் கருவி
ஆபிரிக்கா கனடா இந்தியா பிரேசில் ரஷ்யா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வைரங்கள் கிடைக்கிறது.
ஆண்டுதோறும் ஏறத்தாழ 130 மில்லியன் காரட் (26இ000 கிலோ கிராம்) வைரம் எடுக்கப்படுகிறது.

உலகத்திலேயே வைரக்கல் பட்டைத்தீட்டக் கூடிய பெரிய மையம் பெல்ஜியத்தில் இருக்கிறது.
நம் நாட்டில் மும்பை சூரத், ஹகமதாபாத், பஹவாங்கர் குஜராத்திலும் சிறு சிறு மையமாகவும் இருக்கிறது. இந்த தொழிலில் சுமார் பத்துலட்சம் பேர்கள் ஈடுபட்டுள்ளார்கள். நம் நாட்டில் வைரத்தை வெட்டி அதிகமாக பட்டைத்தீட்டல் செய்து அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
இன்று வளைகுடா நாடுகளில் இந்தியாவில் பட்டைத் தீட்டப்பட்ட வைரங்களே அதிகமாக புலக்கத்தில் உள்ளது.
ஆனால் பெல்ஜியத்தில் பட்டைத்தீட்டப்பட்ட கல்லுகளுக்கு சந்தையில் தனித்துவம் கிடைக்கிறது. அதன் விலையிலும் மாறுதல் இருக்கிறது.

பெல்ஜிய மையத்தைப்பற்றி தமிழ் பண்பலையில் வெளியான செய்தியில்,

பெல்ஜியத்தின் அண்டவிப் ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய துறைமுக நகரமாகும். உலக வைரக்கல் மையம் என்று அழைக்கப்படுவதால் அது மேலும் மக்களைக் கவர்கிறது.

உலகில் பத்து வைரக்கல்களில் 7 இந்த நகரில் பட்டை தீட்டப்படுகின்றன. என்று கூறப்படுகின்றது.
அண்டவிப் நகரின் மிக பெரிய வைரக்கல் கடையின் 1000 சதுர மீட்டர் பரப்புடைய காட்சி அறையில் வைரக்கல் பட்டை தீட்டப்படுவதை இலவசமாக பார்வையிடலாம்.
இந்த நகரில் தயாரிக்கப்பட்ட வைரக்கல் வரி விலக்கு என்ற சலுகையுடன் ஏற்றுமதி செய்யப்படலாம்.
அண்டவிப் நகரின் வைரக்கல் பட்டை தீட்டும் வெட்டு கலை உலகில் முதல் தரமுடையது. அங்குள்ள மக்கள் இதனால் பெருமைப்படுகிறார்கள். இந்தத் தீட்டும் வெட்டு முறை ஏற்கனவே 600 ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றது. பட்டை தீட்டப்பட்ட வைரக்கல் மேலே 33 பக்கங்களும் கீழே 24 பக்கங்களும் கொண்டுள்ளது. இந்த வடிவ வைரக்கல் மிகவும் ஒளிமயமானது.
இந்த வடிவம் உலகில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பத்து கிராமுடைய ஒரு வைரக்கல் அண்டவிப் கலைஞர்களால் பட்டை தீட்டப்பட்ட பின் அதன் எடை 5 கிராம் மட்டும் இருக்கும். மற்ற 5 கிராம் எல்லாம் சிதறிவிடும்.
அண்டவிப் நகரில் உள்ள வைரக்கல் தெரு S வடிவில் உள்ளது. மொத்தம் 4 வைரக்கல் விற்பனை மையங்களில் 3 இந்த தெருவில் உள்ளன. 300 நிறுவனங்களின் வைரக்கல் விற்பனை மையத்தில் ஒரு மின்னணு சாவடியில் நுழைவு அட்டை காட்டிய பிறகு தான் நுழைய முடியும் என்று கூறுகிறது.

நாம் எதைவாங்கினாலும் அதைப்பற்றிய விபரங்களை கொஞ்சமாவது விளங்கிக் கொண்டு வாங்கினால் நாம் ஏமாற்றத்திலிருந்து காக்கப்படுகின்றோம்.

தெரிந்தவர்களிடம் கேட்கலாம் அல்லது இணையத்தில் தேடலாம்.

இன்றைய சூழலில் தங்கமும் வைரமும் விலையில் பெரும் ஏற்றத்தைக் கண்டுள்ளதால் அவைகளில் நாம் கொடுக்கக் கூடிய பணத்திற்கான மதிப்பு இருக்கிறதா என்பதை உறுதி படுத்திக் கொண்டு வாங்குவது சிறந்தது .
ஏமாற்றக் கூடியவர்கள் அதிகம் இருப்பதால் ஏமாறுபவர்களும் அதிகமாகவே இருக்கிறார்கள்.
ஆதலால் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் நம் பணத்தையும் தரத்தையும் இழந்திடாமல் காப்பாற்றலாம்.

இந்த தொடர் கட்டுரைக்கு பலர் வாழ்த்துக்கள் கூறினார்கள் சிலர் சந்தேகங்களையும் கேட்டார்கள்.
 கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி…நிறைவு…!
Source : http://kismath.blogspot.com/2009/11/7.html

Sunday, January 30, 2011

எல்லைகளுக்குள் விலைபோகும் பெயர்தாங்கி முஸ்லிம்கள்

M.ஷாமில் முஹம்மட்
ஆப்கானிஸ்தானின் கனிமத் தாதுக்கள் ஒரு பார்வை
உலகில் இன்று அதிகமாம ஆச்சரியமாக பார்க்கப்படும் விடையமாக ஆப்கானிஸ்தானின் கனிமத் தாதுக்கள் விடயம் கருதபடுகின்றது ஆப்கானிஸ்தானில் கண்டறியப்பட்டுள்ள கனிமத் தாதுக்களின் மதிப்பு மட்டும் ஒன்று தொடக்கம் இரண்டு ட்ரில்லியன் டொலர்கள் என தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஒரு ட்ரில்லியன் டொலர்கள் என வைத்து கொண்டாலும் 1 ட்ரில்லியன் டொலர் இதை பில்லியன் கணக்கில் -மில்லியன் கணக்கில் அல்ல – சொன்னால் 1000 பில்லியன் டொலர்கள் ஆகும் இவ்வளவு பெரிய கனிமத் தாதுக்களை ஆப்கானிஸ்தான் எப்படிப் பயன்படுத்தப் போகிறது இதை அமெரிக்காவும் மற்ற மேலாதிக்க நாடுகளும் எப்படி சுருட்டப் போகிறது என்பது தான் இன்றைய பொருளாதார உலகின் பிரதான வினா இந்த வினாக்களுக்கு அப்பால் சில விடையங்களை நாம் பார்போம்
லித்தியம் ,இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் இரத்தினம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான் கண்டுகொண்டது என்று அமெரிக்கா கூறியது ஆனால் முதல் முதலில் 1974ஆம் ஆண்டு தெற்கு காபூல் பகுதியில் பல மில்லியன் தொன் நாகம் இருப்பதாக அறியப்பட்டது இந்த தெற்கு காபூலின் நாகப் படிவு பற்றிய ஆய்வை 1974 ஆண்டு ஆப்கானிஸ்தான் அரசு ரஷ்யா உதவியுடன் மேற்கொண்டது தொடர்ந்து வந்த காலபகுதியில் ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது 1979 தொடக்கம் 1989 வரையிலான 10 வருட ஆக்கிரமிப்புக்கு விரிவாக பார்க்க Read the rest of this entry »

தங்கத்தின் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்....6


தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்ற செய்தி பரவிவருவதால் ஏற்கனவே தங்கத்தில் பிஸ்கட்டுகளாக வாங்கி வைத்திருப்பவர்கள் லாபத்தில் இருந்தாலும் அதை விற்பனை செய்வதற்கு முன்வர வில்லை.

விலை இன்னும் ஏறும் என்ற எதிர்ப்பார்ப்பில் பலர் முதலீட்டின் நோக்கத்துடன் தங்கக்கட்டிகளை வாங்கி குவித்துக் கொண்டு வருகிறார்கள்.அதனால் துபாய் தங்க சந்தையில் தங்கக்கட்டிகள் வாங்குவதற்கு சில தினங்களாக தட்டுப்பாட்டில் இருக்கிறது.

ஒரு அவுன்ஸ்க்கு 3டாலர் பிரிமியம் என்ற கணக்கில் தங்கக்கட்டிகளை விற்பனை செய்த மொத்தவியாபாரிகள் தற்போது 6 டாலர் என்ற கணக்கில் விற்பனை செய்துவருகிறார்கள்.காரணம் டிமாண்ட் என்கிறார்கள்.

இந்த ஏற்றம் எதிர் வரும் ஜனவரி பிப்ரவரி வரை தொடரலாம் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இன்னும் சீன வருட பிறப்புக்கு பின் குறையலாம் என்று சீனர்கள் கருத்து கூறுகிறார்கள்.

எனவே முதலீடு என்ற எண்ணத்தில் இறங்கக்கூடியவர்கள் கவனமாக இறங்கலாம்.

சமீபகாலமாக வைரத்தின் விளம்பரங்களை நிறைய காண்கிறோம்.வைரக்கல் மோதிரம் ,வைரத்தோடு ,வைரநெக்லஸ் இப்படி வைரத்தில் நிறைய நகைகள் பலரை கவர்ந்து வருகிறது.

வைரத்தில் நகைகளை வாங்கக்கூடியவர்கள் வைரத்தைப்பற்றி அறிந்திருக்கிறார்களா.? என்றால் பலருக்கு அது சூனியமாகவே இருக்கிறது.
சாதாரண அமெரிக்கன் ஜர்கோன் கல்லையும் வைரக்கல்லையும் காண்பித்து எது வைரம் என்றால் திணறிப்போவார்கள்.

இந்த அறியாமை பலரை ஏமாறவைக்கிறது.தங்கத்திலிருந்து இரண்டு மூன்று மடங்கு அதிகமான விலையில் வைரநகைகளின் விலைகள் இருக்கிறது.

வைரத்திலும் தரம் இருக்கிறது அதற்கும் கேரட் இருக்கிறது.தங்கம் காப்பரின் அளவில் தரம் பிரிக்கப்படுகிறது.
வைரம் அதன் நிறம் கட்டிங் எடை இவைகளில் தரம் பிரிக்கப்படுகிறது.

வைரத்தின் தரம்

விவிஎஸ்-1 (VVS-1)
விவிஎஸ்-2 (VVS-2)
விஸ்-1 (VS-1)
விஸ்2 (VS-2)
எஸ்ஐ-1 (SI-1)
எஸ்ஐ-2 (SI-2)

இது தரத்தின் பெயர்கள்.அதன் நிறத்தை சி(C) டி(D) இ(E) எப்(F) ஹச்(H) ஐ(I) என ஆங்கில அரிச்சுவடி வார்த்தைகளில் நிறத்தை நிர்ணயித்துள்ளார்கள்.

விவிஎஸ்-1(VVS-1) சி(C) நிறத்தில் உள்ள வைரம் விலை அதிகம். தரம் நிறைந்ததாகும். பெரும்பாலும் கடைகளில் விஎஸ்-2(VS-2) மற்றும் எஸ்ஐ-2(SI-2) இந்த ரக வைரங்களை மோதிரம், நெக்லஸ்சில் பொருத்தி விற்பனை செய்கிறார்கள்.

விவிஎஸ்-1 (VVS-1)C நிறத்தின் ஒருகேரட் விலை $ 3500 அமெரிக்கன் டாலராகும்.
விஸ்-2 (VS-2)ஒருகேரட் $ 400 டாலராகும்.
ஒருகேரட் என்பதின் எடை 0.10 மில்லியாகும்.
போடிவைரக்கற்களை பதித்து அத்துடன் சில கலர் கற்களையும் பதிதத்து ஒரு நெக்லஸ் $ 5000 டாலர் என்று விற்பனை செய்வார்கள். தள்ளுபடி 25% அல்லது 50% சதவீதம் என்பார்கள்.

நாம் வாங்கிய சில மாதங்கள் கழித்து அதை விற்பனைக்கு கொடுத்தால் வைரத்திற்கு மதிப்புப்போட மாட்டார்கள். தங்கத்தின் எடைக்கு மட்டும் விலை நிர்ணயித்து அதற்கான தொகையை தருவார்கள். காரணம் வைரத்தின் தரம் எஸ்ஐ-2 என்ற குவாலிட்டியைச் சார்ந்தது. அதற்கு வாங்கும்போது மதிப்பிருக்கிறது. விற்கும் போது மதிப்பில்லை.

அதேநேரத்தில் விவிஎஸ்-1 அல்லது விவிஎஸ்-2 போன்ற வைரக்கற்கள் பதித்த நெக்லெஸ் வாங்கும் போது விலை அதிகம் . விற்கும்போதும் அதே விலை இல்லையென்றாலும் 75 சதவீதம் அதனுடைய தொகை திரும்ப கிடைக்கும்.
வைரத்தைப்பற்றி இன்னும் கொஞ்சம் தொடர்வோம்

Saturday, January 29, 2011

மனம் மகிழுங்கள் - 33 : பிரச்சினைகளும் வரமே

மனம் மகிழுங்கள்!
33 - பிரச்சினைகளும் வரமே
- நூருத்தீன்
"பொழுது விடிஞ்சு பொழுதுபோனா நாள்தோறும் ஏதாவது பிரச்சனை!"

இப்படி, அல்லது இதைப் போன்று ஒரு வசனம் - நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயம். தெருவில் வண்டி தள்ளி காய்கறி வியாபாரம் செய்பவரிலிருந்து மிகப் பெரும் தொழிலதிபர்வரை அவரவர் செல்வாக்கு, வசதிக்கேற்பப் பிரச்சினை, பிரச்சினை.
உலகில் யாருக்கு இல்லை பிரச்சினை?

"இதையெல்லாம் விட்டுத் தள்ளிட்டு எங்காவது கண்காணாத ஓர் ஊருக்கு ஓடிப்போய், அக்கடான்னு கிடக்கலாம்னு தோணுது" விரக்தியின் உச்சத்தில் இப்படியானதொரு சலிப்பும் சகஜமே.

என்ன செய்வது? பிரச்சினைதான்! பிக்கல் பிடுங்கல்தான்! தெளிவான வானம், அமைதியான கடல், தூய்மையான மணல் என்று உலகின் ஏதாவது மூலையில் அரவமற்றுக் கிடக்கும் கடற்கரையில் துண்டுவிரித்து, கண்ணில் கூலிங்க்ளாஸ் மாட்டிக் கொண்டு கண்மூடிப் படுத்துக்கொள்ள மனம் விம்மி விம்மி ஏங்கிக் கிடக்கிறது!

சரி, ஏதோ குருட்டாம் போக்கில் அப்படியொரு வாய்ப்பு அமைந்து கடற்கரை மணலில் ‘மக்க, மல்லாக்க’ப் படுத்துக் கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எத்தனை நாள் அல்லது வாரம் அல்லது மாதம் அப்படிக் கிடக்க முடியும்? யாரால் அப்படிச் சும்மாவே இருக்க முடியும்? எருமை மாடு? ம்ஹும்! அதுவும்கூட சிறிது நேரத்திற்குப்பின் எழுந்து ஆட்டோக்காரன் வசவையெல்லாம் சட்டை செய்யாமல் தெருவில் நடக்க ஆரம்பித்துவிடும். யோசித்துப் பாருங்கள். அவ்விதம் கால் நீட்டிப் படுத்துக்கொண்டு, எதுவுமே செய்யாமல் காலின் கட்டைவிரலையே மூன்றேகால் மாதம் பார்த்துக் கொண்டிருந்தபின் என்னவாகும்? போரடிக்கும். யாரையாவது கடித்துத் தின்றுவிடலாம் போலிருக்கும். ஏன் அப்படி?

மனிதன் அப்படித்தான். நம்முடைய வடிவமைப்பின் அம்சம் அது. நம் டிஎன்ஏ கூறுகளில் அது ப்ரோகிராம் செய்யப்பட்டுள்ளது. பிரச்சினையைத் தீர்ப்பது, புதுப் பிரச்சினையைத் தேடுவது, குழப்பிக் கொள்வது, அதைத் தீர்ப்பது, ஏதாவது கண்டுபிடிப்பது என்பது நம் ‘கூடப் பிறந்த குணம்’.

பிரசசினைகள் இந்தப் பிரபஞ்சத்தின் ஓர் அங்கம். அவை நம்மைத் தார்குச்சியால் குத்துவதைப்போல் குத்திக் குத்தி ஓட்டிக்கொண்டிருக்க, தினந்தோறும் நாம் ஏதாவது கற்றுக்கொண்டே இருக்கிறோம். இல்லையென்றால் இதுவரை மனிதன் கண்டுபிடித்தவை என்பதை ஒரு கைவிரல்களுக்குள் அடக்கிவிடலாம்.

விரல்கள் என்றதும் மனிதன் கண்டுபிடித்த முதலாவது சமையல்கலை கதையொன்று நினைவுக்கு வருகிறது.

ஆதிமனிதன் காடுகளில் கிடைக்கும் பழங்களையும் கிழங்குகளையும், அதற்குத் தொட்டுக் கொள்ள எலி, முயல் போன்ற சிறு பிராணிகளையும் பச்சையாகவே உண்டு காலம் தள்ளியிருக்கிறான்.

ஒருநாள் காட்டில் தீப்பிடித்துக் கொண்டு மரங்கள் நன்றாக கொழுந்துவிட்டு எரிந்திருக்கின்றன. அதில் சில மிருகங்கள் ‘சுட்ட கறி’யாகிவிட்டன. சூடு ஆறாத ஒரு மிருகத்தில் போய் நம்ம ஆதிகால உறவினர் கையை வைக்க, மிருக மாமிசம் கையில் பச்சக்கென்று ஒட்டியிருக்கிறது. சூடு தாங்காமல் ‘ஆ’ என்று கத்தி கைவிரல்களை வாயில் வைக்க ...

கையை எடுத்துவிட்டு ‘ஆகா!’ என்று கத்தியிருக்கிறான். முன்னர் உண்டது போலன்றி இப்பொழுது மாமிசம் தனி ருசி. தீயில் வெந்த ஒரு கிழங்கை எடுத்துக் கடித்துப் பார்க்க ... ‘அடடே! இது புது ருசி!’

இப்படியாக விரல்களின் சூட்டுக்கான பிரச்சினையில் மாமிசங்களையும் கிழங்குகளையும் "சுட்டுத் தின்னும்" சமையல் கலை பிறந்ததென்கிறது ஒரு கதை.

முதலில் தெரியாமல் தவறுகள் செய்வோம்; பிறகு தெரிந்து செய்வோம். பிறகு நமக்கே அலுத்துப்போய்ப் பாடங்களைக் கற்றுக் கொண்டு, கொஞ்சமாய்த் திருந்தி "அடுத்தது என்ன?" என்று தேடுவோம். விரும்பியோ விரும்பாமலோ அனுபவஸ்தனாகி விடுவோம்.

கல்லாகவோ, மரமாகவோ, எருமை மாடாகவோ இருந்தால் பிரச்சினையே இல்லாதிருக்கலாம். ஆனால் யாருக்கு எருமை மாடாக மாற ஆசையிருக்கும்?

தோசைக்கல், மசாலா தோசை சமைத்துத் தராது, வேண்டுமானால் அந்தக் கல்லில் நாம் கல்தோசை சுடலாம்!

மரம் மந்திரியாகாது, லஞ்சம் வாங்காது.

மனிதன் இப்புவியில் வாழவும் முன்னேறவும் அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டாய இணைப்பு - பிரச்சினை!

அன்பு, பாசம், காதல், மகிழ்வு, சோகம், நடப்பது, காலில் விழுவது, அப்படியே காலை வாருவது போன்ற நம் இயற்கைத் தன்மைகளுடன் பிரச்சினையும் நம் தன்மை. அதாவது, பிரச்சினைகள் மனிதனுக்கு வரம். நம்ப முடியவில்லையா?

கண்ணை மூடிக்கொள்ளுங்கள்; நன்றாக மூச்சை உள்ளிழுத்து நிறுத்தி வெளியிடுங்கள். ஆச்சா? இப்பொழுது கண்ணைத் திறந்து சுற்றுமுற்றும் பாருங்கள். ‘எப்பவுமே லேட்டாய் வந்து தொலையும் பஸ்ஸில்’ ஆரம்பித்து எத்தனைக் கண்டுபிடிப்புகள்? கால் செருப்பில் ஆரம்பித்து, கட்டைவிரல்ரேகை தேய எஸ்எம்எஸ் அனுப்பும் உபகரணம் என்று எத்தனை எத்தனை? எல்லாமே ஏதோ ஒருவனின் பிரச்சினைக்குத் தீர்வாய் முளைத்தவை. அது நல்லதா கெட்டதா, உபயோகமா இல்லையா என்பது இக்கட்டுரையின் பிரச்சினையில்லை. பிரச்சனை! அதை மனிதன் எதிர்கொண்டது; அதற்கொரு நிவாரணம் கண்டுபிடித்தது - அதுதான் இங்குப் பேச்சு.

ஒவ்வொரு பிரச்சினையும் நாம் புதிதாய் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள வைக்கும் ஆசான். நமக்கு அவை சவால்களைச் சமர்ப்பிக்கின்றன. நாம் சமாளிக்கிறோம், கற்கிறோம்; கண்டுபிடிக்கிறோம்.

குழந்தையாய் இருக்கும்போதே இது ஆரம்பித்துவிடுகிறது. எதையாவது பிடித்து இழுப்பது, கடிப்பது, ஆசையாய்த் தூக்கி நம்மைச் செல்லம் கொஞ்சும் மாமா மடியில் ‘உச்சா’ போய்விட்டுச் சிரிப்பது, என்று ஏதாவது சவால் வேண்டும். குழந்தையொன்று அப்படி எதுவுமே செய்யாமல் சப்பாத்திக்குப் பிசைந்து வைத்த மாவைப்போல் அமைதியாய் குந்தியிருந்தால் நிச்சயம் பெற்றோர் ஏகப்பட்ட கவலையுடன் அக்குழந்தையை தூக்கிக் கொண்டு டாக்டரிடம் ஓடுவார்கள்.

சற்று வளர்ந்துவிட்டால், ஆட்டம், ஓட்டம், மரத்திலிருந்து தலை கீழாகத் தொங்குவது என்று வால்தனம். திட்டும் வசவும் விழும் அடியும் - அதையெல்லாம் ஒரு பொருட்டாய்க் கருதாது துடைத்தெறிந்துவிட்டு மறுநாள் மீண்டும் அதே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்!

இப்படி நம்முடைய பால்யப் பருவத்தில் பற்பல சவால்களுடன் வளரும் நாம், பெரியவர்களானதும் பிரச்சினைகளை அதே வீரியத்துடன் எதிர்கொள்ளத் திணருகிறோம்; சில சமயம் பேனையே பெரியவண்டைப்போல் நாமே ஊதிப் பெரிதாக்கி, அதை நினைத்து நம்மையறியாமல் அஞ்சுகிறோம்.

ஆனால் நம் குழந்தைகளிடம் என்ன எதிர்பார்க்கிறோம்?

ஐந்து வயதே நிரம்பிய நம் குழந்தையை டாக்டராக்கிவிட வேண்டும், என்ஜினீயராக்கிவிட வேண்டும் என்று தலையணை அளவு தடிமனான புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு பாடம் சொல்லித் தருகிறோம்! 18 x 18 எவ்வளவு சொல்லு பார்ப்போம் என்று அதட்டல் வேறு. தம் பிள்ளைக்கு ஃபர்ஸ்ட் ராங்க் தவிர வேறு எதுவும சரிவராது என்று 45 மாணவர்கள் உள்ள அந்த வகுப்பின் அத்தனைப் பெற்றோருக்கும் பேராசை.

எப்படி சாத்தியம்?

இப்படி நம் பிள்ளை ஒரு சாதனையாளன்/சாதனைச்செல்வி ஆகியே தீர வேண்டும் என்று அந்தப் பிள்ளையின் சக்திக்கு மீறிய பிரச்சினைகளைப் புகுத்தும் நாம், காபி மிஷினின் பட்டனைத் தட்டினால் கப்பில் கொட்டும் காப்பிபோல் வலிக்காமல் கொள்ளாமல் நம் வாழ்க்கையானது நகர வேண்டும் என்று விரும்புகிறோம்.

பிரச்சினையானது குடும்பத்தில் இருக்கலாம், அலுவலகத்தில் இருக்கலாம். சக ஊழியரிடம், அண்டை வீட்டுக்காரனிடம் இருக்கலாம். பொருளாதாரம், உடல் நலம், டூட்டி முடித்து இரவில் வீடு திரும்பும்போது அழிச்சாட்டியமாய்த் துரத்தும் தெரு நாய் என்று விதவிதமாய், கலர் கலராய் இருக்கலாம். அதையெல்லாம் எப்படி நாம் உள்வாங்கி எதிர்கொள்கிறோம் என்பது நம் அனுபவத்தை நிர்ணயிக்கிறது. அது நம் பக்குவத்தை வளர்க்கிறது.

பக்குவப்பட்டுவிட்ட மனம் மகிழ்வைத் தொலைக்காது!
னம் மகிழ, தொடருவோம்...

Friday, January 28, 2011

தங்கத்தில் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்...5


தங்கத்தின் விலை அவுன்ஸில் நிர்ணயிக்கப்படுகிறது.ஒரு அவுன்ஸ் என்பது 31.1035 கிராம் எடைகொண்டதாகும்.
உலக வர்த்தகசந்தையில் அவுன்ஸ் அளவின்படி அமெரிக்க டாலரில் விலை கோடிடுவார்கள்.இணையத்தில் கிட்கோ டாட்கம்மில் தங்கம் வெள்ளி பிளாட்டினம் ஆயில் கரண்சி போன்றவைகளின் விலையை டாலரில் காணலாம்.
தற்போது ஒரு அவுன்ஸின் விலை 1100-டாலர்.
இது இன்னும் ஏறுமா இறங்குமா…? என்று பலரின் கேள்வியாக இருக்கிறது.

கடந்த ஆண்டு 2008 ஆகஸ்ட் செப்டம்பரில் தங்கத்தின் விலை அவுன்ஸ் 685 டாலர் வரையில் இறங்கியது.அந்த தருணத்தில் பலர் இன்னும் இறங்கும் என்று எதிர்ப் பார்த்தார்கள்.ஆனால் ஏறத்தொடங்கியது.டிசம்பரில் 900 டாலராக அவுன்ஸின் விலை ஏற்றத்தைக்கண்டது.

ஜனவரி பிப்ரவரியில் தங்கத்தின் விலை அவுன்ஸ் 1200 வரை வரும் என்று நிபுணர்களின் கணிப்பு இருந்தது.அந்தச் சமயத்தில் அவுன்ஸ் 920 டாலராக இருந்தது.

ஆனால் பிப்ரவரியில் விலை ஏற்றம் நாளுக்கு நாள் 20 டாலரிலிருந்து 30 டாலர்வரையில் ஏறி 1005- சை தொட்டது.ஆனால் அது நீடித்து நிற்கவில்லை. மீண்டும் ஆயிரத்திலிருந்து படிப்படியாக குறைந்து 875 டாலர் வரையில் இறங்கியது.மீண்டும் 950 வரையில் சென்று ஏற்ற இறக்கம் கண்டது.

ஆகஸ்ட் 2009 தங்கவிலை கடுமையாக இறங்கும் என்று பல வல்லுனர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் எதிர்ப்பார்ப்புக்கு நேர் எதிர்மறையானது தங்கவிலை.
பலகாரணங்கள் பலரால் கூறப்படுகிறது.

1.பங்கு சந்தை சரிவினால் முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி படையெடுக்கிறார்கள்.

2.இணையதள வர்த்தகத்தால் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு.

3.அமெரிக்காவின் பொருளாதார சரிவினால் டாலரின் மதிப்பு உலக நாடுகளுக்கிடையில் குறைகிறது.அதனால் தங்கம் விலை ஏற்றம்.

4.சீனா இந்தியா இங்கிலாந்து போன்ற நாடுகள் டன் கணக்கில் தங்கம் வாங்கியிருப்பதினால் தங்கவிலை ஏறுகிறது.

5.தென்ஆப்ரிக்காவில் மின் தட்டுப்பாட்டின் காரணமாக தங்கச் சுரங்கங்கள் மூடப்பட்டிருப்பதினால் உலகில் தங்கக் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது அதனால் தங்கத்தின் விலை ஏற்றம்.

6.ஆயில் விலை கூடிவிட்டது அதனால் தங்கத்தின் விலையில் ஏற்றம் என்றார்கள்.இன்று ஆயிலின் விலை 100 சதவீதம் இறக்கம்.ஆனால் தங்கம் ஏற்றம்.

இப்படி பல காரணங்கள் சொல்லப்படுகிறது.எத்தனை காரணங்கள் சொல்லப்பட்டாலும் தங்கத்தின் விலை 1990-லிருந்து சுமார் 19 வருடங்களில் இன்று வரையில் 450 சதவீதம் விலை கூடி இருக்கிறது.

பங்குசந்தையை பொருத்தமட்டில் 21000 சென்ஸஸ் அதிகபட்சமாக சென்றிருந்தாலும் அதன் இறக்கம் 7000 சென்ஸஸ் வரையில் இறங்கி பல பெரிய நிறுவனங்களின் பங்குகளின் விலை கடுமையாக சரிந்து மீண்டும் ஏறி வருகிறது. ஆனால் தங்கம் ஏறும் முகமாக இன்று வரையில் இருந்து வருகிறது.

ஆதலால் அதிகபட்சமாக பணம் வைத்திருப்பவர்கள் தங்கத்தில் குறுகிய கால முதலீடாக இல்லாமல் நீண்டகால முதலீடாக வைத்திருக்க நினைப்பவர்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.இது அவரவர்களின் விருப்பத்தை பொருத்ததே.

இந்தப் படத்தைப் பார்த்தலே தெரியும்....தங்கவிலை ஏறியதின் காரணம்.


தங்கம் விலை ஏறிவருவதினால் தங்கக் கடைகாரர்களுக்கு கொள்ளை லாபம் என்று பலர் கருதுவது உண்டு.உண்மையாகவே தங்க ஏற்றத்தில் அவர்களுக்கு லாபம் கிடைக்கிறதா என்று கேட்டால் வெகு சிலருக்கு கிடைக்கலாம் ஆனால் பெரும்பாலோருக்கு கிடைக்க வாய்ப்பு குறைவு.

காரணம் இது ஒருவகையான சூதாட்ட வியாபாரம் (கேம்லிங்).
ஒரு கடைக்காரர் தன்னுடைய கடைக்கு ஐந்து கிலோ தங்கம் கொள்முதல் செய்கிறார் என்றால் அந்த ஐந்து கிலோவிற்கு சுத்ததங்கமாக கொடுப்பார்.அல்லது அதற்கு நிகரான தொகையை கொடுத்து விடுவார்.

பணமாக கொடுக்கும் பட்சத்தில் அன்றை விலை ஒரு கிராம் ஆயிரம் ரூபாய் என்றால் அந்த விலையை அவர்நிர்ணயம் செய்து உறுதிபடுத்த வேண்டும் (பிக்ஸிங்) .விலையை நிர்ணயிக்காமல் உறுதிபடுத்தாமல் (அன்பிக்ஸ்) வாங்கி இருந்தால் சில நாட்களில் தங்கத்தின் விலை 1200 என்று ஏறும் போது அவர் ஒரு கிராமுக்கு 200 ரூபாய் வித்தியாச தொகையை செலுத்தவேண்டும்.

அதே விலை 800 ரூபாயாக குறைந்தால் அவர் தான் வாங்கிய ஐந்து கிலோ தங்கத்தை பிக்ஸ் பண்ணினால் 200 ரூபாய் கொள்முதல் செய்தவரிடம் திரும்பப் பெற்றுக் கொள்வார்.

பெரும்பாலான கடைகளில் தினசரி வியாபாரங்களில் விற்பனையான தங்க எடைக்கு உடனே கொள்முதல் செய்பவர்களிடம் பிக்ஸ் அன்றைய விலையை நிர்ணயம் உறுதி செய்துக் கொள்வார்கள்.அப்படி செய்யாமல் ரெஸ்க் எடுத்தார்களென்றால் ஆபத்தில் தான் முடியும்.

இந்த விலை நிர்ணயத்திற்கு காலஅவகாசம் உண்டு.ஒவ்வொரு மொத்தவியாபாரிகளும் ஒரு கணக்கை வைத்திருப்பார்கள்.

விலை நிர்ணயிக்கப்படாத கடைக்காரர்கள் (அன்பிக்ஸ்ஸில்) பலர் நடுரோட்டுக்கே வந்துமிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
இன்னும் தொடர்வோம்….

Source : http://kismath.blogspot.com/2009/11/5.html

Insha Allah-இன்ஷா அல்லாஹ் (இறைவன் "அல்லாஹ்" நாடினால்" )



 ஒருவர் மற்றவருக்கு வாக்குறுதி வழங்குமுன் “இன்ஷா அல்லாஹ்” எனக்கூறி வாக்குறுதி அளித்தல் வேண்டும்.

உலகில் அனைத்துச் செயலகளும்,இயக்கங்களும், அல்லாஹ்வின் நாட்டப்படியே நிகழ்கின்றன.மனித வாழ்வின் அனைத்துப் போக்குகளும் இறைக் கட்டளைப்படியே நடந்தேறுகின்றன. எனவே இறைவன் நாடினால் மட்டுமே எதுவும் நிகழ்வுற முடியும்

இந்த உணர்வை முழுமையாகப் பிரதிபலிப்பதே ” இன்ஷா அல்லாஹ்”

ஒருவர் மற்றவருக்கு வாக்குறுதி வழங்குமுன் “இன்ஷா அல்லாஹ்” எனக்கூறி வாக்குறுதி அளித்தல் வேண்டும்.

நம்பிக்கையை மட்டும் இழக்காதே. ஏனெனில் உன் அருகாமையில் அல்லாஹ் இருக்கின்றான்.
பிறரைக் குணப்படுத்து. உனக்கு குணம் கிடைக்கும். பிறருக்குக் கொடு! அது பகரமாகக் கிடைக்கும். அது இறைவனின் நியதி

பொது இடங்களில் தொழுவதற்கு உங்களுக்கு வெட்கமாக உள்ளதா? பாருங்கள் இந்த 'வீடியோ'வை! துவங்கி வைப்போம். பலர் இணைந்து கொள்வர்.

Monday, January 24, 2011

கவி மாலை --by கலைமாமணி கவி. கா.மு. செரீப்

பாமணக்கும் நல்ல பதியாம் மயூரநகர்
தாமதிக்க   வாழும் தயாநிதியே  - நாமதிக்கும்
நண்பர் சயீத்தென்னும்   நாவலா தீன் நெறிப்
பண்பாளா நன்மை செய்யும்  பாங்களா - எண்ணலிலும்
நல்லதையே நாவுடையோய் - வல்ல
அறிவுடையோய் அன்புடையோய் யார்க்கும் உதவும்
நெறியுடையோய்  நீள்புகழோய் நெஞ்சம் - அறிந்தவர்கள் 
என்றும் மறவா இயல்புடையோய்  இன் தமிழால்
நன்று இந்த நாடறிந்த நற்கவிஜன்  - பொன்றாத
சீறாய்ப் புகழ் பாடும் சீர்சால் ஷரீபுகவி 
மாறாத அன்புடனே வாழ்திமிக நேரார்ந்த
ஆதரவுடனே அரிய சலாமுசைத்து
தூதாதாக விட்டேன் இத்  தூக்கு  உன்பால் -கோதரவே
அங்கு நான் வந்துற்று அழகுறவே சீறாவின்
பொங்கு தமிழ் பாட்டின் பொருள்கூ-உங்களரும்
நேசத்தைப் பாராமல் நித்திரையும் தான் துறந்து
சீரத்தைக் கேட்டச்  சிறப்புடனே -சாரமுன்
சொல்லாலே  வாழ்திச் சுகப்படும் தன்மையிலே
நல்லபடி யாய்ப் பொருளும் நல்கியே -எல்லையிலா
அன்பிலே எம்மை அமுக்கித் திணற வைத்த
நன்பரே  உங்களுக்கு நல்லிறைவன் -என்றேன்றும்
ஏற்ற நறும் இன்பமே ஈக இடர்களைந்து
போற்றுமுயர்  செல்வமெல்லாம்  போந்தளிக்க சாற்றினேன்
வண்ணக் கவிமடல் வாழ்க வளம் பெருக்கிக்
புண்ணியமும் சேரப் பொலிந்து !
( 1978 இல் பாடியது )
கவி மாலை --கலைமாமணி   வி கா.மு. செரீப்  நீடூர் அல்ஹாஜ், வழக்கறிஞர், ஏ.எம்.சயீத் அண்ணன் பற்றிப் பாடியது .
(ஏ.எம்.சயீத் அண்ணன் பற்றிப்கவிஞ்ர்கள் பல சந்தர்பங்களில் கவிதை பாடிருகிறார்கள். அந்த கவிதைகளில் சில ....  )
நன்றி : "நெஞ்சில் நிறைந்த நீடூர் சயீத்"
அ. மா . சாமி


தங்கத்தில் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்...4


இப்போதெல்லாம் நாம் தொலைக்காட்சியில் அடிக்கடி நகைக்கடைகளின் விளம்பரத்தை காணலாம்…சேதாரம் இல்லை செய்கூலி இல்லை …என்று மக்களை கவர்கிறது இந்த வாசகங்கள்.
சேதாரமும் செய்கூலியும் இல்லாமல் நகைகள் தயாரிக்கப்படுகிறதா…?
அல்லது பேஷன் மாறிப்போன துணிகளை தள்ளுபடி என்ற பெயரில் விற்கிறார்களே அது போன்று பழைய டிசைன் நகைகளை அப்படி ஏதும் விற்பனை செய்கிறார்களா…? என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது.

சேதாரம் இல்லாமல் நகைகள் தயார் செய்யப்படுவதே இல்லை.

பட்டறைகளில் தொழிற்சாலைகளில் செய்யப்படும் நகைகளுக்கு கண்டிப்பாக சேதாரம் உண்டு.
மொத்த வியாபாரிகள் வாங்கக்கூடிய நகைகளுக்கு அதாவது 916 க்கு அவர்கள் 920 என்றக் கணக்கில் 4 சதவீதம் சேதாரத்துடன் கொடுத்துதான் வாங்குவார்கள்.இது கல்கள் இல்லாத நகைகளுக்கு மட்டும்.

கல்வைத்த நகைகளுக்கு சேதாரம் இல்லை காரணம் கல்லின் எடை தங்கத்துடன் சேர்ந்துக் கொள்வதால் செய்கூலி சேதாரம் இல்லாமலேயே மொத்த வியாபாரிகள் வாங்குவார்கள்.
ஆனால் கல்பதித்த நகைகளை செய்யும்போதும் சேதாரம் ஏற்படும்.சேதாரம் இல்லாமல் நகைகள் செய்யப்படுவதில்லை.

பழைய நகைகளாக இருந்தாலும் அதை பாளீஸ் செய்து சூடுபத்திய திரவங்களில் நனைத்து அதிலுள்ள அழுக்குகளைப் போக்கி புதிய நகைப்போல விற்றுவிடுவார்கள்.
கல் வைத்த ஓரு மோதிரம் செய்வதென்பது
முதலில் மோல்டிங் செய்யப்படவேண்டும் மோல்டிங் செய்ய நகை செய்பவரால் கூலி மற்றும் சேதம் கொடுக்க படுகிறது.

பின்னர் அளவு தட்டி ராவி சுத்தம் செய்ய படுகிறது . அளவு தட்டும் போதும் ராவும் போதும் சேதம் ஏற்படும் . அடுத்து மோதிரம் பம்பிங் முறையில் மெருகு ஏற்ற படுகிறது. இதிலும் சிறிது சேதம் ஏற்படும். பின்னர் கல் வைத்து செதுக்க படுகிறது. கல்வைக்க செதுக்க நகை செய்பவரால் கூலி மற்றும் சேதம் கொடுக்க படுகிறது. பின்னர் நீர் மெருகு போடப்பட்டு மோதிரம் இறுதி வடிவம் அடைகிறது.

இவ்வளவு வேலைகள் செய்துவிட்டு சேதாரம் இல்லை செய்கூலி இல்லை என்று விளம்பரம் செய்கிறார்களே…தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்களா…? பொது மக்களை ஏமாற்றுகிறார்களா…?

சேதாரம் செய்கூலி இல்லாத நகைகளில் தரத்தினை சோதனைச் செய்துப் பாருங்கள் . இது ஒருவகையான மோடி வித்தைக்காரனின் மோசடியாகவே இருக்கும்.

18 கேரட்டின் நகைகள்……….
இது 750 என்ற சுத்த தங்கமும் 250 செம்பும் கலந்து செய்யப்படுகிறது.இதன் நிறம் மஞ்சளாக இருக்காது வெழுத்துப்போன நகைகளாக காட்சியளிக்கும்.சிலர் இந்த நிறத்தைக் கண்டுவிட்டு தங்கமே அல்ல என்று சத்தியம் செய்வார்கள்.

சொல்லப்போனால் அதிகமான புதிய வடிவங்களை இந்த 18 கேரட்டில்தான் வடிவமைக்க முடிகிறது. குhரணம் தங்கத்தில் கலவை அதிகமாக கூட்டினால் அதன் தன்மை கெட்டியாகும். நாம் நினைத்தபடி வடிவங்களை உருவாக்க முடியும்.
நம்ம ஊர்களில் காசிமாலை என்ற 22 கேரட் பத்து பவுன் நகையைப் பார்த்தால் பெரிதாக இருக்கும்.அதே பத்து பவுனுக்கு துபாயில் காசிமாலை வாங்கினால் பார்வைக்கு சின்னதாக இருப்பது போலத் தெரியும்… தரம் குறைவுதான் அதற்கு காரணம்.

பணக்காரர்கள் 18 கேரட்டின் நகைகளைதான் அதிகம் வாங்குபவர்களாக இருக்கிறார்கள். அதில் வைரங்களை பதிப்பதற்கு ஏற்றமான தரத்தை கொண்டதாக 18 கேரட் இருக்கிறது.
தற்போது 18 கேரட் நகைகள் பல நிறங்களில் செய்கிறார்கள்.வெள்ளை நிறம் ரோஸ்நிறம் பழுப்பு நிறத்திலும் செய்யப்படுகிறது.

தங்கம் விலை உதாரணத்திற்கு ஒரு கிராம் 18 கேரட் 1000 ரூபாய் என்றால் அதன் செய்கூலி ஒரு கிராமுக்கு 200 – 300 என்று பல வேலைப்பாடுகளுக்கு தகுந்தமாதிரி இருக்கிறது.

நம்நாட்டில் பெரிய நகரங்களில் 18 கேரட்டின் டிசைன்கள் விற்பனையாகி வருகிறது. மும்பை சென்னையிலும் சாதாரன 18 கேரட் சங்கிலிகள் வெள்ளைத்தங்கத்தில் விற்கப்படுகிறது.
ஆலோய் என்ற உலோகத்தை தங்கத்தில் கலந்து செய்த நகையை ரோடியம் என்ற அமிலத்தில் நனைத்து எடுத்தால் வெள்ளை நிறமாக மாறிவிடும்.

இப்போதெல்லாம் 22கேரட்டுகளில் வளையல்களில் வெள்ளை ரோடியம் இடப்படுகிறது. மஞ்சலும் வெள்ளை கலரும் கலந்திருப்பதினால் அழகின் மெருகு கூடுகிறது. 
இன்னும் தொடர்வோம்…

Friday, January 21, 2011

மனம் மகிழுங்கள் - 32 : குறையெல்லாம் குறையல்ல

மனம் மகிழுங்கள்!
32 - குறையெல்லாம் குறையல்ல
- நூருத்தீன்
கி.மு. நான்காம் நூற்றாண்டில் பண்டைய கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் டெமாஸ்தெனஸ் (Demosthenes) என்றொரு அரசியல்வாதி இருந்தார். அலெக்ஸாண்டரின் ஆளுமைக்கு எதிராகப் புரட்சியெல்லாம் முயன்று பார்த்தவர். இவரிடம் திறமை ஒன்று இருந்தது - ஆளை அசத்தும் பேச்சு.

சரி, அதற்கு என்ன இப்போ?

அவர் சிறுவனாய் இருந்தபோது அவரிடம் ஒரு குறை இருந்தது. திக்கித் திக்கித்தான் பேசுவார். வாக்கியங்களைத் தடையின்றி முழுமையாய்ப் பேச அவரால் முடியாது. அந்தக் காலத்தில் எந்த ENT ஸ்பெஷலிஸ்ட்டைப் போய்ப் பார்ப்பது? எனவே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. வாயில் சிறு, சிறு கூழாங்கற்களை அடைத்துக் கொண்டு கிரேக்க மொழியில் ‘அணில், ஆடு, இலை’ என்று பேசிப் பழக ஆரம்பித்தார் டெமாஸ்தெனஸ். அசரவில்லை; சோர்ந்து போகவில்லை; தினந்தோறும் கடுமையான பயிற்சி. சாப்பிடும்போது மட்டும் கல் நீக்கிச் சோறு சாப்பிடுவாரோ என்னவோ, விடாத பயிற்சி. முடிவு? வாய்மேல் பலன் கிடைத்தது. இவர் ஒரு மிகச் சிறந்த சொற்பொழிவாளராக, பேச்சாளராக மாறிப்போனார். இன்றும் வரலாற்றுப் புத்தகங்களில் அந்தச் சிறப்புத் தகுதியுடனேயே குறித்து வைக்கப்பட்டுள்ளார்.

நம் எல்லோரிடமும் குறையுண்டு. அது உடல் குறையாக இருக்கலாம். மனதில் இருக்கலாம்; செயலில் இருக்கலாம்; சிந்தனையில் இருக்கலாம். ஏதோ ஒன்று, ஒன்றுக்கு மேற்பட்டு என்பது மட்டும் நிச்சயம். ஆனால் அந்தக் குறை நம் இலட்சியத்தை, குறிக்கோளை, மன மகிழ்வை எவ்விதத்திலும் தடுத்துவிடக் கூடாது; அப்படித் தடுப்பதுதான் உண்மையான குறை.

இறைச் சக்திக்கு அப்பாற்பட்டு, நம்முடைய இலக்கை நாம் அடைந்துவிடாமல் தடுக்கக்கூடிய ஒன்று இருக்குமெனில் அது ‘என்னால் முடியாது’ என்ற நம் எண்ணம் மட்டுமே! அதனால்தான் ‘என்னால் முடியும் தம்பி’ என்று நம்பிக்கையுடன் செயலாற்றுபவர்களெல்லாம் சாதிக்கிறார்கள். ‘என்னத்த செஞ்சு, என்னத்த சாதிச்சு’ என்று அலுத்துக் கொள்பவர்கள் மட்டும் ‘என்னத்த கண்ணய்யா’ ஆகிவிட வேண்டியதுதான்.

‘நான் தேர்வில் ஃபெயிலாகவே போகிறேன், நம்பிக்கையே இல்லை’ என்று ஒரு மாணவன் நினைத்தால் அவனது மனது அவனை வெற்றிக்குத் தயாராக்கப் போவதில்லை. பசை தடவி ஒட்டிய போஸ்டராக அவனது மனமெங்கும் அவநம்பிக்கை மட்டுமே பரவி ஒட்டிக்கொள்ளும். படிக்க, கற்றுக்கொள்ள என்று எந்த முயற்சியும் எடுக்கவிடாமல் அவனைச் சோர்ந்து போகச் செய்து, அவனது தீர்க்கதரிசனம் மெய்ப்படச் செய்யும்.

‘எனக்குத்தான் அப்பவே தெரியுமே’ என்று மதிப்பெண் பட்டியலைப் பார்த்து மனம் கெக்கலிக்கும்.

அதே மற்றொருவர், ‘எனக்கு என் இலட்சியம் முக்கியம். நிச்சயம் அதில் எனக்கு வெற்றி கிடைக்கும்’ என்று திடமாக நம்பிவிட்டால் அதற்காக அவரை அவரது மனது தயாராக்கிவிடும். ‘என்ன செய்யவேண்டுமானாலும் சரியே. நீண்ட நேரம் உழைக்கணுமா, கண் விழிக்கணுமா, எல்லாத்துக்கும் தயார்’ என்று கைமுறுக்கி, தொடை தட்டி நிற்பார்; சாதிப்பார்!

இவை இரண்டிலும் அதற்குரிய பலாபலன் ஒன்று உண்டு. என்ன அது?

‘நான் அம்பேல்’ என்று நினைப்பவருக்குத் தற்காலிக சுகமும் சௌகரியமும் ஏற்பட்டுவிடுகிறது. எவ்விதப் பொறுப்பையும் அவர் சுமக்கத் தேவையில்லை; ‘என்னால் முடியல இதைக் கொஞ்சம் செய்து கொடேன்’ என்று பிறரிடம் உதவி பெற்றுக்கொள்ள முடிகிறது; வெற்றிக்குத் தேவையான சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, முறைப்படுத்தப்பட்ட செயல்கள் என்று எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் இஷ்டத்திற்குத் திரிய முடிகிறது. சில சமயம் ‘ஐயோ பாவம்’ என்று பிறரிடம் அனுதாபமும் பெற்றுக்கொள்ள முடிகிறது.

இரண்டாமவர் இறுதியில் வெற்றியடைந்திருந்தாலும் அதற்காக அவர் செலவிட்டதும் தாங்கியதும் நிறைய. உழைப்பு, நேரம், பொறுப்புச் சுமை, சங்கடங்கள், தடங்கல்கள் இத்தியாதி.

ஆனால் முடிவில் யார் அதிக மன மகிழ்வுடன் இருப்பார்? அது ஊரறிந்த ரகசியம்.

நமக்கு எந்தக் குறையிருந்தாலும பிரச்சனையில்லை. ஆனால் நமக்கு நாமே எழுதிக் கழுத்தில் மாட்டிக்கொள்கிறோமே ‘நம்மாலாகாத் தன்மை’ என்ற அடையாள அட்டை – அதுதான் குறை! உண்மையிலேயே பெருங்குறை! அதன் விளைவு நம்மையே சாரும். நம் கழுத்தில் நாம் மாட்டிக்கொள்ளும் அந்த விலங்கைக் கழட்டித் தூரக் கடாசிவிட்டால் போதும். மகிழ்வான வாழ்விற்கு அதுவே நாம் செய்யும் மிகப் பெரும் உபகாரம். அதன்பிறகு நம்முடைய ஊனமோ, பலவீனமோ, எந்தக் குறையும் பெரிதாகத் தெரியாது.

இதற்கு வரலாறு நிறைய உதாரணங்களை நம் மேசையின்மேல் தூக்கி எறிகிறது. அதிலொன்றுதான் நாம் மேலே பார்த்த டெமாஸ்தெனஸ். கி.மு. நான்காம் நூற்றாண்டாவது ரொம்ப தூரம். சற்று நெருக்கத்தில் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு வருவோம்.

அமெரிக்காவில் ஒரு மனிதர் இருந்தார். ஏதாவது வியாபாரம் செய்து பிழைப்போம் என்று தம்முடைய 22ஆவது வயதில் தொழிலொன்றைத் தொடங்கினார் அவர். தோல்வியில் முடிந்தது.

வியாபாரம் சரிவரவில்லை, போகட்டும். சட்டமன்றத்திற்குப் போய் நாட்டிற்காவது உதவலாம் என்று தேர்தலில் போட்டியிட்டார்; அதிலும் தோல்வி. அது அவருடைய 23ஆவது வயது.

வயிறு பசித்தது. மீண்டும் தொழில் செய்துபார்ப்போம் என்று வியாபாரம் ஆரம்பித்தார். ம்ஹும்! மீண்டும் போண்டி. வயது 25.

அதற்கு அடுத்த ஆண்டு மனைவி இறந்து போனார். 27ஆவது வயதில் அவருக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டது. மீண்டும் அரசியலுக்குப் போவது என்று முடிவெடுத்து மூன்று முறை முயன்று மூன்று முறையும் தோற்றார். அதெல்லாம் 34, 37, 39 வயதுகளில்.

46ஆவது வயதில் மீண்டும் தோல்வி. 47 ஆவது வயதில் துணை ஜனாதிபதியாகலாம் என்று முயற்சி செய்தால் அதுவும் தோல்வி. 49ஆவது வயதில் மற்றொரு தோல்வி.

படிக்கும் நமக்கே மூச்சு வாங்கலாம். மனிதர் அசருவதாய் இல்லை. இறுதியில் அவரது 52ஆவது வயதில், “கூப்பிட்டாயா?” என்று வெற்றி எட்டிப் பார்க்க அமெரிக்க ஜனாதிபதியானார் அவர். அதன்பிறகு வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்து தலைநகர் வாஷிங்டனில் பெரிய சிலையாக அமர்ந்து கொண்டார்.

ஆம்! அவர் ஆபிரஹாம் லிங்கன்!

மனதின் இலக்கை எட்ட நமது குறைகள் தடையே அல்ல.

தடையெல்லாம் “என்னால் முடியாது” எனும் எண்ணம் மட்டுமே. அதுதான் குறை.

அதை நீக்குங்கள். மனம் மகிழ்வை உணரும்.

னம் மகிழ, தொடருவோம்...

Wednesday, January 19, 2011

வாழும் நாட்டின் கொடுமையாமல் இறைவனுக்காக நாடு துறந்ததால் வந்த வழிகாட்டி !

A.D. என்பது கிறிஸ்துவிற்கு பின்பு என்று பொருள் படும்.ஆங்கில காலண்டர் அதன் வழி வந்ததுதான்  .A.H.என்பது ஹிஜ்ராவுக்கு  பின்பு  என்று பொருள் படும். .முஸ்லிம்கள் ஆங்கில காலண்டரை   பயன்படுத்தினாலும்  ஹிஜ்ரா காலண்டரையும்  சேர்த்து பயன்படுத்துகின்றனர். குறிப்பாக மார்க்க காரியங்களுக்கு இது அவசியமாக உபயோகிக்கப்படுகின்றது .

ஹிஜ்ரா என்றால்  வாழும் நாட்டின்   கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனுக்காக நாடு துறந்து அன்னிய நாட்டில் தஞ்சம் புகுவது. முஹம்மத்நபி(ஸல்)அவர்கள் மக்கா நகர் துறந்து(622 C.E.stands for Christian Era.) மதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் சென்ற நிகழ்விலிருந்து ஹிஜ்ரா காலண்டர் தொடங்கியது.முஹம்மத்நபி(ஸல்) அவர்கள் மெக்காவிலிருந்து மதினாவுக்குச் சென்ற நாளிலிருந்துதான் இஸ்லாமிக் காலண்டரின் வருடம் துவங்குகிறது. கி.பி. 622 இல் நிகழ்ந்தது நபியின் பயணம். சந்திரனை அடிப்படையாக கொண்ட இது 12 மாதங்கள் கொண்டது கலண்டே’ எனும் இலத்தீன் உச்சரிப்பிலிருந்து உருவானதுதான் காலண்டர் (Calender) எனும் ஆங்கிலச் சொல்.


ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அடையாளமாக நாட்காட்டிகள் உள்ளன. அச்சமுதாயங்கள் பெருமைப் படக்கூடிய பல அர்த்தங்கள் அந்த நாட்காட்டிகளில் அடங்கியுள்ளன. மேற்குலகின் மீதுள்ள கண்மூடித்தனமான மோகத்தால் சவூதி அரேபியா தவிர அனைத்து இஸ்லாமிய நாடுகளும் தங்களின் ஹிஜ்ரா காலண்டர் நடைமுறையை இழந்தன. கிருத்துவக் காலண்டரையே தங்கள் அரசின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியாக அறிவித்தன.

சவூதி அரேபியா மட்டும் ஹிஜ்ரீ நாட்காட்டியை பயன்படுத்திக் கொண்டிருப்பதுடன், அவ்வாறு செயல்படவேண்டும் என்பதை அந்நாட்டின் அரசியல் சாசனச் சட்டத்தின் இரண்டாவது பகுதியில் சட்டமியற்றியுள்ளது.

ஹிஜ்ரா (சந்திர) மாதங்கள்

   1. முஹர்ரம்
   2. ஸஃபர்
   3. ரபீவுல் அவ்வால்
   4. ரபீவுஸ் ஸானீ
   5. ஜுமாதில் ஊலா
   6. ஜுமாதிஸ் ஸானீ
   7. ரஜப்
   8. ஷாஃபான்
   9. ரமளான்
  10. ஷவ்வால்
  11. துல்கஃதா
  12. துல்ஹஜ்



நன்றி சமுதாய ஒற்றுமை .காம் --------------------------------------------------------------------------------------------------
ஹிஜ்ரா காலண்டர் 1432

Click a picture to see a larger view.
 பெரிது படுத்தி பார்க்க படத்தினை கிளிக் செய்யுங்கள்.

Monday, January 17, 2011

மயக்க வைக்கும் ஆப்ரிக்க மன்னர்கள் ....பாருங்கள்.


ஆப்ரிக்க நாட்டு அதிசிய மாமன்னர்கள் .



பார்த்தாலே அதிரும் ...........மாமன்னர்கள் .

இன்றும் அதே கம்பீரத்துடனும் முரட்டு குணத்தோடும் ஆட்சி புரிகின்ற  மன்னர்கள் பலர் இருப்பார்கள், ஆனால் தோற்றமும் நாடும் வேறாக இருக்கலாம் . மன்னர் ஆட்சி மாறிவிடுமா என்ன ! மக்கள் ஆட்சி என்ற  பெயரில் மன்னர் ஆட்சி முறை நடக்க வில்லையா ! அரசு ஆட்சி என்பது உலகம் சுற்றுவதுபோல் மாறி வரக்கூடியதுதான் .
 நல்ல மன்னர் பின்பு கொடுங்கோலர் அவரை மாற்ற மக்கள் ஆட்சி அது செய்யும்  அட்டகாசம் தாங்க முடியாமல் திரும்பவும் பழைய நிலை .
தற்போதும் பெயருக்குத்தான் மக்களாட்சி சில நாடுகளில். 
நம் நாட்டில் நிகழாது மக்களாட்சி தொடரும் என்று நம்புவோம் .



JOSEPH LANGANFIN

Benin




NGIE KAMGA JOSEPH
Fon of Bandjun
Cameroun




HALIDOU SALI

Lamido of Bibemi

Cameroun



OSEADEEYO ADDO DANKWA III
King of Akropong-Akuapem
Ghana


ABUBAKAR SIDIQ
Sultan of Sokoto
Nigeria


ABUBAKAR SIDIQ
Sultan of Sokoto
Nigeria

Friday, January 14, 2011

மனம் மகிழுங்கள் - 31 : ஏட்டில் எழுதி வை

மனம் மகிழுங்கள்!
31 - ஏட்டில் எழுதி வை
- நூருத்தீன்
ட்டியல் அறியாதவர் யாரும் இருக்க முடியாது. மளிகைக் கடைப் பட்டியல், மருந்துப் பட்டியல், வாக்காளர் பட்டியல், மந்திரி சபைப் பட்டியல், என்று நாம் அனைவரும் எங்காவது ஏதாவது ஒருவிதத்தில் பட்டியல் தயாரிக்க, அல்லது அதில் இடம் பிடிக்க என்று முயல்வதால் அது நம் வாழ்க்கையோடு இணைந்த ஒன்று ஆகிவிட்டது. இந்தப் பட்டியலுக்கும் நாம் சென்ற இரு அத்தியாயங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோமே குறிக்கோள், அதற்கும் தொடர்பு உண்டு.

அது என்னவென்று பார்க்குமுன் -

நம் மனமானது எப்படி நாம் அதிகமதிகம் நினைத்துக் கொண்டிருக்கும் விஷயத்தை நோக்கியே "காந்தத்தைக் கண்ட இரும்பைப்போல்" நகர்கிறது என்பதை முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். அதன் அடிப்படையில் இங்கு நாம் அறிந்து கொள்ளவேண்டியது யாதெனில், நம் மனதில் தெளிவான நிச்சயமான குறிக்கோள் என ஒன்று இருந்தால், நம் மனமானது சதா நேரமும் அதையே நினைத்துக் கொண்டிருக்கும்; பிறகு அதை நோக்கி நகர்ந்து நாம் எளிதாய் நமது குறிக்கோளை எட்டிவிட உதவும்.

அதைப்போலவே குறிக்கோளென்று எதுவும் இல்லாவிட்டாலும் அப்பொழுதும் நமது சிந்தனையை ஆக்கிரமிக்கும் விஷயத்தை நோக்கியே நம் மனது நம்மை நகர்த்தும். ஏனெனில் நம் சிந்தையில் இருப்பது நல்லதொரு குறிக்கோளா அல்லது வெறும் அக்கப்போரா என்பதெல்லாம் நம் மனதிற்கு முக்கியமில்லை. ‘நீ நினைத்துக் கொண்டிருப்பது இதைத்தானே, வா போகலாம்’ என்று நம்மை இழுத்துச் சென்று விட்டுவிடும்.

எனவே வாழ்க்கையில் குறிக்கோள் நிர்ணயித்துக் கொள்வது மெத்த உத்தமம். இதை நினைவில் வைத்துக் கொள்வோம்.

சரி எங்கு ஆரம்பித்தோம்? ஹாங்... பட்டியல். அதைப் பார்ப்போம்.

மாதாந்திர மளிகை அல்லது ஊரிலிருந்து வந்திருக்கும் மனைவி வீட்டாருக்கு விருந்து சமைக்கக் காய்கறி என்று ஏதோ வாங்கக் கடைக்குக் கிளம்புகிறீர்கள். என்ன செய்வீர்கள்? நாலைந்து பொருள் என்றால் ஏதும் பெரும் பாதகமில்லை. மூன்று பொருளை வாங்கி முக்கியமான இரண்டை மறந்து வீட்டில் வந்து ‘வாங்கிக் கட்டிக்’ கொள்ளலாம். இது நிறைய ஐட்டம். எனவே உங்கள் மனைவி ஒரு லிஸ்ட் எழுதிக் கொடுத்திருப்பார். அவரவர் வசதிக்கு ஏற்ப அது சுண்டெலி வாலைப் போலவோ அல்லது ஆறு கெஜம் புடவை நீளத்திற்கோ இருக்கலாம்.

எதற்கு இந்த லிஸ்ட்?

‘கிளம்புகிற அவசரத்தில் சரியாய்க் கேட்டுக் கொள்ளவில்லையே! கத்திரிக்காய் கேட்டாளா? கேழ்வரகு மாவு கேட்டாளா?’ என்று தட்டுக்கெட்டுப் போய்ச் சொதப்பக் கூடாதில்லையா? இந்தச் சின்ன முன்னேற்பாடு நாம் கடைக்கு என்ன நோக்கத்தோடு செல்கிறோம்; என்ன வாங்கப் போகிறோம் என்று நம் குறிக்கோள் மாறாமல் செயல்பட உதவுகிறது. காரியம் சாதிக்க உதவுகிறது.

ஒரு நிறுவனம். அவர்களுக்குப் பற்பல திட்டங்கள், நோக்கங்கள். அதையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமானால் அதன் CEO அல்லது உயர் அதிகாரி குறைந்தபட்சம் என்ன செய்வார்?

அல்லது கல்யாணம், புதுமனை புகுவிழா என்று வீட்டில் ஏதோ ஒரு விசேஷம் என்று வையுங்கள். என்ன செய்வோம்?

பட்டியல்!

யார் யாரை அழைப்பது, என்னென்ன வாங்குவது, விருந்தில் என்னென்ன பரிமாறுவது என்று பட்டியல்!

அல்லது என்னென்ன செய்ய வேண்டும், யார் யார் என்னென்ன பங்கு வகிக்க  வேண்டும் என்று அட்டவணை!

இப்படி நம்மையறியாமல் சில முக்கியச் செயல்களுக்கு நாம் பட்டியல் எழுதத்தான் செய்கிறோம். அதன் சௌகரியம் உணர்ந்திருக்கிறோம். ஆனால் அதை முக்கியமான ஒரு விஷயத்திற்கு நம்மில் பெரும்பாலானவர் சரிவரப் பிரயோகப்படுத்துவதில்லை.

என்ன அது?

வாழ்க்கை!

வாழ்க்கையில் முன்னேற வேண்டும், அதைச் செய்ய வேண்டும், இதைச் சாதிக்க வேண்டும் என்று குருட்டாம் போக்கில் பற்பல எண்ணங்களும் ஆசைகளும் இலட்சியங்களும் இருந்தாலும் அவையெல்லாம் ஏன் அனைவருக்கும் கைகூடுவதில்லை? அடிப்படைக் காரணம் வாழ்வின் குறிக்கோள்களை ஒழுங்குபடுத்திப் பட்டியலிட மறப்பதுதான்!

எனவே நோட்புக், டைரி, காலண்டர், பாத்ரூம் சுவர் என்று எங்காவது நம் குறிக்கோள்களைப் பட்டியலிட்டுக் கொள்வது பல் துலக்குவதற்கு அடுத்த நல்ல பழக்கம். அதைப்போல் அடுத்தகட்டமாய் அவற்றை அடைவதற்கான செயல்பாடுகள், முயற்சிகள், பணிகள் ஆகியனவற்றின் பட்டியல்.

இதன் பலனாய் நமது செயல்கள் சரியான முறையில் ஓர் ஒழுங்குடன் அமையும்; நாம் நினைத்ததைச் செய்து முடிக்க உதவும்.

கடைக்கும் விருந்துக்கும் விசேஷத்திற்கும் பட்டியல் உதவுவதைப் போலவே வாழ்க்கைக்கும் பட்டியல் அவசியம்.

குறிக்கோளை ஒரு வாகனம் போலவும் நினைத்துக் கொள்ளலாம். அது நாம் செல்ல வேண்டிய ஊருக்கு இட்டுச் செல்கிறது. செல்லும் பாதையெல்லாம் பாடம் கற்றுத் தருகிறது.

அம்பானியாக வேண்டும் என்றால்தான் குறிக்கோள் முக்கியம் என நினைக்கக் கூடாது. குறிக்கோளுடனான ஒரு வாழ்க்கை அமைந்தால்தான் அது நமக்கு அனுபவத்தையும் பக்குவத்தையும் கற்றுத் தருகிறது என்பதற்காகவாவது குறிக்கோள் வேண்டும்.

எனக்குத் தெரிந்த தம்பதியர். மனைவியுடன் ஷாப்பிங் செல்வதாக இருந்தால் கணவர் வெகு முனைப்புடன் ஒரு சின்னப் பட்டியல் தயார் செய்து விடுவார். மனைவியிடம், “இதோ ஷாப்பிங் லிஸ்ட். தேவையானதை வாங்கிக் கொண்டு நாம் டைம் வேஸ்ட் செய்யாமல் வந்துவிட வேண்டும்.”

மனைவியும் சமர்த்தாய்த் தலையாட்ட, கடைக்குச் செல்வார்கள். இறுதியில் வீட்டிற்குச் சுமந்து வரும் பைகளுக்கும் அநதப் பட்டியலுக்கும் சம்பந்தமே இருக்காது! திட்டமிட்டதைவிட நேரம், பணம் எல்லாம் அதிகம் செலவாகியிருக்கும்.

“என்னங்க இது? அப்ப எதற்கு ஒவ்வொரு முறையும் லிஸ்ட்?” என்றால் அவர் சிரித்துக் கொண்டே சொல்வார், “என் குறிக்கோள் என் இல்லாளை மனம் மகிழ வைப்பது. அது நடந்துவிட்டது.”

னம் மகிழ, தொடருவோம்...
Source: http://www.inneram.com/2011011413010/manam31

Wednesday, January 12, 2011

TAKBIR தக்பீர்-இறைவா by சலாம் எக்ஸ்பிரஸ் (Eraiva by Salaam Express)





NAAM MARAINTHAALUM UYIROOTTUM MARAIYONAVAN
நாம்  மறைந்தாலும்  உயிரூட்டும்  மறையோனவன்

NAM NEETHI NAALIN ATHIBATHIYAE
நம்  நீதி  நாளின்  அதிபதியே

AVAN OR NAALUM OR POZHUTHUM OIVABAVANILLAI
YA ALLAH NEE YAE!
அவன்  ஓர்  நாளும்  ஓர்  பொழுதும்  ஓய்பவனில்லை
யா  அல்லாஹ்   நீயே !

ALLAHU AKBAR, ALLAHU AKBAR, ALLAHU AKBAR
அல்லாஹு  அக்பர் , அல்லாஹு  அக்பர் , அல்லாஹு  அக்பர்

LA ILAAHAILLALLAH HUWALLAHUAKBAR
லாயிலாஹா  இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்

ALLAHU AKBAR WALILLAH ILHAMD
அல்லாஹு   அக்பர்  வளில்லாஹ்  இல்ஹம்த்

EERA MANNIL ROOHAI OOTHI UYIRAI TANTHAANAY
ஈர  மண்ணில்  ரூஹை  ஊதி  உயிரை  தந்தானே

VAZHVATARKU VAANAM BOOMI AMAITU VAITTAANAY
வாழ்வதற்கு  வானம்   பூமி  அமைது  விட்டானே

MANAPPAATHANGALIN NAERVAZHIKKU MAARKAM TANTHAAN
மனப்பாதங்களின்  நேர்வழிக்கு  மார்க்கம்  தந்தான்

ANTHA MAARKATTAI YAERPATHARKKU NABIYAI EENTHAAN
அந்த  மார்க்கத்தை   ஏற்பதற்கு  நபியை  ஈந்தான்

ORAYZHUTTTUM KATTRIDAATHA UMMI NABIYAI
ஒர்யழுத்தும்     கற்றிடாத  உம்மி  நபியை

HIRAAVIL IQRA YENA OTHA CHEITHAAN
ஹிராவில் இக்ராஹ் (ஓதுவீராக)  என   ஓதச்  செய்தான்

QUR’AN VAYTHAMALLAAM OPPIKKUM AATRAL TANTHAAN 
குர்’ஆன் வையமெல்லாம்  ஒப்பிக்கும்  ஆற்றல்  தந்தான்
 
ANTHA VAYTHAMAY MANITHANUKKU PAATHAIYAAKKINAAN
அந்த   வேதமே   மனிதனுக்கு  பாதையாக்கினான்

TANAKKAANA TAYVAI ILLAATHAVAN
தனக்கான  தேவை    இல்லாதவன்

NAAM TAYVAI TEERKUM VALLONAVAN
நம்  தேவை  தீர்க்கும்  வல்லோனவன்

AVAN AGILATTIN ARULAAGA NABIYAI TANTHAAN
அவன்  அகிலத்தின்  அருளாக  நபியை  தந்தான்

NABI VAZHIYAE ISLAM
நபி  வழியே  இஸ்லாம்


ADAM HAWA IRUVARAIYUM PADAITTU SAERTTAVAN
ஆதாம் ஹவ்வா    இருவரையும்  படைத்து  சேர்த்தவன்

AVARGAL VAZHI MANITHA INAM PAERUGA SEITHAVAN
அவர்கள்  வழி  மனித  இனம்  பெருக  செய்தவன்

NAAM MATRAVARAI ARIVATHARKKU VAETRUMAI KALANTHAAN
நாம்  மற்றவரை  அறிவதற்கு  வேற்றுமை  கலந்தான்

UYARNTHOR NAMMIDAYAE AVANAI UNARNTHOR YENDRAN
உயர்ந்தோர்  நம்மிடையே  அவனை  உணர்ந்தோர்  என்றான்

INNALGALUM INBANGALUM NAERUM VAZHVILAE
இன்னல்களும்  இன்பங்களும்  நேரும்  வாழ்விலே

NAERADIYAE TANNAI NAADA NEETHI VITHITTAAN
நேரடியே  தன்னை  நாட  நீதி  விதித்தான்

AGILA ULAAMEYNGUM ADANGUM YAAVUM URIYAVANNALLAH
அகில  உலகமெங்கும்   அடங்கும்  யாவும்  உரியவன்னல்லாஹ்

YAAVUM TANNIDAMAE TIRUMBIDA VITHI SEITHAAN
யாவும்  தன்னிடமே  திரும்பிட  விதி  செய்தான்


LAUNCH DATE: 31st DEC 2010

CREDITS


COMPOSER - MUBEEN முபீன்
LEAD VOCAL - ERFANULLAH எர்பானுல்லாஹ்

அரபிக்  CHORUS     - முஹமது  அலி , ரஷித் , AZIZ   , முஹமது  அலி  (MSIA), அன்சாரி , அப்துல்லாஹ் , FARAZ , பைசல் , MAHFUZ   &  சலாம்


LYRICS - ASAN BUHARI & SALAAM EXPRESS
லிரிக்ஸ்  - அசன்  புஹாரி  & சலாம்  எக்ஸ்பிரஸ்

PERCUSSIONS - MOHAMED NOOR முஹம்மது  நூர்

RECORDED AND MIXED AT - OLIVE STUDIO

COVER ART - NAZIRUDEEN MALIK- நசிருதீன்  மாலிக்
Source : http://www.salaamexpress.com/TAKBIR.html

Tuesday, January 11, 2011

எப்படி நான் இந்தியாவ காப்பாத்துவேன்…..!!!!!!!!!


ஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்கு.
மக்கள் தொகை: 110 கோடி
9 கோடி ஓய்வு பெற்றவர்கள்


30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
(இருவருமே வேலை செய்யறதில்லை)


1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)

25 கோடி பள்ளில படிப்பவர்கள்

1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்

15 கோடி வேலை தேடுவோர்

1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்

ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலில்


மிச்சம் இருப்பது நீயும் நானும்

நீ எப்போ பார்த்தாலும் மெயில் அனுப்பறது/படிக்கிறதுல பிஸி

அய்யோ நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன் !





Shaik Dhawood
எனக்கு மின்னஞ்சலில் வந்தது!