Tuesday, December 28, 2010

"தேடுவதைத் தேடி தளராமல் நிற்கையிலே," இலிங்க பயிரவி (கலித்தாழிசை) by இராஜ. தியாகராஜன்

தேடுவதைத் தேடி தளராமல் நிற்கையிலே,
ஆடுகின்ற மெய்யை அலுங்காமல் பற்றிடத்தான்
நாடுகின்ற நம்முளமும் நாகமுக நாயகியைக்
கூடிமன மீதென்று கொள்வதுவும் நேர்ந்திடுமே!
.....குறைவிலாக் கோமகளைக் கொள்வதுவும் நேர்ந்திடுமே!

வித்தகியின் ’பாசத்தில்’ உயிர்க்கருவை ஆட்டிவைக்கும்
சித்துகளும் சீரழிக்கத் தேன்சொரியும் சிந்தனையும்
அத்தனை ஆயிரமாய் ஆட்டங்கள் மோதுகையில்;
மத்தியிலச் சக்தி மனங்குளிர்ந்து தந்தனளோ?
.....மாநிலமே போற்ற மனங்குளிர்ந்து தந்தனளோ?

உயிர்ப்பளிக் குண்மை உறுதியுடன் சொல்வேன்;
பயிர்வளரப் பாரில் பரிந்துபடி யளப்பாள்;
தயிருள்ளே மோரும் தரமான வெண்ணெய்
இயல்பழகில் வைத்திட்ட இலிங்க பயிரவியே!
.....எழிலாம் வடிவே இலிங்க பயிரவியே!

                                                                               இராஜ. தியாகராஜன்  
(இணையச் சகோதரி பாவலர் திருமதி ஜெயப் ப்ரபா அவர்களின்  இலிங்க பயிரவி புதுப்பாட்டுக்கு மறுபாட்டாய் நான் வனைந்த கலித்தாழிசை--  இராஜ. தியாகராஜன் )

Monday, December 27, 2010

எம்.சி.ஏ. முதுகலை பட்டப்படிப்பில் 14 வயது மாணவர்!

கோவை ராமநாதபுரத்தை  சேர்ந்த முஹம்மது சுஹைல் என்ற 14 வயது முஸ்லிம் சிறுவன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பல சான்றிதழ்களை பெற்று எம்.சி.ஏ படிப்பை தனது சிறு வயதிலேயே துவங்கி சாதனை படைத்துள்ளார்.
9 ஆம் வகுப்பு முடித்த முஹம்மது சுஹைலின் அறிவுத் திறனை கண்டு பாரதியார் பழ்கலைக்கழம்  இவருக்காக வயது வரம்பை  தளர்த்தியுள்ளது குறிப்பிடதக்கது.
ஒருஆண்டு  காலத்திலேயே படிப்பை முடிக்க  திட்டமிட்டுள்ளதாக முஹம்மது சுஹைல் தெரிவித்துள்ளார்.  அல்ஹம்துலில்லாஹ்!
இவரை  பற்றி தினமலர் இணையதளம் வெளியிட்டுள்ள வீடியோ:
Download (Right click save link as)
by mail :from  mohdali naseer

Friday, December 24, 2010

மனம் மகிழுங்கள்! – 28 : நன்றியும் மகிழ்வும்

மனம் மகிழுங்கள்!
28 - நன்றியும் மகிழ்வும்
- நூருத்தீன்
ந்நன்றி கொன்றார்க்கும்” எனத் தொடங்கும் திருக்குறள் தெரியுமில்லையா? பள்ளியில் கோனார் நோட்ஸெல்லாம் வைத்துக்கொண்டு விரிவாய்ப் படித்திருப்பீர்கள். அதன் பொருள் பொத்தாம் பொதுவாய் உங்களுக்குத் தெரிந்திருக்கும். நன்றி மறந்தால் அவனுக்கு ‘உய்வில்லை’ என்று அதட்டியிருப்பார் வள்ளுவர்.

“நன்றி கெட்ட மாந்தரடா, நானறிந்த பாடமடா” என்று தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஒருவர் மிகவும் வருந்தி எழுதிய பாடலையும் கேட்டிருப்பீர்கள்.

‘நன்றி மறத்தல் தகாது’; ‘நன்றியுணர்வு வேண்டும்’ என்றெல்லாம் நாம் அனைவரும் அடிப்படையில் புரிந்து வைத்துள்ளோம். ஆனால் என்ன பிரச்சனையென்றால் இயல்பு வாழ்க்கையில் அது அவ்வளவு வீரியத்துடன் நம்மிடம் வெளிப்படுவதில்லை; அல்லது சுயநலத்தில் மறைந்துபோய் விடுகிறது.

நான் நன்கு அறிந்திருந்த ஊரில் ஒருவர் இருந்தார். அவர் மிகப் பெரிய பணக்காரர் இல்லையென்றாலும் நன்கு வசதி படைத்தவர். நன்றாக உழைத்து முன்னுக்கு வந்தவர். ஆசைக்கும் ஆஸ்திக்குமென்று ஒரே மகன். தம் மகன் விரும்பிக் கேட்பது, கேட்காதது என்றெல்லாம் வாங்கிக் கொடுப்பவர். அதற்காகக் கதைகளில் வரும் அப்பிராணி அப்பா எனவும் நினைத்து விடக்கூடாது. நிறைய நியாய உணர்வு உள்ளவர். அதனால் தம் பாசம் தம் கண்ணை மறைக்கக் கூடாது என்பதில் அவருக்குத் தெளிவு இருந்தது. தம்முடைய அன்பு, செல்லம் இதெல்லாம் தம் மகனைக் கெடுத்துவிடக் கூடாது என்பதிலும் அவருக்குக் கவனம் அதிகம். எதையும் யோசித்தே செய்து பழகியவர்.

ஒரு நாள் மகன் ஏதோ ஒரு பொருள் வாங்கித் தரும்படி கேட்க, அது அவசியமற்றது என்பது அவருக்குத் தெரிந்ததால் நாசூக்காய் மறுத்தார். மகனின் கோரிக்கை அடங்கவில்லை. அதட்டிப் பார்த்தார். மகனுக்கு ‘அடம்’ அதிகமானது. தந்தைக்குச் சகிக்கவில்லை. கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இழுத்து வைத்து முதுகில் நாலு சாத்து சாத்தத் தோன்றியது. சட்டென்று அவருக்கு அந்த எண்ணம் மாறி வேறு யோசனை தோன்றியது.

“இதோ பார். உனக்கு அரை மணி நேரம் அவகாசம் தருகிறேன். ஒரு பேப்பர், பென்சில் எடுத்துக் கொள். உன் அறைக்குள் செல். நிதானமாய் அமர்ந்து உன்னிடம் ‘உனக்கே உனக்கென்று’ என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதை எழுதி எடுத்துக் கொண்டுவா. பிறகு பேசுவோம்”என்றார்.

முணுமுணுத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டான் மகன். அரை மணி நேரம் கழித்து அவன் அளித்த பேப்பரை வாங்கிப் பார்த்த தந்தை அசந்து விட்டார். தன்னிடம் என்னென்ன இல்லை என்று அந்தப் பட்டியல் ஒரு வால்போல் நீண்டிருந்தது.

‘இப்படியொரு திருப்தியற்ற மகனா?’ என்று கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்துவிட்டார்.

இதைப் படிக்கும் தந்தைகள் பலருக்கு இத்தகைய அனுபவம் நிகழ்ந்திருக்கலாம். ‘நன்றி கொன்ற பிள்ளைகள்’ என்று ஏதாவது ஒரு சூழ்நிலையில் வருத்தம் ஏற்படத்தான் செய்கிறது. ஆனால் நாம் என்ன செய்கிறோம்?

”நான் என் மகனைப் போல் இல்லை; என் பெற்றோரைக் கண்ணுக்குக் கண்ணாய்ப் பார்த்துக்கொண்டேன்,” என்று சொல்லலாம். இங்கு நாம் அறியவிருப்பது பெற்றோர் - பிள்ளை சென்டிமென்ட் கதையில்லை; மனதிற்கும் நன்றியுணர்வுக்கும் இருக்க வேண்டிய தொடர்பு!

நம்மிடம் என்ன உண்டு என்பதைவிட நம்மிடம் என்ன இல்லை என்பதுதான், நாம் அறிந்தோ அறியாமலோ, நம் மனதை என்றும் எப்பொழுதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. நம்மிடம் இருக்கும் பலவற்றை உணர்ந்து மகிழ்வதை விட்டுவிட்டு இல்லாத ஒன்றிற்காக எப்பொழுதும் கவலை; ஏகப்பட்ட தொல்லை. இதனால் நிம்மதியானது நம்மிடம் வரப்பயந்து கொண்டு எங்கோபோய் ஒளித்துக் கொள்கிறது.

மேற்கொண்டு தொடரும் முன் இங்கு ஒன்றை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். அது -

‘இலட்சியக் கனவிற்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசம்; குறிக்கோளும் பேராசையும் எவை என்ற தெளிவு.’

நல்லதொரு இலட்சியம் நம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு மிக அவசியம்; ஆனால் அது வேண்டும், இது வேண்டும் என்று பார்ப்பதற்கெல்லாம் ஆசைப்படுவது தப்பு!

மனமானது எப்படி இயங்குகிறது? நாம் எதை விரும்புகிறோமோ அதை நோக்கி!

நம்மிடம் உள்ள நிறைகளை மறந்துவிட்டுக் குறையுடனேயே வாழ்ந்து வந்தால், மனதில் என்ன எண்ணம் படியும்? “நீ ஒன்றுமற்றவன்; உனக்கு வாழ்க்கையில் எந்த நல்லதும் வாய்க்காது...” இத்யாதி எண்ணங்கள். அனைத்தும் நெகட்டிவ் எண்ணங்கள்.

அத்தகைய எண்ணங்கள் என்ன செய்யும்?

உங்கள் மனதைக் குலைத்து, உங்களை அழுமூஞ்சியாக்கி, நீங்களே “நானொரு தண்டம்“ என்று எண்ணுமளவிற்கு இட்டு்ச் சென்று விட்டுவிடும்.

எனவே, உங்களிடம் என்ன உள்ளது என்பதை உள்ளார்ந்து உணர்ந்து, மேடைப் பேச்சாளர் மறக்காமல் சொல்வது போல், ‘அதற்காக முதற்கண்’ நன்றியுணர்வு கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

காலுக்கு ரெண்டு ஜோடி செருப்பு, மூன்று ஜோடி ஷு மட்டுமே இருக்கிறது; நேற்றுப் புதிதாய் வாங்கிய டிரஸ்ஸிற்கு மேட்சாய்க் காலணி இல்லை என்று வருத்தமான வருத்தத்தில் இருக்கும் ஒருவர் கால் ஊனமுற்ற அல்லது காலே இல்லாத ஒருவரைக் கண்டால் என்ன சொல்வார்?

ஒருவருக்கு ஒரு ஜோடி செருப்பே கூட இல்லாது போகட்டும். அதற்காகச் செருப்பில்லையே என்று அவர் வருந்திக் கிடந்தால் மன மகிழ்வைத் தொலைத்துவிட்டு, மனம் ஊனமாகிச் செயலற்றுப் போய்விட நேரிடும். அதையே அவர் ‘எனக்கென்ன குறை? ஓடியாட இரண்டு கால்கள் இருக்கின்றன!’ என்று உரத்துச் சொல்லி எழுந்து நின்றால் போதும்; பூமியின் நிறமே மாறிக் கண்ணெல்லாம் பிரகாசம் ஒளிரும்.

“எதுவொன்றும் எனக்கு நடப்பதில்லை; எப்பப் பாரு பணக் கஷ்டம்; என்னைக் கண்டால் யாருக்குமே பிடிப்பதில்லை; எனக்கென்று எந்த வேலையும் சரியாய் அமைவதில்லை; வாழ்க்கையை ஓட்டுவது ஒரு பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது,” என்றெல்லாம் ஒருவர் புலம்பலும் மூக்குச் சிந்தலுமாக இருந்தால் அவருக்கு என்ன அமையும் என்று நினைக்கிறீர்கள்?

இத்தொடரைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர் அனைவரும் இந்தக் கேள்விக்குத் தவறான பதில் அளிக்கவே முடியாது.

அந்த மனிதரின் உள்மனம் ‘நீ ரொம்ப பாவம்!” என்று அதையெல்லாம் அப்படியே நம்பி அவர் தன்னைத் தானே ‘ஒரு தண்டம்’ என்று உறுதிப்படுத்திக் கொண்டால் அவருக்கு வாய்ப்புகள் கைநழுவும்; நட்புறவு அமையாது; கையில் வரும் பணம் தங்காது! அவர் மன மகிழ்வற்று வாழ அவர் உள்மனமே மாய்ந்து மாய்ந்து உழைக்கும். அவர் நம்பிக்கையின்படியே அவர் வாழ்க்கை அமைய சகல முயற்சிகளும் செய்து தந்துவிடும். ஆகவே மேலும் அழுகை; மேலும் மூக்கு சிந்தல்!

உலகில் இறைவன் அமைத்துத் தந்த விதி பொதுவானது; மிகவும் நீதியானது.

ஒரு மனிதன் தான் பெற்றிருப்பதை அல்லது அடைந்து விட்டதை நினைத்து நன்றியோடு இல்லாமல் தன்னிடம் இல்லாததைப் பற்றியே நினைத்துக்கொன்டிருந்தால் அவனுக்கு இல்லாமையே அதிகரிக்கும்.

நல்ல நட்புறவு கொண்டுள்ள மக்களை உற்றுக் கவனித்துப் பாருங்கள்; அவர்கள் மக்களிடம் உண்மையான நட்பு கொண்டவர்களாகவும் நன்றியுணர்வு கொண்டவர்களாகவுமே இருப்பர். சிடுமூஞ்சிகள் எத்தனை பேரிடம் நல்ல நண்பர்களைப் பார்த்திருக்கிறீர்கள்?

அதைப்போல் உற்சாகமான மனிதர் ஒருவரைப் பாருங்கள். அவர் ஒன்றும் உலக மகாச் செல்வந்தராகவோ, அனைத்துவித வசதிகளும் அடையப் பெற்றவராகவோ இருக்க மாட்டார். தம்மிடம் உள்ளதைக் கொண்டு திருப்தியுற்றவராக மன மகிழ்வுடன் வலம் வந்து கொண்டிருப்பார்.

உலகிலுள்ள அனைத்து வியாபார நிறுவனங்களுக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் ஒரு பொதுத் தன்மை உண்டு. நாடு, இனம், மொழி என்ற எந்தப் பாகுபாட்டிலும் சிக்காத ஒரே குறிக்கோள். மக்கள் அனைவரும் ஒரு நிலையிலேயே இருக்க வேண்டும்!

"மக்கள் அனைவரும் தம்மிடம் இருப்பவற்றை மறந்து, புதுப்புதுப் பொருட்களின்மீது மோகம் கொண்டலைய வேண்டும்!"

நமது கண்களையும் சிந்தையையும் வந்து தாக்கும் ஒவ்வொரு விளம்பரமும் நம்மிடம் சொல்ல வரும் செய்தி என்ன? ‘இதோ பார் புது கார்’, ‘இதோபார் புது டிஸைன் தோசைக் கல்’, ‘இதோபார் புது ரக டாய்லெட் பேப்பர்’ என்று நம்மைத் தொடர்ந்து ஆசைப்பட வைக்க வேண்டும். ஏதோ அந்தப் பொருள் இல்லாவிட்டால் நமது வாழ்க்கையே சூன்யமாகிவிட்டதைப் போன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஏக்கம் ஒன்று மனதில் உருவாகி, ஆசையாக வலுப்பெற்று, மனமானது ‘வேண்டும், வேண்டும்’ என்று அலறி அது நாம் அறியாமலேயே நமது இதயத் துடிப்பாக மாறிவிடுகிறது.

விளைவு?

நம்மிடம் உள்ளவற்றையெல்லாம் மனமானது மறந்துவிட்டு, மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டு, ஒரு காமாந்தகனைப் போல் அலைய ஆரம்பித்து விடுகிறது.

பத்து விஷயங்கள் உருப்படியாய் உங்களிடம் இருந்தாலும் உருப்படாமல் போன ஏதாவது ஒரு விஷயத்தையே உங்கள் மனம் நினைத்துக்கொண்டிருக்கிறது.

சுண்டு விரல் ஓரத்தில் நகம் பெயர்ந்து இலேசாய் இரத்தம் கசிந்தால், மனமானது அதையே நினைத்து மாய்ந்து போகிறதே தவிர, எனது இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது, எனது கை கால்கள் நன்றாக இயங்குகின்றன, என் தலையில் வலியில்லை, என் நுரையீரல், கிட்னி, குடல் எல்லாம் ஆரோக்கியமாய் உள்ளன என்று மகிழ மறந்துவிடுகிறதே!

ஒரு சிந்தனையாளர் கூறினாராம் - ‘நீங்கள் வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கிடைக்காமல் போன ஒன்றை நினைத்து மன மகிழ்வைத் தொலைப்பதைவிட, இது மட்டும் எனக்கு நடக்கவே கூடாது என்று நீங்கள் நினைத்து அப்படி கிடைக்காமல் போனதை நினைத்து மகிழ்வடையக் கற்றுக் கொள்ளுங்கள்.’

புரியவில்லையோ? நாம் யாராவது புற்று, இதய நோய், விபத்து இதெல்லாம் வேண்டும் என்று ஆசைப்படுவோமா? வேண்டாம் எனும் அவையெல்லாம் நமக்குக் கிடைக்காததை நினைத்து மகிழுங்கள் என்கிறார் அவர்.
எதுவொன்றிற்கும் பாஸிட்டிவ்வான மறுபக்கம் உண்டு. நம்மிடம் இருப்பதைக் கொடுத்திருப்பதற்காக இறைவனுக்கு நன்றியுரைத்து மனம் மகிழுங்கள்.

னம் மகிழ, தொடருவோம்...
Source : http://www.inneram.com/2010122412692/manam28

YouTube உங்கள்திரை


YouTube என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் என்ன? "நீ குழல்" என்பது நேரடி மொழிப்பெயர்ப்பு என்பது என் கருத்து. "குறுந்திரை", "குறுங்காணொளி" இவைகள் பொருத்தமானதாக உள்ளனவா?
நல்லதொரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். கலிஃபோர்னியா கவியரங்கத்திலேயே இதுபற்றிப் பேசலாம் என்று இருந்தேன். ஆனால் நேரம் கருதி பேசவில்லை.

கவிஞர் டில்லிதுரை ‘நீ-குழல்’ என்று மொழிபெயர்த்தார். மொழி பெயர்த்தார் என்பதைவிட சொல் பெயர்த்தார் என்பதுதான் சரி. மொழி மாற்றம் செய்யும்போது மொழியாக்கம் ஆவதுதான் சிறப்பு. கருத்தை உள்ளிழுத்துக்கொண்டு நம் மொழிக்கும் இயல்புக்கும் புரிதலுக்கும் ஏற்ப ஒரு புதுச்சொல்லை உருவாக்க வேண்டும். அப்படி ஆக்கப்படுவதுதான் மொழியாக்கம்.

”மொழிபெயர்ப்பென்பது எளிதான காரியமல்ல. காலமாற்றம், இடமாற்றம், பண்பாட்டுமாற்றம் என்ற பல மாற்றங்களையும், சிதையாமல் மாற்றப்படும் மொழிக்கு ஏற்றவாறு மீண்டும் செதுக்கித் தரவேண்டும். அப்படி செதுக்கப்படும் சிலைகள் மீண்டும் உயிருள்ளவையாய் நம்மோடு பேசவும் வேண்டும். செதுக்கும்போது, ஜீவனின் தலையைச் சீவிவிட்டால் மூலப்படைப்பு செத்துப்போய்விடும். அது மொழிமாற்ற வந்த எழுத்தாளனுக்கும் இழுக்கு மூலம்படைத்த கவிஞனுக்கும் அழுக்கு.” என்று தாகூரின் கீதாஞ்சலியைத் தமிழில் மொழியாக்கம் செய்த திரு. ஜெயபாரதனின் நூலுக்கான என் அணிந்துரையில் எழுதினேன்.

நீ-குழல் என்ற சொல்பெயர்ப்புக்கு என் பாராட்டு அதன் நகைச்சுவை உணர்வுக்காக மட்டுமே. சரி, YouTube என்பதை எப்படி மொழியாக்கம் செய்யலாம். இதோ என் சிறு முயற்சி.

Tube என்பது எதைக் குறிக்கிறது? தொலைக்காட்சி என்பதை ’ட்யூப்’ என்று தெரு வழக்கில் கூறும் வழக்கம் ஒன்று உண்டு. அப்படியாய் இது வந்திருக்கலாம். அல்லது அறிவியல் வழியில் சிந்தித்தாலும், Cathode Ray Tube - CRT என்பதுதான் தொலைக்காட்சிப் பெட்டியில் படம் காட்டப் பயன்படுத்தப்படும் கருவி. அப்படிப்பார்த்தாலும் அது தொலைக்காட்சியையே குறிக்கிறது.

என்றால் “உன்-தொலைக்காட்சி” என்று YouTube ஐ மொழிமாற்றம் செய்யலாம். ஆனால் அது அத்தனை சுகமானதாய் எனக்குப்படவில்லை. என்றால் இந்தப் பொருள் வரும்படியாய் ஒவ்வொரு சொற்றொடராய் நாம் முயலலாம். முதலில் உன் என்பதை தமிழின் மறபுக்கு ஏற்ப உங்கள் என்று மாற்றிக்கொள்வோம்.

உங்கள் காட்சி
உங்கள் படம்
உங்கள் திரை

இதில் உங்கள்திரை என்பது கொஞ்சம் எளிமையாகவும் பொருள் தருவதாகவும் சுகமாகவும் இருப்பதாக எனக்குப் படுகிறது.

YouTube உருவாக்கப்பட்டதே நமக்காக நம்முடைய காணொளிகளை வெளியிடுவதற்காகத்தான். ”உங்கள் விருப்பம்” என்ற நிகழ்ச்சியைப்போல் இது உங்கள்திரை. அப்படியான நம் திரையை நாம் ஊருக்குக் காட்டி மகிழ்கிறோம்.

குறுந்திரை, குறுங்காணொளி என்பன நல்ல மொழிபெயர்ப்புகள்தாம் என்றாலும் சின்னத்திரை என்பதன் தொடர் சொல்லாட்சியாகத்தான் படுகிறது.

ஆகவே YouTube என்பதை உங்கள்திரை என்று கூறலாம் அல்லது உங்கள்காணொளி என்றும் கூறலாம் அல்லது இரு சொற்களையுமே இடம்பார்த்துப் பயன்படுத்தலாம்.

Source :http://anbudanbuhari.blogspot.comYouTube உங்கள்திரை

 

Thursday, December 23, 2010

நீங்கள் பார்த்திருக்க முடியாத போர் !

மிகவும் சக்தி வாய்ந்த இந்த புதிய படம் போர்க்காலத்தில் நடக்கும் அநியாயங்களால் நிகழ்ந்த பயங்கர கொடுமைகளை காட்டுகின்றது .இந்த படத்தினை எடுக்க தனது உயிரையும்  பணயம் வைத்து எடுத்த நிருபர்களையும் அதனை உலகம் அறிய வைத்த மீடியாக்களையும்  பாராட்டாமல் இருக்க முடியாது .
உலக சண்டையில் ஹிரோஷிமாவில் அழிவு ,வியட்நாமில் நிகழ்தப்பட்ட ஆக்கிரமிப்பு ,தற்பொழுது நடக்கும் ஆப்கானிஸ்தான் சண்டை, இராக்கின் மீது அநியாயமாக நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு உலக வரலாற்றில் நடந்த மிக கொடுமையான நிழ்வுகள் .போர்க் கப்பல்களும் போர் விமானங்களும் இதற்கு முன் நினைத்துக்கூடப்  பார்த்திருக்க முடியாத அதிரடித் தாக்குதல்களை நடைமுறைப்படுத்தின இந்த போர்களில் உபயோப்படுத்தப்பட்ட அழிவை உண்டாக்கக்கூடிய எலெக்ட்ரானிக் ஆயதங்களால் பொது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை  துணிவுடன் வெளிக்கொணர்ந்த  பத்திரிகை  மற்றும் மீடியாகளின் புகைப்பட கலைஞர்ளின் தன்னலமற்ற நிருபர்களின் உழைப்பு சரித்திரத்தில் முக்கியம் வாய்ந்ததவைகள் .
யார் இந்த கொடுமையினை செய்தவர் ? உண்மையான விரோதி யார்?


ஜான்  பிள்கர் சொல்கிறார் இந்த படத்தில் -John Pilger says in the film: "We journalists... have to be brave enough to defy those who seek our collusion in selling their latest bloody adventure in someone else's country... That means always challenging the official story, however patriotic that story may appear, however seductive and insidious it is. For propaganda relies on us in the media to aim its deceptions not at a far away country but at you at home... In this age of endless imperial war, the lives of countless men, women and children depend on the truth or their blood is on us... Those whose job it is to keep the record straight ought to be the voice of people, not power."
Become a fan of 'The War You Don't See' on Facebook and get regular updates on the film, the latest information on where you can watch it and messages from John Pilger himself. You can also follow the film on Twitter.
'The War You Don't See' will launch in Australia in early 2011 and in the United States in summer 2011, dates will be confirmed on this website.

Directors: John Pilger & Alan Lowery. Editor: Joe Frost. A Dartmouth Films Production.

Source: http://www.megavideo.com/?v=DP4HWOZR
http://www.johnpilger.com/articles/new-pilger-film-the-war-you-don-t-see-currently-showing-on-itv-com


جزاك اللهُ خيراً‎ http://tabibqulob.blogspot.com/2010/12/war-you-dont-see.html

Wednesday, December 22, 2010

ஜெயமோகன் இந்துத்துவவாதி?




ஜெயமோகன் - இந்துத்துவ வாதியா? - உமர்
தம்மை அறிவு ஜீவியாகக்க் காட்டிக் கொள்ளும் முயற்சியில் கருணாநிதியையும் வைரமுத்துவையும் இலக்கியவாதிகளல்லர் என விமர்சித்தவர். அவரின் எழுத்துக்களுள் பலவும் இந்துத்துவத்தைத் தாங்கிப் பிடிப்பவையாகவும் சிறுபான்மையினருக்கு எதிரானவையாகவும் அடையாளம் காணப்பட்டுவிட்டன. இந்துத்துவ சக்திகளும் அவரைத் தம் ஆளாகவே பார்க்கின்றன. அதனால் அப்படி ஒரு சாயல் அவர் மீது படிந்து விட்டது தவிர்க்க முடியாததாகி விட்டது.


தாங்கள் சமீபத்தில் ரசித்து படித்த புத்தகம் எது? - ரவி
புத்தகங்களின் நடுவே உண்டு, உறங்கி வாழ்ந்த கடந்த கால்ம் ஒன்று எனக்கும் இருந்தது. bibliophile எனச்சொல்லும் அளவுக்குப் புத்தகப் பைத்தியமாக இருந்த காலம் அது."நமக்குத் தொழில் கவிதை" எனப்பாரதி சொன்னதுபோல "நமக்குத் இலக்கியவாதி படித்தல்" என வாழ்ந்திருந்த காலம். எனக்கு வாய்த்த நண்பர்களும் புத்தகப் பிரியர்களாக இருந்ததால் இலக்கிய ஆய்வுகள்,, வரலாறு, அரசியல், சமயம், இசை, நாடகம்,சிறுகதை, புதினம், அறிஞர்களின் சொற்பொழிவுத் திரட்டு, சிற்றிதழ்கள், கவிதைத் தொகுப்புகள் எனத் தமிழில் நிறைய வாசித்த அக்காலம் - "அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ-“ எனத் தொடித்தலை விழுத்தண்டூன்றினார் ஏங்கியதுபோல இன்று என்னை ஏங்க வைக்கும் இறந்தகாலம்.

இத்தனை பீடிகையும் எதற்காக? வாழ்க்கையை நகர்த்திச் செல்லத் தேர்ந்தெடுத்த தொழிலால் கடந்த காலத்தை எண்ணிப் பெருமூச்சு விடவே முடிகிறது; புத்தகம் வாசிக்க நேரம் கிடைப்பதில்லை என்பதைச் சொல்லவே!. கடைசியாக நான் வாசித்த புத்தகம் என்று சொன்னால், அமெரிக்காவின் சியாட்டில் நகரில் வசிக்கும் என் இளவல் நூருத்தீன் பரிந்துரைத்து பதிப்பாளார் மூலம் என்க்கு அனுப்பித் தந்த 'நூறு தமிழ்க்கவிஞர்கள்'என்ற நூலே!

தொலைக்காட்சியின் வரவு வாசிக்கும் வழக்கத்தை அழித்து விடும் என்று சொன்னார்கள். அப்படி நிகழ்ந்ததும் உண்மையே! ஆனால் இன்று இணைய தளங்களில் வாசிக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது.ஆனால் புத்தகங்களை வாசிக்கும் நிறைவும் அறிவும் இதில் கிடைக்காது என்பது என் துணிபு.


"கருணாநிதிக்குப் பேசத் தெரியவில்லை" என்று நடிகர் விசயகாந்து கூறியிருப்பது பற்றி உங்களது கருத்து என்ன? -வசீகரன்

அப்படி நேரடியாகக் குற்றம் சாட்டும் அளவுக்கு விஜயகாந்த் பெரிய பேச்சாளார் இல்லை. கருணாநிதி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதாக விஜயகாந்த் குற்றம் சுமத்தியுள்ளதை நீங்கள் "அரசியல்"ஆக்கிவிட்டீர்களே ஐயா!

கருணாநிதிக்குப் பிறமொழிக் கலப்பின்றித் தமிழ் பேசத்தெரியாது. இதை வணங்காமுடி விடைப்பகுதியில் முன்னர் சுட்டிக் காட்டியுள்ளோம். கருணாநிதியின் மேடைப்பேச்சு கவரும்படி இருக்கும்; ஆனால் அவரது உரையை உன்னிப்பாகக் கேட்டால் உங்களுக்கே நிறையப் புரியும்.


லண்டனில் இருக்கும் தமிழர்களுக்கு இருக்கும் இன மான உணர்வு தமிழகத்தில் இருக்கும் நமக்கில்லையே ...ஏன்?- சௌந்தர்ய குமார், கோவைலண்டனுக்குச் சென்ற இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு எதிராக இலங்கைத் தமிழர்கள் கொதித்தெழுந்ததல் இவ்வினாவைத் தொடுத்துள்ளீர்கள். இனமான உணர்வு என்பது லண்டனில் இருப்பவர்களுக்கு மட்டும் உரியது இல்லை; அது தமிழர்களுக்கு மட்டும் உரியதும் இல்லை. பிறந்த பொன்னாட்டை விட்டுப் புலம் பெயர்ந்து வாழும் எவர்க்கும் உள்ள உணர்வே இது.

தம் நாட்டை விட்டு இந்தியாவில் வாழும் திபெத்தியர்கள் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தைத் தடுக்க முயன்றதையும் லண்டனில் ஜோதியைப் பறித்துக்கொண்டு ஓடியதையும் ஆறு நாட்களுக்கு முன்னால் சீனப் பிரதமர் வென் ஜியாபாவோவின் இந்திய வருகைக்கு எதிராக நடத்திய அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தையும் நினைவு கூர்ந்தால் புலம் பெயர்ந்தவர்களின் ஆக்ரோஷமும் இன மான உணர்வும் நமக்குப் புரியும்.

உள்ளங்கை அரித்தால் பணம் வரும் என்கிறார்களே, அதற்கு விஞ்ஞானப்பூர்வ ஆதாரம் எதேனும் உண்டா வணங்காமுடியாரே? - செல்வன் -லாஸ் ஏஞ்சலஸ்
அது திருடர்களும் பிக்பாக்கெட்டுகளும் சொல்லும் டயலாக்!

உங்களுக்கு ஏன்?

எனக்கு உள்ளங்கை அரித்தால் செலவுதான் வருகிறது.

அமெரிகாவின் லாஸ் ஏஞ்சலிஸில் இருந்து கொண்டு இதற்கெல்லாம் அறிவியல் விளக்கம் வேறு கோருகிறீர்கள்; என்ன சொல்ல? :--))

தமிழ் போராளி சீமான் வரும் தேர்தலில் முதல்வர் கருனாநிதியை எதிர்த்து போட்டியிடுவாரா அல்லது தேர்தல் நேரத்தில் பல்டியடித்து விடுவாரா? - தமிழ்செல்வன், றொறென்றொ
"நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும்
பெருமை உடைத்து இவ்வுலகு" என்பது குறள்.

உலகில் மட்டுமில்லை; அரசியலிலும் இதுவே உண்மை. இன்றுளோர் நாளை இரார்; நாளை இருப்போர் மற்றைநாள் இலார்; இன்றிலார் நாளை வருவர். கூட்டணிகளும் தேர்தல் போட்டிகளும் அன்றைய வானிலையைப்போல மாறிக் கொண்டே இருப்பவை.அதனால் இன்று சீமான் எடுத்த சபதம்,

“தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவி துச்சாதனன் செந்நீர்,-அந்தப்
பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து-குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல்முடிப் பேன் யான்;-இது
செய்யு முன்னே முடியே'னென்று”


பாஞ்சாலி எடுத்த சபதம் இல்லை நிறைவேற்றுவதற்கு.; தமிழநாட்டு அரசியல் சபதம். அது தேர்தல் நேர அரசியல் வானிலையைப் பொறுத்தது. இப்போது ஒன்றும் சொல்ல இயலாது.

'கருணாநிதியை அரசியலை விட்டு ஒழிப்பேன்' என்றும் 'ஜெயலலிதாவை விரட்டுவதே நோக்கம்' என்றும் சபதம் எடுத்துப் பின்னர் அவர்கள் இருவரிடமும் மாறி மாறித் தஞ்சம் புகுந்த புரட்சிப் புயலையும் தமிழ்க்குடிதாங்கியையும் தமிழ்நாடு கண்டுகொண்டுதான் இருக்கிறது

2 ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சி பி ஐ நடத்தும் ரெய்டுகளல் காங்கிரஸ் தி மு க கூட்டனி உடையுமா தொடருமா என்ற எதிர்பார்ப்பே இன்றைய அரசியல் வானிலை.


விஜய் - ரஜினியா ? விஜயகாந்த்தா? (வருவாரா? வரமாட்டாரா?) - ஏகலைவன்
...... வரத்துடிக்கிறார்; ஆனால் விஜயகாந்தாக மாட்டார். இன்றைய அரசியல் கிசுகிசுக்களின் படி கருவேப்பிலையாவதற்கே வாய்ப்புள்ளது.

ரஜினியைப் பார்த்தாவது அரசியலுக்கு வராமல் இருப்பது விஜய்க்கு நல்லது.

உருது மொழியை "நமது" மொழி என்கிறாரே கருணாநிதி? - ஹசன், பரங்கிபேட்டை
உருது மொழி அந்நியநாட்டு மொழி இல்லை. சில அறிவிலிகள் அம்மொழியைப் பாகிஸ்தான் மொழி என ஒரு தமிழ் நாளிதழில் எழுதுகின்றனர். உருது மொழி இந்தியாவில் ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் உருவான கலப்பு மொழி. அம்மொழி உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவில்தான் அதன் இனிமை மாறாமல் பேசப்படுகிறது. இந்திய மொழி என்பதாலும் தமிநாட்டில் தமிழைப் போலவே வட்டார வழக்கின் ஏற்ற இறக்கத்துடன் தமிழ் கலந்தே பேசப்படுவதாலும் கருணாநிதி அதை "நம் மொழி" எனச்சொன்னார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்

தமிழகத்தின் நம்பர் 2 நடிகர் கமல், மலையாளத்தின் நம்பர் 2 நடிகர் மோகன்லால் ஆகியோர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பதில் ஏதேனும் தொடர்பு உள்ளதா? - சின்ன துரை
உங்கள் வினாப்படி இருவரும் நம்பர் 2 ஆக இல்லாமல் நம்பர் 1 ஆக இருந்தால் கடவுள் நம்பிக்கை கொள்வார்களா? கடவுள் நம்பிக்கை என்பது தொழில் சார்ந்தது இல்லை; அவரவரின் அறிவையும் ஆய்வையும் சார்ந்தது. கமலும் மோகன்லாலும் கடவுள் நம்பிக்கை இலாதவர்களாக இருப்பதில் என்ன தொடர்பு இருக்க முடியும்?

சரி! நம்பர் 1, நம்பர் 2 என்பதை எதை வைத்துத் தீர்மானிக்கிறீர்கள்?

படம் வெற்றி பெறுவதை வைத்தா? பண வசூலை வைத்தா? அல்லது ரசிகர் மன்றங்களின் பலத்தை வைத்தா?

நடிகர்கள் பந்தயத்தில் ஓடும் குதிரைகள். ஜெயிக்கும் குதிரை நம்பர் 1. திரையுலகிலும் அரசியலைப்போல வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவன. எனவே நம்பர் இடும் வழக்கம் பொருத்தமற்றதாகவே தோன்றுகிறது.

வழக்கமாக டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் பாபர் மசூதி தொடர்பான போராட்டத்தை ஒரு முஸ்லிம் அமைப்பு ஜனவரி 27ஆம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளது குறித்து? - தமீம்
அப்படி ஒரு செய்தியை நான் ஊடகங்களில் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லையே!

நீங்கள் வினவியுள்ளது உண்மையெனில் ஒருவேளை அவர்கள் தங்களைத் தனியாக அடையாளம் காட்டுவதற்காகச் செய்வார்களோ என்னவோ?

நான் கேள்விகளை அனுப்பி உங்களால் பதில் சொல்ல முடியாமல் போனால் என்ன செய்வீர்கள்?- முஹம்மது அலி ஜின்னா
விடை எழுத மாட்டேன்ஃ உங்கள் வினா என்றில்லை; எவரது வினாவாயினும் இந்நேரம் தள முகவரியில் அனுப்பப்படுவன அனைத்தும் என் மின்னஞ்சல் முகவரிக்கு வரும்படி, தள நுட்பக்குழு ஏற்பாடு செதுள்ளதால், வரும் வினாக்களுக்கு விடை எழுதி ஆசிரியருக்கு அனுப்பி விடுவேன். எனக்கு விடை தெரியா வினாக்களுக்கு விடைகளைத் தேடும் வரை அமுக்கி விடுவேன்.
கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
Source:http://www.inneram.com/2010121912590/vanagamudi-answers-19-12-2010

Sunday, December 19, 2010

முதல் புனித பயணமும், முதல் மோனோ ரயில் பயணமும்

ஆம்.. இவ்வருடம் என் வாழ்வில் கிடைக்கப்பெற்ற விலை மதிக்கமுடியா பொக்கிசம் என்றுதான் கூறவேண்டும். என் முதல் ஹஜ் பயணம் வரலாற்றுமிக்க முதல் ஹஜ் ரயில் சேவையோடு தொடர்ந்தது. நூற்றிமுப்பது வயது மூதாட்டி இந்தியாவிலிருந்து ஹஜ்ஜிற்கு வருவதாக கேள்விப்பட்டவுடன், 'அட! நமக்கு இன்னும் முப்பது வயதுகூட ஆகவில்லை ஆனால் அல்லாஹ் நமக்கு அவன் அருளை அள்ளி கொடுத்துவிட்டானே!' என்ற பிரம்மிப்பு கலந்த சந்தோசம் .



முப்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஹஜ்ஜிற்கு வந்திருந்தும் அரபு நாட்டவர்களுக்கும், அந்நாட்டில் வசிப்பவர்களுக்கும் மட்டுமே இந்த மோனோ ரயில் பயணம் அல்லாஹ்வின் கிருபையால் கிடைக்கப்பெற்றது.

இந்த அனுவபத்தை பற்றி பகிர்ந்து கொள்வதற்கு முன் இந்த ரயில் ப்ராஜெக்ட் வெற்றிகரமாக செயல்படுத்திக்கொடுத்த சஊதி அரசிற்கும், அசுர வேகத்தில் அசராமல் (24x7) நம்மை அசர வைத்த சீன நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். என்னடா இவன் அதிரம்பட்டினத்துல கம்பன் எக்ஸ்பிரசை நிப்பாடிடானுங்கங்குரத்துக்காக ரயில் வண்டியையே பார்க்காதமாதிரி! சொல்றானேன்னு பார்க்காதீங்கோ காக்காமார்களா.. நம் நாட்டில் இது நடந்தேற எனக்கு தெரிஞ்சு 6-8 வருடம் இழுப்பார்கள். இடையில் கொஞ்சம் "ராஜா.., ராணி.." ஆட்டம்லாம் வேற ஆடுவாங்க. 18 கிலோ மீட்டர் ரயில் பாதை இங்கு ஒரே ஆண்டில் முடிவுற்றது. இப்ப சொல்லுங்க நான் ஆச்சர்யப்படுவது சரிதான?


இதோ அரபியில் நாலு வரியில் எழுதக்கூடிய வார்த்தையை ஏழு கட்டத்திற்குள் கிளித்தட்டில் ஏத்தம் விட கோடு போட்டமாதிரி அடக்கிவைச்சிருக்கான்களே, இங்குதான் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் இரவுபகல் வேலைபாற்குமிடம்.

சரி சரி விசயத்திற்கு வர்றேன். பயணம் ஆரம்பமாகபோகுது சீட் பெல்ட போட்டுக்கொள்ளுங்கள்..

முதல் நாள் (ஹஜ் 8):

சுபுஹுக்குப்பின் ஜித்தாவிலிருந்து மினா வரை பேருந்தில் பயணித்தோம். ஹஜ்ஜின் கடமைப்படி மினாவில் லுகரிலிருந்து ஐந்து வேலை தொழுகை நிறைவேற்றிவிட்டு சுபுஹுக்குப்பின் அரபாவிற்கு செல்ல வேண்டும். ஆனால் ரயில் அட்டவணையின்படி எங்கள் குழு விடியற்காலை 1 மணிக்கு ரயிலை பிடித்தாக வேண்டும் என்று சஊதி அரசாங்கதிடமிருந்து உத்தரவு வந்தது. எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம் என்று கட்டுப்பட்டு காத்திருந்தோம் . அப்போதுதான் கையில் கட்டப்பட்டது அந்த ரயில் பயணச்சீட்டு. இதை தண்ணீரில் ஊற வைத்தாலும் , வெயிலில் காய வைத்தாலும் கிழியாதாம். ஆகையால் ஒரு கரத்தில் பயண சீட்டும், மறுகரத்தில் காணாமல் போகாமல் இருக்க டென்ட் முகவரிகளும், எண்ணத்தால் சைத்தானுக்கு பூட்டும் போட்டவனாக இருந்தோம் .

பயணச்சீட்டு உங்கள் பார்வைக்காக..


இதில் நம் பயணத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நாட்கள், நாம் ஏற வேண்டிய ஸ்டேஷன் எண் மற்றும் பிரத்யேக பார்கோடு அச்சு செய்யபட்டிருந்தது.

ஸ்டேசன் எண் நம் டெண்டிற்கு அருகாமையில் இருப்பதைதான் குடுப்பார்கள்.

இரவு 12:30 மணிக்கெல்லாம் ரயிலை பிடிக்க சென்றுவிட்டோம். எனக்கு இது முதல் ஹஜ், முன்னால் ஹாஜிகளுக்கு இது முதல் ரயில் பயணம் என்று பலதரப்பட்ட மக்கள் பல்வேறு சந்தொஷங்களோடு ஒன்று, இரண்டு மணி நேரம் ரயில்வே கேட்டின் படியின் கீழ் படர்ந்திருந்தோம். படி ஏறலாம் என்று கொடி காண்பிக்கப்பட்ட அந்த நொடியில் மக்கள் திரளாக "லப்பை அல்லாஹும்ம லப்பைக்..." என்ற சத்தம் விண்ணைத்தொட்டவாரே வின்வெளிப்பயனம்போல் ரயில் பயணத்தை தொடர்ந்தோம் . படி ஏற முடியாதவர்கள் ஒரே நேரத்தில் 60 பேர் ஏறக்கூடிய லிப்டில் ஏறினார்கள்.


 3000 மக்கள் பதினைந்தே நிமிடத்தில் மீனா - அரபா சென்றடைந்தோம். ஒரு மணிநேரத்தில் 30 ஆயிரம் மக்கள் பல்வேறு ரயில் வண்டிகள் மூலம் அரபா வந்தடைந்தார்கள். ஹஜ்ஜின் முக்கிய நாளான அன்று எங்களுக்கு எல்லா விதத்திலும் வல்ல ரஹ்மான் எளிமையாக்கிதந்தான்.

இரண்டாம் நாள் (ஹஜ் 9):


அரபாவிளிருந்து மக்ரிப் தொழுகையை முடித்துக்கொண்டு முஸ்தலிபா செல்வதற்காக வெளியில் காத்திருந்தோம். இந்த ரயிலில் பெர்த், அன்ரிசெர்வ்டு , வெயிட்டிங் லிஸ்ட் எதுவும் கிடையாது. ஆனால் ஒன்று, இரண்டு மணிநேரம் 'கொஞ்சம் வெயிட் பிளீஸ்' என்ற சத்தம் மட்டும் அரபு கலந்த ஆங்கிலத்தில் (மலையாளம் கலந்த ஆங்கிலத்தை ஒப்பிடுகையில் இது கொஞ்சம் ஸ்டைலாகத்தான் இருந்தது) கேட்டுக்கொண்டே இருந்தது. பிறகு அரபா-முஸ்தலிபாவிற்கு பத்து நிமிடத்தில் சென்றடைதோம்.


இஷாவை முடித்தவண்ணம் அங்கேயே உறங்கிவிட்டு மறுநாள் காலை ஸுபுஹ் தொழுகை முடிந்த பின் ஜமராத் கற்களை அங்கயே எடுத்துக்கொண்டு மீனாவிற்கு வந்து சேர்ந்தோம். ரயில் நிலையத்தைவிட மினா டென்ட் எங்களுக்கு மிக அருகாமை என்பதால் பத்து நிமிட நடை பயணத்தில் வந்தடைந்தோம்.

மூன்று,நான்கு மற்றும் ஐந்தாம் நாள் (ஹஜ் 10 ,11 ,12 ):

இறுதி மூன்று நாட்கள் ஜமராத் கல் எறிவதற்காக மினா-ஜமராத்திற்கு தினமும் பத்து நிமிட ரயில் பயணம் மேற்கொண்டோம்.முன்புபோல் எங்கே வழிதவரிவிடுவோமோ, வெயில் சுட்டெறிக்குமோ, நம் ஒரு வயது குழந்தை தாக்குபிடிக்குமோ என்ற அச்சமெல்லாம் தணிந்து இறையச்சத்தோடு இஷ்டப்பட்ட நேரத்தில் ரயில் பயணத்தை மேற்கொண்டோம். கொஞ்சம் சொகுசாகவே நிறைவேற்றிவந்த இந்த ஹஜ்ஜில் உடலையும், மனதையும் இறைவனின் சோதனை கூடர்திற்கு அழைத்துச்சென்றது ஜமராத்-மக்கா. ஆறு கிலோமீட்டரை நடந்து கடக்க 2 -3 மணிநேரம் எடுத்தது (இன்ஷா அல்லாஹ் இனி வரும் வருடங்களில் இதற்கும் ரயில் பாதை அமைத்துவிடுவார்கலாம்). உண்மையில் இந்த கணம்தான் நம் முன்னோர்கள், நபி(ஸல்) அவர்கள் , நபித்தோழர்கள் செய்த தியாகம் என் மூளைக்கு எட்டியது(சுடு பட்டால்தான் உறைக்கும் என்பார்களே அது இதுதானோ!) .


மனம் குளிர ஒரு மழைத்துளி:

சிக்னல் இல்லாத ரயிலிற்கும், சிக்னல் கொடுக்காமல் வந்த மழைக்கும் கடும் போட்டி நிலவியது . முதல் சுற்றில் புகை இல்லா புகை வண்டியோடு வெற்றிபெற்று இறைவனின் அருட்கொடையை (ரயில்) குடையாய் பயன்படுத்திக்கொண்டு எங்கள் டென்ட் வந்தடைந்தோம். . பிறகு கஅபா முதல் மினா வரை மக்கள் யாவரும் ஒரு சுற்றும், முற்றும் சுற்றமுடியாமல் மழை சுழற்றி எடுத்தது. ரயில் பயணமும் சிறிது நேரம் ரத்தானது.

ஐந்து கடமையையும் முடித்துவிட்டோம் எங்கள் பிழைகளை மன்னித்து ஏற்றுக்கொள்ள துஅ செய்தவனாக வீடு திரும்பினோம்.


காக்காமார்களே உஷார்! உங்களுக்காக ஒரு டிப்ஸ்:

ஒரு கம்பார்மெண்டில் கிட்டத்தட்ட இருபது பேர் உட்காரும் அளவிற்கு இருக்கை இருக்கும். முட்டி மோதிக்கிட்டு கர்சீப் போட்டு முதல் ஆளாக இருக்கையில் அமர்ந்தாலும் கடைசி நபராக பெண்கள் கூட்டம் வந்தே தீரும். ஆகையால் எல்லா(மூவ்/நகரு)!! என்ற வார்த்தை தங்கள் காதுகளை துளையிடுவதற்கு முன் 'எலே.. எந்திரிலே' என்று நமக்கு நாமே சொல்லிக்கொண்டு ஏறும்போதே ஏதாவது ஒரு மூலையில் ஒதிங்கி நிப்பது புத்திசாலித்தனம்.

ஹஜ் ரயில் பயணம் ஒரு பார்வை -

1) ரயில் பயணத்தால் தினமும் மூன்று முதல் நான்கு மணி நேரம் சேமிக்கபட்டது.

2) அதிக நேரம் தங்கும் இடத்திலேயே நன்மையை பெற்றுக்கொள்ள அறிய வாய்ப்பு (இது நாம் பயன்படுத்திக்கொள்வதை பொருத்தது).

3) இயலாதோற்கு இது இறைவன் கொடுத்த வரம்.

4) தினமும் 5000 வாகனங்கள் போக்குவரத்து நேரிசலோடு சேவை செய்யவேண்டியதை, இரு தண்டவாளங்கள் சீர் செய்தது.

5) நள்ளிரவு 11 - 3 ரயில் சேவை நிறுத்தப்படும். இது முன்னறிவிப்பு இல்லாமல் நடந்தமையால் கொஞ்சம் வாக்குவாதமும், சமாதானமும் நடந்தேறியது.

6) ஹாஜிகள் வசதிக்கேற்ப அதிக ரயில் நிறுத்தங்கள், அரபா 1- 2- 3, முஸ்தலிபா 1-2-3, மீனா 1-2-3

ஹஜ்ஜை முடித்து அலுவலகத்திற்கு வந்தபோது அரபு செய்திதாளில் படித்தேன் "சீனப்போருட்களில் தரமும் இருக்கின்றது" என்றதுபோல் ஒரு கட்டுரையை.

ஹும்ம்.. சீனர்களை கண்டாவது சின்சியாரிடியை கற்றுக்கொள் என்பது புது மொழியாக இருக்கக்கூடும் .

வல்ல ரஹ்மான் இந்த புனித ஹஜ்ஜை ஏற்றுக்கொள்வானாக என்று துஆ செய்தவண்ணம் , விடைபெறுகிறேன்

-- மு.செ.மு / M.S.M. மீராஷாஹ் ரஃபியா

ஜெத்தா, சஊதி அரேபியா.
Source:http://adirainirubar.blogspot.com/2010/12/blog-post_15.html
JazakAllah Khayr (Arabic: جزاك اللهُ خيراً‎) is an Arabic term and Islamic expression of gratitude meaning "May Allâh reward you [in] goodness." Although the common Arabic word for thanks is shukran (شكراً), jazakallahu khayran is often used by Muslims instead in the belief that one cannot repay a person enough, and that Allâh Ta'ala is able to reward the person best.

குழந்தைகள் டி.வி மற்றும் கம்ப்யூட்டர்களை அதிகம் பார்ப்பதால் மனஅழுத்த நோய்



மன அழுத்தம்லண்டன்: குழந்தைகள் டி.வி மற்றும் கம்ப்யூட்டர்களை அதிகம் பார்ப்பதால் மனஅழுத்தம் நோய் அதிகம் உண்டாகிறது என ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளதாக ஜர்னல் பீடியாட்ரிக்ஸ் தெரிவித்துள்ளது.இது குறித்து இங்கிலாந்தின் பிரிஸ்டோல்ஸ் பல்கலை.,யின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் 10-11 வயதுடைய ஆயிரம் குழந்தைகளை பரிசோதனை நடத்தினர். அவர்களை தினமும் இரண்டு மணிநேரம் டி.வி., மற்றும் கம்ப்யூட்டர்களை பார்க்கச் செய்தனர். அவர்களின் சிந்தனை மற்றும் யோசிக்கும் திறன்,பள்ளிகளில் சம மாணவர்களுடன் பழகும் தன்மை ஆகியவை குறைந்து காணப்பட்டது. அதே சமயம் டி.வி., பார்க்காத குழந்தைகளின் செயல்திறன் அனைத்து விஷயங்களிலும் அதிகரித்து உள்ளதையும் கண்டறிந்தனர்.
 (http://www.dinamalar.com/News_Detail.asp?Id=107068)
ஒபாமா மகள்களுடன்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இருமகள்களான மாலிமா(12) மற்றும் சாஷா(9) ஆகிய இருவரும் பொழுது போக்கிற்காக கேபிள் டி.வி., பார்ப்பதில்லை என ஒபாமா அமெரிக்க டி.வி., சானல் ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். ஆனால் இருவரும் நியூஸ் சானல்களை விரும்பி பார்ப்பதாக அவர் தெரிவித்தார். தற்போதை‌ய சூழலில் சிறுவ, சிறுமிகள் பெரும்பாலும் பொழுதுபோக்கிற்‌காக கேபிள் டி.வி., நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கின்ற சூழலில் அமெரிக்க அதிபரின் மகள்கள் இருவரும் நியூஸ் சானல்கள் பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 (http://www.dinamalar.com/district_detail.asp?id=135434)

கனிமொழி
கனிமொழி எம்.பி., பேசியதாவது:பெண்கள் சீரியல் பார்ப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை. ஏதும் கற்றுக்கொள்ளும் விஷயமும் இருக்காது. பெண்கள் முன்னேற வேண்டுமானால் சுற்றி நடக்கும் விஷயங்களை காதுகொடுத்து கேட்கவேண்டும்.நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.சமூகத்தில் பெண்கள் உயர்வதற்கு மனபலம்,அறிவு பலம் வேண்டும்..............

 .............நிறைய படிக்க வேண்டும். நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.நாம் சுயமாக சிந்திக்க தெரிந்தவர்கள் என உலகத்திற்கு காட்ட வேண்டும். இவ்வாறு கனிமொழி கூறினார்.
(http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=17223)
  
Byரபீக்  சுலைமான் 








ரபீக்  சுலைமான்  தலைவர் அப்துஸ்ஸமது அவர்களுடன்