Thursday, December 31, 2009

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்








 

"ப‌ல‌" மொழிக‌ள்

1)கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

 கழுதைக்கு கற்பூரவாசனை தெரிஞ்சி கலெக்டர் வேலைக்கா போவப்போவுது!

உப‌ய‌ம் "வால்பைய‌ன்"

2) சின்ன‌ புள்ளைக‌ வெள்ளாமை வீடு வ‌ந்து சேராது

சின்ன‌ புள்ளைக‌ள‌ வெள்ளாமை ப‌ண்ண‌ விட்டுட்டு பெரிய‌வ‌ங்க‌ நீங்க‌ எந்த ஆமை கூட‌ சுத்திகிட்டு இருந்தீங்க‌

உப‌ய‌ம் நெப்போலிய‌ன் ப‌ட‌ம் எஜ‌மான்

3) பாத்திர‌ம் அறிந்து பிச்சையிடு

அந்த‌ ப‌வ‌ன்ல‌ எவ‌ர்சில்வ‌ர் த‌ட்டுல‌ மீல்ஸ் சாப்பிட்டா பில் 50 ரூபாய்
வெள்ளி த‌ட்டுல‌ மீல்ஸ் சாப்பிட்டா பில் 185 ரூபாய்
(பாத்திர‌ம் அறிந்து பில் போடு??????????)

உப‌ய‌ம் அண்ணாச்சி‌

4) ந‌ல்ல‌தே நினை ந‌ல்ல‌தே நட‌க்கும்

டில்லி ஒன்டே மேட்ச்ல‌ இந்தியா ஜெயிக்க‌னும்னு நான் நினைச்சேன்
இல‌ங்கை ஜெயிக்க‌னும்னு என் ந‌ண்ப‌ன் நினைச்சான்
க‌டைசில‌ மேட்ச்சே ந‌ட‌க்க‌லை

உப‌ய‌ம் டெல்லி கிரிக்கெட் ச‌ங்க‌ம்

5)நிறை குட‌ம் த‌ளும்பாது குறை குட‌ம் கூத்தாடும்

இவ‌ன் யார்யா இவ‌ன் நாட்டு ந‌ட‌ப்பு தெரியாம பேசிக்கிட்டு ஆந்திரால‌ 85 வ‌ய‌சு நிறைஞ்ச‌ குட‌ம் தான் இப்ப‌ கூத்தாடுது

உப‌ய‌ம் ஆந்திர‌ டிவி சேன‌ல்

***********************************************
விஐபி மொழிக‌ள்

ப‌ழ‌மொழி சொன்னா அனுப‌விக்க‌னும் ஆராய‌க் கூடாது
-ஆழ்வார்பேட்டை ஆண்ட‌வ‌ர்

விம‌ர்ச‌ன‌ம் எழுதினா ஓட்டு போட‌னும்
ப‌ட‌த்துக்கு போலாமா வேண்டாமானு கேக்க‌ கூடாது
-அண்னண் கேபிள் ச‌ங்க‌ர்

க‌விதை எழுதினா ர‌சிக்க‌னும்
விள‌க்க‌ம் கேக்க‌ கூடாது
-க‌விஞ‌ர் ஆதியார்

அ ஆ இ ஈ எழுதினா ஃபீல் ப‌ண்ன‌ணும்
தூக்கத்துல‌ எழுத‌ற‌ வியாதி இருக்கானு கேக்க‌ கூடாது
-கார்க்கி ச‌கா

**************************************************
நாட்டு ந‌ட‌ப்பு மொழிக‌ள்

எலி வ‌ளையான‌லும் த‌னி வ‌ளை வேண்டும்
-ச‌ந்திர‌சேக‌ர் ராவ்

க‌ண்ணால் காண்ப‌தும் பொய்,காதால் கேட்ப‌தும் பொய்,தீர‌ விசாரித்து அறிவ‌தே மெய்
-திவாரி (முன்னாள் ஆந்திர க‌வ‌ர்ன‌ர்)

****************************************************
ஒரு வ‌ருட‌ ப‌ய‌ண‌ம்

வியாழ‌ன் இர‌வு இந்தியா செல்கிறேன் விடுமுறைக்கு

அபுதாபில‌ருந்து விமான‌ம் 2009 டிச‌ம்ப‌ர் 31ந் தேதி இர‌வு 7.55 க்கு புற‌ப்ப‌ட்டு 2010 ஜ‌னவ‌ரி 1ந் தேதி காலை 3.30 ம‌ணிக்கு சென்னை வ‌ந்து சேருது.

ங்கொய்யால‌ ஊருக்கு வ‌ர்ர‌துக்கு ஒரு வ‌ருஷ‌ம் ப‌ய‌ண‌ம் செய்ய‌ வேண்டிய‌து இருக்கு

என்ன‌ கொடுமை குசும்பா இது

எப்ப‌டியோ இந்த‌ புது வ‌ருஷ‌ம் வான‌த்துல‌ க‌த்தார் ஏர்வேஸ் தேவ‌தைக‌ளோட‌.

எல்லாருக்கும் இனிய‌ புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்

(ச‌ர‌க்குக்கு ம‌ட்டும் எவ்வ‌ள‌வு வேண்டுமான‌லும் செல‌வு செய்யும் ந‌ண்ப‌ர்க‌ளை உடையோர் "லெத‌ர்" பாரிலோ அல்ல‌து "ந‌ம்ப‌ர் 10 ட்வ்னிங் ஸ்டீரிட்டி"லோ போய் புத்தாண்டு கொண்டாட்ட‌த்தை "அடிச்சு பொழிக்க" வாழ்த்துக்க‌ள்)

நன்றி    ;http://karisalkaran.blogspot.com 

ஒரு ஆங்கில கவிதை நினைவுக்கு வருகிறது.


You look at me and call me oppressed,
Simply because of the way I'm dressed,

You know me not for what is inside,
You judge the clothing I wear with pride,

My body is not for your eyes to hold,
You must speak to my mind, not my feminine mould,

I'm an individual. I'm no man's slave,
It's Allah's pleasure that I only crave,

I have a voice so I will be heard,
For in my heart I carry His word,

"O ye women, wrap close your cloak,
So you won't be bothered by ignorant folk".

Man doesn't tell me to dress this way,
It's law from God that I obey,

Oppressed is something I'm truly not,
For liberation is what I've got,

It was given to me many years ago,
With the right to prosper, the right to grow,

I can climb mountains or cross the seas,
Expand my mind in all degrees,

For God Himself gave us liberty,
When He sent Islam, to you and me!


-இதை எழுதியதும் ஒரு பெண் தான்.
by அ.மு.செய்யது   Source:http://amsyed.blogspot.com  
-----------


சௌதியில் வாழும் மக்களுக்கோர் நற்செய்தி


அரப்நியூஸ் செய்திதாளில் வந்ததை அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன். இதுகுறித்த சந்தேகங்களுக்கு பின்னூட்டத்தில் பதில் அளிக்கிறேன்.

Family visa now linked with salary
P.K. Abdul Ghafour | Arab News

JEDDAH: The Foreign Ministry will issue permanent resident visas for wives and children of expatriate workers in the Kingdom, without considering their profession, Al-Yaum Arabic daily has reported.

“The ministry’s office in Riyadh issued such recruitment visas for three days last week and stopped it temporarily. It is expected that the ministry would resume the service next month,” a ministry source told the paper.

The news is a relief for many of the seven million expatriate workers, who are unable to bring their families on resident visas due to their profession written on their iqamas.

The Foreign Ministry and the Recruitment Office only issued permanent resident and visit visas to those in white-collar jobs such as engineers, doctors and executives. The Al-Yaum report said the ministry would only look at the financial status of the applicant. “The family visa is no more linked with profession,” the source said. He said the ministry stopped processing applications in order to implement the new criteria. “This is a great news for thousands of professionals like me who are unable to bring their wives and children to the Kingdom because of the profession in iqama,” said Shabeer Ali, a computer engineer based in Jeddah.

Ali said he has been trying to bring his family to the Kingdom ever since his marriage. “Until now I could not, because they look at the profession on my iqama, which is an electrician. I had presented my Masters degree certificate in computer science attested by the Saudi Embassy, as well as my salary certificate, but they rejected my application,” he said.

He said he had never known about this problem before coming to the Kingdom.

“I know that there are thousands of expatriate workers who are highly qualified and earn good salaries but cannot bring their families because of their profession. I take this opportunity to thank the Saudi government for changing this policy and consider it a great blessing from God.” The Arabic daily said the ministry’s branches in Jeddah and Dammam have not implemented the new system as they have not been informed about the changed criteria.

Over the past three weeks, the ministry’s Riyadh office was issuing visit visas to all expatriate workers for their families without considering their profession.

K.C.M. Abdullah, a freelance journalist based in Riyadh, told Arab News that hundreds of people, including laborers, farmers and construction workers had benefited.

“Now they have stopped issuing visas to drivers and other house servants,” he pointed out. Some people claimed the visa rules were relaxed to mark the return of Crown Prince Sultan to the Kingdom after a yearlong medical trip.

Abdullah said the ministry used to accept around 800 applicants daily, adding over 1,000 people stood in the queue from early in the morning to present their applications made through the ministry’s website.

He said the revised service started a week before the Eid Al-Adha holidays.

After hearing the news of the relaxation in visa rules a large number of Indian workers approached the Indian Embassy in Riyadh and consulate in Jeddah to include names of their spouses in their passports.

Indian missions are now issuing new passports after including spouse names. People who want to include the names of spouses should attach attested marriage certificates. Those who have married recently should register their marriages by producing relevant documents.


அரப்நியூஸில் வாசிக்க
மேலும் விவரங்களுக்கு
சௌதியில் வேலை செய்யும் மக்களுக்காகவே அத்தனை விஷயங்களையும் மிகச்சிறப்பாக எழுதிவரும் நண்பர் திரு ராஜூ அவர்களின் இந்த தளத்தையும் மறக்காமல் பாருங்கள்.

நன்றி: http://syednavas.blogspot.com                                                             ;

இளமை தரும் ஆரஞ்சு பழச்சாறு

by அபுல் பசர் 



என்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள். தலைமுடி நரைக்கிறது. தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. கண்கள் குழிவிழுந்து காணப்படுகின்றன. நல்ல திடகாத்திரமான இளைஞர்களை இன்று காணமுடியவில்லை. இதற்குக் காரணம் இராசயனம் கலந்த உணவுகள், அரைவேக்காட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், சத்தற்ற உணவுகள், உடலுக்குத்தேவையான உடற்பயிற்சி இல்லாமை போன்றவையே.

இன்றைய மாணவ சமுதாயத்திற்கு கல்விச் சாலைகள் சிறைச்சாலைகளாக உள்ளன. பாடத்திட்டம் அனைத்தும் மூளை சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி, விளையாட்டு என்பதே இல்லை. மேலும் வீட்டிற்கு வரும் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சிறப்பு வகுப்புக்கு அனுப்புகிறார்கள். இதுபோல் விடுமுறை நாட்கள் பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே கழிந்துவிடுகின்றன. அடுத்த தெருவிற்கு செல்லவேண்டும் என்றாலும் வாகனத்தில்தான் செல்கிறோம். நடை என்பது பலருக்கு நோயின் தாக்கத்திற்குப் பிறகுதான் தெரியவரும்.

இப்படி சத்தற்ற உணவும், உடற்பயிற்சி யின்மையும் ஒரு மனிதனை முதுமையின் வாசலுக்கு எளிதில் அழைத்துச் செல்லும்.

உடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.

எங்கும் எப்போதும் கிடைக்கும் ஆரஞ்சு பழச் சாறின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம்.

சில உணவுகள் சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை உண்டுபண்ணி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.

இந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்துவிடுகிறது. இதனால் இரத்தம் அசுத்தமடைகிறது. பித்த நீர் தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது. மேலும் ஞாபக மறதி ஏற்படுகிறது. சருமம் பாதித்து சுருங்கச் செய்கிறது. தலைமுடி நரைக்கச் செய்கிறது. இதுபோல் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை 300 கலோரி அளவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து இரத்தத்தை பரிசோதித்துப் பார்த்தால் பித்த நீர் அதிகம் சுரந்து இரத்தத்தில் கலந்திருப்பதை அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

இந்த பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.

ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டவர்களின் இரத்தத்தில் பித்த நீரில் அளவு குறைவாக இருக்கிறது.

ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் இது புற்றுநோயாகக் கூட மாறலாம். இருதய நோய்களுக்கும் இந்த உணவு வகைகளே காரணமாகின்றன. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடபட இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். இருமுறை கூட அருந்தலாம். ஆரஞ்சு பழத்தை தினமும் உண-வில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.

ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.

நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மிலி வரை கொடுக்கலாம்.

ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.

ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.

மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்

நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும்.

ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது.

என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்.

நன்றி : http://abulbazar.blogspot.com

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப் பெண் !


கனடாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக ஈழத்தமிழரான செல்வி ராதிகா சிற்சபேசன் தெரிவாகியுள்ளதாக கனடாச் செய்திகள் தெரிவிக்கின்றன. கனடா  புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) புதிய வேட்பாளர் நியமனக்கூட்டத்தில்  இவரது பெயர் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
ராதிகா சிற்சபேசன் Scarborough-Rouge River என்னும் பெருமளவில் தமிழர்கள் வாழும் நாடாளுமன்றத் தொகுதியிலேயே வேட்பாளராக போட்டியிட உள்ளார். கனடாவின் முக்கிய கட்சிகளில் ஒன்றான புதிய ஜனநாயகக் கட்சி அந்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியெனவும் சொல்லப்படுகிறது. 
கனடா மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் Olivia Chow (Trinity-Spadina) மாகாண அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் Michael Prue (Beaches-East York) ஆகியோரும், இந்த வேட்பாளர் தெரிவின் போது உடனிருந்நதாகவும்,  ராதிகா தெரிவு செய்யப்ட்டது குறித்து தமது ஆதரவு உரைகளையும் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத் தக்கது.   ஈழத்தமிழரின் அரசியல் நியாயத்திற்கான ஆதரவை தொடர்ந்தும் வழங்கி கரும் கட்சிகளில் புதிய ஜனநாயகக் கட்சி முக்கிய பங்கு உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி http://ww1.4tamilmedia.com

மனதைத் தொட்ட வரிகள்!!!

ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. -

தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்

குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல்

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம்
இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.


அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை

 நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

பறக்க விரும்புபவனால் படர முடியாது.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை மீறி வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

Wednesday, December 30, 2009

ஸ்பெஷல் சிக்கன்


தேவையானவை

சிக்கன் ½ கிலோ

பல்லாரி 2

தக்காளி 2

பட்டை, ஏலம் ,கிராம்பு, கொத்தமல்லி,

சீரகம் சோம்புப்பொடி 2

ஸ்பூன் மிளகாய்தூள் 1 ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்

பொட்டுக்கடலை கொஞ்சம்

தேங்காய் கால் கப்

முந்திரி 15

இடியப்பமாவு 2ஸ்பூன்

ஆயில், உப்பு.


சிக்கனை நன்றாக சுத்தம்செய்துகொண்டு,  மீடியமான அளவில் கட்செய்து அதில் உப்பு சீரக்சோம்புபொடி இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு ½ மணி நேரம் ஊறவைக்கவும்

ஒரு கடாயில் ஆயில்விட்டு அதில் பட்டை, ஏலம், கிராம்பு, போட்டு வாசனை வந்ததும்

 நீளவாக்கில் நறுக்கிய பல்லாரி தக்காளி, மிளகாய்தூள் பாதி கொத்தமல்லி[கீரை] போட்டு நன்றாக வதக்கவும்

மசியும்வரை வதக்கி அதனுடன் ஊறவைத்த சிக்கனை போட்டு கிளரிவிட்டு மூடி [அடுப்பை சிம்மில் வைத்து விடவும்]

மிக்சியில் தேங்காய் பொ,. கடலை முந்திரியை அரைத்து கொண்டு

சிக்கன் நன்றாக வெந்து சிவந்த நிறத்துக்கு வந்ததும் அரைத்த இந்தவிழுதையும் இடியப்பாமவையும் கொஞ்சம் தண்ணீர்விட்டு கரைத்துக்கொண்டு அதனுடன் சேர்த்துகிளரவும்
[அடுப்பை சிம்மில் வைத்தபடியே அத்தைனையும் செய்யவும்]
மீதி உள்ள கொத்தமல்லியைபோட்டு பரிமாரவும்.

இப்போது சூடான சுவையான சிக்கன் ஸ்பெஷல் ரெடி

இது வித்தியாசமான டேஸ்டில் இருக்கும்
ரசம் சாதத்துக்கும், புரோட்டா, சப்பாத்தி, நாண்,
இவைகளுக்கு ஏற்ற ரெஸிபி.

நன்றி :http://niroodai.blogspot.com/

பெண் எனப்படுபவள்..

உமாவும் கவிதையும்
கவிதைப் பகிர்வு

தலையில்
வைப்பது
நெருப்பென்று
அறியாமல்
புகழ்தலில்
உருகி உருகித்தான்
மெழுகாய்
ஒளி வீசுகிறார்கள்
பெண்கள்
நன்றி :http://uumm.wordpress.com/

இருண்ட ஐரோப்பாவை நோக்கி...

(16 ,17 ஜூன் 1997 ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற Eurotop மாநாடு ஐரோப்பாவின் தலைவிதியை மாற்றியமைத்தது. மாநாட்டுக்கு எதிரான மக்கள் எழுச்சியை மையமாக கொண்டு எழுதப்பட்ட எனது கட்டுரை. "சரிநிகர்" பத்திரிகையில் பிரசுரமானது.)
நன்றி :http://kalaiy.blogspot.com

சிறந்த ஜனநாயக மரபுகளை பேணிப் பாதுகாப்பதாகவும், மனித உரிமைகளை மதிப்பதாகவும் மார் தட்டிக் கொள்வதில் நெதர்லாந்தும் சளைத்ததல்ல. உலகத்தில் சிறந்த பல ஜனநாயக நாடுகளில் ஒன்றாக உலக மக்களாலும், தனது சொந்த நாட்டு மக்களாலும், மதிக்கப்பட்ட நெதர்லாந்தின் ஜனநாயக முகமூடி அண்மையில் கிழிபட்டது. தனக்கு எதிராக கிளம்பும் எந்தவொரு தீவிரவாத எதிர்க்கட்சியையும் நெதர்லாந்து அரசு பொறுத்துக் கொள்ளாது என்பதை அது தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் குறிப்பால் உணர்த்தியது.

ஜூன் 16 ம், 17 ம், திகதிகளில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களது உச்சிமகாநாடு கூட்டப்பட்டது. Eurotop என அழைக்கப்பட்ட இம் மகாநாட்டில் ஒன்றிணைந்த ஐரோப்பாவிற்கான பொது நாணயமான EMU (European Monetary Union ) ஐ 20 ம் நூற்றாண்டின் இறுதியில் புழக்கத்திற்கு கொண்டு வருவது சம்பந்தமாக இறுதி முடிவுகள் இம் மகாநாட்டில் எடுக்கப்பட்டன.

மேலும் Fort Europe ஒன்றை உருவாக்கி புதிய அகதிகள் வருகையை தடை செய்வது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில், இம்மகாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகளை, தத்தமது நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற எந்த அக்கறையுமின்றி; அதாவது மக்களின் விருப்பை அறியாமலே, ஐரோப்பிய ஒன்றிய கட்டமைப்பில் அந்நாட்டு தலைவர்கள் முழுமூச்சாய் இறங்கினர். யூரோ (EMU ) நாணயத்தின் வருகை, அதனால் வருங்காலத்தில் ஏற்படப் போகும் விளைவுகள், என்பன பெரும் முதலாளிகளுக்கு சாதகமாகவும், சாதாரண மக்களுக்கு பாதகமாகவும் அமையப் போகின்றது. இதனை முன்கூட்டியே ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 331 பொருளாதார நிபுணர்கள் எடுத்துக் கூறியும், அவர்களது வேண்டுகோள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழும் 20 மில்லியன் வேலையற்றோரினதும், 50 மில்லியன் வறிய மக்களினதும் நலன் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அக்கறைப் படவில்லை. சுருங்கக் கூறின் "முதலாளிகளின் ஐரோப்பா" உருவாகப் போகின்றது.

விவாதத்திற்குரிய Eurotop உச்சிமகாநாடு ஐரோப்பாவில் இதுவரை நலிந்து போயிருந்த இடதுசாரிக் கட்சிகளை ஒன்று சேர வைத்துள்ளது. ஜூன் 14 அன்று, ஆம்ஸ்டர்டாமில் இடம்பெற்ற மாபெரும் பேரணியில் சுமார் ஐம்பதாயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர். நெதர்லாந்தின் அண்மைக்கால வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் எழுச்சியாக கருதப்பட்ட இப் பேரணியில் ஐரோப்பாவின் பல பாகங்களில் இருந்தும் வந்து சேர்ந்த, வறிய, வேலை வாய்ப்பற்ற மக்கள் கலந்து கொண்டனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், பல்வேறுபட்ட பொதுவுடமைக் கட்சிகள் புதிய உத்வேகத்துடன் கலந்து கொண்டதையும், புரட்சிக்கான அறைகூவல் விடுத்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

இவற்றை விட தீவிர இடதுசாரி இளைஞர் குழுக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம், நெதர்லாந்து பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டதோடல்லாமல், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். மேலும் 200 பேர் அடுத்த நாள் இடம்பெற்ற ஒன்றுகூடலின் பொது கைதுசெய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 300 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைதுகளின் போது பொலிசாரினால் வன்முறை பிரயோகிக்கப்பட்டதாக நேரில் கண்ட பத்திரிகையாளர் கூறியுள்ளார். கைது செய்ததற்கு காரணங்களாக சில கட்டுக்கதைகளை பொலிசார் சோடித்தனர். பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும், சட்டவிரோதமாக ஒன்றுகூடியதாகவும், பொலிசார் தெரிவித்தனர். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள், எந்தவொரு பொதுச்சொத்தையும் சேதப்படுத்தாது அமைதியாக நடந்து கொண்டனர், என நேரில் கண்ட சாட்சிகள் கூறினர். மேலும் எந்த ஊர்வலத்திற்கும் தடையில்லை என நகரபிதா ஏற்கனவே அறிவித்திருந்த போதும், இதை சட்டவிரோத ஒன்றுகூடலாக பொலிஸ் கருதியது வேடிக்கையானது. மேலும் இது கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்தை தடைசெய்யும் ஒரு நடவடிக்கையுமாகும். இந்த ஆர்ப்பாட்டக்காரரின் வழக்கை விசாரித்த நீதிபதி, பொலிசாரின் இந்தக் கைது நடவடிக்கை சட்டத்திற்கு மாறானது எனவும், அரசு சட்டத்தை தவறாக கையாண்டிருப்பதாகவும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

எது எப்படியிருப்பினும், நெதர்லாந்து பொலிசாரின் இந்த மனித உரிமைமீறல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. மேலும், கைது செய்யப்பட்ட யுவதிகளின் மீது பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதாகவும் போலிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தம்மை துன்புறுத்தியதாக விடுதலையான கைதிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சம்பவங்கள், இனிவரும் ஐரோப்பிய முதலாளித்துவ சர்வாதிகாரம், தனக்கெதிரான தீவிர இடதுசாரி சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க விரும்புகிறது என்பதை உணர்த்துகின்றன.
(சரிநிகர், 2-16 ஜூலை 1997)

இஸ்ரேலின் தண்ணீர், பாலஸ்தீனரின் கண்ணீர்

இஸ்ரேலின் தண்ணீர், பாலஸ்தீனரின் கண்ணீர்

("போர்க்களமான புனித பூமி" - பாலஸ்தீன தொடரின் ஐந்தாம் பகுதி)
"மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால், அது வருங்காலத்தில் பல விரும்பத்தகாத விளைவுகளை உண்டாக்கும். குறிப்பாக அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படும்." இந்த எச்சரிக்கையை விடுத்தது, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நண்பனான சவூதி மன்னன் அப்துல்லா. அமெரிக்காவின் பிற கூட்டாளிகளான ஜோர்டான், பாஹ்ரைன் போன்ற நாடுகளும் இது போன்ற எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. இது வரை காலமும் அரபு நாடுகளில் இருந்து வரும் அமெரிக்க சார்பு மேட்டுக்குடியினரின் ஆட்சி அதிகாரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 50 வருடங்களாக வளர்ந்த அரபு மத்திய தர வர்க்கம் ஆட்சியாளருக்கு சவாலாக கிளம்பியுள்ளது.

முன்பெல்லாம் அரபு நகரங்களில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் அரசால் ஒழுங்கமைக்கப்பட்டன. தற்போது பல்கலைக்கழக மாணவர்கள், அல்லது சமூக ஆர்வலர்கள் ஊர்வலங்களை ஒழுங்கு செய்கின்றனர். பொது ஜனங்களின் எழுச்சி வெறும் வாய்ப்பேச்சோடு நிற்காது செயலிலும் இறங்கியுள்ளது. முதற்படியாக அமெரிக்க பொருட்களை பகிஷ்கரிக்கும் இயக்கம் தோன்றியுள்ளது. இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் நிபந்தனையற்ற ஆதரவு, பொது மக்களை ஆத்திரமடைய வைத்துள்ளது. லெபனானில் கல்லூரி மாணவர்கள், அமெரிக்க பொருட்கள் எவை என்றும், அதற்கு மாற்றாக வாங்கக்கூடிய உள்ளூர் மற்றும் ஆசிய உற்பத்திப் பொருட்கள் எவை என்றும் பட்டியலிட்டுள்ளனர். இந்தப் பட்டியலை துண்டுப் பிரசுரமாக வீடு வீடாக விநியோகித்துள்ளனர். அரபு நாடுகள், சர்வதேச வர்த்தகத்தில் டாலரை புறக்கணித்து யூரோவுக்கு மாற வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

பொருளாதாரத் தாக்கம் இஸ்ரேலிலும் உணரப்படுகின்றது. பெரும் லாபமீட்டிய சுற்றுலாத் துறை, பயணிகளின் அச்சம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலியர் என்ன தான் வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும், தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பீதி, அவர்களை வீட்டுக்குள்ளே முடங்க வைத்தது. எதிர்காலம் கேள்விக்குறியான இஸ்ரேலியர்கள் அமெரிக்கா, அவுஸ்திரேலியா என்று சென்று குடியேறி வருகினறனர். பட்ஜெட்டில் பாதுகாப்பு செலவினம் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகின்றது. அதனால் வரி அதிகரிப்பு, மானிய வெட்டு என்பன யூத உழைக்கும் மக்களை பாதிக்கின்றன.

வெறும் பாலைவனத்தை, தாம் வளம் கொழிக்கும் பூமியாக மாற்றியதாக, யூதர்கள் பெருமையாக சொல்வார்கள். ஆனால் அதற்கு ஒரு விலை இருந்தது. தண்ணீர். வறண்ட நிலத்தை பண்படுத்த பிரமாண்டமான நீர்ப்பாசன திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. நாள்தோறும் வந்து குடியேறிக் கொண்டிருக்கும் யூதர்கள், இன்று ஆறு மில்லியனாக பல்கிப் பெருகி விட்டனர். பெரும்பாலும் வறண்ட நிலங்களைக் கொண்ட இஸ்ரேல், ஆறு மில்லியன் ஜீவன்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியாமல் தடுமாறுகின்றது. அதற்கு தீர்வு? அரபுக்களின் தண்ணீரை திருடுவது!
1967 யுத்தம் கூட, தண்ணீர் தேடி நடந்ததாக கருதப்படுகின்றது. இந்த யுத்தத்தின் பின்னர் இரு முக்கியமான நீர் நிலைகள் இஸ்ரேலினால் கைப்பற்றப்பட்டன. பாலஸ்தீன மேற்குக்கரையை சேர்ந்த ஜோர்டான் நதி, சிரியாவுக்கு சொந்தமான நன்னீர் ஊற்றுகளைக் கொண்ட கோலான் குன்றுகள். இவற்றில் இருந்து உறிஞ்சப்படும் தண்ணீர் இன்று மூன்றில் ஒரு பங்கு தேவையை பூர்த்தி செய்கின்றது. இஸ்ரேலியப் படைகள் தென் லெபனானை 20 வருடங்களாக ஆக்கிரமித்திருந்தன. அதற்குக் காரணமும் தண்ணீர்க் களவு. லெபனானின் வற்றாத லித்தானி நதி, வட இஸ்ரேலியரின் தேவையை பூர்த்தி செய்தது. இந்த தண்ணீர் எல்லாம் பகற்கொள்ளை மூலம் பெறப்படுவதால், யூதர்களுக்கு குறைந்த செலவில் விற்க முடிகின்றது. இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் திருடுவது, சர்வதேச சட்டங்களுக்கு முரணானது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் தண்ணீர்க் கொள்ளையை நிரந்தரமாக்கும் பொருட்டு, திட்டமிட்ட யூதக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஜெருசலேமில் இருந்து ஜெரிக்கோ வரை, அதாவது ஜோர்டான் நதிக்கரையோரம் நூற்றுக்கணக்கான யூதக் குடியிருப்புகள் காணப்படுகின்றன. எல்லைப்புற யூத குடியேற்றங்களை அப்படியே விட்டு விடும் படி, அரபாத்திடம் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கப்பட்டது. நோர்வே அனுசரணையிலான சமாதான ஒப்பந்தம், ஒரு நாளும் சுதந்திர பாலஸ்தீனத்தை சாத்தியமாக்கியிருக்காது. அது ஏன் என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

"மேகொரோட்" என்ற இஸ்ரேலிய கம்பெனி தான், யூதர்களின் வீடுகளுக்கு மட்டுமல்ல, பாலஸ்தீன வீடுகளுக்கும் நீர் விநியோகம் செய்கின்றது. ஒரு நாளைக்கு, ஒரு சராசரி யூதர் 350 லீட்டர் தண்ணீரைப் பெறுகின்றார். அதே நேரம், சராசரி பாலஸ்தீனர் பெறுவதோ வெறும் 70 லீட்டர் தான்! உலக சுகாதாரக் கழகத்தின் அளவீட்டின் படி, ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 100 லீட்டர் தண்ணீர் தேவை. கோடை காலங்களில், நீர் நிலைகள் வறண்டு, தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் போது, பாலஸ்தீன வீடுகளுக்கான விநியோகம் நாட்கணக்காக நிறுத்தப்படும். குடிப்பதற்காகவும், சமைப்பதற்காகவும் பாலஸ்தீனியர்கள் பக்கத்து வீடுகளில் தண்ணீர் கடன் வாங்குவார்கள். அப்போதெல்லாம் யூதக் குடியேற்றங்களில் நீச்சல் குளங்கள் நிரம்பி வழியும்.

பாலஸ்தீனப் பகுதிகளில் கிணறு தோண்டுவதற்கு கூட, இஸ்ரேலிய அரசிடம் அனுமதி பெற வேண்டும். யூதக் குடியேறிகளின் அட்டகாசம் குடிநீரையும் விட்டு வைப்பதில்லை. பாலஸ்தீனர்களின் கிணறுகளில் குப்பை கொட்டி நீரை அசுத்தமாக்குவது, குடிநீர் கொண்டு செல்லும் 'பௌசரை' வழிமறித்து, நீரை நிலத்தில் கொட்டி பாழாக்குவது. இப்படி பல அட்டூழியங்கள் வெளியே தெரிய வருவதில்லை. இஸ்ரேலிய படையும் தன் பங்குக்கு தண்ணீர்க் குழாய்களை உடைத்து நாசப்படுத்துகின்றது.
ஒஸ்லோ ஒப்பந்தத்தின் பிரகாரம் நீர் நிலைகள் பாலஸ்தீன அதிகார சபையின் கைகளுக்கு சென்று விடும் என்ற அச்சம் காரணமாக, மீண்டும் யுத்தம் ஏற்பட்டதாக வதந்திகள் உலாவுகின்றன. எது எப்படி இருப்பினும், அபரிதமான நீர்ப் பாவனையால் ஜோர்டான் நதி வற்றி வருகின்றது. கோலான் குன்றுகளின் நீரூற்றுகளும் ஒரு நாள் வற்றிவிடலாம். மறுபுறம் இஸ்ரேலிய/பாலஸ்தீன சனத்தொகை பெருகி வருகின்றது. அவர்களின் தேவைக்கேற்ற நீர் வளம் குறைந்து வருகின்றது. நிலைமை இப்படியே போனால், இன்னும் 50 வருடங்களில் அந்தப் பிராந்தியம் வறண்ட பாலைவனமாகி விடும். அப்போது இந்த புனித பூமிக்காக சண்டை போட யாரும் இருக்க மாட்டார்கள்.
 
நன்றி :http://kalaiy.blogspot.com/

அ -முதல் ஃ- வரையும் -- அழைக்கின்றேன் அன்புடன்

அன்பு- என்ற புன்னகை அதுதான் என் ஆயுதம்
1 ஆர்வம்- அதிகமதிகம் கவிதைகள் எழுதுவதில்

இன்பம்- என் இறைவனை நேசிப்பதில்

ஈர்ப்பு- என்தாயின் பாசமும் என் குழந்தைகளின் நேசமும்
4உள்ளம்- அது என்னவனின் சொந்தம்
ஊஞ்சலாடுவது- காற்றோடு பேசிக்கொள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பம்
6என்வாழ்க்கை- எனக்காக இறைவன் தந்த அருட்கொடை
ஏன் இந்தபதிவு- என் தோழி பாயிஜாவின் அழைப்பு
ஐந்தருவி- அழகுகொஞ்சும் தண்ணீர் நாட்டியம்
ஒருவருக்கொருவர்- விட்டுகொடுத்து வாழநினைப்பது
8ஓர்உயிரில்- எங்கள் ஈருயிரும் கலந்திருப்பது [அட நாங்க தாங்க மச்சானும் மச்சியும்]
7ஒளவையார்- அவர்களின் அறிவுரைகள் நம்மை சிந்திக்கவைப்பது
அஃதோடு - நான் அழைக்கும் நண்பர்கள்

ஜலீலாக்கா, சாருலதா, கீதா ஆச்சல்,
நன்றி :http://niroodai.blogspot.com